Friday, July 27, 2018

[vallalargroups:5984] Vallalar Notes

[vallalargroups:5983] Jeevaa karunyam : 12.08.2018 - 11th Year Anniversary


---------- Forwarded message ---------
From: Deepam Trust <deepamtrustvelachery@gmail.com>
Date: Wed 25 Jul, 2018, 12:47 PM
Subject: 12.08.2018 - 11th Year Anniversary
To:
Cc: <admin@deepamtrust.org>, Balakrishnan M <mbalki@iitm.ac.in>


11 ஆம் ஆண்டு ஜீவகாருண்ய எழுச்சிப் பெருவிழா!
 
நாள்: 12.08.2018 (ஞாயிற்றுக்கிழமை)
(அதிகாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி)

இடம்: நித்ய தீப தருமச்சாலை வளாகம்,
புத்தேரிக்கரைத் தெரு,
 தண்டீஸ்வரம் கோவில் அருகில்,
 வேளச்சேரி, சென்னை-600 042




ஆகஸ்ட் 12, 2018 அன்று நடைபெறும்  11வது ஆண்டு விழாவில் தாங்களும் தங்கள்  குடும்பத்தினரும் கலந்து கொண்டு 
விழாவை சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம் !

---
தீபம் அறக்கட்டளை
எண்.30, திரௌபதி அம்மன் கோவில் தெரு,
வேளச்சேரி, சென்னை - 600 042
94440 73635 / 044 - 2244 2515

Wednesday, July 25, 2018

[vallalargroups:5982] திருக்குறள் :: புலால் மறுத்தல்.mp4

[vallalargroups:5981] திருக்குறள் ..திருவருட்பா

🌹 திருக்குறள். 🌹
●●●●●●●●●●●●●●●

🌹 கற்றிலன் ஆயினும் கேட்க  அஃததொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை. 🌹

🌹 தான் முயன்று கற்கவில்லை என்றாலும் கற்றவரிடம் கேட்டாவது அறிவு பெற வேண்டும் ; அது ஒருவன் தளர்ச்சி அடையும்போது ஊன்றுகோல் போலத் துணையாகும். 🌹

🌹 வள்ளுவர். 🌹
••••••••••••••••••••••••••

 🍀திருவருட்பா. 🍀
●●●●●●●●●●●●●●●

🍀 ஊர் தருவார் நல்ல  ஊண் தருவார் உடையுந் தருவார் 
பார் தருவார் உழற்கு ஏர் தருவார் பொன் பணந் தருவார் 
சோர் தருவார் உள்ளறிவு கெடாமல் சுகிப்பதற்கிங் கார்தருவார் அம்மை யார்தரு பாகனை யன்றிநெஞ்சே. 🍀

