Wednesday, December 26, 2018

[vallalargroups:6069] அகவல் தரும் விளக்கம்

உயிர்உறும் உடலையும் உடல்உறும் உயிரையும்
அயர்வறக்காத்தருள்அருட்பெருஞ்ஜோதி

ஒரு துறவியிடம்
இளைஞன் ஒருவன்...
வேலையும் இல்லை
கையில் பணமும் இல்லை...

வாழ்வதை விட
சாவது மேல் என்றான்...

அப்பா...கைகள் இரண்டை
வெட்டிக் கொடு...
இரண்டு லட்சம் தருகிறேன் என்றார்...
பதறி மறுத்தான் இளைஞன்...

சரி..உன் கண்களைக் கொடு
ஐந்து லட்சம் தருகிறேன் என்றார்...
பிதற்றாதீர்கள் என்றான் இளைஞன்...

சரி...இதயத்தைக் கொடு
இருபது லட்சம் தருகிறேன் என்றார்...

கோபத்தின் எல்லையிலே 
இருந்த இளைஞன்...

முனிவரா நீர்...?
வாழ வழி கேட்டால்
சாக வழி சொல்கிறீரே என்றான்...

முனிவர் உரைத்தார்...

முட்டாளே...விலைமதிப்பிலா
உடலினைப் பெற்ற நீ
உழைக்கக் துணியவில்லையே...

உன் உயிரும் உனக்கு வீணே என்றார்...
உண்மை உணர்ந்தான்
உழைத்துப் பிழைத்தான்...

ஆக இறைவன் உடலைக் கொடுத்து
அதனுள் உயிரைக் கொடுத்து
இயங்க வைக்கையிலே...

உயிர் நிலைத்து வாழ
நீ உடலைக் காக்க வேண்டும்...
சரிவிகித உணவும்
சத்துவ உணவும் உண்டு...

அவைகள் உன் உழைப்பாலே
எரிபொருளாக ஆக வேண்டும்...

அளவோடு உண்டு
மிகுதியாய் உழைத்து
ஆற்றலை வெளிக்கொணர...

உடல் பாகங்கள்
இணக்கமாக வளையும்...

தின்பதை மட்டுமே
வழக்கமாய் கொண்டால்...

உடல் பாகங்கள்
இயக்கமும் முடங்கி 
உயிர் பறந்தோட துடிக்கும்...

ஆகவே உறவுகளே
உடலும் உயிரும்
ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் படி
இறைவன் வகுத்திருக்கிறார்...

உயிரைக்காக்க உடல்
வளர்த்தேன் என்று 
திருமூலர் சொன்னார்...

உயிரைப்பொருந்தி
உடல் இருக்கவும்...
உடலைச் சார்ந்து
உயிர் இயங்கவும்...

இவை இரண்டினையும்
சோர்வின்றி காப்பதே...

அருட்பெருஞ்ஜோதியின்
அருள் பணி என்பதாக
பெருமானார் உரைக்கிறார்...

உயிர்உறும் உடலையும்
உடல்உறும் உயிரையும்
அயர்வறக்காத்தருள்
அருட்பெருஞ்ஜோதி...

Sunday, December 23, 2018

[vallalargroups:6068] யார் சன்மார்க்கிகள்..

எமது தெய்வம் எமதுதெயவம் என்ற மதப்பற்றுடைய சங்கற்பவாதிகளும்
மற்ற ஞாநிகளை தூஷனம் செய்யும் விகற்பவாதிகளும்
சன்மார்க்கத்திற்கு அருகராகர்கள் .
மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா நிலை பெருமான் நிலை என்பதை ஏற்காதவரும் 
உலகில் தரு நெறியெல்லாம் உள்வாங்கும்படியான பொது நோக்கும் சமரச நோக்கும் இல்லாத வெறுப்புணர்ச்சியும் விரக்தியும் உடையவரகள் பெருமானின் சமரச சுத்த சன்மார்க்கத்திற்கு எதிரானவர்களே இவரகளிடமிருந்து அருட்பாவை காப்பாற்ற வேண்டும். எல்லா சமயங்களுக்கும் பொது வேதமாக தருவருட்பா திகழழ வேண்டும்  இந்த புரிதலலில்லாதவர்கள் சன்மார்க்கி என்பது எப்படி.
திருவருட்பா எல்லா சமய மதங்களின் அந்தங்களை தனக்கு பூர்வமாக்கி தான் உத்திரத்தில் ஏறி நிறபதாகும்.

இவ்வுலகில் தந்தை சொல் கேளா பிள்ளைகள் .
வள்ளற் பெருமான் அடைந்த நிலையை மற்ற ஊஅருளார்களி்ன் நிலையோடு இணை துனை வைப்பவர்கள்.
தான் தன்னுடைய நிலையறியாது பிரம்ம நீதி கேட்போர் பிரம்மையாவே சாதிப்பர் போதிப்பர் போல்  ரணமிலாப் பெருவாழ்வையும் சுத்த சன்மார க்கத்தையும் படித்துவிட்டு கற்பனை சு.சன்மார்க்கியாக மற்ற அருளாளர்களை  தூஷனம் செய்பவரகள். எல்லா சமய ம ஆச்சாரங களையும் தவிர் த்து பெதுவாகிய ஞான ஆச்சாரத்தை  தயவை கடைபிடிக்காதவர்களே.

பூர்வத்தை உத்திர நிலையோடு ஒப்பிடும் குழப்பவாதிகளும்,பூர்வமென்பது ஒன்று இல்லை தேவையுமில்லை என்கின்ற கற்பனை சன்மார்க்கிகளும்தான் இதுவரை யாரும் நிலையடையாததின் காரணம்

Hari,Vadalur

Friday, December 21, 2018

[vallalargroups:6067] ஜீவகாருண்யம்

🌲🍍 ஜீவகாருண்யம். 🍍🌲

சமுசாரிகள் விவாக முதலிய விசேஷ 
காரியங்களில் பந்தலை அலங்கரித்துக் -
அவ்விடத்தில் வேறு வேறு சடங்குகளைச் 
செய்வித்தும் - ஆடல், பாடல், வரிசை, 
ஊர்வலம் முதலிய விநோதங்களை அப்ப வர்க்கம், சித்திரான்னம் முதலிய பெருமைப் பாடுகளையும் நடத்தியும் எக்களிப்பில் 
அழுந்தியிருக்குந் தருணத்தில் -

 பசித்த ஏழைகள் முகத்தைப் பார்க்கவும் சம்மதிக்கவில்லை. இப்படிப்பட்ட சந்தோஷ காலத்தில் தமக்காயினும், தமது மக்கள், துணைவர் முதலியோர்க்காயினும், ஒவ்வோர் ஆபத்து நேரிடுகின்றது. 
அப்போது, அவ்வளவு சந்தோஷத்தையும் இழந்து துக்கப்படுகின்றார்கள். 

