Monday, September 24, 2018

[vallalargroups:6013] நமக்குள் கோடி சூரியப்பிரகாசம்

🙏🔥
அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
அருட்பெருஞ்ஜோதி !

             💥ஆன்மாக்களாகிய நமக்குள் கோடி சூரியப்பிரகாசம் அடங்கியுள்ளது 💥
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
       ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன் 🙏

   சாதாரண ஒரு அணுவை நமது புறக்கண்ணால் காணமுடியாது என்பதும் அவற்றை நுண்ணோக்கி சாதனத்தைக்கொண்டுதான் பலமடங்கு பெரிதுபடுத்தி பார்க்கவேண்டும் என்பதும் அணைவரும் அரிந்ததுதான் 🌺
     அண்டம் முழுவதும் தனது கதிர்களால் ஒளியைக்கொடுத்து  பிராகசிக்கின்ற ஒரு சூரியனின் வெளிச்சம் எத்தன்மை உடையது என்பதை நம்மால் ஓரளவு எண்ணிப்பார்க்க இயலும் 🌺

இதேபோன்று ,
ஒன்று அல்ல இரண்டு அல்ல கோடி சூரியனின் பிரகாசம் ஒன்றினைந்தால் எவ்வளவு பிரகாசம் இருக்கும் என்பதை நம்மால் எண்ணிப்பார்க்க இயலுமா ?

அத்தனை வெளிச்சமும் 
நாம் நமது புறக்கண்ணால் பார்க்க முடியாத நுண்மையிலும் நுண்மையான ஒரு ஆன்ம அணுவினுள் இருக்கின்றது என்றால் உங்களால் நம்புவதற்கு இயலுமா ?

அந்த கோடிசூரியப் பிரகாசமும் நமக்குள் வைத்துக்கொண்டுதான் நாம் வாழ்ந்து வருகின்றோம் என்றால் நமக்கு நம்பிக்கை வருகின்றதா ?

இப்படிப்பட்ட பெருவெளிச்சத்தை மாயாசக்திகளாக ஏழு திரைகள் மறைத்துக்கொண்டு வெளிப்பட நமது சிற்றறிவிற்கும் ஊனக்கண்களுக்கும் காட்டாவண்ணம் மறைத்திருக்கின்றது என்பதை நம்மால் உணரமுடிகின்றதா ?

அப்படி என்றால் நமது ஆன்மாவிற்குள் இருக்கும் அந்த  பெரு வெளிச்சத்திற்கு உரியவர் யார் ?

அவர் வேறுயாருமல்ல அணுவை மலையாகவும்,
மலையை அணுவாகவும் மாற்ற வல்லவராயும்,

647கோடி பேதமாகிய மகாசித்திகளையும் தன்னிஷ்டத்தில் நடத்த வல்லவராயும் ,

அண்டகோடிகளையும்,
அவற்றில் உள்ள அனைத்து உயிர்களையும்,
பொருள்களையும் ஆக்கி காத்து அழிக்க வல்லவராயும்,

பாரொடு விண்ணாய் பரந்ததோர் ஜோதியாய் எங்கும் எதிலும் நீக்கமற கலந்து நிறைந்தவராயும் ,

எல்லாம்தானே உடையவராயும்,
எல்லாமும் செய்ய வல்லவராயும் ,
எல்லாம்தானே ஆனவராயும்,
எல்லாம்தான் அல்லாதவராயும்.

சொல்லாலும் பொருளாலும்
தோன்றும் அறிவாலும்
துணிந்து அளக்க முடியாதவராய்,

துரிய வெளியைக் கடந்த வள்ளாலர்களின் அனுபவத்தில் அதுஅதுவாய் விளங்கி,

அவர்களும் மதித்திடுங்கால் அரியவராய் பெரியவராய் ,

அணுவும் செல்லாத நிலைகளினும் செல்லுபவராய் ,

இயற்கையில் பாசங்கள் எதுவும் இல்லாதவராய்,
குணங்கள் ஏதும் இல்லாதவராய்,
தத்துவங்கள் ஏதும் இல்லாதவராய்,
என்றும் அழிவில்லாது  அனாதி நித்தியராய்,
களங்கம் ஏதும் இல்லாதவராய்,
தீமை ஒன்றும் இல்லாதவராய்,

வியப்பிற்குரிய விருப்பு வெறுப்பு ஏதும் இல்லாதவராய்,
மெய்யே மெய்யாகி என்றும் சச்சிதானந்த சொரூபராய் விளங்கும் தனிப்பெரும் பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ,

