Friday, April 28, 2017

[vallalargroups:5649] Health Tips பிரண்டை

பிரண்டை

"முழங்கால் வலி அதிகமாக இருக்குது"

ஏதாவது பண்ணுங்க என்றார்கள் இரண்டு நபர்கள்..

கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள் எங்கம்மா ஏர் உழும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம்! அதையே இங்கு செய்தோம்.

பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான்  எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை..

அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது  குறிப்பாக, சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும். இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன்.

பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு  முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்...

பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் (அ) உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது ஒரு அருமருந்து..

நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும்போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க.....

வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் ஏழாயிரத்தில் உள்ள குறிப்பை கவனிக்கவும்  உலகிலேயே கடினமான பொருள் வைரம் தானே அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு எனும்போது ........

இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ.... 

Wednesday, April 26, 2017

[vallalargroups:5646] குப்பைமேனி மூலிகை

குப்பைமேனி மூலிகையின் மருத்துவ குணங்கள்
குப்பைமேனி மூலிகை ஒரு அறிமுகம்.......

தாவரப்பெயர்    :- ACALYPHA INDICA.
குடும்பம்               :- EUPHORBIACEAE.

மூலிகை என்றால் காடுகளில் மட்டும் கிடைக்கக் கூடியது என்று நாம் நினைப்போம், ஆனால் அப்படி அல்ல, மூலிகைகள் காடுகள் தவிர நமது வீட்டருகே, சாலை ஓரங்களில், தோட்டங்களில், வயல் வரப்புகளில் என்று ஏராளமாக  வளர்கின்றன, நாம் களைகள் [வேண்டாத செடிகள்] என்று ஒதுக்கும் புல், செடி, கொடிகள் அனைத்திலும் ஏதாவது ஒரு மருத்துவத் தன்மை இருக்கும், அவற்றில் சிலவற்றை கற்ப்பக மூலிகைகள் என கூறுவார்கள். அதில் ஒன்று தான் குப்பைமேனி மூலிகை. குப்பைமேனி பூண்டு இனத்தைச் சார்ந்த குறுஞ்செடி இது சுமார் 50 செ.மீ. உயரம் வளர கூடியது. 

இது இந்தியாவில் அநேக இடங்களில் காணப்படும் செடி, இதன் இலை பச்சை நிறத்தில் முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும். இலையில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இருக்கும். காய்கள் முக்கோண வடிவில் மிளகு அளவில் பச்சையாக இருக்கும். காய்களைச் சுற்றிப் பச்சை நிறத்தில் செதில்கள் இருக்கும். 



பெயர் காரணம்.............. 

"குப்பை போல் ஆகிவிட்ட மேனியை சீர்படுத்தி பொன்மேனி ஆக்கும்" 

தன்மை கொண்டதால் இந்தப்பெயர் பெற்றது என்று கூறலாம், இதன் வேறு பெயர்கள்: அரிமஞ்சிரி, அண்டகம், அக்கினிச் சிவன், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி, மேனி. 


மருத்துவ குணங்கள் : 

தோல் நோய் நீக்கும் குப்பைமேனி........................

  • குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வர சிரங்கு மற்றும் உடல் அரிப்பு நீங்கி சருமம் பொலிவுபெறும். 

  • குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண்கள் மீது வைத்து கட்டினால் எந்த வகையான புண்ணும் குணமாகும் மேனி மீண்டும் எழிலோடு விளங்கும். 

  • குப்பைமேனி, மஞ்சள், உப்பு மூன்றும் அரைத்துப் பூசி ஒரு மணி நேரம் சென்று குளித்து வர சொறி, சிரங்கு, படை குணமடையும்.

  • குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.

  • பெண்கள் குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி (Facial) வந்தால் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் காணாமல் போகும் முகமும் அழகும் பெறும்.  

  • பெண்கள் சிலருக்கு மேல் உதட்டில் ரோமம் முளைத்து இருக்கும் அவர்கள் குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை மாவு போல் அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மீசை இருக்கும் பகுதியில் இரு வாரங்கள் பூசி வந்தால், முடி உதிர்ந்து முகம் பளிச்சிடும்.

  • குப்பைமேனி இலையை கடாயில் போட்டு விளக்கெண்ணெய் அல்லது ஆமணக்கெண்ணையில் வதக்கி இளம் சூட்டில் படுக்கைப் புண் உள்ள இடத்தில் வைத்து கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும். 

  • குப்பை மேனி இலையுடன் மஞ்சள், வெள்ளைப் பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து முகப்பரு, கரும் புள்ளிகள் மீது தடவி வர முகம் முன்பு இருந்த இயல்பு நிலைக்கு வந்துவிடும்.

வயிற்றுப் பிரச்சினைகளை குணபடுத்த ............. 

  • குப்பைமேனி இலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து 1/2 ஸ்பூன் அளவு தேனில் அல்லது மிதமான வெந்நீரில் கலந்து 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றுப் புழுக்கள், குடல்ப் புழுக்கள் வெளியேறும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.

  • குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. அளவு பெரியவர்கள் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.

  • குப்பைமேனி இலையை கடாயில் போட்டு ஆமணக்கு எண்ணெய் சேர்த்து நன்றாக வதக்கி ஒரு மண்டலம் (48 நாட்கள்) உண்டு வந்தால் வாயுப்பிடிப்பு நீங்கும், குடல் புழுக்கள் வெளியேறும். மூல நோயின் தாக்கம் குறையும், சரும நோய்கள் அகலும், சுவாச நோய்கள் நீங்கி உடலும் ஆரோக்கியம் பெறும்.

  • குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லி ஆகும் வரை சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும். 12 வயது வரை உள்ள சிறுவர்களுக்குப் பாதியளவு கொடுக்கவும்.

  • 10 கிராம் குப்பைமேனி வேரை மென்மையாக அரைத்து நீரில் கரைத்து கொதிக்க வைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர் மற்றும் கிருமிகள் வெளியேறும்.

  • குப்பை மேனிச் செடியை வேருடன் பிடிங்கி நன்கு கழுவி சிறு துண்டுகளாக வெட்டி சுக்கு, வெள்ளைப்பூண்டு, சீரகம் சேர்த்துக் கஷாயமாக பருக குடலிலுள்ள பூச்சிகள் அழியும். 


வலி நிவாரணம் பெற............... 


  • தலை பாரத்தால் ஏற்பட்ட தலைவலி குணம் பெற குப்பைமேனி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து நன்றாக சலித்து வைத்து அந்த பொடியை மூக்கில் பொடி போல் இழுக்க நீர் வடிந்து தலைபாரம் உடனே குணமடையும். இதனை நசியமிடுதல் என்பர். 