இப்படி துக்கப்படும்போது அலங்காரஞ் செய்த பந்தலும், சங்கல்ப விகல்பமான சடங்குகளும், -ஆடல் ,பாடல் 
வாத்தியம் , வரிசை ஊர்கோலம் முதலிய 
வினோதங்களும் அப்பவர்க்கம் சித்திரா
அன்னம் முதலிய பெருமைப்பாடுகளும் 
அந்த  ஆபத்தை தடை செய்யக்கண்ட 
தில்லை. 

அந்த சுப காரியத்தில் உள்ள
படியே பசித்த ஜீவர்களுக்கு ஆகாரங் 
கொடுத்துப் பசியை நீக்கி அவர்கள் 
அகத்திலும் முகத்திலும் கடவுள் விளக்க 
த்தையும்,கடவுளின்பத்தையும் வெளிப்பட செய்திருந்தார்களானால் 

அந்த விளக்கமும் இன்பமும் அத் தருணத்தில் நேரிட்ட  ஆபத்தை நீக்கி, விளக்கத்தையும் இன்பத்தையும் சத்தியமாக  உண்டு பண்ணும் 
அல்லவா?,ஆதலின் விவாக முதலிய 
விசேஷச் செய்கைகளிலும் தங்கள்தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களது பசியை ஆற்றுவித்துத் திருப்தியின்பத்தை உண்டுபண்ணுவது முக்கியமென்று அறிய வேண்டும்.   🌹 வள்ளலார் 🌹 

🍒இனிய காலை வணக்கம். 🍒

Thursday, December 20, 2018

[vallalargroups:6066] Today Pasi Atruvithal by Magendran, KRPuram, Bangalore

சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருணிய அனுசரிப்பு கல்வி அறிவு செல்வம் போகம் முதலானவைகளை உண்டு பண்ணுமென்பது உண்மை.

Thursday, December 13, 2018

[vallalargroups:6065] அற்புத மருந்துங்க..

  1. வாழ்க்கையில் - குடும்பத்தில்,
  2. நிம்மதி இல்லையா?பிரச்சனையா?
  3. தீராத வியாதியா?
  4. வியாபாரத்தில் நஷ்டமா?
  5. குழந்தை பாக்கியம் இல்லையா?
  6. கல்வி, அறிவு, செல்வம் வேண்டுமா?
  7. தீர்க்க ஆயுள் வேண்டுமா?
  8. மரணத்தை வெல்ல வேண்டுமா?

கவலை வேண்டாம்...
நல்ல மருந்து...
சஞ்சலம் தீர்க்கும் மருந்து...
சுகம் நல்கும் வைத்தியநாத மருந்து...
நம்முள் என்றும் விடாமல் இனிக்கும் மருந்து..
சொல்லால் அளவா மருந்து...
சுயஞ்ஜோதி மருந்து எனும் அருட்பெருஞ்ஜோதி
அற்புத மருந்துங்க..
ஆனந்த மருந்து..
அரிய மருந்துங்க...
பெரிய மருந்துங்க... 
ஞான மருந்துங்க..
இந்த மருந்து எங்கும் விலைக்கு கிடைக்காதுங்க..
விற்க, வாங்க முடியாதுங்க..
புண்ணியம் எனும் ஜீவகாருண்ய ஒழுக்கம் செய்தால் மட்டும் இந்த மருந்து கிடைக்கும்ங்க...
வேரெறங்கும் கிடைக்காதுங்க...

கிடைக்குமிடம்.. .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் ...
வேறு எங்கும் கிளைகள் இல்லைங்க..
நன்றி. வந்தனம்...

Monday, December 10, 2018

[vallalargroups:6064] சமாதி வற்புறுத்தல் ::: பெற்றோர்,உறவினர்களை கொலை செய்யாதீர்கள்.

குணம்புதைக்க உயிரடக்கம் கொண்டதுசுட்
டால்அதுதான் கொலையாம் என்றே
வணம்புதைக்க வேண்டும்என வாய்தடிக்கச்
சொல்கின்றேன் வார்த்தை கேட்டும்
பிணம்புதைக்கச் சம்மதியீர் பணம்புதைக்கச்
சம்மதிக்கும் பேய ரேநீர்
எணம்புதைக்கத் துயில்வார்நும் பாற்றுயிலற்
கஞ்சுவரே இழுதை யீரே.

..........

குணம்புதைக்க உயிரடக்கம் கொண்டது

சுட்டால் அதுதான் கொலையாம் என்றே

வணம் புதைக்க வேண்டும் என வாய்தடிக்கச்
சொல்கின்றேன்

வார்த்தை கேட்டும்,பிணம்புதைக்கச் சம்மதியீர்

பணம்புதைக்கச் சம்மதிக்கும் பேயரே

நீர் எணம்புதைக்கத் துயில்வார்

நும் பாற்றுயிலற் கஞ்சுவரே இழுதை யீரே

[vallalargroups:6063] சிதம்பர இராமலிங்க சுவாமிகளுக்கு வந்தனம்

சிதம்பர இராமலிங்க சுவாமிகளுக்கு வந்தனம்
🥦🥦🥦🥦🥦🥦🥦🥦
🍓நாம் பல பிறவிகளை கடந்து மேலான மனிதப்பிறவி எடுத்தது இறைவனின் திருவருளைப் பெறுவதற்காகத் தான்.🍓