🍀 வள்ளலார். 🍀•••••••••••••••••••••••••••

Tuesday, July 24, 2018

[vallalargroups:5980] Meditation & Yoga program @ Bangalore on 5th August Sunday

Meditation & Yoga program @ Bangalore on 5th August Sunday
அருட்பெருஞ்ஜோதி🔥
🏵பெங்களூர் நகாில்🏵
🧘‍♂🧘‍♀🧘‍♂🧘‍♀🧘‍♂🧘‍♀🧘‍♂🧘‍♀
வள்ளலார் 1நாள் சன்மார்க்க, ஆன்மீக தியான அனுபவ முகாம்
📿📿📿📿📿📿📿📿
அருள் பூரண சித்தி யோகம்
🌞ஜோதி தியானம்
🌞ஞான சத்சங்கம்
🌞யோகாசனம்
🌞ஞான மூலிகை இரகசியங்கள்
🌞திருஅருட்பா கூட்டு பிராா்த்தனை
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
👉மனக்கவலை, அழுத்தம் நீங்க
👉நோய்களில் இருந்து விடுபட
👉ஆன்மீக இரகசியங்கள் அறிந்து கொள்ள
👨‍👨‍👦‍👦👨‍👨‍👧‍👦👨‍👨‍👧👨‍👨‍👦👩‍👩‍👧‍👧👩‍👩‍👦‍👦👩‍👩‍👧‍👦👩‍👩‍👧
அனைவரும் வருக🙏🏾
அருள் நலம் பெறுக🌞
👇👇👇👇👇👇👇👇
👉நாள்-05/ஆகஸ்ட் /2018, ஞாயிறு,காலை 6.30 முதல் மாலை 7.00 
Place- KASHMIR BHAVAN,108,NAL LAYOUT,Jayanagar,4th T Block,Bengaluru- 560041
( Near Camel Convent or Behind Jalabhavan,
Bannerghatta )
🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼
பயிற்சிக்கு கட்டணம் இல்லை
👉சேவைக்கான நன்கொடை,குரு காணிக்கை ஏற்றுக்கொள்ளப்படும்
👉பயிற்சியில் 3 வேளை ஆரோக்கிய உணவு வழங்கப்படும்
👉யோகாசனம், தியானம் செய்வதற்கான தகுந்த ஆடைகள் அணிந்து வரவும்
👕👖👚👕👖👚👕👖
டிசா்ட்,பேண்ட்,சுடிதார்
👉பயிற்சி செய்ய விாிப்பு- யோகா மேட், பெட்ஷீட்,போா்வை போன்றவை ஏதாவது ஒன்று
👉குறிப்புகள் எடுக்க நோட்டு,பேனா
👉பயிற்சியில் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும், தாமதமாக வருபவா்கள் பயிற்சியில் அனுமதி கிடையாது
👉இது குழந்தைகள், சிறுவா்களுக்கான பயிற்சி அல்ல...
👍👍👍👍👍👍👍👍
முன்பதிவு அவசியம்
+91 89403 96760
+91 88385 40176
+91 70197 94359

நண்பர்களுக்கு பகிரவும்

Sunday, July 22, 2018

[vallalargroups:5979] அருள் விளக்கம்

அருட்பெருஞ்ஜோதி🔥
அருட்பெருஞ்ஜோ🔥
தனிப்பெருங்கருணை🔥
அருட்பெருஞ்ஜோதி🔥

                                 🌻அருள்🌻
       ஆன்மநேய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன்🙏
     ஆறறிவு உடைய உயர்பிறப்பாகிய மனிதப் பிறவியை பெற்றுக்கொண்ட ஆன்மாக்களாகிய நமது இப்பிறவியின் லட்சியமே
  ஆன்ம லாபத்தை அடைந்து கொள்வது என்பதுதான்,
ஆன்ம லாபம் என்பது.....
 அனைத்து அண்டத்தையும் ,
 அனைத்து புவனத்தையும்,
 அனைத்து ஜீவர்களையும்,
 அனைத்து பொருள்களையும்,
 அனைத்து ஒழுக்கங்களையும்,
 அனைத்து பயன்களையும் 
        
      தமது பூரண இயற்கை விளக்கமாகிய "அருட்சக்தியால்" தோன்றி விளங்க விளக்கஞ் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவினரான கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று எக்காலத்தும்,எவ்விடத்தும்,
எவ்விதத்தும்,எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரியவாழ்வே இந்தப் பிறவியினால் அடையதக்க ஆன்ம லாபம் என்பதாகும்🏵

    நல்லது, மேற்படி கடவுளது இயற்கை இன்பத்தினால் அடையக்கூடிய பெருவாழ்வை  எதனால் அடையக்கூடும் என்றால் ........
        கடவுளது இயற்கை விளக்கமாகிய "அருளைக்"கொண்டுதான் அடையக்கூடும் என்பதாம் 🌸

   அப்படியென்றால், மேற்படி அருளைப் பெறுவதற்கான வழிஎது என்றால் .......
   அதற்கு ஒரே வழி" ஜீவகாருண்ய ஒழுக்கம்" என்பதாகும்🌹
    
      இப்பிரபஞ்சத்தில் ஆகாசம் அனாதியாய் இருக்கின்றது .
அனாதியான ஆகாசத்தில் காற்றும் அனாதியாக உள்ளது.

