Sunday, September 30, 2018

[vallalargroups:6014] Invitation: Online conference Sathvicharam by Vallalar mission USA @ Sun 30 Sep 2018 7pm - 9pm (IST) (Vallalar Groups)

Online conference Sathvicharam by Vallalar mission USA

When
Sun 30 Sep 2018 7pm – 9pm India Standard Time - Kolkata
Calendar
Vallalar Groups
Who
Vallalar Groups- organiser
hariharan hariharan- creator
vallalargroups@googlegroups.com
Attachments
perubadhesam
Discourse on Perubadhesam by Dhayavuthiru Mu.Pa. Babu ayya
See the attachment for further details

Going?    - -     

Invitation from Google Calendar

You are receiving this courtesy email at the account vallalargroups@googlegroups.com because you are an attendee of this event.

To stop receiving future updates for this event, decline this event. Alternatively, you can sign up for a Google account at https://www.google.com/calendar/ and control your notification settings for your entire calendar.

Forwarding this invitation could allow any recipient to modify your RSVP response. Learn More.

Monday, September 24, 2018

[vallalargroups:6013] நமக்குள் கோடி சூரியப்பிரகாசம்

🙏🔥
அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
அருட்பெருஞ்ஜோதி !

             💥ஆன்மாக்களாகிய நமக்குள் கோடி சூரியப்பிரகாசம் அடங்கியுள்ளது 💥
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
       ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன் 🙏

   சாதாரண ஒரு அணுவை நமது புறக்கண்ணால் காணமுடியாது என்பதும் அவற்றை நுண்ணோக்கி சாதனத்தைக்கொண்டுதான் பலமடங்கு பெரிதுபடுத்தி பார்க்கவேண்டும் என்பதும் அணைவரும் அரிந்ததுதான் 🌺
     அண்டம் முழுவதும் தனது கதிர்களால் ஒளியைக்கொடுத்து  பிராகசிக்கின்ற ஒரு சூரியனின் வெளிச்சம் எத்தன்மை உடையது என்பதை நம்மால் ஓரளவு எண்ணிப்பார்க்க இயலும் 🌺

இதேபோன்று ,
ஒன்று அல்ல இரண்டு அல்ல கோடி சூரியனின் பிரகாசம் ஒன்றினைந்தால் எவ்வளவு பிரகாசம் இருக்கும் என்பதை நம்மால் எண்ணிப்பார்க்க இயலுமா ?

அத்தனை வெளிச்சமும் 
நாம் நமது புறக்கண்ணால் பார்க்க முடியாத நுண்மையிலும் நுண்மையான ஒரு ஆன்ம அணுவினுள் இருக்கின்றது என்றால் உங்களால் நம்புவதற்கு இயலுமா ?

அந்த கோடிசூரியப் பிரகாசமும் நமக்குள் வைத்துக்கொண்டுதான் நாம் வாழ்ந்து வருகின்றோம் என்றால் நமக்கு நம்பிக்கை வருகின்றதா ?

இப்படிப்பட்ட பெருவெளிச்சத்தை மாயாசக்திகளாக ஏழு திரைகள் மறைத்துக்கொண்டு வெளிப்பட நமது சிற்றறிவிற்கும் ஊனக்கண்களுக்கும் காட்டாவண்ணம் மறைத்திருக்கின்றது என்பதை நம்மால் உணரமுடிகின்றதா ?

அப்படி என்றால் நமது ஆன்மாவிற்குள் இருக்கும் அந்த  பெரு வெளிச்சத்திற்கு உரியவர் யார் ?

அவர் வேறுயாருமல்ல அணுவை மலையாகவும்,
மலையை அணுவாகவும் மாற்ற வல்லவராயும்,

647கோடி பேதமாகிய மகாசித்திகளையும் தன்னிஷ்டத்தில் நடத்த வல்லவராயும் ,

அண்டகோடிகளையும்,
அவற்றில் உள்ள அனைத்து உயிர்களையும்,
பொருள்களையும் ஆக்கி காத்து அழிக்க வல்லவராயும்,

பாரொடு விண்ணாய் பரந்ததோர் ஜோதியாய் எங்கும் எதிலும் நீக்கமற கலந்து நிறைந்தவராயும் ,

எல்லாம்தானே உடையவராயும்,
எல்லாமும் செய்ய வல்லவராயும் ,
எல்லாம்தானே ஆனவராயும்,
எல்லாம்தான் அல்லாதவராயும்.

சொல்லாலும் பொருளாலும்
தோன்றும் அறிவாலும்
துணிந்து அளக்க முடியாதவராய்,

துரிய வெளியைக் கடந்த வள்ளாலர்களின் அனுபவத்தில் அதுஅதுவாய் விளங்கி,

அவர்களும் மதித்திடுங்கால் அரியவராய் பெரியவராய் ,

அணுவும் செல்லாத நிலைகளினும் செல்லுபவராய் ,

இயற்கையில் பாசங்கள் எதுவும் இல்லாதவராய்,
குணங்கள் ஏதும் இல்லாதவராய்,
தத்துவங்கள் ஏதும் இல்லாதவராய்,
என்றும் அழிவில்லாது  அனாதி நித்தியராய்,
களங்கம் ஏதும் இல்லாதவராய்,
தீமை ஒன்றும் இல்லாதவராய்,

வியப்பிற்குரிய விருப்பு வெறுப்பு ஏதும் இல்லாதவராய்,
மெய்யே மெய்யாகி என்றும் சச்சிதானந்த சொரூபராய் விளங்கும் தனிப்பெரும் பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ,

நமது ஆன்மாவாகிய உயிருக்குள் உயிராக இருந்துக்கொண்டு ,
தன்னை ஆன்மாக்கள் அஞ்ஞானமாகிய அறியாமையில் இருக்கும்போது காட்டிக்கொடா வண்ணம் ,

தனது திருவருட்சக்தியில் ஒடுங்கியிருக்கும் ,
"பரிக்கிரக சக்தியாகிய  மாயாசக்தியைக்" கொண்டு மறைப்புகளாக ஏழுதிரைகளால் மறைத்துக்கொண்டுள்ளார்கள் 🌺