🍎உண்மையை பேசுங்கள்.அது உங்கள் வார்த்தைகளை பாதுகாக்கும்.🍎

🍊உள்ளத்தில் தயவு இருந்தால்,கடவுள் அருள் நிச்சயமாக கிடைக்கும்.🍊

🍋பசித்தோர் முகம் கண்டால் இரக்கம் கொள்ளுங்கள் ஜீவகாருண்யமே பேரின்பத்தின் திறவுகோல்.🍋

🍏உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாக இருப்பவர்களின் உறவை நாட வேண்டாம்.🍏

🍈மன ஒருமையுடன் கடவுளின் திருவடியை வணங்கும் நல்லவர்களோடு பழகுங்கள்.🍈

🍑உனக்காக மட்டுமின்றி உன்னைச் சுற்றி இருப்போருக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.🍑

🍅குற்றம் புரிவது மனித இயல்பு.அதையும் குணமாக ஏற்று அருள்வது கடவுளின் இயல்பு.🍅

🥗🥗🥗🥗🥗🥗🥗🥗
 _இறைப்பணியில்_ _என்றும்_ _குஞ்சாண்டியூர்_ _சமரச_ _சுத்த_ _சன்மார்க்க_ _சத்திய_ _சங்கம்_ , _மேட்டூர்_ _அணை_ , _சேலம்_
🍩🍩🍩🍩🍩🍩🍩🍩

Sunday, December 9, 2018

[vallalargroups:6062] வள்ளலாரின் சமாதி வற்புறுத்தல் பாடல்

வள்ளலாரின் சமாதி வற்புறுத்தல் பாடல்::

பரன்அளிக்கும் தேகம்இது சுடுவது
அராதம் எனப் பகர்கின்றேன் நீர்
சிரம் நெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள்
பற்பலரும் சித்த சாமி
உரனளிக்க எழுகின்ற திருநாள்
வந்தடுத்தன ஈதுணர்ந்து நல்லோர்
வரனளிக்கப் புதைத்த நிலை கா­ரோ
கண் கெட்ட மாட்டினீரே.

பரன்அளிக்கும் தேகம்இது..
இந்த தேகம் இறைவன் கொடுப்பது

சுடுவதுஅராதம் எனப் பகர்கின்றேன்:::
சுடுவது அபராதம்(Punishment)  என சொல்கின்றேன்

 நீர் சிரம் நெளிக்கச் சுடுகின்றீர்::
சிரம் துடி துடக்க உயிரை சுடுகின்றீர்கள்

செத்தவர்கள் பற்பலரும் சித்த சாமி::
செத்தவர்கள் பலரும் சாமிக்கு ஒப்பானவர்கள்

உரனளிக்க எழுகின்ற திருநாள்
வந்தடுத்தன ஈதுணர்ந்து :: இதனை உணர்ந்து

நல்லோர் வரனளிக்கப் புதைத்த நிலை::
நல்லோரை புதைத்தால் இறைவன் வரம் அளிப்பார்

கா­ரோ கண் கெட்ட மாட்டினீரே :: இதனை உணராமல் கண்மூடி தனமாக செய்து,சுட்டு அபராத்தை , கொலை சாபத்தை வாங்கி கொள்ளாதீர்கள்..


[vallalargroups:6061] சமாதிக் கட்டளை

சமாதிக் கட்டளை

1. சமாதி வற்புறுத்தல் என எச்சரிக்கை பத்திரிகை கைப்பட எழுதியுள்ளார்கள்.

2. சமாதி வற்புறுத்தல் என பதிகம் இயற்றி உள்ளார்கள்.

சில வாசகங்கள்::

1.சுடுவது கொலை
2. சிரம் நெளிக்க சுடுகின்றீர்
3. சுடுவது அபராதம்
4. பணம் புதைக்க சம்மதிக்கும் நீர் ஏன் பிணம் புதைக்க சம்மதீயீர்?
5.இறந்தவரை எரிப்பது என்பது தூங்குபவனை எரிப்பதற்கு சமம்.


நண்பர்களே, நலம்சார் பண்பர்களே, இறைசார் அன்பர்களே நமது 'சாகாஅருளர் வள்ளலார்' இதனை உலகியலர்களுக்கு "சமாதிக் கட்டளை" என்றே நமக்கு கட்டளை (ORDER) இடுகின்றார். ஓர் அரசின் அதிகாரத்தை பெற்றவர்கள் மட்டுமே கட்டளை இடமுடியும் என்பது தெரிந்ததே. அதுபோல 'சாகாஅருளர் வள்ளலார்' அருட்பெருஞ்ஜோதி' ஆண்டவரின் 'செங்கோலை' பெற்று அண்ட சராசரங்களையும் தற்போதும், எப்போதும் ஆட்சி செய்து வருகின்றார், அப்படிப்பட்ட சாகாஅருளரின் அரசக் கட்டளைதான் இது. இதனை மீறுபவர்கள் தாங்களகவே சுடுகாட்டில் தண்டித்துக்கொண்டுவிடுகிறார்கள் என்பதனைக் கவனிக்க வேண்டும்.

அது என்ன 'சமாதிக் கட்டளை' என்பதனை பார்ப்போம்...

இக்கட்டளை நமது 'சாகாஅருளர் வள்ளலார்' 30-03-1871 ஆம் ஆண்டு தமது அரச ஆணையாக வெளியிட்டார், அதனை அப்படியே இங்கே மீண்டும் (26-04-2013) இவ்வுலக மக்களுக்காக சாகாஅருளரின் ஆணைப்படி வெளியிடுகிறேன்.

அன்புள்ள நீங்கள் சமரச வேதசன்மார்க்க சங்கத் தருமச் சாலைக்கு மிகவும் உரிமையுடையீர்க ளாகலின் உங்களுக்கு உண்மையுடன் அறிவிப்பது.