  • குப்பைமேனி இலையை கடாயில் போட்டு ஆமணக்கு  எண்ணெயில் வதக்கி இளஞ் சூட்டுடன் மூட்டு வீக்கம் உள்ள பகுதியில் வைத்து கட்டினால் வீக்கம் குறையும், வாத வலி உள்ள பகுதியில் வைத்து கட்டினால் வாத வலி தீரும்.

  • குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும்.

  • குப்பைமேனி இலைச்சாற்றுடன் சம அளவு உப்பைக்கரைத்து அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சினால் உப்பு மட்டும் மிகுந்து விடும் இந்த உப்பை 5 கிராம் அளவில் தினசரி இரு வேளை சாப்பிட்டு வர வாயு, அஜிரணம் மற்றும் வயிற்று வலிக்கு சிறந்த மருந்து. 

பூச்சி கடி விஷக்கடிக்கு.............. 


  • குப்பை மேனி இலையை மை போல் அரைத்து வண்டு, தேள், பூரான், பாம்பு, வெறிநாய்க்கடி மற்றும் எலிக்கடியின் கடிபட்ட இடத்தில் பத்து போட விஷம் முறியும். 

  • குப்பைமேனி இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து குழைத்து பூசினால் படர்த்தாமரை, சொறி, பூச்சிக்கடி, காணாக்கடி (என்ன கடித்தது என்று தெரியாத போது) முதலியவை குணமாகும். மேகப்புண்ணும்  (பிறப்புறுப்புகளில், மலக்குடல், வாய் அல்லது விரல்களில் வலியற்ற புண்)  குணமடையும் .

  • குப்பைமேனி வேரை அரைத்து 5 கிராம் எடுத்து 3 நாளுக்கு 3 வேளை சாப்பிட எல்லா வகையான கடியின் விஷமும் முறியும். இந்த சமயத்தில் வாந்தியும் பேதியும் உண்டாக்கும். (உப்பில்லாமல் பத்தியம் இருக்க வேண்டும்)


மலச் சிக்கல், மூலம், பவுத்திர நோய்களுக்கு குப்பைமேனி சிறந்த மருந்தாகும்.


  • குப்பைமேனி இலையை அல்லது வேரை கைப்பிடியளவு எடுத்து சீரகம் சேர்த்து 500 மில்லி நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி கஷாயம் செய்து குடித்தால் மலச் சிக்கல் அகலும். 

  • குப்பைமேனி சமூலத்தை (சமூலம் என்றால் இலை, தண்டு, பூ, காய், வேர் என அனைத்தும் சேர்ந்தது எனப் பொருள்) எடுத்து பொடியாக்கி நெய்யில் கிளறி லேகியமாக்கி வைத்துக்கொண்டு ஒரு மண்டலம் உண்டு வந்தால் எட்டு விதமான பவுத்திர நோய் தீரும்.

  • குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும்.

  • மூலநோய் ஒரு சிக்கலான நோய். அறுவை செய்தாலும் வளரும். மூலத்திற்குக் குப்பைமேனி சிறந்த மருந்தாகும். பூத்த குப்பைமேனியை வேறுடன் பிடுங்கி நிழலில் உலர்த்தி சூரணம் (பொடி) செய்து இதில் 2 – 5 கிராம் அளவு பசும் நெய்யில் காலை மாலை 48 நாள் சாப்பிட எந்தவகை மூலமும் முற்றிலும் குணமாகும். மோரில் கலந்தும் சாப்பிடலாம். புளிகாரம் இல்லாவிடில் விரைந்து குணமடையும்.

சளி, இருமல், ஆஸ்துமா மற்றும் கோழைச் சளி..........................


  • குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து 2 தேக்கரண்டியளவு 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்குக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்து (வாந்தி அல்லது பேதியாக) கோழையை அகற்றும், இருமலைக் கட்டுப்படுத்தும், ஆஸ்துமாவை குணப்படுத்தும். வயிற்றுப் புழுவைக் கொல்லும்.

  • குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும். 

  • கும்பைமேனி இலைச் சாற்றை காய்ச்சிய பாலில் கலந்து குடித்து வர சுவாசக் கோளாறுகள் குணமாகும். 

  • ஒன்பது குப்பை மேனி இலையுடன் 6 மிளகை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பின் பசும்பாலைக் குடிக்கவும். இதனை மூன்று நாட்கள் செய்து உப்பில்லா பத்தியம் இருக்க யானைக்கால் சுரம் குணமாகும்.

  • குப்பைமேனி இலைச்சாற்றை 4 தேக்கரண்டி வீதம் 7 நாட்கள் கொடுத்து வர சுவாச நோய்கள் குணமாகும்.

சில பொதுவான மருத்துவ குணங்கள்..........


  • குப்பைமேனி, முருங்கைக்கீரை இரண்டையும் நல்லெண்ணையில் வதக்கி வேறு எதுவும் சேர்க்காமல் காலை மாலை இரண்டு வேளை சாப்பிட்டால் உடல் எடை குறைவது நன்றாக தெரியும். 

  • குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் வாதம், நரம்பு பலவீனம், உடல் மதமதப்பு, கை, கால் மதமதப்பு போன்றவை நீங்கும். சித்த பிரமை குணமடைய வாய்ப்பு உண்டு. .


பேதி மருந்து தயாரிக்க குப்பைமேனி பயன்படுகிறது. 


எப்போதும் எந்த மூலிகைகளையும் உள்ளுக்கு சாப்பிட எடுத்துக் கொள்ளும் போது முதலில் சிறிது அளவு உபயோகித்துப் பார்த்து பின் தொடர்வது நல்லது.  இது அனைத்து மூலிகைகளுக்கும் பொருந்தும். 

குப்பைமேனி செடிகளை குப்பையென எறியாமல் தேவைக்கேற்ப பயன்படுத்தி நலம் பெறுவோம்.