ஆன்மாக்கள் பக்குவ ஞானம் விளங்க விளங்க திரைகள் ஒவ்வொன்றாய் விலகி முடிவில் பூர்வ ஞானம் பெற்றவுடன் ,ஆண்டவர் தம்மை முழுவதும் காட்டி ஆன்மாக்களை தன்மயமாக்கிக் கொள்கின்றார்கள்🌺

அண்டவெளியில்  அருட்பருஞ்ஜோதி ஆண்டவர் எவ்வளவு ஆற்றலுடன் திகழ்கின்றார்களோ ,

அதில் அணுவளவும் குறைவில்லாமல் நமது சிற்றம்பலமாகிய சிதாகாசத்தில் இருந்து ஆன்மாக்களுக்கு விளக்கம் செய்விக்கின்றார்கள் 🌺

ஆகலில் ஆறறிவு ஆன்மாக்களாகிய நாம் அருட்பெரும்பதியின் அருளொளி கிடைக்கப்பெற்று ,
அவ்வருளாலே அருட்பெரும்பதியின் அருட்பெருஞ்ஜோதியில் ஐக்கியம் அடைதல் வேண்டியே இப்பிறவி எடுத்துள்ளோம்  என்பதை சிரத்தையுடன் உணர்வோம் 🌺

🙏🔥🌺நமது பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருமேனி பிரகாசத்தை விளக்கிக் கூறும் ஓர் பாடல்🌺🔥🙏
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
அருளாளர் வருகின்ற தருணம் இது தோழி,
ஆயிரம் ஆயிரம்கோடி அணிவிளக்கு ஏற்றிடுக ,

தெருளாய பசு நெய்யே விடுக மற்றை நெய்யேல் திருமேனிக்கு ஒரு மாசு செய்தாலும் செய்யும்,

இருளேது காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ,
என்னாதே மங்கலமா ஏற்றுதலாங் கண்டாய்,

மருளேல் அங்கவர்மேனி விளக்கமதெண் கடந்தே மதி கதிர் செங்கனல் கூடிற்றென்னினும் சாலாதே ; 🌺🙏

ஆன்மாவாகிய நமது பெருமான் ,
மனமாகிய தனது தோழியிடம் ,

தோழி ;
நமது அருளாளர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகின்ற தருணமாக  இருக்கின்றதால் ,

ஆயிரம் ஆயிரம் கோடி விளக்குகள் வரிசையாக வைத்து அலங்கரித்து அழகுபடுத்துவாயாக,

அந்த விளக்கில்  சுத்தமான பசுநெய்யினால் தீபம் ஏற்றுதல் வேண்டும்,

ஏனென்றால் மற்றநெய்யில் தீபம் ஏற்றினால் அவரது திருமேனிக்கு ஏதேனும் தீமை நேர்ந்தாலும் நேரிடும்.

இது வைகறை பொழுதாக இருக்கின்றதே இன்னும் சற்று நேரத்தில் சூரியோதம்  ஆக இருக்கின்றதே ,
இந்த நேரத்தில் ஏன் இவ்வளவு விளக்குகள் ஏற்றிட வேண்டுமோ  என்று  நினைக்காதே தோழி ,

மங்கலமாய் நினைத்து ஏற்றி வைத்திடுவாய்.

அவரது மேனியைக் கண்டு வியப்படையாதே ! 
அவர்மேனி வெளிச்சம்,
எண்ணற்ற சூரியன்கள் எண்ணற்ற சந்திரன்கள் அளவற்ற அக்கினிகள்  ஒன்றுசேர்ந்து கூடினாலும் அவரது திருமேனி வெளிச்சத்திற்கு இணையாகாது அறிந்துகொள்வாய் தோழி🌺
என்று,

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கோடி சூரியப் பிரகாச திறத்தை விளக்கி கூறுகின்றார்கள் நமது பெருமான்🔥🙏
....நன்றி🙏
...வள்ளல் மலரடிப் போற்றி ! போற்றி !🙏
...பெருமான் துணையில் 🙏
....தயவுடன் வள்ளல் அடிமை🙏
...வடலூர் இரமேஷ் ;

Sunday, September 23, 2018

[vallalargroups:6012] மனிதரும் தேவரும்.

🔥 மனிதரும் தேவரும். 🔥
●●●●●●●●●●●●●●●●●●●●●●

🔥 அறிவினது உயர்ச்சியினாலும் தாழ்ச்சியினாலும் தேவரென்றும் மனிதரென்றும் சொல்லப்பட்டதே தவிர வேறே எந்தக் காரணத்தினாலும் அல்ல.

🔥 ஆனால் தயை விசேஷமிருக்க வேண்டியது என்பது அறிவு உயர்ச்சியில் அடங்கிவிட்டது. 

🔥 தேவர்களுக்கு 4 கையென்பது    ஈகைப்பற்றிய தயை விசேஷத்தைக் குறித்துச் சொன்னதே தவிர வேறல்ல. 

🔥 ஆகையால் தயவே வடிவமாக  இருக்கிறவர்களே  புண்ணிய தேகிகள். அவர்களே தேவர்களுமாவார்கள்  .🔥

🔥 மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்களித்தனை.

🔥 உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூரெலாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க .

🔥 சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை. 🔥

🔥 வள்ளல் பெருமான். 🔥
●●●●●●●●●●●●●●●●●●●●●

Saturday, September 22, 2018

[vallalargroups:6011] காட்டயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன்

⚫ திருக்குறள். ⚫
●●●●●●●●●●●●●●●

⚫ அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையார் 
அற்றாக  அற்றது இலர். ⚫

⚫ பற்று அற்றவர் என்பவர்கள் அவா அற்றவரே ; அவா அறாத மற்றையவர் எல்லாரும் அவ்வளவாக  பற்று அற்றவர் அல்லர். ⚫

⚫ வள்ளுவர். ⚫
••••••••••••••••••••••••••

 🔴 திருவருட்பா. 🔴
●●●●●●●●●●●●●●●●●

🔴 காட்டயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன் காலின்மேல் கால் வைக்கப் பயந்தேன் பாட்டயல் கேட்கப் பாடவும்  பயந்தேன்  பஞ்சணை படுக்கவும் பயந்தேன் 
நாட்டிய  உயர்ந்த திண்ணைமேல்  இருந்து நன்குறக்  களித்துக் கால்கீழே
நீட்டவும் பயந்தேன் நீட்டிப் பேசுதலை நினைக்கவும் பயந்தனன் எந்தாய். 🔴

