Thursday, December 28, 2017

[vallalargroups:5845] திருவருட்பா இன்னிசை @ Chennai

அன்புடையீர்
வந்தனம் 
27.12.2017 புதன்கிழமை

 சென்னையில் எஸ்.ஆர்.எம்
மருத்துவமனை கலையரங்கத்தில் திருவருட்பா இன்னிசை
நிகழ்வில் திரு. ஜீவ.சீனிவாசன் அவர்கள்
திருவருட்பா இன்னிசை
வழங்கினார். 
சங்கீத் சாகர் அகாடமியின் 
நிறுவனர் திரு.திருபுவனம் ஆத்மநாதன் ஐயா அவர்கள்
ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து விழாவினை 
நடத்தி வருகின்றார்
சங்கீத கலைஞர்கள் சன்மார்க்க பெரியோர்கள்
தமிழ்ச்சங்க அறிஞர்கள்
பன்னாட்டு சான்றோர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்

Thursday, December 21, 2017

[vallalargroups:5843] During Marriage Days ..What we have to do - Vallalar Answer

🌲🍍 ஜீவகாருண்யம். 🍍🌲

சமுசாரிகள் விவாக முதலிய விசேஷ 

காரியங்களில் பந்தலை அலங்கரித்துக் -

அவ்விடத்தில் வேறு வேறு சடங்குகளைச் 

செய்வித்தும் - ஆடல், பாடல், வரிசை, 

ஊர்வலம் முதலிய விநோதங்களை அப்ப 

வர்க்கம், சித்திரான்னம் முதலிய பெருமைப் 

பாடுகளையும் நடத்தியும் எக்களிப்பில் 

அழுந்தியிருக்குந் தருணத்தில் - பசித்த 

ஏழைகள் முகத்தைப் பார்க்கவும் சம்மதிக்க 

வில்லை. இப்படிப்பட்ட சந்தோஷ காலத்தில் 

தமக்காயினும், தமது மக்கள், துணைவர் 

முதலியோர்க்காயினும், ஒவ்வோர் ஆபத்து 

நேரிடுகின்றது. அப்போது, அவ்வளவு 

சந்தோஷத்தையும் இழந்து துக்கப்படு 

கின்றார்கள். இப்படி துக்கப்படும்போது 

அலங்காரஞ் செய்த பந்தலும், சங்கல்ப 

விகல்பமான சடங்குகளும், -ஆடல் ,பாடல் 

வாத்தியம் , வரிசை ஊர்கோலம் முதலிய 

வினோதங்களும் அப்பவர்க்கம் சித்திரா

அன்னம் முதலிய பெருமைப்பாடுகளும் 

அந்த  ஆபத்தை தடை செய்யக்கண்ட 

தில்லை. அந்த சுப காரியத்தில் உள்ள

படியே பசித்த ஜீவர்களுக்கு ஆகாரங் 

கொடுத்துப் பசியை நீக்கி அவர்கள் 

அகத்திலும் முகத்திலும் கடவுள் விளக்க 

த்தையும்,கடவுளின்பத்தையும் வெளிப்பட 

செய்திருந்தார்களானால் அந்த விளக்கமும் 

இன்பமும் அத் தருணத்தில் நேரிட்ட  

ஆபத்தை நீக்கி, விளக்கத்தையும் இன்ப 

த்தையும் சத்தியமாக  உண்டு பண்ணும் 

அல்லவா?,ஆதலின் விவாக முதலிய 
விசேஷச் செய்கைகளிலும் தங்கள்தங்கள் 

தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களது பசியை 

ஆற்றுவித்துத் திருப்தியின்பத்தை உண்டு 

பண்ணுவது முக்கியமென்று அறிய 

வேண்டும்.   🌹 வள்ளலார் 🌹 


[vallalargroups:5842] During Marriage Days ..What we have to do - Vallalar Answer

Wednesday, December 20, 2017

[vallalargroups:5841] Invitation: Free online Sathvicharam by Vallalar universal mission USA @ Sun 24 Dec 2017 7:30pm - 9:30pm (IST) (Vallalar Groups)

Free online Sathvicharam by Vallalar universal mission USA

When
Sun 24 Dec 2017 7:30pm – 9:30pm India Standard Time
Calendar
Vallalar Groups
Who
Vallalar Groups- organiser
hariharan hariharan- creator
Vallalar Groups
Attachments
Dr.Hussain VUM
Vallalar Vagutha Aanmaneya Orumaippadu by Dr.Hussain ayya. Pls see the attachment for contact number to attend free conference call.