Tuesday, April 25, 2017

[vallalargroups:5645] Today Health Tips Puliyarai -புளியாரை

Chutney - Creeping Wood Sorrel Chutney/ Relish

PULIARAI KEERAI CHUTNEY
HULI SOPPINA CHUTNEY
Creeping Wood Sorrel (Indian Sorrel) Relish
  
Herbs rich in nutritional and medicinal properties flourished in home gardens long time ago. Some were made into chutneys, some other keerais were cooked along with lentils. Some were used in the making of hair oil and bath powders at home. Be it cough, cold, digestive upsets, skin rashes, bumps, swellings, open wounds or any other malady  there was always a herb in the garden which came in handy to alleviate the symptom. All these wonderful herbs / weeds are vanishing gradually from our urban spaces, thanks to the vertical growth of residential spaces. Useful medicinal weeds do not have a place in the modern landscapes where the focus is mostly on green lawns and  ornamental plants. On the other hand it is heartening to know that many youngsters have taken to growing herbs organically in pots.Gardens of medicinal plants (Moolikai Vanams) have sprung up in many urban areas to conserve the treasure of endemic plants and  herbs. An interest to learn about grandma's medicine using native herbs is also gradually catching up.
Various medicinal properties and health benefits are attributed to the garden weed called  Puliarai Keerai /Huli Soppu. Here is a recipe for a lip smacking chutney using Puliarai Keerai (Huli Soppu in Kannada).



INGREDIENTS


Puliyrai Keerai/Huli Soppu - 2 cups
Mustard seeds - 1/4 tsp
Black gram dal - 2 tbsps 
Red chillies - 6 or more to balance the sourness of the keerai.
Salt -  1 tsp 
Asafoetida - 1 pinch
Gingelly oil - 1 tsp
METHOD
1. Wash the Puliarai Keerai/Huli Soppu thoroughly and keep aside.
2. Heat oil in a pan and add mustard seeds.
3. When the mustard seeds crackle add the split black gram dal and roast till the colour changes to golden brown.
4. Add the red chillies and asafoetida and roast till chillies turn crisp.
5. Stir in the Puliarai Keerai/Huli Soppu into the seasoning and immediately switch off flame.
6. Allow to cool and grind all the ingredients together with salt into a slightly coarse chutney adding little water.




A small piece of jaggery can be added while grinding to tone down the very sour taste of Puliarai Keerai / Huli Soppu.
Relish  PULIARAI KEERAI CHUTNEY  with hot rice and a dollop of ghee. 

[vallalargroups:5644] திருமுருக கிருபானந்த வாரியார் ஆன்மிக சொற்பொழிவு


சுடுகாடு எங்கே இருக்கிறது?
ஒரு முறை திருமுருக கிருபானந்த வாரியார் ஆன்மிக சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார் .

அப்போது , மேடைக்கு முன்பு அமர்ந்திருந்த சிறுவர்களை பார்த்து , " நமக்கெல்லாம் சுடுகாடு எங்கே இருக்குன்னு தெரியுமா ? " என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவர்கள் , " ஊர் கோடியில் இருக்குது! "... என்று ஒட்டுமொத்தமாக பதில் கூறினார்கள்.

உடனே , " ஆடு , மாடு , கோழிகளுக்கு எங்கே இருக்கிறது ?" என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் வாரியார் . குழந்தைகள் பதில் தெரியாமல் மிரட்சியுடன் அவரை பார்த்தனர்.அப்போது வாரியார் சிரித்துக்கொண்டே , " இதோ இங்கே இருக்குது…! மாமிசம் சாப்பிடும் அனைவருக்கும் அவர், அவர் வயிரே சுடுகாடு " என்று கூறி வயிற்றை தடவிக் காண்பிக்க , கூட்டத்தில் பலத்த சிரிப்பு எழுந்தது.

மீனாக்ஷி கல்யாணம் சொற்பொழிவு ஆற்றியபோது வாரியார் அவர்கள் சொன்ன உதாரணம்

உதாரணங்கள் சொல்வதில் வாரியார் சுவாமிக்கு இணை அவரே! அவர் மீனாக்ஷி கல்யாணம் சொற்பொழிவு ஆற்றியபோது சொன்னது:

"சிவபெருமான் மதுரைக்கு 9 மணிக்கு வரவேண்டும். திங்கட்கிழமை 9-10.30 முகூர்த்தம். பிரமன் 6 மணி முதலே அக்னி வளர்த்து மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறார். மணி 8.55 ஆகிவிட்டது. பெண்ணைப் பெற்ற காஞ்சனமாலை பதறுகிறார் மாப்பிள்ளை வரவில்லையே என்று. மணி 9. கைலாயத்தில் இறைவன் நந்திதேவரிடம்,"நந்தி! புறப்படலாமா" என்று கேட்கிறார். இங்கே மதுரை அரண்மனைக்கு ஒரு சேவகன் ஓடியே வந்து மாப்பிள்ளை மாசி வீதியில் வந்துகொண்டிருக்கிறார் என்றான். திரும்பிப்பார்த்தால் மணவறையில் பிரம்மதேவனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். 9 மணிக்குக் கயிலையில் புறப்பட்டார். அதே 9 மணிக்கு மதுரைக்கு வந்து சேர்ந்தார்.

எப்படி முடியும் என்று கேட்கலாம். உலகத்தில் சூரியன் 6 மணிக்கு உதிக்கும் என்றால் மெட்ராஸ்லயும், கோயமுத்தூர்லயும், மதுரையிலயும் 6 மணிக்குத் தான் உதிக்கும். மெட்ராஸ்ல காலை 6 மணிக்கு உதிக்க ஆரம்பித்து அரக்கோணம் காட்பாடி, ஜோலார்பேட்டை என்றா போகும்?

சூரியனே இப்படி என்றால் முப்பத்துமுக்கோடி தேவர்களுக்கும் தலைவனான எம்பெருமான் சிவபெருமான் 9 மணிக்குக் கிளம்பி அதே 9 மணிக்கு வருவது சாத்தியமான விஷயம்தான் என்றார்.

கொடுத்தால் தான் கிடைக்கும்

கிருபானந்த வாரியார் சுவாமிகள், சொற்பொழிவின் போது, தோளில் மாலை அணிந்தபடியே பேசுவது வழக்கம்.

ஒருமுறை திருவாரூரில் சொற்பொழிவு! அப்போது மேடையில் இருந்த வாரியார் சுவாமிகளுக்கு, மாலை அணிவிப்பதற்காக அன்பர் ஒருவர் வந்தார். ஏற்கெனவே சுவாமிகளின் கழுத்தில் மாலை இருந்ததால், தன்னிடம் இருந்த மாலையை அணிவிக்காமல் கையில் வைத்தபடியே நின்றார்.

இதைப் புரிந்து கொண்ட சுவாமிகள், தோளில் கிடந்த மாலையைக் கழற்றி, அருகில் இருந்தவரிடம் கொடுத்தார். உடனே இதற்காகவே காத்திருந்தவர் போல், விறுவிறுவென வந்து சுவாமிகளுக்கு மாலை அணிவித்தார் அந்த அன்பர்.