🔴 சுத்த சன்மார்க்க லக்ஷிய  அனுபவ விருப்பமுடையவர்களுக்கு நனவினும் மண்ணாசை,  கனவினும் பெண்ணாசை,  சுழுத்தியினும் பொன்னாசை முதலிய மூன்றும் கூடாவாம். 🔴

🔴 வள்ளலார். 🔴
●●●●●●●●●●●●●●●

Thursday, September 20, 2018

[vallalargroups:6010] Invitation: Online Sathvicharam by Vallalar mission USA @ Sun 23 Sep 2018 7pm - 9pm (IST) (Vallalar Groups)

Online Sathvicharam by Vallalar mission USA

When
Sun 23 Sep 2018 7pm – 9pm India Standard Time - Kolkata
Calendar
Vallalar Groups
Who
Vallalar Groups- organiser
hariharan hariharan- creator
vallalargroups@googlegroups.com
Attachments
Ozhivilodukkam unarthum Illaram.jpg
ஒழிவிலொடுக்கம் உணர்த்தும் இல்லறம் by ஆனந்த பாரதி.
Pls see the attachment for further details

Going?    - -     

Invitation from Google Calendar

You are receiving this courtesy email at the account vallalargroups@googlegroups.com because you are an attendee of this event.

To stop receiving future updates for this event, decline this event. Alternatively, you can sign up for a Google account at https://www.google.com/calendar/ and control your notification settings for your entire calendar.

Forwarding this invitation could allow any recipient to modify your RSVP response. Learn More.

[vallalargroups:6009] இன்றைய பசி ஆற்றுவித்தல் மகேந்திரன் குடும்பத்தினர்.. @Bangalore

இன்றைய பசி ஆற்றுவித்தல் மகேந்திரன் குடும்பத்தினர்..நீடுழி வாழ பிரார்த்தனை.

Wednesday, September 19, 2018

[vallalargroups:6008] கணபதி உள்ள இடம் ஶ்ரீ வள்ளலார் விளக்கம்

[vallalargroups:6007] வள்ளலார் கூறும் சுப்பிரமணியம்

[vallalargroups:6006] சுத்தசன்மார்க்க லட்சியம் ..தத்துவங்கள் 96

🙏🔥
அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
அருட்பெருஞ்ஜோதி !
       
🙏🔥 மூவாசைகளில் நிராசை வராத வரையில் சுத்தசன்மார்க்க லட்சியம் என்பது எட்டாக்கனியே 🍇🍇🍇
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
     ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை இவ்வெளியவன் தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன் 🙏
 
சுத்தசன்மார்க்கத்தில் பயனிக்கின்ற சுத்தசன்மார்க்கத்திற்கு உரிமையுடைய சங்கத்தார்கள் ,

சுத்தசன்மார்க்க கொள்கையும், லட்சியமுமாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய "பூரண சித்தி "வல்லபத்தைப் பெற்று முத்தேக சித்தி அனுபவத்துடன் "அருட்பெருஞ்ஜோதி இயற்கை "
என்னும் அருட்தேகத்தைப் பெற்றுக்கொண்டு மரணமிலாப் பெருவாழ்வில் வாழும் பேறு பெறுவது என்பது ............!
  
வெறுமனே புலைகொலை தவிர்த்து இருந்தும்,

பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்யம் செய்து இருந்தும்,

திருவருட்பா முற்றும் பாராயணம் செய்து இருந்தும்,

புருவமத்தி தியானத்தில் தீபநாட்டம் வைத்து இருந்தும்,

இடைவிடாது மகாமந்திர உச்சாரணம் செய்து இருந்தும் ,

சன்மார்க்க சத்விசாரம் செய்து இருந்தும்,

இடைவிடாது வடலூர் மாதப்பூச ஜோதி தரிசனம் கண்டு இருந்தும்,

ஆகிய அனைத்து சன்மார்க்க நியதிகளிலும் இடைவிடாது நெறிப்படி வாழ்ந்து கொண்டு வந்தாலும்,

பெருமான் கூற்றுப்படி,
"பற்றுகள் அனைத்தையும் பற்றறத் தவிர்த்து அம்பலப் பற்றே பற்றாய் பற்றுமின்"
என்ற அறிவுரையின்படி ,

மாயையினால் படைக்கப்பட்ட நிலையற்ற அற்பசுகத்தை தரக்கூடிய இவ்வுலக இன்பத்தை தரக்கூடிய மண் பெண் பொன் என்ற விடய இன்பங்களின்மீது  "நிராசைக்" கொண்டு,

என்றும் அழியாப் பேரின்பத்தைத் தரக்கூடிய அருட்பெரும்பதிமீது மட்டுமே பற்று வைத்து பசுவின் வரவை எதிர்பார்த்து இளங்கன்று பரிதவிப்பது போன்று ,

ஆகாரத்தில் இச்சையற்று,
அழுத கண்ணீர் மாறாத வண்ணம் ஆண்டவரின் அருளுக்காக ஏங்கி தவித்தாலொழிய சுத்தசன்மார்க்க லட்சியத்தை எக்காலும் 
அடைதல் கூடாது 🔥🙏

மூவாசைகள் 🍑🍐🍌
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
     இயற்கையிலேயே தயவை குணமாகக்கொண்ட நமது ஆன்மாவிற்கு ,

இயற்கையாகிய அனாதி ஆணவ மலமும் ,
இயற்கையில் செயற்கையாகிய மாயை மலமும்,
செயற்கையாகி கன்ம மலமும் ஆகிய மும்மலங்களும் சேர்க்கப்படுவதுடன்,

செயற்கை குணங்களாக
காமம்,
குரோதம்,
லோபம்,
மோகம்,
மதம்,
மார்ச்சரியம் என்னும் உட்பகைகளும் வந்தடைகின்றன .

