Friday, January 8, 2010

[vallalargroups:2547] பிராணிகள் பேசுகின்றன - கேளுங்கள்

பிராணிகள் பேசுகின்றன - கேளுங்கள் 
 
நற்குணம் கொண்ட நல்லோர்களே ! தாய் மார்களே ! சகோதர்களே ! .. உங்கள் பாதங்களை தொட்டு கோடிமுறை  கும்பிடுகின்றோம். நாங்கள் முறைஇடுவதை சற்று செவிமடுத்து  , கேட்டு சிறிதாவது சிந்த்திப்பீர்களாக...,
 
இரக்கம் கொண்ட இதயம் உடையவர்களே ! இந்த உலகில் வாழ பிறந்த உங்களுக்கு மனம் மகிழ பண்டிகைகள் வருகின்றன . அந்த நாட்களில் நீங்கள் குடும்பத்துடனும் , குழந்தைகளோடும்  கூடி மகிழ்ச்சியுடன் இருக்க விரும்பி , உங்கள் உணவுக்காக எங்களை கொன்று, எங்கள் உடலை சிதைத்து அதை புசித்து மகிழ்கின்றீர்கள்.
 
அந்த சமயங்களில் , எங்கள் குழந்தைகள் ஆதரவு இல்லாத  அநாதை  பிள்ளைகளாகி விடுகின்றனர்.நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பது போல,நாங்களும் எங்கள் குழந்தைகளுடன்
மகிழ்ச்சியாக இருக்க வேண்டாமா?  உங்களுடைய அற்ப சந்தோசத்திற்காக அப்பாவியாகிய நாங்கள் தான் பலியாக வேண்டுமா ? இதை தயவு செய்து சிந்திக்க வேண்டும் . இனி வருகின்ற பண்டிகை நாட்களிலும்   , மற்ற  காலங்களிலும்   எங்களை கொள்ளும் எண்ணத்தை விட்டு விட வேண்டும்.
எங்கள் குழந்தைகளுடன் நாங்களும் இருக்க எங்களை வாழ வைக்க தயவு செய்யுங்கள் . எங்களுடைய அவல நிலையை சொல்கிறோம். சற்று கேட்டு சிந்தியுங்கள் ...
 
=========================================
"உயிர் கொலையும் , புலை பொசிப்பும் உடையவர்கள் உறவினத்தார் அல்லர் !! அவர்கள் புற இனத்தார் " - வள்ளலார்
 
"உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும் ஒருதிரு பொதுவென அறிந்தேன் " - வள்ளலார் (அகவல்)
 
"எவ்வுயிரும் பொதுஎனக் கண்டிரங்கி உபகரிக்கின்றார் யாவர் அந்தச் செவ்வியர்தம் செயல்அனைத்தும் திருவருளின் செயல் எனவே தெரிந்தேன்"  -  வள்ளலார் (தனித் திருஅலங்கல்)
==========================================

Anbudan,
Vallalar Karthikeyan
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)