Saturday, October 31, 2009

[vallalargroups:2337] Re: Vallalar Questions - Answer It

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

சுத்த சன்மார்க்க நிலை அடைவதற்கு நமது வள்ளல் பெருமான் 
ஜீவ காருண்யமே முதல படி என்று கூறி இருக்கிறார்கள்.
ஏனென்றால் ஆதியில் சிவம் அசைவற்று இருந்தது.
சிவம் அசைவு பெற்று சலனம் தோன்றியது.
அதன் பயனாய் சக்தி தோன்றியது. அதுவே ஆன்மா.
அதிலிருந்து ஜீவன் தோன்றியது. ஆதியில் அது மலம் அற்று 
இருந்தது. இருப்பினும் சலனத்தின் காரணமாய் சுத்த மாயை வயப்பட்டது. பின் ஜீவன் உடல் எடுத்தது. அதன் பயனாய் வினைகள் ஏற்பட்டன. அவை நல் வினை, தீவினை என மீண்டும் மீண்டும் பிறக்க காரணமாய் அமைந்தது. 
நாம் இரு வினையை ஒழிக்க வேண்டும் என்றால். முதலில் நாம் அசுத்த மாயையை நீக்க வேண்டும். அசுத்த மாயை நீங்குவதற்கு தடையாய் இருப்பது நான் என்கின்ற உணர்வு. 
நான் என்கின்ற உணர்வு நீங்க வேண்டும் என்றால் அதற்க்கு ஜீவ காருண்யமே வழி. ஏனென்றால் நாம் அனைவரும் ஒரே ஆன்மாவிலிருந்து பிரிந்து வந்த சகோதரர்கள். 
ஒரு சகோதரன் துன்பப் படுவதை மற்ற சகோதரன் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா ? 
ஆகவே அனைத்து ஜீவர்களின் மீதும் ஒத்துரிமை உடையவர்களாக நாம் இருக்கிறோம்.
அந்த ஒத்துரிமையின் காரணத்தினால் பிற ஜீவன் படுகின்ற துன்பம் தானே படுவதாக உணரப்படும்.
இந்த ஜீவ காருண்யத்தினால் நம்மை பற்றியுள்ள அசுத்த மாயை நீங்கிவிடும்.
அசுத்த மாயை நீங்கினால் ஒருமை நம்மை பற்றும்.
ஒருமை நமக்கு வரப்பெற்றால் நம் மனம் அறிவை சாரும்.
மனம் அறிவை சார்ந்தால் நமது புலன் வழி வெளியாகும் தத்துவங்கள் முப்பத்தாறும் ஒடுங்கும்.
தத்துவங்கள் ஒடுங்கினால் நம்மை பற்றிய ராக துவேஷங்கள் விலகும். 
அதன் பயனாய் நமது ஆன்மாவை பற்றிய திரைகள் விலகும்.
திரை விலகினால் ஜோதி தரிசனம் கிடைக்கும்.
ஆகவேதான் நமது வள்ளல் பெருமான் ஜீவகாருண்யத்தை முதல் சாதனமாக வைத்தார்கள்.
மேலும் விளக்கம் அடுத்த கடிதத்தில் 

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு 

2009/10/30 sivaraman duraivelu <shivy27@gmail.com>
அய்யா

தங்கள் விளக்கம் கண்டேன் நன்றாக புரிந்தது

எனது நெஞ்சார்ந்த நன்றியை தங்களுக்கும் அன்பர் கார்த்திகேயனுக்கும் தெரிவித்து கொள்கிறேன் .

மேலும் ,  " உண்மையான சன்மார்க்க பயிற்சி "  மேற்கொள்ள எளிய வழி உரைக்குமாறு  தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .


