Sunday, February 25, 2018

[vallalargroups:5929] மற்றறிவோம் என சிறிது தாழ்ந்திருபீர்..ஆனால்

 மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்
மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ
சற்றும்அதை நும்மாலே தடுக்க முடியாதே
சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை
எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்
இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்
பற்றிய பற்றனைத்தினையும் பற்றறவிட் டருளம்
பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே.  ...வள்ளலார்


வருகணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த
மலக்கூடென் றறிஞரெலாம் வருந்தக் கேட்டும்
அருகணைத்துக் கொளப்பெண்பேய் எங்கே மேட்டுக்
கடைத்திடவெண் சோறெங்கே ஆடை யெங்கே
இருகணுக்கு வியப்பெங்கே வசதி யான
இடமெங்கே என்றுதிரிந் திளைத்தேன் அல்லால்
ஒருகணத்தும் உனைநினைந்த துண்டோ என்னை
உடையானே எவ்வகைநான் உய்யும் மாறே

Wednesday, February 21, 2018

[vallalargroups:5927] நெஞ்சறிவுறுத்தல்

[vallalargroups:5926] உலகத்தமிழா் மரபு மாநாடு-2018-ஈரோடு

உலகத்தமிழா் மரபு மாநாடு-2018-ஈரோடு
👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👧👩‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👧👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👧👩‍👩‍👧‍👦👩‍👩‍👧‍👦
👉திருஅருட்பா 1-6 திருமுறை 2புத்தகங்களாக உயா்தர பதிப்பில் மிகவும் குறைந்த விலையில் வெளியீடு
👉திருவள்ளுவர் சிலை நிறுவுதல்
👉சான்றோா் பெருமக்களின் உரைகள்
👉மூலிகை கண்காட்சி
👉சித்த மருத்துவ மாநாடு
👉இலவச சித்த மருத்துவ முகாம்
👉வள்ளலார் சன்மார்க்க கண்காட்சி
👉புத்தக கண்காட்சி
👉ஜல்லிக்கட்டு போட்டி
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
போன்ற பல்வேறு அருள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன
🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼
உலகத்தழிழா் அனைவரும் வாரீர்

👉நாள்-1,2 & 3 மாா்ச்
வியாழன்,வெள்ளி,சனி

👉S.S.M கல்வி நிறுவன வளாகம்,குமாரமங்களம்
( சேலம்- கோவை நெடுஞ்சாலையில்,
பவானி கூடுதுறைக்கு முன்பு )
அனுமதி இலவசம்

+91 97893 54894
+91 99941 71074

மூலிகை கண்காட்சி, சித்தவைத்தியம் தொடா்பாக
+91 90959 05000
+91 94439 37227

Tuesday, February 20, 2018

[vallalargroups:5925] Vadalur Questions and Answer

 1. சுத்த சன்மார்க்கம். என்றால்

என்ன  ?  ஆன்மநேய ஒருமைப்பாடு


🔥🔥 2 .வள்ளல் பெருமான்

கூறியிருக்கிற  11 அறநெறிகள் நாம்

சிந்தித்து செயல்படுத்துவதற்கு

எழுதியிருக்கிறார்களா ?

அல்லது  இதற்கு எதிர்மறையாக

சன்மார்க்கிகள் வாழ வேண்டும்

என்று எழுதியுள்ளார்களா !????

கடைப்பிடிக்க..


🔥🔥3. சமரச சுத்த சத்திய

சன்மார்கக சங்கம் ...
step1 .சன்மார்க்க கல்வி கற்க
சத்திய தருமச் சாலை... 
step 2. everyone should follow jeevakarunya discipline
சத்திய ஞான சபை, 
step3. Ultimate door will open and experience

 , என்று

வடலூரில்  எதற்காக  அமைத்தார்கள்


🔥🔥 4. நாம் ஒவ்வொரு ஊர்களிலும்

எதற்காக  சங்கம்  , சபை , சாலை

கட்டுகிறோம். ? 

All are References only (சங்கம் , சபை , சாலை)


🔥🔥 5. வடலூருக்கு மாதம்மாதம்

பூசத்திற்கு  ஏன் செல்கிறோம். ?