   அதேபோன்று பரமாகாச சொரூபராகிய கடவுளது சமூகத்தில் அருட்சக்தியும் அனாதியாய் இருக்கின்றது 🌸

       🏵அருட்பெருஞ்ஜோதி அகவல்🏵
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳�
"அருளலாது அணுவும் அசைந்திடாது அதனால் அருள் நலம் பரவுகென்று அறைந்த மெய்ச்சிவமே"

"அருளுறின் எல்லாம் ஆகும் ஈது உண்மை அருளுற முயல்கவென்று அருளிய சிவமே"

"அருள்பெறில் துரும்பும் ஓர்ஐந்தொழில் புரியும் தெருளிது எனவே செப்பிய சிவமே"

"அருளறிவு ஒன்றே அறிவு மற்றெல்லாம் மருளறிவு என்றே வகுத்த மெய்ச்சிவம்"

"அருளறியார் தமை அறியார் எம்மையும் பொருளறியார் எனப் புகன்ற மெய்ச்சிவமே"

"அருள்நிலை ஒன்றே அனைத்தும் பெறுநிலை பொருள்நிலை காண்கெனப் புகன்ற மெய்ச்சிவமே"

"அருள்வடிவு அதுவே அழியாத் தனிவடிவு அருள்பெற முயலுகென்று அருளிய சிவமே"

  என்று அருளின் தன்மையை நமது வள்ளல் பெருமான் தெள்ளத் தெளிவாக அருட்பெருஞ்ஜோதி அகவல் மூலமாக நமக்கு தெரிவித்துள்ளார்கள்🌷
        அப்படிப்பட்ட அந்த "அருள்"என்னும் சொல்லின் உட்பொருள் விளக்கத்தைப் பார்க்கும் பொருட்டு எனது சிற்றறிவால் விசாரித்து அறியத் தொடங்கிய தருணத்து , திருவருளால்  ஒருவாறு உணர்த்தப்பட்ட விஷயத்தை ஆன்மநேய சகோதர சகோதரிகளாகிய தங்கள் அனைவருடன் இத்தருணத்தில் பகிர்ந்துகொள்ள முற்படுகின்றேன்🔥

        🌸அருள் 🌸
அ+ர்+உ+ள்,
   இதில் ,
"அ" மற்றும்" உ" என்பன சித்கலையாகவும் (அறிவுடைய உயிருக்கு ஒத்ததாகவும்),

"ர்"மற்றும் "ள்" என்பன ஜடசித்கலையாகவும் (அறிவற்ற உடம்பிற்கு ஒத்ததாகவும்) உள்ளன.

அ = அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார பஞ்சாரத்துள் பதிநிலையை விளக்கக்கூடிய அக்கரமாகும்(எழுத்து)

பன்னிரெண்டு உயிர் எழுத்துகளில் தலையாய முதல் எழுத்தாகிய அகர எழுத்தாகும்.
🏵🏵🏵🏵🏵🏵🏵

உ=அகண்டாகார சித்தை விளக்கும் சக்திநிலை அக்கரமாகும்.

பன்னிரெண்டு உயிர் எழுத்துகளில் ஐந்தாவது எழுத்தாகிய உகர எழுத்தாகும்.
🏵🏵🏵🏵🏵🏵🏵

ர்= மெய்எழுத்து வரிசையில் பனிரெண்டாவது மெய்நிலை அக்கரமாகும்.