நீங்களும் உங்களை அடுத்தவர்களும் சிற்றம்பலத் தந்தையார் திருவருளாற் சுகமாக வாழ்வீர்களாக,

கர்மகால முதலிய பேதங்களால் யார்க்காயினுந் தேக ஆனி நேரிட்டால் தகனஞ் செய்யாமல் சமாதியில் வைக்கவேண்டும். இறந்தவர்கள் திரும்பவு மெழுந்து நம்முடன் இருக்கப் பார்ப்போம் என்கிற முழு நம்பிக்கையைக் கொண்டு எவ்வளவுந் துயரப்படாமலும் அழுகுரல் செய்யாமலும் சிற்றம்பலக் கடவுள் சிந்தையுடனிருக்க வேண்டும். புருடன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம். மனைவி இறந்தால் புருடன் வேறு கல்யாணப் பிரயத்தனஞ் செய்யவேண்டாம். பிள்ளைகள் இறந்தால் சஞ்சலிக்க வேண்டாம். கர்ம காரியங்கள் ஒன்றுஞ் செய்யவேண்டாம். தெரிவிக்கத்தக்கவர்களுக்குத் தெரிவித்து ஒரு தினத்தில் நேரிட்டவர்களுக்கு நேரிட்டமட்டில் அன்ன விரயஞ் செய்ய வேண்டும். இவ்வாறு உண்மையாக நம்பிச் செய்யுங்கள். செய்திருந்தால், சமரசவேத சன்மார்க்க சங்கமும் மேற்படி தருமச்சாலையும் நிலைபெற விளக்கஞ் செய்யும் பொருட்டாகவும் சிதம்பரஞ் கோயில் திருச்சபைகளைப் புதுக்கி நிலைபெறவிளக்கஞ் செய்யும் பொருட்டாகவும் கருணை கூர்ந்துஎனது தந்தையாராகிய எல்லாம் வல்ல திருச்சிற்றம்பலக் கடவுள் பார்வதிபுரம் சமரச வேதசன்மார்க்க சங்கத் தருமச்சாலைக்கு எழுந்தருளிக் காட்சி கொடுக்குந் தருணம் மிகவும் அடுத்த சமீபமாக விருக்கின்றது அந்தத் தருணத்தில் சாலைக்கு உரியவர்களாகியிருந்து இறந்தவர்களையெல்லாம் எழுப்பிக் கொடுத்தருளுவார். இது சத்தியம். இது சத்தியம். இந்தக் கடிதம் வெளிப்பட்டறிந்து கொள்ளாமுன் இறந்து தகனமானவர்களையும் எழுப்பியருளுவார். இது வெளிப்பட்டறிந்த பின் தகனஞ் செய்தல் கூடாது அது சன்மார்க்கத்திற்கு தக்கதல்ல. ஆகலில் மேற்கண்டபடி உண்மையான நம்பிக்கையுடன் வாழ்வீர்களாக.

எனக்கு உலக அறிவு தெரிந்தது தொட்டு எனது தந்தையார் திருவருளை நாம்அடையும் வரையில், என்னுடன் பழகியும் என்னை நம்பி யடுத்தும் என்னைக் கேள்வியால் விரும்பியும் எனக்கு உரிமைப்பட்டும் இருந்து இறந்தவர்களையெல்லாம் எழுப்பிக் கொடுத்து சமரச சன்மார்க்க சங்கத்தை விருத்தி செய்விக்கத் திருவுள்ளத்துக் கருதிய பெருங்கருணை வள்ளல் சாலைக்கு உரியவர்களாகி யிருந்தும் அவநம்பிக்கையுடன் இருக்கின்றவர்கள் விஷயத்திலும் இந்த உபகாரம் செய்தேயருளுவர். ஆனால் அவர்கள் சன்மார்க்க சங்கத்திற்கு மாத்திரம் அருகராகார்கள். ஆகலில் நம்பிக்கையுடன் இருங்கள். பெரிய களிப்பை யடைவீர்கள். இது சத்தியம். இது சத்தியம்.

பிரமோதூத வருடம் பங்குனி மாதம் 18. பார்வதிபுரம்.
                                   
இப்படிக்கு
சிதம்பரம் இராமலிங்கம்

Friday, December 7, 2018

[vallalargroups:6060] அருளாகிய தயவை" பெற்றுக்கொள்ள வேண்டுமானால்

🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏
அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
அருட்பெருஞ்ஜோதி !

 🙏🔥 கடவுள் தயவாகிய பூரண அருளைப் பெற்றிடவே  சுத்தசன்மார்க்கம் 🔥🙏
 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனம்🔥🙏
       தனிப்பெருங்கருணை நாயகியாம் மைவிழி அம்மை சிவகாமவல்லி என்று சொல்லக்கூடிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய "அருளாகிய தயவை" பெற்றுக்கொள்ள வேண்டுமானால் ,

ஆன்மாக்களின் ஜீவதயவைக்கொண்டுதான் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும் 🌺

எப்படி என்னில்,
கடவுளது அருளைப் பெறவேண்டுமாயில் ஜீவகாருண்யம் ஒன்றினால் மட்டுமே பெறுதல்கூடுமேயல்லது வேறு எந்த வகையினாலும் பெறுதல்கூடாது ,

இந்த இடத்தில் நமது பெருமான் அழுத்தமாக கூறுகின்ற இந்த வார்த்தையை அனைவரும் சற்றும் அகங்காரம் இன்றி உற்றுக் கவணித்து ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும் 🙏

கடவுளின் அருளைப் பெறவேண்டும் என்று கருதி வீணில் அங்கும் இங்கும் ஓடி இழுத்தல் அடக்குதல் விடுதல் என்று காலத்தை வீணடித்து பயனற்று அருளை பெறுவதற்கு வழிதுறை தெரியாமல் பிறவியை தொலைத்து விடக்கூடாது🌺

ஏனென்றால் ,
பெருமான் இங்கு மிகமிக அழுத்தமாக கூறுகின்ற வார்த்தை என்னவென்றால் ,
ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் மட்டுமே கடவுளது அருளைப் பெறக்கூடும்.
வேறு எந்த வழியிலும் .....
என்ன கூறுகின்றார்கள் ?
வேறு எந்த வழியிலும் கடவுளது அருளை "சிறிதும்" இதையும் நன்றாக கவணிக்க வேண்டும் .

சிறிதும் பெறுதல்கூடாது என்று உறுதியாக அறிதல் வேண்டும் என்று ,
உறுதி என்ற வார்த்தையையும் பயன்படுத்தி கூறுகின்றார்கள் என்பதை சற்று நன்றாக ஊன்றி கவணித்திட வேண்டி சகோதர சகோதரிகளை பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன் 🔥🙏

மற்றொரு இடத்தில் ,
சுத்தசன்மார்க்கத்திற்கு என்று ஏதாவது சாதனம் வேண்டுமா என்றால் !
அதற்கு பெருமான் சொல்லுகின்ற வார்த்தையையும் நன்றாக கவணியுங்கள்.