Going?    - -     

Invitation from Google Calendar

You are receiving this courtesy email at the account vallalargroups@googlegroups.com because you are an attendee of this event.

To stop receiving future updates for this event, decline this event. Alternatively, you can sign up for a Google account at https://www.google.com/calendar/ and control your notification settings for your entire calendar.

Forwarding this invitation could allow any recipient to modify your RSVP response. Learn More.

Wednesday, December 13, 2017

[vallalargroups:5839] Invitation: Free online Sathvicharam by Vallalar universal mission USA @ Sun 17 Dec 2017 7:30pm - 9:30pm (IST) (Vallalar Groups)

Free online Sathvicharam by Vallalar universal mission USA

When
Sun 17 Dec 2017 7:30pm – 9:30pm India Standard Time
Calendar
Vallalar Groups
Who
Vallalar Groups- organiser
hariharan hariharan- creator
Vallalar Groups
Attachments
Pinda anubavam
Pinda Anubavam part 2 by Thiru Thambaiah ayya Thanjavur
Pls see the attachment for further details like contact number to participate

Going?    - -     

Invitation from Google Calendar

You are receiving this courtesy email at the account vallalargroups@googlegroups.com because you are an attendee of this event.

To stop receiving future updates for this event, decline this event. Alternatively, you can sign up for a Google account at https://www.google.com/calendar/ and control your notification settings for your entire calendar.

Forwarding this invitation could allow any recipient to modify your RSVP response. Learn More.

[vallalargroups:5838] Th.thambaiah Sir Speech online Coming Sunday

Dear All,

Th.thambaiah Sir Speech online Coming Sunday

More details invitation attached

பிண்ட அனுபவம் Part 2

[vallalargroups:5837] where are we in our life? answer

Tuesday, December 12, 2017

Monday, December 11, 2017

[vallalargroups:5835] வள்ளுவர் கூறும் உடைமைகள்

வள்ளுவர் கூறும் உடைமைகள்

வள்ளுவர் கூறும் உடைமைகள் - எது உடைமை ? 
            நமக்குச் சொந்தமனவைகளை ' உடைமை ' எனச் சொல்கிறோம் ;கருதுகிறோம் .அவற்றின் மீது உரிமை கொண்டாடுகின்றோம்.இவர் என் அன்னை ; இது என் பள்ளி என்று உரிமையோடு கூறுகின்றோம் . இவற்றை மட்டுமல்ல ;நம் பெற்றுள்ள செல்வம் ,வீடு ,தோட்டம் ,வயல் ,பொன் ,பொருள் அனைத்தையும் 'உடைமை' என்று அவற்றின் மீது பற்று கொள்கின்றோம். ஆனால் இவை அனைத்தும் அழியும் உடைமைகள் .

வள்ளுவர் கூறும் உடைமைகள் என்றும் அழியாதவை ;
அவர் குறிப்பிடும் உடைமைகள் யாவை ?

1 அடக்கமுடைமை
2 அருளுடைமை
3 அறிவுடைமை
4 அன்புடைமை
5 ஆள்வினைஉடைமை
6 ஊக்கமுடைமை
7 ஒழுக்கமுடைமை
8 நாணுடைமை
9 பண்புடைமை
10 பொறையுடைமை

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்தப் பத்து உடைமைகளும் மிகமிகத் தேவையானவை .

ஒருவர் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துச் செல்வங்களையும் அனைத்து வசதிகளையும் பெற்றிருந்தாலும் ,'அடக்கம் 'என்னும் ஆக்கம் ,அதாவது செல்வம் அவரிடம் இல்லாவிடில் பயனில்லை . மெய் ,வாய்,கண் ,மூக்கு,செவி,ஆகிய ஐம்புலன்களையும் அடக்கிக் காத்தலே அழியாத புகழை ஈட்டித்தரும் .
நாவை ஒருவன் அடக்கிக் காக்க வேண்டும் . 6 அங்குள நீளமுள்ள நாக்கு 6 அடி உயரம் உள்ள மனிதனையே கொல்லும் ஆற்றலுடையது.நம்முடைய நாவினால் பிறர் மனம் புண்படும்படி சொற்களைப் பேசக் கூடாது .இதனையே வள்ளுவர் ,
"யாகாவர் ஆயினும் நாகாக்கக் காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு .
என்கிறார் .சொற்குற்றத்திற்கு ஆளாகாமல் நம் நாவை அடக்கிப் பழக வேண்டும் (அடக்கமுடைமை).