இந்த பனிரெண்டு என்பது அண்ட பிண்டத்தில் உள்ள அலகிலாத் சத்தி சத்தர்கள் மற்றத்  தலைவர்கள் எல்லாரும் அரசுசெய்து
தத்துவ உலகமெல்லாம் தழைத்து விளங்கி ஓங்கச் செய்யும் செஞ்சுடராகிய காரிய ரூபியான சூரியனுக்குரிய  பனிரெண்டு கலையை குறிக்க வந்த 
அக்கரமாகும் ☀
🌹🌹🌹🌹🌹🌹🌹

ள்= மெய்யெழுத்து வரிசையில் பதினாறாவது மெய்நிலை அக்கரமாகும்.
   இந்த பதினாறு என்பது பதியெலாம் தழைத்துப் பதம்பெறுவதற்குரிய அமுத நிதியெலாம் அளிக்கக்கூடிய நிறைதிரு மதியாகிய ,காரிய காரண ரூபியாகிய சந்திரனுக்குரிய பதினாறு பூரணக்கலையை குறிக்க வந்த அக்கரமாகும்🌙

    ஆகலில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையான அருள் என்ற ஒரு சொல்லில் வரும், 
அ−ர்−உ−ள் என்னும்
ஐந்து அலகுகளில்

"அ " என்பது
சுத்தசிவமாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும்,

"உ" என்பது,
சுத்தசிவத்தின் அருட்சக்தியையும்,

"ர்" என்பது சூரியகலையையும்,

"ள்" என்பது சந்திரக்கலையையும் 
குறிப்பதாகக் கொள்ளலாம்🔥

இதற்கு பொருள் வேறு ஏதேனும் இருப்பின் கற்றறிந்த பெரியோர்கள் பிழை பொருத்தருள வேண்டியும் ,
வேறு  பொருள் ஏதேனும் இருப்பின் ,அனைவரும் கற்றறிந்திட உலகறிய தெரிவித்திடவும் தயவுடன் வேண்டுகின்றேன் 🙏
.....நன்றி 🙏
....வள்ளல் மலரடிப் போற்றி 
போற்றி🙏
...பெருமான் துணையில் 🙏
...வள்ளல் அடிமை🙏
...தயவுடன் வடலூர் இரமேஷ் 🙏

[vallalargroups:5978] பசி ஆற்றுவித்தல்..மணிகண்டன் குடும்பத்தினர் Bangalore KRPuram

இன்றைய பசிஆறுவித்தல் சன்மார்க்க அடியார்.மணிகண்டன் குடும்பத்தினரால் நடைப்பெற்றது. அவர்கள் எல்லா நலமும்,வளமும் பெற்று நீடுழி வாழ இறைவனைப் பிரார்த்திப்போம்

[vallalargroups:5977] Bagalore KR puram.. ஆதரவற்ற முதியோர்க்கு இலவச ஊன்றுகோல்

Bagalore KR puram.. ஆதரவற்ற முதியோர்க்கு இலவச ஊன்றுகோல்

Sponsored by Bangalore Vallalar Devotee.thayavu thiru. Dhamodaran ayya

Saturday, July 21, 2018

[vallalargroups:5976] கூலித்தொழிலாளி வெங்கடேசன்

உயிர் நேயம் கொண்ட அனைவருக்கும் வணக்கம்,

விழுப்புரம் மாவட்டம் பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வெங்கடேசன் என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கினறு வெட்டும்போது நடந்த விபத்தில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு சற்று தேறிய நிலையில் தற்போது இவரின் இடது கை, கால் செயலிழந்துள்ளது.

மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்வாதாரத்திற்கும் மருத்துவத்திற்கும் வழியின்றி தவிக்கிறார். அறக்கட்டளையின் சார்பில் ரூ 2000 வழங்கியுள்ளோம். தனி வாகனத்தின் மூலம் ( உட்கார முடியாததால் படுத்துக்கொண்டே பயணிக்க வேண்டும்) ஆந்திரா- சித்தூர் மாவட்டத்தில் உள்ள விருப்பாட்சிபுரம் கிராமத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அதற்கான செலவு ரூ 25,000 ஆகும் ( மூன்றுகட்ட சிகிச்சை)  வாய்ப்புளளவர்கள் உதவுங்கள். நேர்மையான இந்த ஏழையின் குடும்பம் பற்றி நான் நன்கு அறிவேன்.