இந்த செயற்கை குணங்களின் வாயிலாக போத அசைவின்கண் தோன்றும் விடய ஆசைகளாகிய ,
மண்,
பெண்,
பொன் என்ற மூவாசைகள் அசைக்கப்பட்டு ஆன்மாவை இறுகப் பற்றிக்கொள்கின்றன 🔥🙏

அதே போன்று  இவ்வுலகப் பொருள்களின்மீது பற்றற்று  நிராசையுடன் ,
போத அசைவின்றி தற்சுதந்திரம் இல்லாமல் திருவருட்சுதந்திரத்தில் நிற்கும் அனுபவத்தர்கள் ,

தேனுண்ட வண்டு அத்தேன் மயமாய் மயங்கி நிற்பதுபோன்று 

போத ஒழிவின்கண்  சிவானந்ததேனில் மயங்கி அலையறியாக் கடல்போல ஆனந்த தெள்ளமுதைப் பருகி பேரின்பத்தை அனுபவிக்கின்றார்கள் 🍓

🙏🔥நனவு ,கனவு,சுழுத்தி🔥🙏
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
இப்பிரபஞ்சப் பொருள்களின் மீது நிராசையை உண்டாக்கும் பொருட்டு நமது பெருமான் சுத்தசன்மார்க்க லட்சியத்தை அடைய விரும்பும் சாத்தியர்களுக்கு  

நனவிலும் மண்ணாசை,
கனவிலும் பெண்ணாசை,
சுழுத்தியிலும் பொன்னாசை முதலிய மூன்று ஆசைகளும் கூடாது என்று கூறுகின்றார்கள் 🔥🙏

நனவு (ல) சாக்கிரம்🍑
       நனவு என்பது நாம் விழித்திருக்கும்போது ஜாக்கிரதையுடன் இருக்கும் விழிப்பு நிலையாகும். 
இது நமது உள்ளம் பித்த உஷ்ணத்தோடு கூடி லலாடம் மற்றும் ஆக்ஞா என்று சொல்லக்கூடிய புருவமத்தியில் இருந்து செயல்படுவதாகும்.

இந்த நிலையில் நமது தத்துவங்கள் 96 ல் ,
ஞானேந்திரியங்கள் 5ம்,
அதனால் அடையக்கூடிய விஷயங்கள் 5 ம் அதாவது,
கண்,
காது,
மூக்கு
நாக்கு,
மெய் என்ற ஞானேந்திரியங்கள் 5ம்,

 அதனால் பெறக்கூடிய உணர்வுகளுமாகிய பார்த்தல்,
கேட்டல்,
நுகர்தல்,
ருசித்தல்,
பரிசித்தல் என்னும் ஞானேந்திரிய உணர்வுகள் 5ம்
மற்றும்,

கன்மேந்திரியங்கள் 5ம்
அதனால் செய்யப்படும் தொழில்கள் 5ம் அதாவது 
வாக்கு,
கைகள்,
கால்கள்,
குதம் (மலவாய் (அ)கருவாய்),
குய்யம்(ஜலவாய்(அ)
எருவாய்) என்ற கன்மேந்திரியங்கள் 5ம் 

அதன் செயல்களாகிய பேசுதல்,
பாடுதல்,
உண்ணுதல், கொடுத்தல் ,
எடுத்தல்,
நடத்தல்,
ஓடுதல்,
மலம் கழித்தல்,
ஜலம் கழித்தல் குழந்தை உற்பத்தி ஆகிய தொழில்களை செய்கின்ற கன்மேந்திரிய 
செய்கல் 5ம் ,
மற்றும்,

பிராணன் முதலாகிய முக்கிய வாயுக்கள் 10ம்,

அந்தக்கரணங்களாகிய மனம்,
புத்தி,
சித்தம்,
அகங்காரம் 
மற்றும் உள்ளத்தை சேர்த்து 5ம் 

ஆக 35 தத்துவங்களும் நனவு நிலையில் வேலை செய்கின்றனவாகும்🔥🙏

கனவு(அ)சொப்பனம்🍅
     இது நாம் கனவு காணும்போது இருக்கும் நிலையைக் குறிக்கின்றது.
     
    கனவு என்பது நமது உள்ளம் வாதநாடியோடு கூடிக் கண்ட ஸ்தானத்தில் நிற்கும்போது செயல்படுவதாகும்.
      
    இந்த நிலையில் மேற்கூறிய ஞானேந்திரியம் 5 ம்,
கன்மேந்திரியம் 5 ம், தவிர மற்ற 25 தத்துவங்களும் வேலை செய்கின்றன🔥🙏

சுழுத்தி(அ)உறக்கம் 🍅
      இது நனவு கனவு அற்று உறங்கும்போது உள்ள நிலையைக் குறிக்கின்றது .
     
சுழுத்தி என்பது நமது உள்ளம் சிலேத்தும நாடியோடு கூடி மார்பு ஸ்தானத்தில் இருந்து செயல்படுவதாகும் .
        
இந்த நிலையில் ஆன்மா எந்தவித தொழில்களும் இல்லமால் தன்னை மறந்து சுகமாய் இருந்து நித்திரை செய்தாலும் அஞ்ஞான நிலையில் இருக்கின்றது .
இதற்கு "கேவல நிலை" என்று பெயர்;
இந்த நிலையில் மனம் சித்தம் மற்றும் பிராணன் தத்துவங்கள் மட்டும் வேலை செய்கின்றன🔥🙏

🙏🏘நனவினும் மண்ணாசை 🏘🙏
🏠🏕🏡🏕🏡🏕🏡🏕🏡🏕🏡🏕🏡🏕🏡🏕
       அனைவரும் ஆசைப்படுதல் வேண்டும் ,
ஆசைப்படுவதற்குதான் பிறவி ,
முற்பிறவியில் ஆசைப்பட்டதனால்தான் பிறவியே கிடைத்தது ,

பிறவியற்று இருக்க வேண்டும் என்றால் ஆசையற்று இருத்தல் வேண்டும்.

மானுடப் பிறவியைப் பெற்ற ஒரு ஆன்மா ஒரு பொருளின்மீது பற்று வைத்தால் அது அவா (அ) ஆசை,

அப்பொருளையே நினைத்துக்கொண்டு இருந்தால் அது காமம் .

அப்பொருளை எப்படியாவது அடைந்தே ஆகவேண்டும் என நினைத்தல் அது மோகம்;

சுத்தசன்மார்க்க லஷியத்தை அடைய விரும்பும் சாத்தியக்ள் எந்த ஒரு பொருளினிடத்திலும் மோகம் முதலிய குணங்கள் இன்றி அவா மயமாய் மட்டும் நிற்றல் வேண்டும்.