பொருட்செல்வம் மிக இழிந்தவர்களாகிய திருடன் ,கொள்ளைக்காரன் ஆகியவரிடம் கூட கோடிக்கணக்காகக் குவிந்திருக்கலாம் .ஆனால் , 'அருட்செல்வமே' உயர்ந்த செல்வமாகும் .எல்லா உயிரினத்திலும் கருணை கொண்டு அவற்றைக் காப்பதே அருள்உடைமை .

இதைப் பெற வேண்டுமாயின் ஒருவருக்கு அறிவுடைமை தேவை .அறிவு என்பது பல நூல்களைப் படித்தால் மட்டுமே வருவதன்று .எவற்றை எவர் கூறினாலும் .அதில் உள்ள உண்மைப் பொருளை ஆராய்ந்து அறிவதே அறிவுடைமை .

உலகில் இன்புற்று வாழ வேண்டும் எனில் அனைத்து உயிர்கள் மீது அன்புடையவர்களாக விளங்க வேண்டும் .உள்ளத்தில் அன்பு இல்லாதவர்கள் வரும் தோற்றத்தால் மட்டுமே மனிதர் என்று குறிப்பிடுவர்.பொம்மைகள் போன்றவர்கள் அன்பில்லாதவர்கள்.(அன்புடைமை)

நம்மால் முடியும் என்று நம்பிக்கையுடன் ஒரு செயலைச் செய்வதே ஆள்வினையுடைமை .''செய்வன திருத்தச் செய்'' என்னும் பழமொழிகேற்ப எந்த செயலையும் திறன்பட ,திருத்தமாக ,நன்றாகச் செய்ய வேண்டும் .இல்லையேல் ,அரைக்கிணறு தாண்டுவது போல் அச்செயல் ஆபத்தில் முடிந்து விடும்.

"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு ."
தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்திருக்கும் தாமரை தண்டின் உயரமும் இருக்கும் .நம் உள்ளத்தில் "ஊக்கம் "எந்த அளவு உயர்ந்திருக்கிறதோ அந்த அளவு நம் வாழ்க்கையும் உயர்ந்து விளங்கும் .எதை நினைத்தாலும் உயர்ந்தவற்றையே நினைக்க வேண்டும் .உள்ளத்தில் ஊக்கமில்லையேல் ,நாம் வாழ்கையில் உயர்வில்லை .கல்வி கற்க உரம் போன்றது ஊக்கமுடைமையே .

தமக்கு பழி வராதவாறு வாழ்வதே நாணுடைமை .உலகம் பலிக்கும் இழி செயல்களைச் செய்யாமல் இருப்பதேநாணுடைமை .நாணம் உடையவர்கள் பண்பின் உறைவிடமாவர்.

நல்ல குணங்களைப் பெற்றிருப்பதே பண்புடைமை .'பண்பு 'என்னும் சொல்லுக்கு நல்ல குணங்கள் என்று பொருள் .நல்ல நிலத்தில் விதை விதைத்தால்தான் பயிர் நன்கு வளரும் .இளம் பிள்ளைகளின் உள்ளம் கள்ளம் கபடம் அற்றது .நல்ல எண்ணங்கள் அவர்கள் உள்ளத்தில் நன்கு பதியும் .எல்லோரிடமும் எளிமையாகப் பழகுவதே பண்புடைமை .

"ஒழுக்கம் உயிரைக் காட்டிலும் மேலானது ."பெரியோர்களும் அறநூல்களும் காட்டும் நேரிய பாதையில் செல்வதே ஒழுக்கமுடைமை.

நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்.தீய நடத்தையால் பழி வந்து சேரும் .தகாத சொற்களை ஒரு போதும் தவறியும் கூறிவிடக் கூடாது .தீயோர் நட்பை விலக்க வேண்டும்

ஒருவர் நமக்குத் தீமை செய்தாலும் ,அதனைப் பொறுத்துக்கொண்டு மீண்டும் அவர்களுக்கு நன்மையே செய்ய வேண்டும் .தீமையை வெல்ல நம்மையே மருந்து. பொறுமையே சிறந்த வழி.(பொறையுடைமை)

எனவே ,வள்ளுவர் கூறிய -மேற்காட்டிய பத்து உடைமைகளைப் பெற்று உலகில் புகழோடு வாழ்வோமாக

வள்ளுவர் கூறும் உடைமைகள்

வள்ளுவர் கூறும் உடைமைகள் - எது உடைமை ?
            நமக்குச் சொந்தமனவைகளை ' உடைமை ' எனச் சொல்கிறோம் ;கருதுகிறோம் .அவற்றின் மீது உரிமை கொண்டாடுகின்றோம்.இவர் என் அன்னை ; இது என் பள்ளி என்று உரிமையோடு கூறுகின்றோம் . இவற்றை மட்டுமல்ல ;நம் பெற்றுள்ள செல்வம் ,வீடு ,தோட்டம் ,வயல் ,பொன் ,பொருள் அனைத்தையும் 'உடைமை' என்று அவற்றின் மீது பற்று கொள்கின்றோம். ஆனால் இவை அனைத்தும் அழியும் உடைமைகள் .

வள்ளுவர் கூறும் உடைமைகள் என்றும் அழியாதவை ;
அவர் குறிப்பிடும் உடைமைகள் யாவை ?

1 அடக்கமுடைமை
2 அருளுடைமை
3 அறிவுடைமை
4 அன்புடைமை
5 ஆள்வினைஉடைமை
6 ஊக்கமுடைமை
7 ஒழுக்கமுடைமை
8 நாணுடைமை
9 பண்புடைமை
10 பொறையுடைமை

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்தப் பத்து உடைமைகளும் மிகமிகத் தேவையானவை .

ஒருவர் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துச் செல்வங்களையும் அனைத்து வசதிகளையும் பெற்றிருந்தாலும் ,'அடக்கம் 'என்னும் ஆக்கம் ,அதாவது செல்வம் அவரிடம் இல்லாவிடில் பயனில்லை . மெய் ,வாய்,கண் ,மூக்கு,செவி,ஆகிய ஐம்புலன்களையும் அடக்கிக் காத்தலே அழியாத புகழை ஈட்டித்தரும் .
நாவை ஒருவன் அடக்கிக் காக்க வேண்டும் . 6 அங்குள நீளமுள்ள நாக்கு 6 அடி உயரம் உள்ள மனிதனையே கொல்லும் ஆற்றலுடையது.நம்முடைய நாவினால் பிறர் மனம் புண்படும்படி சொற்களைப் பேசக் கூடாது .இதனையே வள்ளுவர் ,
"யாகாவர் ஆயினும் நாகாக்கக் காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு .
என்கிறார் .சொற்குற்றத்திற்கு ஆளாகாமல் நம் நாவை அடக்கிப் பழக வேண்டும் (அடக்கமுடைமை).

பொருட்செல்வம் மிக இழிந்தவர்களாகிய திருடன் ,கொள்ளைக்காரன் ஆகியவரிடம் கூட கோடிக்கணக்காகக் குவிந்திருக்கலாம் .ஆனால் , 'அருட்செல்வமே' உயர்ந்த செல்வமாகும் .எல்லா உயிரினத்திலும் கருணை கொண்டு அவற்றைக் காப்பதே அருள்உடைமை .

இதைப் பெற வேண்டுமாயின் ஒருவருக்கு அறிவுடைமை தேவை .அறிவு என்பது பல நூல்களைப் படித்தால் மட்டுமே வருவதன்று .எவற்றை எவர் கூறினாலும் .அதில் உள்ள உண்மைப் பொருளை ஆராய்ந்து அறிவதே அறிவுடைமை .

உலகில் இன்புற்று வாழ வேண்டும் எனில் அனைத்து உயிர்கள் மீது அன்புடையவர்களாக விளங்க வேண்டும் .உள்ளத்தில் அன்பு இல்லாதவர்கள் வரும் தோற்றத்தால் மட்டுமே மனிதர் என்று குறிப்பிடுவர்.பொம்மைகள் போன்றவர்கள் அன்பில்லாதவர்கள்.( அன்புடைமை)

நம்மால் முடியும் என்று நம்பிக்கையுடன் ஒரு செயலைச் செய்வதே ஆள்வினையுடைமை .''செய்வன திருத்தச் செய்'' என்னும் பழமொழிகேற்ப எந்த செயலையும் திறன்பட ,திருத்தமாக ,நன்றாகச் செய்ய வேண்டும் .இல்லையேல் ,அரைக்கிணறு தாண்டுவது போல் அச்செயல் ஆபத்தில் முடிந்து விடும்.