வங்கி கணக்கி விவரம்:

BHOOPATHY.V (வெங்கடேசனின் மனைவி)
INDIAN BANK,
KANAI BRANCH
SAVINGS A/C NO: 783860930
IFSC NO: IDIB000K063
பேச:9047109463

அன்புடன்
கா.தமிழ்வேங்கை
நிர்வாக அறங்காவலர்
திருஅருட்பா ஆ.பாலகிருஷ்ண பிள்ளை நினைவு அறக்கட்டளை
தமிழ்நாடு
9486176734

Tuesday, July 17, 2018

[vallalargroups:5975] Meditation & Yoga program @ Bangalore on 5th August Sunday

Meditation & Yoga program @ Bangalore on 5th August Sunday
அருட்பெருஞ்ஜோதி🔥
🏵பெங்களூர் நகாில்🏵
🧘‍♂🧘‍♀🧘‍♂🧘‍♀🧘‍♂🧘‍♀🧘‍♂🧘‍♀
வள்ளலார் 1நாள் சன்மார்க்க, ஆன்மீக தியான அனுபவ முகாம்
📿📿📿📿📿📿📿📿
அருள் பூரண சித்தி யோகம்
🌞ஜோதி தியானம்
🌞ஞான சத்சங்கம்
🌞யோகாசனம்
🌞ஞான மூலிகை இரகசியங்கள்
🌞திருஅருட்பா கூட்டு பிராா்த்தனை
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
👉மனக்கவலை, அழுத்தம் நீங்க
👉நோய்களில் இருந்து விடுபட
👉ஆன்மீக இரகசியங்கள் அறிந்து கொள்ள
👨‍👨‍👦‍👦👨‍👨‍👧‍👦👨‍👨‍👧👨‍👨‍👦👩‍👩‍👧‍👧👩‍👩‍👦‍👦👩‍👩‍👧‍👦👩‍👩‍👧
அனைவரும் வருக🙏🏾
அருள் நலம் பெறுக🌞
👇👇👇👇👇👇👇👇
👉நாள்-05/ஆகஸ்ட் /2018, ஞாயிறு,காலை 6.30 முதல் மாலை 7.00 
Place- KASHMIR BHAVAN,108,NAL LAYOUT,Jayanagar,4th T Block,Bengaluru- 560041
( Near Camel Convent or Behind Jalabhavan,
Bannerghatta )
🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼
பயிற்சிக்கு கட்டணம் இல்லை
👉சேவைக்கான நன்கொடை,குரு காணிக்கை ஏற்றுக்கொள்ளப்படும்
👉பயிற்சியில் 3 வேளை ஆரோக்கிய உணவு வழங்கப்படும்
👉யோகாசனம், தியானம் செய்வதற்கான தகுந்த ஆடைகள் அணிந்து வரவும்
👕👖👚👕👖👚👕👖
டிசா்ட்,பேண்ட்,சுடிதார்
👉பயிற்சி செய்ய விாிப்பு- யோகா மேட், பெட்ஷீட்,போா்வை போன்றவை ஏதாவது ஒன்று
👉குறிப்புகள் எடுக்க நோட்டு,பேனா
👉பயிற்சியில் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும், தாமதமாக வருபவா்கள் பயிற்சியில் அனுமதி கிடையாது
👉இது குழந்தைகள், சிறுவா்களுக்கான பயிற்சி அல்ல...
👍👍👍👍👍👍👍👍
முன்பதிவு அவசியம்
+91 89403 96760
+91 88385 40176
+91 70197 94359

நண்பர்களுக்கு பகிரவும்

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)