பரலோக வாழ்வாகிய சுத்தசன்மார்க்க சத்திய சாத்திய வாழ்வு பெற விரும்புபவர்கள் நிலையற்ற அற்ப சிற்சுகத்தைக் கொடுக்கக்கூடிய இப்பிரபஞ்ச பொருள்களின் மீது எத்துணையும் பற்றற்று நிராசை மயமாய் இருந்து ,

என்றும் நிலையான பேரின்பத்தை அளித்து நம்மை எக்காலத்தும் அழியாநிலையில் வைத்து ,அருள்வாழ்வை அளிக்கக்கூடிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்து மாறாத அன்பு வைத்து ,

எவ்விதத்தாவது  ஆண்டவரது தயவாகிய அருளைப் பெற்றிடவும் ,
ஆண்டவரை அடைந்திடவும் பேராவல்கொண்டு இருத்தல் வேண்டும்🔥

அந்த வகையில் சுத்தசன்மார்க்க லஷியத்தை அடைய விரும்பும் பக்குவிகள் விடய ஆசைகளில்  முதலாவதான மண்ணாசை நனவில்கூட இருத்தல்கூடாது என்று பெருமான் கூறுகின்றார்கள் .
எப்படி என்றால் ,

ஆறறிவு தேகம் கொடுத்து இப்புவியில் வாழப்பிறந்த ஒரு ஜீவருக்கு ,

அறம் பொருள் இன்பம் வீடு என்ற நூற்பொருளின்படி 
ஒருவர் இல்லறத்தை நடத்துவதற்கு ஒரு அகமாகிய இல்லம் அவசியம் வேண்டும் என்றும் , 

அறவழியில் உழைத்து அதனால் பொருளை ஈட்டி  ,அதில் வரும் இன்பத்தைக் கொண்டு வாழ்வு நடத்த நன்செய் புன்செய் நிலம் தேவை என்றும் தனது வாழ்வியல் ஆதாரத் தேவைக்காக மட்டுமே ஆசைக்கொண்டு  

" போதும்" என்ற மனத்தோடு தங்களது குடும்பத்தை அறவழியில் நடத்தி வரவும்,
நேர்மையான உழைப்பில் தமது தேவைக்கு மேல் வருகின்ற வருமானத்தில் 

முன்வினையாலும் அஜாக்கிரதையினாலும் தற்சுதந்திரமில்லாமல் அருள்நியதியின் தணடனைப்படி எந்த வகையிலும் ஆதாரமற்று வறுமையில் இருப்பவர்களுக்கு வாழ்வாதரத்தை கொடுத்து உதவியும் வாழ்தல் வேண்டும் .

அப்படி இல்லாமல் காமம்,
குரோதம்,
லோபம் ,
மோகம்,
மதம்,
மார்ச்சரியம் என்னும் செயற்கை குணங்களின் வயப்பட்டு,

மண்ணாசைப் 
பெருகி பலவீடுகள் மனைகள் நிலங்கள் என்று பேராசையுடன் வாங்கி சேர்த்துவைத்து ,
தன்னைச் சார்ந்து உள்ளவர்களுக்கும், 
தன்னிடம் யாசிப்பவர்களுக்கும்,

ஆதாரமற்ற வறியவர்களுக்கும் கொடுக்கும் குணம் ஏதும் இல்லாமல் லோபியாய் வாழும்போது ,
தான் சேர்த்து வைத்த பொருளினால் தனக்கே முடிவில் கேடு உண்டாகும் என்பதையும் 
அறியும் அறிவு விளக்கமில்லாமல்,

நமது பிள்ளைகளையும்
எதிர்காலத்தில் உழைத்து வாழ்ந்து அதில் பொருள் ஈட்டவேண்டும் என்ற நிலையில் வைக்காமல்,

தான் சேர்த்து வைத்த பொருளைக்கொண்டு ஊதாரிதனமாக சுற்றித்திரியச் செய்து ,
சுகபோகத்தை அனுபவிக்கச்செய்து வாழ்வியல் கஷ்டங்கள் எப்படிப்பட்டவை என்பதை பட்டு தெரியவிடாமலும்,

அதனால் பெறக்கூடிய அனுபவங்களையும் பெறவிடாமல் நாமே அவர்களுக்கு காலம் சொல்லிக்கொடுக்கும் அனுபவப் பாடத்தை கற்க விடாமல் கெடுத்து விடுகின்றோம் .

ஒவ்வொருவரு ஆன்மாவும் உழைத்து வாழவேண்டும் என்று கருதி தனது பிள்ளைகளுக்கு உழைப்பின் அருமையை தெரியவைத்து அவர்கள் ஈட்டும் பொருளில் அவர்களை வாழவைக்கவேண்டும் ,

குடும்பத்தார் அனைவருக்கும் சேர்த்து  தலைமுறைக்கும் நாம்பொருளை தேடிவைத்துவிட்டு பிள்ளைகள்  வீணாகுவதற்கு நாமே காரணமாய் இருத்தல் கூடாது.
இது சாதாதன இல்லறத்தார்கள் அறிவது.

அதுவே சுத்தசன்மார்க்க லட்ஷியம் உள்ள பக்குவ ஜீவர்கள்,

பொருளிலே இவ்வுலகம் இருப்பதை உணர்ந்தும் ,
அருளுலகம் அடைவதற்கு இப்பொருளுலகப் பற்று கூடாது என்பதையும் உணர்ந்து ,

இவ்வுலகப் பொருள்களில் நிராசைக்கொண்டு, மண்ணாசையை  எந்தச் சூழலிலும் மனத்தினால் கூட நினைத்திடாமல் 

இப்பிரபஞ்ச பொருள்கள் எல்லாம் இவ்வுலகில் நாம் வாழ்வதற்கு ஆதாரமாக இறைவன் கொடுத்த வாழ்வாதரப் பொருள்கள் என்று உணர்ந்தும் ,

எல்லாப் பொருள்களும் ஆண்டவருடைய உடைமைகள் என்றும் அவர் ஒருவருக்கே உரிமையுடையது என்றும்  கருதி,

இவ்வுலகில் நம்முடைய பொருள்கள் என்று  ஒரு துரும்புகூட  இல்லை என்பதை நன்றாக உணர்ந்தும் ,

இன்று எது நம்முடையதுவோ ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது,

மற்றொருநாள் அது வேறொருவருடையதாகிறது  என்ற உலகியல் உண்மையை அறிந்தும்,

எந்த வகையிலும் "பொருளால் இருளுரும்" என்ற உண்மையை உணர்ந்து

மூவாசைகளில் முதல் ஆசையாகிய 
மண்ணாசை என்கின்ற "மானிடப் பேயின் " நினைப்பே இல்லாமல் வாழ்ந்திடல் வேண்டும் 🔥🙏.