சாதனங்கள் ஒன்றும் வேண்டாம் .
ஏதாவது ஒருசாதனத்தை சொல்லக்கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாம் .
அதைக்கண்டு பல்லிளித்து இறுமாந்து கெடநேரிடும் ......
இந்த இடத்தை ஒருமுறைக்கு பலமுறை கவணிக்க வேண்டியது அவசியம்....

என்னவென்றால் ,
ஏதாவது ஒரு சாதனத்தை கூறினால் அதன்படி நடந்தால் சிறு ஒளி காணநேரிடும் என்றால்  !
இங்கு சிறு ஒளி காண்பதற்கு உரிய சாதனம் எது என்றால் !

திருவருட்பா ஆறாம்திருமுறையில் அருள்விளக்க மாலையில் கூறியுள்ளபடி,
உண்ணுகின்ற ஊண்வெறுத்து வற்றியும்,
புற்றெழுந்தும் ஒருகோடிப் பெருந்தலைவர் ஆங்காங்கே வருந்திப் பண்ணுகின்ற பெருந்தவத்தும் கிடைப்பதரிதாய்ச்.......
என்று கூறிய நிலையைப் போன்றும்,

விழித்து விழித்து பார்த்தாலும் சுடர் உதயம் இலையேல்,
விழிகள் விழித்திளைப்பதால் விளைவொன்றும் இலையே என்றும்.... 
கூறுவதையும் இங்கு கவணிக்க அந்த சாதனம் எதுவென்று நமக்கு விளங்குகின்றது .
ஆகலில் ,
இப்படிபட்ட சாதனத்தை தொடர்ந்தால் முடிவில் ஓர் சிற்றொளி கண்டு அதில் உண்டாகும் அற்ப சித்தியில் பல்லை இளித்து மகிழ்ந்து இறுமாந்துகிடந்து ,
கெடநேரிடும் இதனால் நாம் அடையவேண்டிய பெரிய லட்சியத்தை அடைவதற்கு காலமில்லாமல் அற்ப சித்தியையும் அதற்குரிய சித்திக்காலம் முடிந்தபின் பிறவியை இழக்க நேரிடும் என்று பெருமான் அந்த அற்ப சிற்றொளியை தருகின்ற சாதனம் வேண்டாம் என்று கூறி,

சுத்தசன்மார்க்க லட்சியத்தை அடையக்கூடிய சாதனம் எதுவென்றால் "எல்லா உயிரையும் தன்னுயிர் போல் பார்க்கும் உணர்வை காலம் தாழ்த்தாது விரைந்து வருவித்துக்கொள்ளுதல் வேண்டும் "
இதுவே சாதனம் .

இந்தக்குணம் வந்தவர் எவரோ அவர்தான் இறந்தாரை எழுப்புகின்றவர் என்றுகூறுகின்றார்கள் நமது பெருமான்🌺

இதைத்தான் அருட்பெருஞ்ஜோதி அகவலில்,
"உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய்ச்சிவமே" என்று மிக மிக அழகாக கடவுள் இருப்பிடத்தைக்காட்டி அங்கு அதற்கு உபகாரம் செய்தால் அது நேரடியாக கடவுளுக்கே செய்த புண்ணியத்திற்குரியதாய் இருக்கின்றது என்று கூறி,

இவ்வுலகில் கடவுளால் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிர்களிலும் கடவுள் வாழுகின்றார்கள் .

ஆதலில்,
 அக்கடவுளின் ஆலயமாக விளங்கும் அவ்வுயிர்களின் தேகத்திற்கும் அவ்வுயிர்களுக்கும் உண்டாகும் துன்பத்தை போக்குவதாகிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் அத்தேகத்தில் குடியிருக்கும் ஆண்டவரின் கருணைக்கு உரியவர்களாகின்றோம்.🌺🙏

ஆகலில்,
அருள் என்பது கடவுளுடைய தயவு.

ஜீவகாருண்யம் என்பது ஜீவர்களுடைய தயவு.

இந்த சிறிய ஜீவ தயவைக்கொண்டுதான் , கடவுளுடைய பெரிய தயவைப் பெறுதல் கூடும் என்பது சத்தியம். இதற்கு வேறு எந்த வழியும் கிடையாது என்பது சுத்தசன்மார்க்க கடவுளின் ஆணையாகும்🔥🙏

ஆகலில் ,
சுத்தசன்மார்க்க லட்சியத்தை அடைய விரும்பும் ,
சுத்தசன்மார்க்க  சாதகர்கள் ஜீவகாருண்யத்தையே கடவுள் வழிபாடாக செய்து , கடவுளுடைய பெருந்தயவாகிய அருளைப் பெறவேண்டும் என்பது கடவுள் ஆணையாகும் 🌺🙏

இதைவிடுத்து ,
தியானம் தவம் தீட்ஷை என்று அங்கும் இங்கும் ஓடி காலத்தை விரையமாக்கி கண்மூடி ஓர்இடத்தில் அமர்ந்து கிடந்தால் அதில் மூடம் உண்டாகும்,

இவ்வுலகம் அருட்சக்தி,பொருட்சக்தி,கிரியாசக்தி,யோகசக்தி"ஞானசக்தி மயமாக இருப்பதாகப் பார்த்துக்கொண்டிருத்தல் வேண்டும்.ஆனால் யோகம் செய்ய வேண்டுவதில்லை.
அதில் அழுந்திவிட்டால் மீளுவது கடினம்.
சதா சிவக் கலப்பாய் கிடந்தாலும் மீளுதல் கடினம்.மூடம் உண்டாகும் இது உண்மை என்று உரைநடை பக்க 388 ல்  யோகத்தில் அழுந்த வேண்டாம் என்று பெருமான் அழுத்தமாக விளக்குகின்றார்கள் இவற்றைக் கவணித்து அனைவரும் கடைபிடித்தால் பெருமான் கூறியபடி பெறவேண்டியதை பெறலாம் இல்லையென்றால் அதுவே நமது கர்மாவாகும் 🌺

கடவுளை வழிபடும் விதத்தில் ,
தியானம் என்பதை கடவுளை ஸ்தோத்தரித்தல், சிந்தித்தல், தியானித்தல் என்ற வழிபாட்டின் ஒருவகையா இருத்தலே வேண்டும் .