மாதப்பூசம் வள்ளலார்   கூறவில்லை..
அடிக்கடி வந்து தரிசிக்க வேண்டும் வள்ளலார் கூற்று.
வள்ளல் சாதுக்களை சந்திக்க வாய்ப்பு

🔥🔥 6. தைப்பூசத்திற்கு ஜோதி

தரிசனம் எதற்காக காண

வேண்டும்? . 

அக அனுபவம்.. புறத்தில் அடையாள குறிப்பு

[vallalargroups:5924] Vallalar Daily Quotes

[vallalargroups:5923] இறைவனுக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை

பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை மரத்திலிருந்து ,

  சுமார் 100 பழங்கள் உள்ள பெரிய வாழைத் தாற்றை அறுத்தார்.

 தன் வேலைக்காரனை அழைத்து,

"இந்த வாழைத் தாற்றைக் கோயிலுக்கு கொண்டு போய் கொடுத்து விட்டு வா...." என்றார்.

 வேலைக்காரனும் அவ்வாறே செய்தான்.

அன்றிரவு பண்ணையாரின் கனவில் தோன்றிய இறைவன்,

"நீ அனுப்பிய ஒரு வாழைப் பழம் கிடைத்தது...." என்றார்.

திடுக்கிட்ட பண்ணையார், 

"இறைவா நான் 100 பழங்களையல்லவா அனுப்பினேன்..." என்றார்

இறைவன், "இல்லை ஒரு பழம் தான் எனக்கு வந்து சேர்ந்தது..." என்றார்.

விடிந்ததும் பண்ணையார் வேலைக்காரனை அழைத்து, 

"நான் கொடுத்த வாழைப் பழங்களை முழுமையாகக் கோயிலில் கொண்டு சேர்த்தாயா....." என்றார்.

அவன் "ஆம்" என்றான்.

பண்ணையாருக்குக் கோபம் வந்து விட்டது.

 அவர் வேலைக்காரனை வேகமாக அறைந்தார்.

"உண்மையைச் சொல்,

 இல்லையென்றால் அடித்தேக் கொன்று விடுவேன்..." எனறார்.

அவன், "உண்மையைச் சொல்லி விடுகிறேன்,

 வழியில் ஒருவன் பசியாய் இருக்கிறது என்றான், 

நான் பரிதாபப்பட்டு அவனுக்கு ஒரு பழத்தைக் கொடுத்தேன்,

 மீதமுள்ள எல்லாப் பழத்தையும் கோவிலிலுக்குக் கொடுத்து விட்டேன்.." என்றான்.

பண்ணையாருக்குப் புரிந்து விட்டது.

ஏழைக்குக் கொடுத்த பழமே இறைவனைக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது....!!

ஏழைகளின் வயிறு அஞ்சல்பெட்டி,

 இறைவனுக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை 

இதில் போட்டால் இறைவனுக்குப் போய்ச் சேர்ந்து விடும்......!!

Monday, February 19, 2018

[vallalargroups:5922] திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் வைர மொழிகள்

[vallalargroups:5921] 3 Days Vallalar Program @ Singapore


அருட்பெருஞ்ஜோதி🔥

சிங்கப்பூரில் ஆழ்நிலை தியான முகாம்
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
🌟மனக்கவலை, மன அழுத்தம் நீங்க
🌟நோய்களில் இருந்து விடுபட
🌟போின்பத்தை உணர
3நாள் இயற்கை சூழ்நிலையில்,
மெளனம்,தியானம், இயற்கை உணவுடன்
🌅🌅🌅🌅🌅🌅🌅🌅
👉தியான நுட்பங்கள்
👉ஜோதி தியானம்
👉ஞான சத்சங்கம்
👉யோகாசனம்
👉சுவாசபயிற்சி
👉மகாமந்திர ஜெபம்
👉திருஅருட்பா பாராயணம்
🌕🌕🌕🌕🌕🌕🌕🌕
போன்ற பல்வேறு போின்ப நிகழ்வில் மூழ்கி திளைத்திட அாிய வாய்ப்பு
👉3நாள் தங்குவதற்கு இடம்,உணவு ,படகு எல்லாம் சோ்த்து SGD$60.00
👉பயிற்சிக்கு கட்டணம் இல்லை
👉குழந்தைகள்,
சிறுவா்கள் அனுமதியில்லை
👉3நாட்களும் பயிற்சியில் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும்