சிவராமன்


2009/10/29 arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>

அன்புள்ள சன்மார்க்க அன்பர் கார்த்திகேயன் மற்றும் சிவராமன்  அவர்களுக்கு 
தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
வள்ளல் பெருமான் வரைந்த கடிதத்தில் 
அந்த அன்பருக்கு ஆறாதார சக்கரத்தில் அனாகதம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள். உண்மையான சன்மார்க்க பயிற்சியை முயற்சி செய்யாமல் அந்த அன்பர் ஆராதாரங்களை முயற்சி செய்கிறார் என்று வருத்தப்பட்டு.
கூடலுர்க்கு மனிதனை அனுப்ப அந்த வேஷக்காரன் எவ்விடத்துக்கோ போயிருக்கிறதாக இன்னும் பத்து தினம் சென்ற பின்பு வருவான் என்று அவன் பெஞ்சாதி சொன்னதாக சமாசாரம் கொண்டு வந்தான்.

இதில் கூடலூர் என்பது கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் நிலை.
அந்த நிலை அடைவதற்கு சுத்த சன்மார்க்கம் ஒன்றே வழி. அதை விடுத்து போலியான வேஷமான வேறு பாதையான அராதார சக்கர பயிற்சி பாதைக்கு சென்று பெருமான் சொன்ன பாதையை புரிந்து கொள்ள வில்லை என்பதை நமது வள்ளல் பெருமான் நாசூக்காக அன்பரின் தவறான பாதையை தெரியப்படுத்துகிறார்.

ஆகவே தான் ஒரு மனிதன் சொன்ன ஊருக்கு போகாமல் வேறு ஊருக்கு சென்று விட்டு அவனே வந்து நான் இன்னமும் பத்து தினம் சென்று வருவேன் என்று ஏன் மனைவி சொன்னால் என்று அவரே வந்து சொன்னதாக கூறி இருக்கிறார்கள்.

ஆகவே நமது வள்ளல் பெருமான் மூலாதாரம் முதல் ஆங்க்ஜை வரை உள்ள பயிற்சியால் கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் ஜீவ ஐக்கியம் நிலையினை அடைய முடியாது என்று உணர்த்தி இருக்கிறார்கள்.

ஆகவே நாம் சுத்த சன்மார்க்க பயிற்சினை மேற்கொண்டு மேன்மை அடைவோம் என இறைவனை பிரார்த்திப்போம்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு  

2009/10/29 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>

Inbutru Vazga
Dear Anbare,
 
நன்றாக புரிகிறது .இச்சா பத்தியம்
அதே சமயத்தில் என்னுடைய அறிவிற்கு எட்டிய வரையில் வள்ளலார் , இந்த இடத்தில்(கடிதத்தில்)  உலகியல் இச்சையை குறிபிடுகிறார் .
 
வள்ளலார் தனது "பேரன்பு கன்னி" பதிகத்தில்
 
"இச்சைநின்மே லன்றியெனக் கெள்ளளவும் வேறுமொன்றில்
இச்சையிலை நின்னாணை யென்னருமை ஐயாவே"
 
எனவே, இறைவன் மீது கண்டீபாக ichchai  வேண்டும்
 
anbudan,
Karthikeyan

2009/10/29 sivaraman duraivelu <shivy27@gmail.com>
அன்புள்ள அய்யா அவர்களக்கு
வள்ளல் பெருமான் கடித இணைப்பை படித்தேன் ரகசியம் புரியவில்லை
தயவு கூர்ந்து விள்ளக்கவும் .

நன்றி

சிவராமன்


2009/10/28 arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>


அன்புள்ள சன்மார்க்க அன்பர்களுக்கு,

நமது வள்ளல் பெருமான் ஒரு அன்பருக்கு எழுதிய கடிதத்தில் ஒரு ரகசியத்தை அந்த அன்பருக்கு தெரிவித்து இருக்கிறார்கள். 
அந்த ரகசியம் உங்களுக்கு புரிகிறதா ?

கடிதம் இத்துடன் இணைத்துள்ளேன்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு 

2009/10/28 Vallalar Groups <vallalargroups@gmail.com>

Inbutru Vazga,
 
Dear All,
 
Good News to all..
 
Vallalar Groups has created  Vallalar Questions  to create more awareness about our sanmarkkam.
 
All our friends are requested to answer all the Vallalar Questions for more than one option also.
 
Please forward to your circles also....
 
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி





--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு




--




Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி





--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு





--
sivaraman






--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)