"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு ."
தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்திருக்கும் தாமரை தண்டின் உயரமும் இருக்கும் .நம் உள்ளத்தில் "ஊக்கம் "எந்த அளவு உயர்ந்திருக்கிறதோ அந்த அளவு நம் வாழ்க்கையும் உயர்ந்து விளங்கும் .எதை நினைத்தாலும் உயர்ந்தவற்றையே நினைக்க வேண்டும் .உள்ளத்தில் ஊக்கமில்லையேல் ,நாம் வாழ்கையில் உயர்வில்லை .கல்வி கற்க உரம் போன்றது ஊக்கமுடைமையே .

தமக்கு பழி வராதவாறு வாழ்வதே நாணுடைமை .உலகம் பலிக்கும் இழி செயல்களைச் செய்யாமல் இருப்பதே நாணுடைமை .நாணம் உடையவர்கள் பண்பின் உறைவிடமாவர்.

நல்ல குணங்களைப் பெற்றிருப்பதே பண்புடைமை .'பண்பு 'என்னும் சொல்லுக்கு நல்ல குணங்கள் என்று பொருள் .நல்ல நிலத்தில் விதை விதைத்தால்தான் பயிர் நன்கு வளரும் .இளம் பிள்ளைகளின் உள்ளம் கள்ளம் கபடம் அற்றது .நல்ல எண்ணங்கள் அவர்கள் உள்ளத்தில் நன்கு பதியும் .எல்லோரிடமும் எளிமையாகப் பழகுவதே பண்புடைமை .

"ஒழுக்கம் உயிரைக் காட்டிலும் மேலானது ."பெரியோர்களும் அறநூல்களும் காட்டும் நேரிய பாதையில் செல்வதே ஒழுக்கமுடைமை .

நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்.தீய நடத்தையால் பழி வந்து சேரும் .தகாத சொற்களை ஒரு போதும் தவறியும் கூறிவிடக் கூடாது .தீயோர் நட்பை விலக்க வேண்டும்

ஒருவர் நமக்குத் தீமை செய்தாலும் ,அதனைப் பொறுத்துக்கொண்டு மீண்டும் அவர்களுக்கு நன்மையே செய்ய வேண்டும் .தீமையை வெல்ல நம்மையே மருந்து. பொறுமையே சிறந்த வழி.(பொறையுடைமை)

எனவே ,வள்ளுவர் கூறிய -மேற்காட்டிய பத்து உடைமைகளைப் பெற்று உலகில் புகழோடு வாழ்வோமாக


Saturday, December 9, 2017

[vallalargroups:5833] அகத்தியர் வாக்கு

[vallalargroups:5832] தானத்தில் சிறந்தது அன்னதானம்

''தானத்தில் சிறந்தது அன்னதானம்!''

கல்வி, வீரம் மற்றும் காருண்யத்தில் சிறந்து விளங்கிய போஜராஜன் ஆண்டு வந்த காலம் அது...

ஏழை விவசாயி ஒருவர், தன் மகளை மணமுடித்து கொடுக்க பொருள் வசதி இல்லாததால், மன்னர் போஜராஜனிடம் பொருள் உதவி பெற நினைத்தார். 

அதனால், தன் மனைவியிடம் வழியில் சாப்பிடுவதற்கு ரொட்டி செய்து தருமாறு கேட்டார். 

அவர் மனைவியும், நிறைய ரொட்டிகளை செய்து கொடுக்க, அவற்றை பெற்று, புறப்பட்டார். 

வழியில் பசி ஏற்படவே, குளக்கரையில் அமர்ந்து, ரொட்டி பொட்டலத்தை பிரித்தார். 

அப்போது, குட்டிகளை ஈன்றிருந்த பெண் நாய் ஒன்று, வாலை ஆட்டியபடி, அவர் முகத்தை ஏக்கத்தோடு பார்த்தது.

அதைப் பார்த்த விவசாயி, 'ஐயோ பாவம்... ரொம்ப பசி போல...' என்று எண்ணி, ஒரு ரொட்டியை எடுத்து, நாயின் முன் போட்டார்.

அதை, 'லவக்'கென்று விழுங்கிய நாய், பசி அடங்காமல் மேலும் அவரைப் பார்க்க, இன்னொரு ரொட்டியை கொடுக்க, அதையும் விழுங்கியது நாய். 