நமது ஆன்மாவாகிய உயிருக்குள் உயிராக இருந்துக்கொண்டு ,
தன்னை ஆன்மாக்கள் அஞ்ஞானமாகிய அறியாமையில் இருக்கும்போது காட்டிக்கொடா வண்ணம் ,

தனது திருவருட்சக்தியில் ஒடுங்கியிருக்கும் ,
"பரிக்கிரக சக்தியாகிய  மாயாசக்தியைக்" கொண்டு மறைப்புகளாக ஏழுதிரைகளால் மறைத்துக்கொண்டுள்ளார்கள் 🌺

ஆன்மாக்கள் பக்குவ ஞானம் விளங்க விளங்க திரைகள் ஒவ்வொன்றாய் விலகி முடிவில் பூர்வ ஞானம் பெற்றவுடன் ,ஆண்டவர் தம்மை முழுவதும் காட்டி ஆன்மாக்களை தன்மயமாக்கிக் கொள்கின்றார்கள்🌺

அண்டவெளியில்  அருட்பருஞ்ஜோதி ஆண்டவர் எவ்வளவு ஆற்றலுடன் திகழ்கின்றார்களோ ,

அதில் அணுவளவும் குறைவில்லாமல் நமது சிற்றம்பலமாகிய சிதாகாசத்தில் இருந்து ஆன்மாக்களுக்கு விளக்கம் செய்விக்கின்றார்கள் 🌺

ஆகலில் ஆறறிவு ஆன்மாக்களாகிய நாம் அருட்பெரும்பதியின் அருளொளி கிடைக்கப்பெற்று ,
அவ்வருளாலே அருட்பெரும்பதியின் அருட்பெருஞ்ஜோதியில் ஐக்கியம் அடைதல் வேண்டியே இப்பிறவி எடுத்துள்ளோம்  என்பதை சிரத்தையுடன் உணர்வோம் 🌺

🙏🔥🌺நமது பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருமேனி பிரகாசத்தை விளக்கிக் கூறும் ஓர் பாடல்🌺🔥🙏
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
அருளாளர் வருகின்ற தருணம் இது தோழி,
ஆயிரம் ஆயிரம்கோடி அணிவிளக்கு ஏற்றிடுக ,

தெருளாய பசு நெய்யே விடுக மற்றை நெய்யேல் திருமேனிக்கு ஒரு மாசு செய்தாலும் செய்யும்,

இருளேது காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ,
என்னாதே மங்கலமா ஏற்றுதலாங் கண்டாய்,

மருளேல் அங்கவர்மேனி விளக்கமதெண் கடந்தே மதி கதிர் செங்கனல் கூடிற்றென்னினும் சாலாதே ; 🌺🙏

ஆன்மாவாகிய நமது பெருமான் ,
மனமாகிய தனது தோழியிடம் ,

தோழி ;
நமது அருளாளர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகின்ற தருணமாக  இருக்கின்றதால் ,

ஆயிரம் ஆயிரம் கோடி விளக்குகள் வரிசையாக வைத்து அலங்கரித்து அழகுபடுத்துவாயாக,

அந்த விளக்கில்  சுத்தமான பசுநெய்யினால் தீபம் ஏற்றுதல் வேண்டும்,

ஏனென்றால் மற்றநெய்யில் தீபம் ஏற்றினால் அவரது திருமேனிக்கு ஏதேனும் தீமை நேர்ந்தாலும் நேரிடும்.

இது வைகறை பொழுதாக இருக்கின்றதே இன்னும் சற்று நேரத்தில் சூரியோதம்  ஆக இருக்கின்றதே ,
இந்த நேரத்தில் ஏன் இவ்வளவு விளக்குகள் ஏற்றிட வேண்டுமோ  என்று  நினைக்காதே தோழி ,

மங்கலமாய் நினைத்து ஏற்றி வைத்திடுவாய்.

அவரது மேனியைக் கண்டு வியப்படையாதே ! 
அவர்மேனி வெளிச்சம்,
எண்ணற்ற சூரியன்கள் எண்ணற்ற சந்திரன்கள் அளவற்ற அக்கினிகள்  ஒன்றுசேர்ந்து கூடினாலும் அவரது திருமேனி வெளிச்சத்திற்கு இணையாகாது அறிந்துகொள்வாய் தோழி🌺
என்று,

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கோடி சூரியப் பிரகாச திறத்தை விளக்கி கூறுகின்றார்கள் நமது பெருமான்🔥🙏
....நன்றி🙏
...வள்ளல் மலரடிப் போற்றி ! போற்றி !🙏
...பெருமான் துணையில் 🙏
....தயவுடன் வள்ளல் அடிமை🙏
...வடலூர் இரமேஷ் ;

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)