அப்போது கூட்டத்தினரைப் பார்த்து சுவாமிகள், "எப்போதும் நம்மிடம் இருப்பதை எவருக்காவது கொடுத்தால்தான், அடுத்தவர்கள் நமக்குக் கொடுப்பார்கள்" என்றாராம்!

🙏🔥🙏🔥🙏🔥

Friday, April 21, 2017

[vallalargroups:5642] சைவம் vs அசைவம்

மாமிசம் மனித உணவா?
.

இயற்கை கோட்பாடுகளின் படி மனிதன் சைவமா?அசைவமா?

இயற்கையில் இரண்டு விதமான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

1. சைவம் சாப்பிடும் ஜீவராசிகள் .
.
.
2. அசைவம் சாப்பிடும் ஜீவராசிகள் .

இவ்விரு ஜீவராசிகளையும் சற்றே ஆராய்ந்து பார்த்தால் மனிதன் சைவமா?அல்லது அசைவமா? என சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

சைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக மாடு, குதிரை, கழுதை, யானை, மான் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.
.
.

அசைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக சிங்கம், புலி, நாய் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.

இனி ஆராய்ச்சி செய்வோம்.

1. இரு ஜீவராசிகளுக்கும் பற்களின் அமைப்பு.

சைவ ஜீவராசிகளுக்கு பற்கள் மனிதனை போல் தட்டையாக அமைந்துள்ளன.

அசைவ இனங்களுக்கு கூர்மையாக பற்கள் உள்ளன.
.
.

2. எவ்வாறு தண்ணீர் அருந்துகின்றன.

சைவ ஜீவராசிகள் அனைத்தும் மனிதனைப் போல் தண்ணீரை உறிஞ்சி தான் குடிக்கின்றன.
அசைவ ஜீவராசிகள் தண்ணீரை நக்கிக் குடிக்கின்றன.
.
.
3. கால் விரல்கள்:-

சைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் மனிதனைப் போல் சிறியதாகவும், பாதம் தட்டையாகவும் இருக்கும்.

அசைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் நீளமாகவும், கூர்மையான நகங்களுடனும் இருக்கும்.
.
.

4. குடல் அமைப்பு:

சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே 15 அடி வரை நீளமான குடலாக உள்ளது. 
                       காரணம், சைவ சாப்பாட்டில் நச்சுத்தன்மை குறைவாகவும், சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால் உணவானது குடலில் சற்று அதிக நேரம் இருப்பதற்கான ஏற்பாடு எனவும்,

அசைவ ஜீவராசிகளுக்கு அசைவ உணவில் நச்சுதன்மை அதிகம் உள்ளதால் மிக குறைவான நேரத்தில் குடலை விட்டு வெளியேறுவதற்கு ஏற்றாற்போல் 5 அடிகள் மட்டுமே குடலின் நீளமாக உள்ளது.
.
.

5. சமநிலையான உடல் உஷ்ணம்:-

சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே உடலில் வெப்பம் அதிகமானால் தாகத்தை உண்டாக்கி அதிக தண்ணீர் பருக வைத்து வியர்வை என்ற செயலின் மூலமாக உடலை குளிர்விக்கிறது. அல்லது சமநிலையில் வைக்கிறது.

ஆனால் , அசைவ ஜீவராசிகளுக்கு இந்த ஏற்பாடு இல்லை. ஆதலால் தனது நாக்கினை தொங்க விட்டுக் கொண்டு அது தன்னை குளிர்விக்கிறது.
.

.

6. மலத்தின் தன்மை

சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் (சைவம் சாப்பிடும் மனிதன்) போன்றே மலம் கழிப்பதில் சிரமம் இருக்காது. மலம் துர்நாற்றம் வீசாது.

அசைவ ஜீவராசிகளுக்கு (அசைவம் சாப்பிடும் மனிதன் உட்பட) மலம் கழிப்பதில் சிரமமும், மலம் அதிக துர்நாற்றத்துடனும் இருக்கும்.
            
இதுவரை உடற்கூறு அளவில் ஆராய்ந்தோம். 

இனி மனநிலையில் ஆராயலாம்.
.
.

.
1.  வாழும் முறை :

சைவ ஜீவராசிகள் ஒற்றுமையாக அதாவது கூட்டம் கூட்டமாக வாழும். மனிதனும் அவ்வாறே வாழ ஆசைப்படுகிறான்.

ஆனால் , அசைவ ஜீவராசிகள் தனித்தனியாக வாழும் இயல்புடையது. தன் எல்லைக்குள் தன் இனத்தைச் சார்ந்த இன்னொரு விலங்கினை அனுமதிக்காது.(இன்றைய மனிதனின் நிலையும் இதுதான்.)
.
.
.
2.  இயல்பு :

சைவ ஜீவராசிகளின் இயல்பான குணம் சாந்தமாகவும், அமைதியாகவும் இருக்கும்.
அசைவ ஜீவராசிகள் வேகமாகவும், ஆக்ரோசமாகவும் இருக்கும்.
.

.
3. ஆக்கப்பூர்வமான வேலைகள் :

சைவ ஜீவராசிகளை ஆக்கபூர்வமான வேலைகளில் (உழுதல், வண்டி இழுத்தல்) ஈடுபடுத்த முடியும். அசைவ ஜீவராசிகளால் இவ்வாறான செயல்கள் எதுவும் செய்ய இயலாது.
.
.
.
மன இறுக்கம்:-

அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிக மன இறுக்கத்திற்கு உள்ளாவது ஏன்? 

ஒவ்வாருவரின் உடலிலும் அபாயகரமான சமயங்களில் தப்பித்துக் கொள்வதற்காக (உடலிற்கு அதிக இயக்க சக்தியை தர ) சக்தி வாய்ந்த ஹார்மோன்கள் அட்ரீனல் சுரப்பியிலிருந்து சுரந்து இரத்தத்தில் கலக்கும்.

உதாரணமாக, 
ஒரு நாய் நம்மை துரத்தினால் சாதாரண வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் நாம் ஒட உதவுவது இந்த அட்ரீனல் சுரப்பி சுரக்கும் நீராகும்.

இந்த நீரானது ஒவ்வொரு விலங்கும் வெட்டப்படும் போது அதிக அளவில் சுரந்து அதன் இரத்தத்திலும், சதைகளிலும் கலந்து இருக்கும். 

இவற்றை உட்கொள்ளும் மனிதன் தன் சாதாரண வேலைகளிலும் கூட ஏதோ அபாயத்தில் உள்ளது போன்ற உணர்வைப் பெறுகிறான். 

இதுவே மன இறுக்கமாக உருவெடுக்கிறது.