👨‍👩‍👧‍👧👨‍👩‍👦‍👦👩‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👧👨‍👩‍👦‍👦👩‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👧👨‍👩‍👦‍👦
Date - 30,31 March &
 1st April,Friday,Sat & Sun
St.John's Island,Singapore
👉Ferry departs on 29.4.18, Thurs @ 6.30pm.from Marina South Pier Ferry Terminal 
👉Arrival back to Marina South Pier Ferry Terminal on Sunday, 1.4.18@ 5.30pm
🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼
Please register early as we are only able to accept 60 participants.  
Please register with 
A run 9388 6324
Mahendran 8303 8964
Susila Ghandian 98539792
Please forward to your friends

[vallalargroups:5920] Bangalore Thaipoosam 2018 stills

[vallalargroups:5919] Monthly Poosam Details 2018

Saturday, February 17, 2018

[vallalargroups:5918] மனித பிறப்பு உயர்ந்த பிறப்பு ... How?

மனித வாழ்க்கை. ! 

மனித பிறப்பு உயர்ந்த பிறப்பு என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். 

ஏன் மனிதன் பிறக்கிறான்.  வளர்கிறான்.படிக்கிறான்.சம்பாதிக்கிறான்.திருமணம் செய்து கொள்கிறான்.
குடும்பம் நடத்துகிறான்.குழந்தை குட்டிகளைப் பெற்றுக்கொள்கிறான்.

அவர்களை வளர்க்கிறான்.அவர்களுக்கும் படிப்பு.பொருள்.திருமணம் குடும்பம் நடத்த கற்றுக் கொடுக்கிறான். 

பின் வயது முதிர்ந்து நோய்வாய்ப் பட்டு மாண்டு போகிறான். 

இதுவா ? மனிதனின் உயர்ந்த பிறப்பின் ரகசியம்...

இதற்காகவா மனித பிறப்பு இறைவனால் கொடுக்கப்பட்டது .என்பதை ஒரு நாளாவது சிந்திக்கும் அறிவு தெளிவு மனிதனுக்கு தோன்றி உள்ளதா ? என்றால் இன்று வரையில் தோன்றவில்லை..

வள்ளலார் வந்து தான் மனித பிறப்பின் ரகசியத்தை வெளிப்படையாக சொல்லி உள்ளார். மரணம் வந்து மாண்டு போவதற்காக மனித பிறப்பு கொடுக்கப் படவில்லை..

மனிதனும் கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாற்றிக் கொள்ள வேண்டிய தகுதி மனிதனுக்கு மட்டுமே உண்டு.
அவற்றைப் பெறுவதற்கே மனித பிறப்பு கொடுக்கப் பட்டதாகும். 

பொருளைத் தேடும் மனிதன். அருளைத் தேடவே மனிதப் பிறப்பு இறைவனால்  கொடுக்கப் பட்டுள்ளது..

இந்த மெய்ப்பொருள் உண்மையைச் சொல்ல வந்தவர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்கள்.

வள்ளலார் எழுதி வைத்துள்ள திருஅருட்பாவை முழுமையாக படித்து பார்த்து .அதில் உள்ள உண்மைகளை அறிந்து.தெரிந்து.புரிந்து.கொண்டு.வாழ்ந்து.மனித பிறப்பின் உண்மை ரகசியத்தை.தெரிந்து கொள்ள வேண்டுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். 
.
வள்ளலார் பாடல் !

கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எலாம் பழுதே !

கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே!

உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே !

உலகயலீர் இது வரையில் உண்மை அறிந்திலிரே !

விண்டதனால் என் இனி நீர் சமரச சுத்த சன்மார்க்க 
மெய் நெறியைக் கடைப்பிடித்து !
 
மெய்ப் பொருளை நன்கு உணர்ந்தே !

எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின் !

இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

 அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். 
9865939896.

Friday, February 16, 2018

[vallalargroups:5916] ஆன்மநேயர் தஞ்சாவூர் திரு .பா.தம்பையா அவர்கள் .திருஅருட்பாவில்.தியானமும் ஒழுக்கமும்

சுத்த சன்மார்க்க சொற்பொழிவு !

வள்ளலார் சன்மார்க்க அறக்கட்டளை கரிக்காடு.
பட்டுக்கோட்டை. 