இப்படியே, எல்லா ரொட்டிகளையும் நாய்க்கு போட்டவர், 'பாவம்... வாயில்லா ஜீவன்; சாப்பிட்டு, எவ்வளவு நாள் ஆயிற்றோ... நாம், இன்று ஒருநாள் சாப்பிடாவிட்டால், என்ன குறைந்துவிட போகிறது...' என்று எண்ணியபடி தன் பயணத்தை தொடர்ந்தார்.

அரண்மனையில் மன்னனை சந்தித்து, 'மன்னா... என் மகளின் திருமணத்திற்காக தங்களிடம் பொருள் உதவி பெற வந்துள்ளேன்...' என்றார் விவசாயி. 

'குடியானவனே... நீ ஏதாவது புண்ணியம் செய்திருக்கிறாயா...? சொல்... அந்த புண்ணியத்தின் எடைக்கு எடை தங்கம் தருகிறேன்...' என்றார், போஜராஜன்.

சில வினாடிகள் யோசித்து, பின், 'மன்னா... நான் புண்ணியம் ஏதும் செய்ததாக நினைவில்லை; ஆனால், வரும் வழியில், ஒரு நாய்க்கு சிறிது ரொட்டி கொடுத்தேன், அவ்வளவு தான்...' என்றார்.

'சரி... அப்புண்ணியத்தை, இதோ இந்த தராசின் ஒரு தட்டில் வைத்ததாக கற்பனை செய்து கொள்...' என்று கூறி, தராசை காட்டினார் போஜராஜன்.

அவ்வாறே விவசாயி கற்பனை செய்ய, மறு தட்டில் பொற்காசுகளை போட்டனர், அரண்மனை பணியாளர்கள். 

தட்டு, அசையாமல் நிற்கவே, மேலும் போட, அப்போதும் தட்டு நகரவில்லை. கஜானாவே காலியாகியும், தராசு தட்டுகள் சிறிது கூட கீழிறங்கவில்லை.

அதிர்ந்து போன அரசர், கைகளை கூப்பி, 'ஐயா... தாங்கள் யார்?' என, பணிவாக கேட்டார்.

'மன்னா... நான் சாதாரண ஏழை விவசாயி; என் பட்டினியை பொறுத்து, பசியோடு இருந்த நாய்க்கு, சில ரொட்டிகளை போட்டேன்; வேறெதுவும் செய்யவில்லை...' என்றார்.

கண்கள் கசிய. 'ஐயா... தாங்கள் செய்தது அளக்க முடியாத புண்ணியம்; இதோ, அப்புண்ணியத்திற்கு ஈடாக என் ராஜ்ஜியத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்...' என்றார், போஜராஜன்.

ராஜ்யத்தை மறுத்து, மகள் திருமணத்திற்கு தேவையான பொருளை மட்டும் பெற்று, நன்றி செலுத்தி சென்றார், விவசாயி.

பசி பிணி தீர்க்கும் புண்ணியத்திற்கு ஈடாக இவ்வுலகில் எதுவுமே இல்லை. அதனால், இயன்றவரை, தேவையானவர்களுக்கு அன்னதானம் செய்வோம்; இறையருள் பெறுவோம்! 

'உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தார்...' என்றும், 'பசியால் பரிதவிக்கும் ஜீவனுக்கு உணவிடுவோர், பரம்பொருளுக்கே உணவிட்டவர் ஆவார்...' என்றும் அன்னதானத்தின் சிறப்பை குறிப்பிடுவர், நம் முன்னோர்.

[vallalargroups:5831] பெண்ணாடம் வள்ளலார் அற நிலையத்தில் சன்மார்க்க ஆய்வரங்கம் நடை பெற்று வருகிறது.

பெண்ணாடம் வள்ளலார் அற நிலையத்தில் சன்மார்க்க ஆய்வரங்கம் நடை பெற்று வருகிறது.

[vallalargroups:5830] மாதந்தோறும் சன்மார்க்க சேவை மைய தொண்டர்கள் ... திருப்பணிகள்

மாதந்தோறும் சன்மார்க்க சேவை மைய தொண்டர்கள் ...    

[vallalargroups:5829] சன்மார்க்க சேவை மைய தொண்டர்கள்..திருப்பணிகள்

மாதந்தோறும் வடலூரில்  சன்மார்க்க சேவை மைய தொண்டர்கள் திருப்பணிகள்

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)