மனிதன் தன் ஆறாவது அறிவை சற்றும் பயன்படுத்தாது தனக்கு அதிக சக்தியும், பலமும் வேண்டியே தான் அசைவம் சாப்பிடுவதாக எண்ணுகிறான். 

ஆனால், 
ஆச்சரியம் என்னவென்றால், சைவத்தில் தான் அதிக சக்தியும், பலமும் உள்ளது. (சைவம் சாப்பிடும் யானைக்கு பலத்தில் என்ன குறை? )
.
.

 .உதாரணமாக சோயா பீன்ஸில் 40% சுத்தமான புரோட்டீன் உள்ளது. இது மாமிசத்தில் உள்ளதைவிட இருமடங்கும், முட்டையில் உள்ளதைவிட நான்கு மடங்கும் அதிகமாகும்

மேற்கண்ட இந்த ஆராய்ச்சியின் மூலம் நாம் அறிய வேண்டியது.

இயற்கையின் அமைப்பு படி மனிதன் உட்கொள்ள வேண்டியது சைவமே என அறிகிறோம்.     

எனவே, மனிதன் ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், நிம்மதியாகவும், பொறுமையாகவும், பலசாலியாகவும், ஒற்றுமையுடனும், 
கோபம் இல்லாமலும், 
மன இறுக்கம் இல்லாமலும், மலச்சிக்கல் இல்லாமலும், நோய் இல்லாமலும் வாழ

ஆசைப்படுவது எனில் சைவமே உட்கொள்வது காலச் சிறந்தது.
.
.

சுயமாய் சிந்தித்தே தெளிவோம்..
.

வாழ்க வையகம் ........ வாழ்க வளமுடன்

[vallalargroups:5641] வள்ளலாரின் வாழ்வியல் பயிற்சி

அன்பர்களே,

"வள்ளலாரின் வாழ்வியல் பயிற்சி" கொடுக்கப்படுகின்றது.

அனுமதி இலவசம்

 தகுதி : சைவ பழக்கத்தை உடையவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். .

நேரம் : 28/29/30 Apr 2017 4.00am மணி முதல் 10.00pm மணி வரை.(3days)பயிற்சிகள்:

 

1. ஆலம் விழுது கொண்டு "பல் துலக்குதல்".

2. கரிசாலை கொண்டு "வழலை கழற்றல்".

3. கரிசாலை, தூதுவளை, முசுமுசுக்கை , சீரகம் கலந்த "பானம் தயாரித்தல் & அருந்துதல்"

4. சிறிது நேரம் "இறைவனை துதித்தல்".

5. "காலை ஆகாரம்" எடுத்தல். ( ரஸ்தாளி வாழைப்பழம் + நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிடுதல்)

6. "பஞ்சக் கற்பம்" கொண்டு , சுடுனீரில் நீராடல்.

7. கரிசாலை + நல்லெண்ய் கொண்டு "தைலம் தயாரித்தல்".( செய்முறை விளக்கம்)

Place ::: Trichy,Near to srirangam 

[vallalargroups:5640] சித்திரை 8 இன்று அகவல் எழுதிய நாள்

சித்திரை 8 இன்று அகவல் எழுதிய நாள்
====================================
அகவலின் அசல் பிரதியை அதாவது வள்ளற்பெருமான் தன் தெய்வத்திருக்கையால் எழுதிய அகவலை நேரில் கண்டு பதிப்பித்தவர் ஆ.பாலகிருஷ்ண பிள்ளை ஒருவரே ஆவார்.

அகவல், ஆறாம் திருமுறையில் வருகிறது. இந்த ஆறாம்திருமுறை முதன்முதலாகப் பதிப்பிக்கபட்ட ஆண்டு 1885 ஆகும். பதிப்பித்தவர் வேலூர் பத்மநாப முதலியார் ஆவார். இவருக்குப் பிறகு 1892 ஆம் ஆண்டு பொன்னேரி சுந்தரம் பிள்ளை ஆறு திருமுறைகளையும் தொகுத்து ஒரே புத்தகமாக வெளியிட்டார். 1924 இல் ச.மு. கந்தசாமிப்பிள்ளையும் ஆறு திருமுறைகளையும் தொகுத்து வெளியிட்டுள்ளார்கள். இதன்பிறகு 1932 இல் சென்னை சன்மார்கச் சங்கத்தின் சார்பிலும் ஆறுதிருமுறைப் பதிப்பு வெளியானது. மேற்கண்ட எந்த பதிப்பிலும் அகவல் எழுதிய நாள் குறிப்பிடப்படவில்லை.

1931 இல் தனது திருவருட்பாப் பணியை தொடங்கிய ஆ.பாலகிருஷ்ண பிள்ளை  உரைநடைப் பகுதி, திருவருட்பா என 12 நூல்களாக தொகுத்து வெளியிட்டார். இதில் 12வது புத்தகமான "ஆறாம் திருமுறை முடிந்த பகுதி அல்லது சித்தி வளாகப் பகுதி" என்ற தலைப்பிலான நூலில் அகவலைப் பதிப்பித்துள்ளார். வள்ளற்பெருமான் கைப்பட எழுதியது மட்டுமல்லாமல் வள்ளற்பெருமானுடன் வாழ்ந்த  அன்பர்களின் அகவல்  கையெழுத்துப் பிரதிகளின் எண்ணிக்கை ஐந்தாகும்.

வள்ளற்பெருமானின் கையெழுத்துப் பிரதியில் இருப்பதற்கு மாற்றாக முதல் அச்சில் (1885) உள்ள பாடவேறுபாடு அன்பர்களின் படிகளிலிலும் ச.மு.க பதிப்பிலும் உள்ள பாடவேறுபாடுகளையும் மிகத் தெளிவாக ஆ.பாலகிருஷ்ண பிள்ளை ஆங்காங்கே தனது பதிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். 

வள்ளலார், அகவலின் முடிவில் ஆங்கீரச வருடம், சித்திரை 'அ' என்று எழுதியுள்ளார். 'அ' என்றால் தமிழ் எழுத்துப்படி 8 என்ற எண்ணைக்
 குறிக்கும். அதாவது சித்திரை மாதம் 8 ஆம் தேதியில் வள்ளலார் அகவலை எழுதியிருப்பது இதன் மூலம் அறியமுடிகிறது.