பதிவு விளக்கம் பெறவேண்டி நீண்டதாய் இருப்பதனால் இதனுடைய தொடக்கமாகிய  பெண்ணாசை மற்றும் பொன்னாசையைப் பற்றி அடுத்தடுத்தப் பதிவுகளில் காண்போம்.
தயவான நன்றிகள் 🔥🙏
....வள்ளல் மலரடி வாழ்க ! வாழ்க 🔥🙏
....பெருமான் துணையில் 🔥🙏
....வள்ளல் அடிமை 🔥🙏
....வடலூர் இரமேஷ் ;

[vallalargroups:6005] Bangalore KRPuram பசி ஆற்றுவித்தல் வாழைஇலையுடன் தொடக்கம்

கடந்த ஒரு வாரமாக Bangalore KRPuram பசி ஆற்றுவித்தல் வாழைஇலையுடன் 

[vallalargroups:6004] கோபம்

🌰 கோபம். 🌰
●●●●●●●●●●●●●

🌰 சினம் வெகுளி என்பவற்றின் பொருள் ;
சினம் உள்வேக்காடு , புடநியாயம் போல்,  இது தேகத்தைச் சீக்கிரம் நஷ்டஞ் செய்யும். 

🌰 வெகுளி  மீசைத் துடித்தல், கண்சிவத்தல், கை கால் உடம்பு துடித்தல் முதலாகியவற்றை வெளிப்படையாகக் காட்டுதல்,

🌰 இதுவும் ஆயுளை நஷ்டம் செய்யும். ஆகையால் எந்த வகையிலும் கோபங் கூடாது. அதை அவசியம் ஒழிக்க வேண்டியது. 

🌰 காமக் குரோதாதிகள் முதலிய பெருங்குறைகளை அவசியம் நீக்க வேண்டியது. காரணமென்பது கரண சம்பந்தமுடையது.🌰

🌰 வள்ளலார்.🌰
●●●●●●●●●●●●●●

Friday, September 14, 2018

[vallalargroups:6003] நாம் கொடுக்கும் உணவு யாருக்கு சென்று சேர்கின்றன???

[vallalargroups:6002] Vallalar Answer::: கணபதி

Vallalar Answer::: கணபதி

குண்டலி வட்ட நரம்பின் அடியில் இரண்டு நரம்பு ..வலத்தில் அஞ்சு கவருடைய தலையாயும்,கணபதி என்றும்,இந்நரம்பு இடைவிடாது அசைந்து கொண்டிருக்கும்.இதற்கு கணபதி என்று பெயர்.இதற்கு இடம் வலம் இரண்டிலும் சித்தி தத்துவம்,புத்தி தத்துவம் உண்டு.

Thursday, September 13, 2018

[vallalargroups:6001] உணவு மீதமாகி விட்டதா... தொடர்பு கொள்ளுங்கள்

[vallalargroups:6000] புதுக்கோட்டை - வாடிமனைப்பட்டி - ஓர் அற்புதம்


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வாடிமனைப்பட்டி என்ற கிராமத்தில், ஒருவர் கூட அசைவ உணவுகள் உண்ணாமல் வாழ்ந்து வருகின்றனர்.

* வாடிமனைப்பட்டி கிராம மக்கள் அனைவரும் வள்ளலாரின் சன்மார்க்க நெறியை பின்பற்றுகின்றனர். எனவே வள்ளலாரின் கொள்கைப்படி, கிராம‌ம் முழுவதும் ஒருவர் கூட அசைவ உணவுகளை சாப்பிடுவதில்லை.


* வெளியூருக்கு உறவினர் வீடுகளுக்கு சென்றால் கூட சைவ உணவுகளை மட்டுமே உண்ணுவதாக கூறுகின்றனர். 


* திருமணத்திற்கு பிறகு கிராமத்தில் குடியேறும் பெண்களும் சைவமாக மாற்றப்படுகின்றனர். அதே போல, ஆடு கோழிகளை வளர்த்து விற்றால், அவை பலி கொடுக்கவோ, அல்லது இறைச்சிகளுக்கோ தான் பயன்படுகிறது என்பதால் இங்கு ஆடுகளோ கோழிகளோ வளர்ப்பதில்லை. 


* கண்மாயில் ஏராளமாக மீன்கள் வளர்கின்றன. ஆனால், இந்த கிராம மக்கள் மீன்கள் பிடிப்பதில்லை. சைவ உணவுகளை மட்டுமே உண்பதால், ஆரோக்கியமாகவும், அதிக ஆயுள் வாழ்வதாகவும், கிராம மக்கள் கூறுகின்றனர்.  


* புது புது அசைவ உணவுகளை நோக்கி மனிதனின் தேடல் தொடர்ந்து கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில், வாடிமனப்பட்டி கிராம‌மே சைவமாக மாறி நிற்பது அருகே உள்ள கிராம மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

[vallalargroups:5999] இன்றைய சிந்தனை

கேள்வி : விநாயகர் யார்?
அவர் எங்கே இருக்கிறார்?
இப்பொழுது என்ன செய்து கொண்டு இருக்கிறார்?

please answer

Monday, September 10, 2018

[vallalargroups:5998] இயற்கை உண்மை,இயற்கை விளக்கம், இயற்கை இன்பம்

🙏🔥
அருட்பெருஞ்ஜோதி 🔥
அருட்பெருஞ்ஜோதி 🔥
தனிப்பெருங்கருணை 🔥
அருட்பெருஞ்ஜோதி 🔥

    🙏🔥அசுத்த புண்புலால் உடம்பே மாற்றறியா சுத்த பொன்னுடம்பானதே ! 🔥🙏
🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐

     ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய உயிர்உறவுகளாகிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன் 👏

பாரொடு விண்ணாய் பரந்ததோர் ஜோதியாய் எங்கும் நீக்கமற நிறைந்து விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியின் அருளொளி அணுக்கூறுகளே  ஒவ்வொரு ஆன்மாவிற்குள்ளும் சிற்றொளியாய் இருந்துகொண்டு அவற்றை  இயக்கிவருகின்றது 🔥