17-2-2018..18-2-2018.
ஆம் தேதிகளில்  புதிய சன்மார்க்க சங்க கட்டிட திறப்பு விழாவும்.
அன்னதானமும்.சுத்த சன்மார்க்க சொற்பொழிவும்.சிறப்பாக நடை பெற உள்ளது.

*சுத்த சன்மார்க்க சிறப்புரை!*

18-2-2018..ஆம் தேதி காலை 10-00 மணிக்கு 
ஆன்மநேயர் ஈரோடு கதிர்வேல் அவர்கள்..இன்றைய தேவை .*வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம்*என்ற தலைப்பில் பேருரை நிகழ்த்துகிறார்.

ஆன்மநேயர் தஞ்சாவூர் திரு .பா.தம்பையா அவர்கள் .திருஅருட்பாவில்.தியானமும் ஒழுக்கமும் என்ற தலைப்பில் பேருரை நிகழ்த்துகின்றார்...

ஆன்ம நேயம் கொண்ட அனைவரும் கலந்து கொண்டு ஆன்ம லாபம் பெற அன்புடன் அழைக்கின்றோம்...

அன்புடன் 
R.ஜெயபாலன்.
S.கீதாநிதி ஜெயபாலன்.
வள்ளலார் சன்மார்க்க அறக்கட்டளை.
கரிக்காடு
பட்டுக்கோட்டை..
9941142620
9994203748
9865354077.

அருட்பெருஞ் ஜோதி!
அருட்பெருஞ் ஜோதி!
தனிப்பெருங்கருணை!
அருட்பெருஞ் ஜோதி!

Saturday, February 10, 2018

[vallalargroups:5911] நீதிபதி என்றால் !!!

இந்தோனிஷியாவில் நீதிமன்றமொன்று சற்று வித்தியாசமான
வழக்கொன்றை சந்தித்தது.........

வயதான பெண்மணியொருவர், தோட்டமொன்றில் மரவள்ளிக்கிழங்கு
திருடியதாக அத்தோட்ட பொறுப்பாளரினால் வழக்கு தொடரப்பட்டார்.

வழக்கை மிகக்கவனமாக செவியுற்ற நீதிபதி, அம்மூதாட்டியிடம் விசாரித்தபொழுது, அவர் இப்படி கூறினார்........

"நான் களவாடியது உண்மைதான். எனது சிறிய பேரன் பசிக்கொடுமையால் வாடுகிறான். வேறுவழியின்றி இச்செயலை செய்தேன்." என்று தனது தவறை ஏற்றுக்கொண்டார்.

இதை கேட்டதும் நீதிபதி.........

"என்னை மன்னிக்கவேண்டும். சட்டத்தின் முன்னால் நான் உங்களை வேறுபடுத்தி பார்க்க முடியாது. 
எனவே உங்களுக்கு பத்து இலட்சம் ருபாயா (100 அமெரிக்க டொலர்) அபராதமாக விதிக்கின்றேன். இதை கட்ட தவறினால்
இரண்டரை வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும்."

இவ்வாறு தீர்ப்பளித்துவிட்டு, தன்னுடைய நீதிபதி தொப்பியை கழற்றி அங்கு குழுமியிருந்த மக்களை பார்த்து......

"இங்குள்ள ஒவ்வொருவர்மீதும் நான் ஐம்பதுனாயிரம்
ருபாயா (5 டொலர் ஐம்பது காசு) தண்டணையாக இடுகின்றேன்.

காரணம் !!!! இந்த நகரத்தில் ஒரு சிறு குழந்தை உணவின்றி பட்டினியால் வாடுவதற்கும், அதன் காரணமாக குழந்தையின் பாட்டி தவறான செயலை செய்யும் சூழலை உருவாக்கியதற்காகவும், உங்களுக்கு இத்தண்டணையை அளிக்கின்றேன்."

என்று உத்தரவிட்டு நீதிமன்ற உதவியாளர் மூலமாக, அங்குள்ள அனைவரிடமும் தண்டணைப் பணத்தை வசூலித்தார். இதில் தோட்டத்தின் பொறுப்பாளரும் அடங்குவார்.