வள்ளலார் 1823 ஆம் ஆண்டு (சுபாணு ஆண்டில்) பிறந்தார். 1874  ஆம் ஆண்டு (சிறீமுக ஆண்டில்)  சித்தி பெற்றார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் அதாவது 1823-1874 காலகட்டங்களில் வந்த ஆங்கீரச வருடம் சித்திரை 8 ஆம் தேதியின் அப்போதைய ஆங்கில தேதிதான் 18-04-1872 என்பதாகும். அந்த நாளில் வந்த கிழமை வியாழன் ஆகும். இந்த வரலாற்றுக் குறிப்பை பஞ்சாங்கத்தின் உதவியுடன் திருவருட்பா செம்பதிப்புச் செம்மல் ஆ.பாலகிருஷ்ண பிள்ளை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதை அவர் பதிப்பித்த ஆண்டு 1958 ஆம் ஆண்டாகும்.

இதன் பிறகுதான் அகவல் எழுதிய நாள் சன்மார்க்க உலகத்திற்கு தெரியவந்தது. இதையே இன்றுவரையிலும் சன்மார்க்கத்தினரும் சன்மார்க ஆய்வாளர்களும் பின்பற்றி வருகின்றனர். வியாழக்கிழமை தோரும் அகவல் படிக்கும் பலரிடமும் நான் கேட்கும் ஒரு கேள்வி இன்று மட்டும் ஏன் அகவல் படிக்கிறீர்கள்? அதற்கு அவர்கள் சொல்லும் பதில் இன்று 'குருவாரம்' என்பதாகும். தமிழில் வியாழக்கிழமை என்பதே சமஸ்கிருத மொழியில் 'குருவாரம்' என்பதாகும். 'குரு' என்றால் வியாழன். 'வாரம்' என்றால் கிழமை. வியாழக்கிழமையில் அகவல் எழுதி முடிக்கப்பட்டதால் அந்த நாளை போற்றும் வகையில் சன்மார்க்கிகளால் வழிவழியாக பின்பற்றப்பட்டு இன்றுவரை வியாழன்தோரும் அகவலுக்கு முக்கியத்துவம் தருகின்றனர் என்பதே உண்மை. (நாள்தோரும் ஓதுபவர்களும் உள்ளனர்) 

அகவல் தொடர்பாக மிகையான செய்தியும் ஒருசிலரால் பக்திமேலிட நம்பப்பட்டு வருகிறது. ஒரே இரவில் வள்ளலார் அகவலை எழுதினார் என்பதே அது. ஒரே இரவிலும் எழுதியிருக்கலாம் அல்லது எழுத பல நாட்களும் தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரே இரவில் வள்ளலார் அகவலை எழுதினார் என்பதற்கான எந்த வரலாற்றுக் குறிப்பும் இதுவரை இல்லை என்பதே உண்மை.
அன்புடன்
கா.தமிழ்வேங்கை
(திருவருட்பா செம்பதிப்புச் செம்மல் ஆ.பாலகிருஷ்ண பிள்ளையின் கொள்ளுப் பேரன்)
பேச: 94861 76734.

[vallalargroups:5639] Vallalar Label

Thursday, April 20, 2017

[vallalargroups:5638] 150 years people living now..

150 years people living now.. average life time is 120 years..

Please watch their food/physical habits in this video

[vallalargroups:5637] Today Health Tips பித்தப்பை கல் எளிதில் நீங்க வழிகள்

*பித்தப்பை கல் எளிதில் நீங்க வழிகள்...
================================*

பித்தப்பை என்பது நமது உடலில் கல்லீரலில் ஒரு பகுதியுடன் பேரிக்காய் வடிவில் சுமாராக 8 செ.மீ. நீளமும் 4 செ.மீ. அகலமும் கொண்ட ஒரு உறுப்பு. நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய உதவும் பித்த நீரை சேமித்து வைக்கும் உறுப்பு பித்தப்பை அதாவது, ஒரு வேளை சாப்பிட்டு, அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப்பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும். நாம் உணவு உண்டதும், இந்த பித்தப்பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் இரைப்பைக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. இப்படி பித்தப்பை சுருங்கி விரியமால் போனால் பித்தப் பையில் உண்டாகும் ஜீரண நீர் கற்களாக மாறும் வாய்ப்புள்ளது.

ஒருவருடைய பித்தப்பையில் கற்கள் உண்டானால் பசிகாதபோது சிறிது சாப்பிட்டாலே அவர்கள் வயிறு வீங்கி விடும். மேலும் சாப்பிட்ட உணவு செரிமானமாகாமல் நெஞ்செரிச்சல், புளியேப்பம் போன்ற பல பிரச்சினைகள் தோன்றும். பொதுவாக நம்தவறான வாழ்க்கை முறையினால் எந்த வயதினருக்கும் பித்தப்பையில் கற்கள் உண்டாகலாம். ஆனால் பெண்கள் தான் அதிகம் பாதிப்படைகிறார்கள்.

*பித்தப்பையில் கற்கள் (Gallstones)*
அதிகபடியான மாத்திரைகளை உட்கொள்பவர்கள், கொழுப்புவகை உணவுகளை அதிகம் உண்பவர்கள், கருத்தடை மாத்திரை அதிகம் உபயோகிப்பவர்களுக்கு பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பு மிக மிக அதிகம் .
மேலும், இரத்த சிவப்பணுக்கள் சுழற்சி மிக விரைவாக உள்ளவர்கள், இரத்தசோகை நோய் இருப்பவர்கள், செக்ஸ் ஹார்மோன் மாற்றங்கள், உணவுமண்டலத்தில் பாக்டீரியா (அ) குடல் புழுக்கள் மற்றும் டைபாயிடு போன்ற நோய் கிருமி பாதிப்புக்குள்ளானவர்கள் ,குடல் புண்ணால் பாதிப்பு உள்ளவர்கள், கிட்னி, கல்லீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் , புற்றுநோய் உள்ளவர்கள் போன்றோருக்கும் பித்தப் பையில் கற்கள் எளிதில் உண்டாகின்றன.

தலைவலி, வலது நெஞ்சில் வலி , நேர் பின்னே முதுகில் வலி, வலது தோள்பட்டை முதல் உள்ளங்கை வரை வலி உண்டாவதல்,வயிற்றின் மேல் பாகத்தில் வலது புறம் கடுமையான வலி, உடல் எடை குறைவு, வாந்தி, காய்ச்சல், சிறுநீரில் மஞ்சள் நிறம் கலந்து காணப்படுதல், மஞ்சள்காமாலை, பசியின்மை, வாயுத் தொல்லை மற்றும் செரிமானத்தில் கோளாறு போன்ற பித்தப்பையில் கல் இருப்பதற்கான அறிகுறிகள்.
அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரண கோளறு, அல்சர் மஞ்சள் காமாலை நோய் போன்ற பல வியாதிகள் வரும்.