ஆனால் சதா சர்வகாலமும் அதிலே அழுந்திவிடக்கூடாது .
இந்த நியதி சுத்தசன்மார்க்க சாதகர்களுக்கு பெருமான் விதித்தது.🌺🙏

🙏🏵 தயவு ,சகிப்புத்தன்மை 🏵🙏
🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻
பெருமான் ,
தன்னை இந்த பெரிய நிலைக்கு ஏற்றிவித்ததாக தமக்கிருந்த "தயவே" காரணம் என்று கூறி ,
அதுபோன்றே நீங்களும் தயவை வளர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறுகின்றார்கள் 🌺

நல்லது ,
அந்த தயவு எப்படி இருக்க வேண்டுமெனில்,

எண்ணுகின்ற எண்ணத்தில் "தயவு !

பேசுகின்ற பேச்சில் தயவு !

செய்கின்ற செயலில் தயவு !

தான் பற்றி இருக்கின்ற நெறியில் தயவு !

தான் செய்கின்ற கடவுள் வழிபாட்டில் தயவு !

பிறர்கு சொல்லுகின்ற உபதேசத்தில் தயவு !

பிறர் கூறுகின்ற உபதேசத்தை ஏற்பதில் தயவு !

ஆன்மநேயத்திலும் தயவு !

இரக்கம் பொருட்டு செய்கின்ற ஜீவகாருண்யத்திலும் தயவு !

ஒத்தார் உயர்ந்தார் தாழ்ந்தாரோடு செய்கின்ற விசாரத்திலும் தயவு !

இன்னும் மேலாக கூறவேண்டுமானால் உயிரற்ற பொருள் என்று அவமதிக்காமல் ,
சடப்பொருள்களின் மீதும் தயவுகாட்டுவதே சுத்தசன்மார்க்கத்திற்குரிய சிறந்த சாதனமாகும் 🌺🙏

மற்றொன்று சகிப்புத்தன்மை .
இந்த சகிப்புத்தன்மை வரவேண்டும் என்றால் ,
இங்கு நமக்கு நம் வாழ்வில் நடக்கின்ற நன்மைகளும், தீமைகளும் ,தடைகளும், தடையற்ற சகாய சாதக அனுகூலங்களும் ,இன்பங்களும், துன்பங்களும் ஆகிய எல்லாவற்றிற்கும் காரணம் நாமே  நமது முன்வினையே என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தினால் மட்டுமே இந்த சகிப்புத்தன்மை வரக்கூடும் 🌺

பெருமான் கூறுவார்கள் ,
ஒருவர் நமக்கு எப்படிபட்ட கொடிய தீங்கு செய்தாலும் ,
அவற்றை பொறுத்துக்கொண்டு ,
நாம் அவருக்கு பதிலுக்கு திருப்பி தீங்கு எதுவும் செய்யாமல் சகித்துக்கொண்டு பொறுமையுடன் அவருடைய அறியாமையையும் வினையையும் எண்ணி, 

தற்போது அவர் நமக்கு செய்த தீங்கினால் அருள் நியதின்படி தணடனை அவருக்கு கிடைக்கக்கூடுமே ,
அந்த தண்டனைக்காகவும் இறைவனிடன் அவருக்காக இரங்கி வேண்டுதல் என்ற உயரிய "சகிப்புத்தன்மை" நிலையை பெருமான் அழகாக கூறுகின்றார்கள் 🌺🙏

ஆகலில் ,
சுத்தசன்மார்க்க சங்கத்து லட்சியர்களுக்கு தயவு சகிப்புத்தன்மை என்னும் இந்த இரண்டு சத்துவ சாத்வீக குணத்தைப் பெற்று நெறிப்படி வாழ்தல் சுத்தசன்மார்க்க லட்சியத்தை விரைந்து பெறுவதற்கு ஏதுவாகும் 🔥🌺🙏
......நன்றி🔥🙏
.....வள்ளல் மலரடிப் போற்றி !போற்றி !🔥🙏
.....பெருமான் துணையில் 🔥🙏
....தயவுடன் வள்ளல் அடிமை 🔥🙏
....வடலூர் இரமேஷ்.

Monday, December 3, 2018

[vallalargroups:6057] கலியுக முடிவு சுத்தசன்மார்க்க யுகம் தொடக்கம்

🙏🔥🔥🙏🔥🔥🙏🔥🔥🙏🔥🔥🙏🔥🔥🙏
அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங் கருணை !
அருட்பெருஞ்ஜோதி !

🙏🔥🔥 நிறை அருள் பூரணத்தால் பெற்ற தெருள் நிறை திருவருட்பா 🔥🔥🙏
🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼
       ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுள்ள உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன் 🔥🙏
      
கலியுக முடிவு சுத்தசன்மார்க்க யுகம் தொடக்கம் 🌺

கர்மசித்தர் ஆட்சி முடிவு ஞானசித்தர் ஆட்சி தொடக்கம்🌺

உருவ வழிபாடு முடிவு ஜோதி வழிபாடு தொடக்கம்🌺

சாதி சமய மதங்களின் முடிவு சமரச சுத்தசன்மார்க்கத்தின் தொடக்கம்🌺

மனிதநேயம் கடந்த ஆன்மநேயம் வெளிப்படுதல்🌺

கோயிலில் சென்று இறைவனிடம் பத்தி செய்து முக்தி பெற்றது நீங்கி,

ஒவ்வொரு உயிர்களின் தேகங்களையே கோயிலாகக் கொண்டு அவற்றின் உயிர்களையே கடவுளாக கண்டு அவைகளுக்கு உபகாரம் செய்கின்ற ஜீவகாருண்ய செய்கையே கடவுள் வழிபாடாகவும்  அறிந்து, அந்த ஜீவகாருண்யத்தினால் மட்டுமே மோட்சமாகிய அருள்வீட்டை அடைந்திடும் வழியாகவும் கண்டுகொள்ளப்பட்டது 🌺 