ஆன்மாக்களின் அகமாய் விளங்கும் இந்த சிற்றொளியே, அருட்பெருஞ்ஜோதி பேரொளியின் முழுஆற்றலையும் தன்னகத்தே கொண்டதாய் விளங்குகின்றது🔥

அருட்பெருஞ்ஜோதியை உள்ளொளியாய் கொண்டு விளங்கும் ஒவ்வொரு ஆன்மாக்களும் , அருட்பெருஞ்ஜோதியின்" சச்சிதானந்த " வடிவைப் பெற்று விளங்கவேண்டும் என்பதே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள்நியதியாகவும் உள்ளது 🔥

சச்சிதானந்தம் என்பது,
சத்து +சித்து+ஆனந்தம்  என்று பிரிந்தும்

மெய்யறிவானந்தம் என்ற பொருளுடன் ,
மெய் + அறிவு+ ஆனந்தம் என்று பிரிந்தும்,

அதுவே
இயற்கை உண்மை,
இயற்கை விளக்கம்,
இயற்கை இன்பம் என்று பொருளுடன் விளங்குகின்றது🔥

சத்து 🌺
மெய் 🌺
இயற்கை உண்மை 🌺
**************************
சத்து என்பது ,
என்றும் ஓர் நிலையாய் ,
என்றும் ஓர் இயலாய்,
என்றுமே உள்ளதுவாய்,
அனைத்து உலகங்களும் ஆங்காங்கு உணர்ந்திட முயன்றிடினும் ஒரு சிறிதும் அறிய முடியாததுவாய்,
வேதாகம முடிபுகலாலும்   
கண்டிட முடியாததுவாய்,
துரியம் கடந்த நிலையில் பெரியவான்பொருளாய் இருக்கின்றது என்று வேதங்கங்கூறுகின்ற நிலையெல்லாம் கடந்து அப்பாலாய் அதற்கும் பரமாய்  நிறைந்து விளங்குவதாய் உள்ளதுவாகும்🔥 

சித்து 🌺
அறிவு 🌺
இயற்கை விளக்கம் 🌺
**************************
சித்து என்பது ,
என்றும் உள்ளதுவாய்,
எங்கும் ஓர் நிறைவாய்,
என்றுமே விளங்கிடுவதாய்,
அண்டபிண்டத்தை இயக்கிடும் சத்திகள் பலவாய்,
சத்தர்கள் பலவாய்,
தத்துவம் பலவாய்,
தத்துவி பலவாய்,
படி நிலை பலவாய்,
பதநிலை பலவாய்,
மூர்த்தர்கள் பலவாய்,
மூர்த்திகள் பலவாய்,
உயிர்வகை பலவாய்,
உடல்வகை பலவாய்,
அறிவவை பலவாய்,
அறிவன பலவாய்,
நினைவவை பலவாய்,
நினைவன பலவாய்,
காட்சிகள் பலவாய் காண்பன பலவாய்,
செய்வினை பலவாய் செய்வன பலவாய்,
அண்டசராசரம் அனைத்தையும் மற்றவையும் விளக்கம் செய்வித்துக்கொண்டு ,
எல்லாம் செய்யவல்ல சித்தாகி விளங்குவதாய் உள்ளது 🔥

ஆனந்தம் 🌺
இயற்கை இன்பம் 🌺
*************************
 ஆனந்தம் என்பது,
ஒன்றின் இன்பம் ஒன்றில் உள்ளது என்று கூறமுடியாததாய்,
என்றும் மாறுபடாத ஒப்பற்ற பேரின்பமுமாய்,
இது அது என வகைப்படுத்தி சொல்ல இயலாத ஒப்புவமை இல்லாத தனித்த இன்பமுமாய்,
சாக்கிரம்,சொப்பனம்,
சுழுத்தி,துரியம்,துரியாதீதம் என்ற எல்லா அவத்தைகளும் கடந்து அதன்மேல் குறைவற்ற நிறைவான இன்பத்தை கொடுத்து ஆனந்தமயமாய் விளங்குவதாய்,
புலனறிவு,மன அறிவு,ஜீவஅறிவு என்ற எல்லா அறிவுநிலைகளுக்கும் ஆதாரமாய் அதுஅதுவாய் இருந்து பேதமின்றி ஓங்கியிருந்து இன்பத்தை அளிப்பதுவாய்,
விடய இன்பங்களாய் மண் பெண் பொன் என்ற விட இச்சைகளை பொறி புலன்களால் கண்டு அனுபவிக்க உயிர்களுக்கு இன்பம் நல்குவதாய்,
இப்பிறவியிலும்,
மறுபிறவியிலும்,
பிறவிக்கடலை கடந்து முத்திநிலையிலும் ஆன்மாக்களுக்கு இன்பத்தை வழங்கி நிறைந்து விளங்குகின்றதுவாய்,
முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள் என்ற அனைவருக்கும் இன்பத்தை அளிக்கவல்ல தனித்த பேரின்பமாய்,
எல்லா உயிர்களும் அவையவை அடைகின்ற நிலைக்கு ஏற்ப தனித்தனி இன்பங்களை வழங்கி வாழ்விக்கின்ற தனித்த பேரின்பமாய் உள்ளதுவாய் இருக்கின்றது🔥

மேற்கண்ட சத்து சித்து ஆனந்த வடிவை அடைந்து , அருட்பெருஞ்ஜோதி மயமாய் இருந்து,
என்றும் பேரின்பத்தை அனுபவித்துக்கொண்டு அருள்மயமாய் வாழவே ஒவ்வொரு ஆன்மாக்களின் ஆன்ம லட்சியம் ஆகும் .
இந்த ஆன்ம லட்சியத்தை அடைவதே ஒவ்வொரு ஜீவர்களின் ஆன்மலாபமும் ஆகும் 🔥

   🙏🔥பிண உடம்பு என்று தொலையுமோ ?🔥🙏
**************************
         புதுவை வேலு முதலியாருக்கு 15: 2: 1859 அன்று நமது சுவாமி வள்ளல் பெருமானார் ஒரு கடிதம் எழுதுகின்றார்கள்  .

அக்கடிதம் முழுவதும் பார்க்காமல் நமது தற்போதைய பதிவிற்கு ஏற்ற வாசகத்தை மட்டும் பார்ப்போம்.........