*பித்தப்பை கல் இருப்பது உறுதியானால்..*

1. அசைவ உணவை அறவே நிறுத்திவிட வேண்டும்.

2. வறுத்த மற்றும் அதிக கொழுப்பன உணவு வகைகளை உண்ணக் கூடாது.

3. பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.

4. ஃப்ரிட்ஜில் வைத்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

5. ஃபிரைடு ரைஸ் மற்றும் பரோட்டா, நூடுல்ஸ், மக்ரோனி போன்ற மைதா உணவுகளை சாப்பிடுதலை தவிர்க்கவேண்டும் ,

6. பீசா, பர்க்கர் போன்ற ஜங்க் ஃபுட் வகைகளை சாப்பிடுவதை அறவே தவிர்க்கவேண்டும்.
7. மேலும் புகை பிடித்தல், மது அருந்துதல் கூடாது.
உணவில் அதிகமான பழங்களை சேர்த்துக்கொள்ளுதல் நல்லது.

பித்தப்பை கல் நீங்க...
1. இந்த வகை நோயினால் பாதிக்க பட்டவர்கள் நெருஞ்சில் இலையை பொடி செய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்.

2. எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும்.

3. ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து , இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம் குடிக்கவும். கீழநேல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது.

4. பத்து பங்கு தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து பாதியாகக் குறுக்கி வடிகட்டி அந்த நீரை ஒரு நாளில் பல தடவை சிறுகச் சிறுக பருகுவதின் வாயிலாக பித்தப்பை கற்கள் கரைவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது.

5.நெருஞ்சில் விதை, சிறுவழுதுணை, வெண் வழுதுணை, பெருமல்லிகை, பாதிரி போன்ற மூலிகைகளை கஷாயமாகக் காய்ச்சி சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரகக்கற்கள், பித்தப்பை கற்கள் போன்றவை விடுபடுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.
பித்தப்பை கற்களால் உண்டாகக்கூடிய வலிகளுக்கு இரு வேறு விதங்களில் மருத்துவம் அளிக்கலாம். ஒன்று வலி உள்ளபோது செய்வது, மற்றொன்று வலி இல்லாதக் காலத்தில் செய்வது

1. வலி உள்ள போது நோயாளியை வாந்தி எடுக்கச் செய்ய வேண்டும். இதற்கு உப்பு நீர் மிகவும் உபயோகமானது. வாந்தி எடுப்பதால் பித்தநீர் குழாயின் பிடிப்பு தளர்ந்துவிடும். அரிசிமாவு, ஆளி விதைமாவு, களிமண் இவற்றை சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து கிண்டி வலி உள்ள இடத்தில் வைத்துக் கட்டலாம்,

2. கற்பூரத் தைலம் 5 சொட்டு சாப்பிடக் கொடுக்கலாம்.
வலி நின்ற பிறகு இனி திரும்பாமல் இருப்பதற்கும் கற்கள் உண்டாகமல் இருப்பதற்கும் நிலவேம்பு, அழுக்கிரா சூரணம் போன்றவை கொடுக்கலாம்.

3. உணவில் பழங்கள் அதிகமாக சேர்க்க வேண்டும்.

4. வலி இல்லாத காலத்தில் நிலவேம் சூரணம், வெருகடி அளவு சமமாக அழுக்கிரா சூரணம் சேர்த்து கொடுத்து வரலாம்.

5. பித்தக் கற்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில அருகில் உள்ள (சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோ, அக்குபன்ச்சர்) மருத்துவரை அணுகி மருத்துவம் செய்துக் கொள்வது நல்லது.

Wednesday, April 19, 2017

[vallalargroups:5636] உண்மை இரக்கம்

உண்மை இரக்கம்

[vallalargroups:5635] அகவல் எழுதிய நாள்

அகவல் எழுதிய நாள்சித்திரை 8
21-4-2017 வெள்ளி கிழமை

[vallalargroups:5634] Vallalar Health Tips ::: கெட்டி மளகு availability

*கெட்டி மிளகு*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*கெட்டி மிளகு செய்முறை வள்ளற் பெருமானார் குறிப்பின் படி பாவனை இரண்டு மடக்கு செய்வதாக உள்ளேன். தேவைக்கு ஏற்ப குறைவான அளவே செய்ய இயலும் என்பதால் வேண்டியவர்கள் அடுத்த மாதம் பெற்றுக் கொள்ளலாம்.*

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

[Name]Mooligai Arumugam;
[Phone]+91 98 40 048686;

Re: [vallalargroups:5633] 2mins Health Tips for summer

பகிர்வுக்கு நன்றி! 

சுமார் 100 ml நல்லெண்ணக்கு எவ்வளவு மிளகு,பூண்டு பயன்படுத்த வேண்டும்?

இந்த முறை ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்துமா? 

On 18-Apr-2017 6:27 PM, "Vallalar Groups" <vallalargroups@gmail.com> wrote:
*உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..*

இந்த செய்தியை நீங்கள் படிப்பது மட்டுமின்றி உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும் பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.

தற்போது நிலவி வரும் பருவ மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது.
இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது. இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது.
இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் உபாதைகள் ஏற்ப்படுகிறது.  இதனை சரி செய்ய நம் சித்தர்கள் அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.

*தேவையான பொருள்கள் :*

1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு

*செய்முறை:*

நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். *சூடு ஆறினதும் எண்ணையை இரு கால்களின் பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும்.*
இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும். 

_*2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது*_ சளி, ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம். மிகுந்த மன அழுத்தம், உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.
இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.
அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.
இதனை I.T துறையில்  வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.
நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து மகிழுங்கள்.

Tuesday, April 18, 2017

[vallalargroups:5631] 2mins Health Tips for summer

*உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..*

இந்த செய்தியை நீங்கள் படிப்பது மட்டுமின்றி உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும் பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.

தற்போது நிலவி வரும் பருவ மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது.
இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது. இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது.
இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் உபாதைகள் ஏற்ப்படுகிறது.  இதனை சரி செய்ய நம் சித்தர்கள் அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.

*தேவையான பொருள்கள் :*

1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு

*செய்முறை:*

நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். *சூடு ஆறினதும் எண்ணையை இரு கால்களின் பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும்.*
இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும். 

_*2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது*_ சளி, ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம். மிகுந்த மன அழுத்தம், உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.
இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.
அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.
இதனை I.T துறையில்  வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.
நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து மகிழுங்கள்.