இவ்வாறு சேர்ந்த 35 இலட்சம் ருபாயாவிலிருந்து (350 அமெரிக்க டாலர் ) 10 இலட்சம் ருபாயாவை நீதிமன்றத்திற்கு அளித்துவிட்டு, அம்மூதாட்டியை தண்டணையிலிருந்து விடுவித்து, மிகுதிப் பணத்தை அவரிடம் கொடுத்து, அவரது கஷ்டத்திற்கு பயன்படுத்தும்படி கூறி, அங்கிருந்து எழுந்து சென்றார்.!!!!!!!

சட்டம், மனிதாபிமானம், நீதி ஒன்றுக்கொன்று கைகோா்த்து தர்மத்தை நிலைக்கவைத்துவிட்டன !

நீதிபதி என்றால் இவர்போல சட்டத்தையும் மனிதாபிமானத்தையும் ஒருங்கே கையாள வேண்டும்.
முன்னுதாரணமான இந்த நீதிபதிக்கு வாழ்த்துக்கள்.

ஆதாரம்: Spirit news- indonesia

#ஆதரிப்போம்_எளியவர்களை_தேடி_தேடி

Wednesday, February 7, 2018

[vallalargroups:5910] Invitation: Free online Sathvicharam arranged by Vallalar universal m... @ Sun 11 Feb 2018 7:30pm - 9:30pm (IST) (Vallalar Groups)

Free online Sathvicharam arranged by Vallalar universal mission USA

When
Sun 11 Feb 2018 7:30pm – 9:30pm India Standard Time
Calendar
Vallalar Groups
Who
Vallalar Groups- organiser
hariharan hariharan- creator
Vallalar Groups
Attachments
Suthasanmargam VUM.jpg
Discourse on Suttha Sanmargam by Dr.Jaya.Rajamurthy MBBS DCH FHIV Nagapattinam
Pls refer attachment for contact details

Going?    - -     

Invitation from Google Calendar

You are receiving this courtesy email at the account vallalargroups@googlegroups.com because you are an attendee of this event.

To stop receiving future updates for this event, decline this event. Alternatively, you can sign up for a Google account at https://www.google.com/calendar/ and control your notification settings for your entire calendar.

Forwarding this invitation could allow any recipient to modify your RSVP response. Learn More.

[vallalargroups:5909] Vishu - Revathi Marriage Day

விவாக (Marriage) முதலிய விசேஷச் செய்கைகளிலும் தங்கள் தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களது பசியை ஆற்றுவித்துத்திருப்தியின்பத்தை உண்டுபண்ணுவது முக்கியமென் றறியவேண்டும் ...........வள்ளலார்

[vallalargroups:5908] நாக்கு - நாறிய புண்ணாக்கு - வாக்கு

Tuesday, February 6, 2018

[vallalargroups:5907] Thaipoosam 2018 @ Bangalore Sanmarkka Sangam

[vallalargroups:5906] Thaipoosam 2018 சன்மார்க்க சேவை மைய அன்பர்களின் சீரிய தொண்டு

தயவுடையீர்
வந்தனம்

வடலூர் தைபூச ஜோதி தரிசன
பெருவிழா 2018 மற்றும் மேட்டுகுப்பம் சித்தி வளாகம் திருவறை தரிசன நன்னாள்
விழா மிகவும் சிறப்புடன் நடந்தேறியது. 

உலகெங்கும் உள்ள சன்மார்க்கம் மற்றும் பக்த கோடிகள் கலந்துகொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளாசியைப் பெற்று இன்புற்றனர். சன்மார்க்க அன்பர்கள் பக்தர்களுக்கு அன்னம் பாலித்தும் உதவிகள் பல புரிந்தும் ஆன்மலாபம் அடைந்தனர். 

வடலூர் தெய்வநிலையம் விழா ஏற்பாடுகளையும் சன்மார்க்க சொற்பொழிவு, இன்னிசை, வில்லிசை மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளை வழங்கினர்
கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அத்தியாவசிய பணிகள் மற்றும் காவல் துறை பாதுகாப்பு சிறப்புடன் அமையப்பெற்றன. 