பிரபஞ்ச வரலாற்றில் முதன்முதலில் ஓர் ஆன்மா ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பூரண அருள் வல்லபத்தைப் பெற்றுக்கொண்டு அருள்சக்தியின் வடிவாய் நின்று இவ்வுலகை அரசாளுகின்றது🌺

இதுவரை இவ்வுலகில் நிலம்,
நீர்,
காற்று,
நெருப்பு ,
ஆகாசம் ,
சூரியன்,
சந்திரன் என்று ஏழு மூர்த்தங்களுக்கு கர்மசித்தர்களின் ஆட்சியில் ஆலயங்கள் கட்டப்பெற்று உருவ வழிபாட்டால் வழிபடப் பட்டது 🌺

ஆனால் ,
எட்டாவது மூர்த்தமான ஆன்மாவிற்கு என்று ஓர் ஆலயம் எங்குமே இல்லாமல் இருந்தது🌺

ஏனென்றால் எட்டாவது மூர்த்தமான ஆன்மாவிற்கு ஆலயம் எழுப்ப வேண்டும் என்றால் ,
 அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பூரண அருள் அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு, பூரணஅருள்வடிவாகி,
அருட்பெருஞ்ஜோதி மயமாய் நின்று,
இவ்வுலகில் எல்லாம் செய்யவல்ல ஞானசித்தியைப் பெற்றுக்கொண்ட ஓர் சுத்தசன்மார்க்க ஞானசித்தரால்தான் ,

அட்ட மூர்த்தங்களின் கடைசி மூர்த்தமான ஆன்மாவிற்கு என்று ஒரு திருக்கோயிலை, 
உண்மை கடவுள் வழிபாடான ஜோதிவழிபாட்டுடன்  கட்டப்படவேண்டும் என்பது திருவருள் சித்தமாய் இருந்ததனால்,

நமது அருட்பெருந் தந்தை அருட்பிரகாச வள்ளல் பெருமானும் இதுவரை இவ்வுலகில் யாரும் பெறாத பூரண அருள் அனுபவத்தை பெற்றுக்கொண்டதனால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் ,

அருட்பிரகாச வள்ளல் பெருமானின் அகமாகிய சத்தியஞானசபையில் வந்தமர்கின்றார்கள்🌺

இதனால் ,
பூரண அருள் ஞானசித்தராய் ,
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தனது அகமாகிய சத்தியஞான சபையில் கண்டு தரிசித்து அனுபவித்த " அகவாழ்வாகிய சிற்சபை " அனுபவத்தையும்,

அகத்திலிருந்து  அனகமாக பெற்ற
 " பொற்சபை வாழ்வாகிய அனகவாழ்வு " அனுபவத்தையும் பெற்றுக்கொண்டதால்,

இப்பிரபஞ்சத்தில் பக்குவ ஆன்மாக்களாகிய ஞானிகளும் அருளாளர்களும் தனது அகத்தே கண்டு அனுபவித்துவந்த அருட்பெருஞ்ஜோதி அருள் தரிசனத்தை ,

இனி,
இவ்வுலகவரும் புறத்தே கண்டு தரிசித்திட வேண்டி ஆண்டவரும் திருவுள்ளங்கொண்டு ,

முதன் முதலில் இப்பூவூலகில் புண்ணியபூமியாம் வடலூரில்,
இயற்கை உண்மை (சத்து) நிறைவாகிய திருவுருவை தரித்து,

இயற்கை விளக்கம்(சித்து) நிறைவாகிய சுத்த சிவானுபவ சத்தியஞானசபையில்,
 
இயற்கை இன்பம்(ஆனந்தம்) நிறைவாகிய ஓர் சிவானந்த ஒருமை திருநடச் செய்கையை இவ்வுலக உயிர்கள் அனைத்தும் இன்பம் அடையும் பொருட்டும்,

மற்றும் தனது சச்சிதானந்த  உண்மையை(மெய்யறிவானந்தம்) எவ்வுயிர்களும் அறிந்து
அந்த சச்சிதானந்தமயமாய் அருள் வாழ்வு வாழ்ந்திட வேண்டியும் ,

வேதாந்தம்,சித்தாந்தம்,சுத்தவேதாந்நம்,
சுத்தசித்தாந்தம் கடந்த பூரண அருள்நிலையான சுத்தசன்மார்க்க சுகப் பெரு நிலையில் கண்டுகொள்ளப்பட்ட சுத்தசிவமாகிய அருட்பெருஞ்ஜோதி கடவுளை பற்றி அனைவரும் அறிந்து தெளிந்து அனுபவம் பெறுவதற்கும் என்றே,

வடலூர் பெருவெளியில் சத்தியஞானசபையை திருவருட்பிரகாசப் பெருமானாரால் கட்டிமுடித்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் அத்திருச்சபையில் சித்திஎல்லாம் விளங்க திருநடம் செய்து அருள்பாலிக்கின்றார்கள் 🌺 

இதன்பொருட்டு இவ்வுலகில் புலைகொலை தவிர்த்த சுத்தசன்மார்க்கப் பெருநெறியை திருவருள் சம்மதத்துடன் நமது வள்ளல் பெருமானாரால் முன்னின்று நடத்தப்படுகின்றது.