கல்வி கேள்விகளாற் சிறந்து ,சிவ பக்தி, ஜீவகாருண்ய சாந்தம் ,அன்பு முதலிய நற்குணங்களைப் பெற்ற நண்பர்க்கு அனந்தமுறை வந்தனம் வந்தனம் வந்தனம்.

தாங்கள் இரவுபகலாக நமது ஆண்டவனை இடைவிடாமல் சிந்தித்துக்கொண்டு சாக்கிரதையோடு இருக்கவேண்டும் என்று தங்களை பிரார்த்திக்கின்றேன்🔥

"நம்மைப் பெற்ற தாயைப் பார்க்கிலும் அனந்தகோடி பங்கு நம்மிடத்தில் தயவுள்ளவன் நமது ஆண்டவன்".
ஆகலால் நமக்கு ஒரு காலத்திலும் குறைவு நேரிடாது.
இது சத்தியம்.
ஆனால் நாம் நம்பிக்கை தவாறு இருக்கவேண்டும் 🔥

தாங்கள் வரவுக்கு தக்க செலவு செய்துகொண்டிருக்க வேண்டும்.பின்பு இஷ்டப்படி எல்லாம் செய்ய நமது ஆண்டவன் அனுக்கிரகிப்பான்.
இதற்கு சந்தேகமிராது.
இது உண்மை.
இந்த உண்மை தங்களுக்கு மட்டும்தான் தெரியும் .
ஆதலால் தங்களுக்கு மட்டில் இது தெரிவித்தேன்.

"" ஐயா ! நானோ புத்தி தெரிந்த நாள் தொடங்கி இதுபரியந்தம் 
"இந்தப் பிண உடம்பும் இதற்குக் கொடுக்கின்ற பிண்ட துண்டங்களும் பெருஞ்சுமையாக இருக்கின்றதே ,

ஐயோ ! இது என்றைக்கு தொலையும் என்று எண்ணி எண்ணி இளைத்துத்துன்பப் படுகின்றவனாக இருக்கின்றேன்.

இப்படிப்பட்ட இந்த நாய்க்கு பணம் என்ன செய்ய ,
என்னைக் குறித்துத் தாங்கள் பண விஷயத்தில் பிரயாசமெடுத்துக் கொள்ள வேண்டாம்.

என்று மேலும் சில செய்திகளை கூறி கடிதத்தை நிறைவுசெய்கின்றார்கள் சுவாமி🌺

இப்படி தனது பிண்டமாகிய உடம்பையும்,
உடம்பிற்கு  கூலியாகக் கொடுக்கின்ற பிண்டமாகிய உணவையும் எண்ணி வருந்தி ,
எப்பொழுது
இந்த உடம்பாகிய பிண்டமும்,
இந்த பிண்டத்திற்கு கொடுக்கவேண்டிய உணவாகிய பிண்டமும் தொலையும் என்றும் வெறுப்புடன் இருந்த பெருமான் ,

சித்தெலாம் வல்ல சுத்தசன்மார்க்க சேர்க்கையினால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தயவால் ,
தனது அசுத்த புன்புலால் உடம்பை, இத்தனை மாற்று என்று சொல்லி அளவிடமுடியாத சுத்த பொன்னுடம்பாய் மாற்றிக்கொண்டார்கள்🌺

"தூக்கம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே,
ஆக்கமென ஓங்கும் பொன் அம்பலத்தான்− ஏக்கமெல்லாம்
நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் "பொன்வடிவம் தாங்கினேன்" சத்தியமாத் தான்🔥

என்று  தமது உடம்பை சுமையாக வெறுத்து ,
இந்த உடம்பு எப்பொழுது தொலையும் என்று கருதிய நமது பெருமான்,
புன்னாகக்கூடிய அசுத்த புலை உடம்பை சுத்தசன்மார்க்கம் என்ற மலப்பிணி தவிர்த்து இறவா வரம் தரும் அருள்மருந்தின் சேர்க்கையால் ,
மாற்றறியா சுத்த பொன்னுடம்பாய் மாற்றிக்கொண்டேன் ,
என்று சத்தியம்செய்து கூறுகின்றார்கள் நமது பெருமான் 🔥

தாம்பெற்ற இந்த பெரும்பேற்றை இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு ஜீவர்களும் பெற்று அழியாநிலையில் தம்மைப்போலவே இவ்வுலகில் வாழ்ந்திட வேண்டும் என்ற தனிப்பெருங்கருணையினாலேயே ,
இவ்வுலகவர்கள் அனைவரையும் சுத்தசன்மார்க்கத்தில் சேர்ந்து வாழ்வுபெற பெருமான் கருணையோடு அழைக்கின்றார்கள் 🔥
நாமும் 
சன்மார்க்கம் சார்வோம் 🌺
சாகாக் கல்வியைப் பயில்வோம்🌺
...நன்றி🙏
...வள்ளல் மலரடிப் போற்றி !போற்றி!🙏
...பெருமான் துணையில் 🙏
....தயவுடன் வள்ளல் அடிமை 🙏
....வடலூர் இரமேஷ்

[vallalargroups:5997] இனறைய பசி ஆற்றுவித்தல் திரு.மகேந்திரன் குடும்பத்தினர்

Wednesday, September 5, 2018

[vallalargroups:5996] Invitation: Online conference arranged by Vallalar mission USA @ Sun 9 Sep 2018 7pm - 9pm (IST) (Vallalar Groups)

Online conference arranged by Vallalar mission USA

When
Sun 9 Sep 2018 7pm – 9pm India Standard Time - Kolkata
Calendar
Vallalar Groups
Who
Vallalar Groups- organiser
hariharan hariharan- creator
vallalargroups@googlegroups.com
Attachments
Dhyaanam
Vallalar Vaakkil Dhyaanam by Prof.Namasivayam Ayya

Pls see the attachment for further details to attend the conference call

Going?    - -     

Invitation from Google Calendar

You are receiving this courtesy email at the account vallalargroups@googlegroups.com because you are an attendee of this event.

To stop receiving future updates for this event, decline this event. Alternatively, you can sign up for a Google account at https://www.google.com/calendar/ and control your notification settings for your entire calendar.

Forwarding this invitation could allow any recipient to modify your RSVP response. Learn More.

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)