சன்மார்க்க சேவை மைய அன்பர்களின்
சீரிய தொண்டு சிறப்புடன் அமைந்தது. குடிநீர் வழங்கல், சுகாதாரம் , தூய்மை, பக்தர்களுக்கு உதவி உள்ளிட் ட சிறப்பு பணிகளை சேவை மைய அன்பர்கள் உற்சாகத்துடன் வழங்கினர்
மேலும் கல்பட்டு ஐயா வளாகம் அருகில் நிரந்தர கழிவறை சேவை மையம் மூலம் அமைக்கப்பெற்றது
தர்மசாலை , ஞான சபை அருகில் காலணி பாதுகாக்கும் இடம் , குப்பைத்தொட்டிகள், மற்றும்
 சித்திவளாகம் கொடிமேடை ஸ்டீல் கேட் அமைக்கப்பெற்றன. சேலை மைய அன்பர்களின் சன்மார்க்க பணி மென்மேலும் சிறந்து விளங்கிட எல்லாம் வல்ல பரம்பொருளை வணங்கி வாழ்த்துகின்றோம்

Re: [vallalargroups:5917] நன்றி!!!!

வடலூர் புனித நகரத்தை ஜோதி தரிசனம் சமயமும் அதன் பின்னும் தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்ட பெருந்தன்மை கொண்ட அன்பு உள்ளங்களுக்கு என் பணிவான நன்றிகள் வாழ்த்துக்கள்

On 6 Feb 2018 07:31, "Vallalar Groups" <vallalargroups@gmail.com> wrote:

[vallalargroups:5905] தினமும் இறைவனுக்கு நன்றி சொல்ல மட்டும் கோவிலுக்கு செல்வோம்.

மிகவும் சிந்திக்க வைத்த பதிவு.

||| 80 வயதுடைய ஒரு மனிதரின் இதயத்தில் ஆப்ரேஷன் நடந்தது.

நல்லபடியாக நடந்து முடிந்த பின்...

+ அவரிடம் ரூபாய் 8 லட்சத்திற்க்கான பில்லை மருத்துவமனை அதிகாரிகள் அவரிடத்தில் கொடுத்தனர்......

+ அந்த பில்லை பார்த்ததும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை....

+ அப்பெரியவரின் பரிதாபகரமான அழுகையைப் பார்த்த.....
மருத்துவர் கூறுகிறார்....
அழாதீர்கள் தாங்களுக்கு என்னால் முடிந்த 
அளவு பில்லை குறைத்துவிடுகிறேன் என்றனர்....

+ அதற்க்கு பெரியவரின் பதிலை என்னவென்று பாருங்கள்.....

+ எனக்கு அது பிரச்சினையில்லை,
பில் 10 லட்சமாக இருந்தாலும் நான் தர தயாராக உள்ளேன்.....

+ ஆனால் 80 வருடமாக எவ்வித பிரச்சினையுமின்றி என் இதயத்தை பாதுகாத்த _இறைவன் ஒரு ரூபாய்கூட பில் கேட்க்கவில்லையே.....
இவ்வளவு நாள், இதனை உணர்ந்ததேயில்லை, இப்போது நினைத்து உணர்ந்தபோது, 
கண்ணீர் வழிகிறது,

+ மூன்று மணி நேரம் மட்டும் நீங்கள் பாதுகாத்ததற்க்கு எட்டு லட்சத்திற்க்கு  பில்....

+ எல்லாம் வல்ல கடவுள் 
கருணையையும் அன்பையும் நினைத்து அழுதுவிட்டேன் என்றார்......

+ இறைவனின்
அருட்கொடைக்கு 
நிகர் இறைவனே.....
- நாம் தான் நன்றி கெட்டவர்களாக 
இந்த மண்ணில் வாழ்கிறோம்.....

+ எந்த எதிர் பார்ப்புமே இல்லாமல் எப்போழுதும் நம்மை கண்ணும் கருத்துமாக பத்திரமாக பாதுகாப்பவர் அன்பே உருவானவர் இறைவன் மட்டுமே....

நமக்கு கிடைத்த வாழ்கை எத்தனை பேருக்கு கிடைக்க வில்லை என உணர்ந்தால், நாம் தினமும் இறைவனுக்கு நன்றி சொல்ல  மட்டும் கோவிலுக்கு செல்வோம்.

இறை நம்பிக்கை
உள்ள என் அனைத்து
நண்பர்களுக்காகவும் இந்த  பதிவு.

[vallalargroups:5904] Anitha - Vigneshwaran Marriage Day

[vallalargroups:5903] நன்றி!!!!


Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)