அந்த சுத்தசன்மார்க்கப் பெருநெறி அனுபவத்தைப் பெறுவதற்கு , அதற்குரிய பக்குவத்தையும் பதத்தையும் அடைவதற்கு ஏதுவாக பூரண அருள் ஞானியாம் நமது அருட்பெருந்தந்தை திருவருட்பிரகாச வள்ளல் பெருமானாரால் கொடுக்கப்பட்ட சுத்தசன்மார்க்க சுத்தவேதப் புத்தகமாகிய திருவருட்பா ஆறு திருமுறைகளை உள்ளடக்கமாய் கொண்டு விளங்குகின்றது 🌺

இதில் முதல் ஐந்து திருமுறைகள் ,
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே அவரவர்களின் அருள் அனுபவத்திற்கு தக்கவாறு "அனேகராய்" இருந்த நிலையைக் காட்டியும்,

ஆறாம் திருமுறை,
பூரணமான அருள் அனுபவம் பெற்றபின் தனது முழு அருள் அனுபவ உண்மையை வெளிப்படுத்தி , அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே "ஏகராய்" இருக்கின்ற அருட்பெருநிலையையும் காட்டி அம்மயமாய் தம்மை ஆட்கொள்ளுகின்ற தன்மையையும் விளக்குவதாய் உள்ளது🌺

இதுவே இவ்வுலகின் கடைசி வேதப் புத்தகமாகும்.
இத்திருவருட்பா ஒன்றே இனி இவ்வுலகில் எங்கெங்கும் ஓதப்பட இருக்கின்ற வேதப் பொக்கிஷமாகும்🌺

காரணம் இது வரை இவ்வுலகில் நிலைபெற்று வந்த சமயம் மதம் மார்க்கங்கள் எல்லாம் சிறிது சிறிதாக மறையத் தொடங்கிவிட்டன,

அந்தந்த மதத்திலும் சமயத்திலும் ஓதிவந்த சமய மத நூல்களும் இனி சிறிது சிறிதாக ஓதுவார் இன்றி ,

எல்லோரும் சுத்தசன்மார்க்கம் சார்ந்து திருவருட்பா ஒன்றையே ஓதுவார்கள் இதுதான் திருவருள் ஆணையாகவும் உள்ளது🌺

சமய மதத்திற்காக வாதம் செய்கின்ற வாதிகள் கடைசிவரை இருக்கத்தான் செய்வார்கள் .

காரணம்,
அதுதான் அவர்களுக்கு இப்பிறவியில் கொடுக்கப்பட்ட வேலை ,அவற்றை அவர்கள் சரியாக செய்கின்றார்கள் .
அதுவும் திருவருள் காரியமேயாகும்🌺

அது ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க சுத்தசன்மார்க்கம் உலகமெங்கும் வளர்ந்துகொண்டே இருக்கும்🌺

சமனத்தை கரையேற்ற திருஞானசம்பந்தர் வருவிக்கப்பட்டது போன்று ,

சமய மதத்தை கரையேற்றி கடவுள் உண்மையை வெளிப்படுத்தும் சுத்தசன்மார்க்கத்தை நிலைநிறுத்த வள்ளல் பெருமான் வருவிக்கப் பெற்றார்கள்🌺

எப்பொழுது சமயமடாதிபதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இலங்கை ஆறுமுக நாவலரை அழைத்துவந்து கடலூர் நீதிமன்றத்தில் திருவருட்பாவை மருட்பா என்று குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்துபொழுது,

அதில் திருவருட்பாவிற்கு சாதகமாக திருவருட்பா மருட்பா அல்ல அது திருவருட்பாவேயாகும் என்று நீதிமன்றம் நீதி வழங்கியதோ அன்றே சமயமும் மதமும் மறைவை நோக்கிய பயணத்தை தொடர்ந்தன🌺

இது எல்லாமே திருவருள் சம்மதம் ஆகும்.
எப்படி என்னில் அன்று சமய மடாதிபதிகள் எதிர்ப்புகாட்டி ஆறுமுகநாவலரைக் கொண்டு அரசு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்ததனால்தான் ,

உலகத்தின் எங்கோ ஒர் மூலையில் இருக்கும் வடலூர் என்ற ஊரில் தோற்றுவிக்கப்பட்ட சுத்தசன்மார்க்கம் , 

திருவருட்பாவிற்கு யாதும் தடைக்கிடையாது 
அது மருட்பா அல்ல அருட்பாதான் என்று , 

திருவருட்பாவிற்கு அரசே அங்கீகாரம் தந்து இவ்வுலகமுழுதும் பரவியிருந்த சமயத்தார்கள் எல்லாம் அறிந்துகொள்ளும் அளவிற்கு திருவருட்பாவை அவர்களைக்கொண்டே உலகமறியச் செய்தது திருவருள் காரியமேயாகும் 🌺

திருவருட்பாவிற்கு எப்பொழுது அரசே அங்கீகாரம் கொடுத்து வழக்கு தொடர்ந்த சமயவாதிகளின் வழக்கு தோற்றுபோனதோ அப்பொழுதே சமயம் தேய்பிறையானது🌺

இவையெல்லாம் திருவருள் காரியமே என்பதைத்தான் நாம் அனைவரும் சத்தியமாக உணர்தல் வேண்டும்🌺

இங்கு ,
வாதம் செய்தல் கூடாது,
ஏனென்றால் இங்கு இதுவரை நான் சொல்லியுள்ளது எல்லாம் பெருமானே ஆறாம் திருமுறையில் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்கள் மற்றும் தற்போது நாமும் ஒவ்வொரு சமயக்கோயில்களிலும் திருவருட்பாவே ஓதப்படுதலை கண்ணுறக் காண்கின்றோம்🌺

ஆகலில் ,
ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய சகோதர சகோதரிகள்,
அனைவரும் இவ்வுண்மையை தயவாய் தங்களது மேலான அறிவால் ஆராய்ந்து உணர்ந்து,
இவ்வுலகில் அவர் "அன்றி ஓர் அணுவும் அசையாது என்றால்"

இன்று சாதி சமய மத பேதமற்ற சுத்தசன்மார்க்கம் இவ்வுலகில் நிலைபெற வேண்டி அருள்செய்தது அந்த ஒருவரே என்பதை உணர்ந்து ,

ஒத்தார் உயர்ந்தார் தாழ்ந்தார் என்ற பேதமற்ற சமரசத்தை போதிக்கும் சுத்தசன்மார்க்கத்தை அனைவரும் அடைந்து ,

அருள் வாழ்வைப் பெற்று , அருள் நிலையில் வாழ ,சாகாக் கல்வியைப் போதிக்கும் சுத்தசன்மார்க்கத்தை பற்றுவோம் ! போற்றுவோம் !🌺
......நன்றி !🔥🙏
......வள்ளல் மலரடிப் வாழ்க ! வாழ்க !🔥🙏
......பெருமான் துணையில் 🔥🙏
....தயவுடன் வள்ளல் அடிமை🔥🙏
.....வடலூர் இரமேஷ் ;

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)