Re: [vallalargroups:5632] vallalar matrimony for vallalar followers

Very good initiative, it will easen up people's (Vallalar Sanmarga devotees) search for a good bride/bridegroom with similar Vallalar way of life and interests.

Thanks,

With Best Regards,
R.Chitrambalam.
India
+91 73583 24082
Nigeria
+234 811 219 2193


From: Vallalar Groups <vallalargroups@gmail.com>
Sent: Tue, 18 Apr 2017 10:22:00
To: Vallalar Groups <vallalargroups@googlegroups.com>
Subject: [vallalargroups:5630] vallalar matrimony for vallalar followers
 
We have around 100 marriage profiles. Your search and share your profile. Site dedicated for Vallalar and veg followers only
 

[vallalargroups:5630] vallalar matrimony for vallalar followers

We have around 100 marriage profiles. Your search and share your profile. Site dedicated for Vallalar and veg followers only

Thursday, April 13, 2017

[vallalargroups:5629] Two New Dharumasalai at Ginji

Kind request to all..

As you may be aware that Deepam Trust has been feeding the poor (Annadhana) for the past 10 years. Now food is being given through 7 Anna Dharumasalais in different parts of the State.

During this week (16.04.2017) we are going to start two new dharumasalais at Devanampet and Gangavaram Villages in Ginji District.
During May 2017 we are going to open 10 more Dharumasalais in and around villages  in Kumbakonam, Viruthachalam,and Erode districts.

For each Dharumasala Gas Stove , Vessels costs around 15000/- Sponsors are welcome.

சென்னை வேளச்சேரி "தீபம் அறக்கட்டளையின்"  சார்பில் வேளச்சேரி, கல்குட்டை, கேணிப்பட்டு, கொஞ்சிமங்களம், செய்யார் உள்பட ஏழு நித்ய அன்ன  தர்மசாலைகள் தயவாளர்களர்களின் நன்கொடையுடன் இயங்கி வருகிறது.

வருகிற ஞாயிற்றுக்கிழமை 16-04-2017  முதல் செஞ்சி தேவதானம்பேட்டை கிராமம்  (எட்டாவது தர்மசாலை) மற்றும் கங்காவரம் கிராமம் (ஒன்பதாவது தருமசாலை) தொடக்கம்.

மேலும் வருகிற வைகாசி மாதம் 11ம்நாள் (25-05-2017) புதன்கிழமை வடலூர் சத்திய தர்மசாலையின்  151 வது தொடக்க விழாவை முன்னிட்டு கும்பகோணம், தஞ்சாவூர், பாண்டமங்கலம், ஈரோடு உள்பட மேலும் 10 தர்மசாலைகள் தொடங்க திருவுள்ளம் கொண்டுள்ளது.

புதிய அன்ன தர்மசாலைகளுக்கு அடுப்பு மற்றும் பாத்திர வகைகள் தேவைப்படுவதால் தயா உள்ளம் கொண்ட அருளாளர்களாகிய தாங்கள்  கிடைப்பதற்கரிய இந்த அரும்பெரும்பணிக்கு  பங்கு பெற்று ஆன்மலாபம் பெற தங்களை அன்புடன் வேண்டுகிறோம்.

ஓர் தர்மச்சாலைக்கு உண்டான அடுப்பு மற்றும் பாத்திர வகைகளுக்கு மொத்தம் தோராயமாக Rs.15,000/- மேல் ஆகிறது என்பதனை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.


 Donations are Exempted under 80G of Income Tax Act.


The details are:-

Cheque in favour of "Deepam Trust"

Address : No.30 Droupathi Amman Koil Street,(Next to Mosque),  Velachery, Chennai 42


For Money Transfer:

Current Account No.: 30265475129, State Bank of Indian, IIT Madras Branch

IFS Code: SBIN0001055, Deepam Trust


---
With wishes

Yours Sincerely

DEEPAM TRUST

30,Throwpathi Amman Kovil Street,
Velachery, Chennai - 600 042
Phone : 044-2244 2515 | Cell: 94440 73635


Connect with DEEPAM TRUST:

 

Join us Volunteer : Click here

 

Visit Deepam Trust WEBSITE: http://www.deepamtrust.in

 

Like Deepam Trust on FACEBOOK: Click here

 

Follow Deepam Trust TWITTER: deepamtrustngo

 

SUBSCRIBE Our YouTube Channel: Click here

 

Read DEEPANERI Monthly Magazine online: Click here



We send this mail only to our Deepam Donors. If others receive, please ignore or unsubscribe.


Friday, April 7, 2017

[vallalargroups:5627] Download ThiruArutpa Full Urainadai Audio book in a single click - Free of cost

Dear All,

We are pleasure to announce, Now you can download Full ThiruArutpa  Urainadai Audio book in a single click.

File Size: 1.3 GB

File ForMat: ZIP ( Once You download it, You have to Unzip the file at first time)


Full Download Link:

http://www.mediafire.com/file/wstzsiudy54hk4n/000+ThiruArutpa_Urainadai+Audio+Books+-With+Property.zip

For Individula Download:

http://www.vallalarspace.org/space/list/769

or

http://sanmarkkam.com/urainadaipakudhi-audio-mp3/


For help : 07411275938

Share this to All Via WatsApp, FaceBook and other Medias.

==========================================================


திருஅருட்பா உரைநடை பகுதி ஒலி நூல் முழுவதும் பதிவிறக்கம் செய்ய
இங்கே சொடுக்கவும்

50 மணி நேரம் தொடர்ந்து ஒலிக்க கூடியது 1.5 ஜி.பி நினைவகம் தேவை


தனிப் பதிவிறக்கம் (ஓவ்வொரு பகுதியாக) இங்கே சொடுக்கவும்


http://www.vallalarspace.org/space/list/769
or

http://sanmarkkam.com/urainadaipakudhi-audio-mp3/


முழு பதிவிறக்கம் (ஒலி நூல் முழவதும்) இங்கே சொடுக்கவும்


http://www.mediafire.com/file/wstzsiudy54hk4n/000+ThiruArutpa_Urainadai+Audio+Books+-With+Property.zip


முழுபகுதியும் ஜிப் ஃபைல் வடிவத்தில் உள்ளது, பதிவிறக்கம் செய்த பின் ஒருமுறை மட்டும் அன்ஜிப் செய்ய வேண்டும்.

மேலும் விவரம் வேண்டுவோர் தொடர்பு கொள்க : 07411275938

சமூக ஊடகங்கள் மூலம் அனைவருக்கும் பகிரவும்.

Thanks.

--

Regards,

Anandhan. L
Ph: +91 74-112759-38
Web : http://sanmarkkam.com/

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)