Wednesday, October 7, 2009

[vallalargroups:2251] Re: Fwd: மூலாதாரம் எது என்பதன் ஆதாரம் - சித்தர் சுப்பிரமணியர் ஞானம்



2009/10/7 arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
அன்பு சன்மார்க்க தம்பிக்கு,
தேடுதல் உள்ளவ்ராலேயே கண்டடைய முடியும். 
தங்களது தேடுதல் உங்களுக்கு நிச்சயம் வழி காட்டும்.
யோகா என்பது அடிப்படயாக உடலை பேணி வளர்ப்பதற்கு உதவுகிறது. 
நமது சன்மார்க்கம் பல ஆயிரம் ஆண்டுகளாக சித்தர்களால் வளர்க்கப்பட்டு நமது வள்ளல் பெருமானின் வருகைக்கு பிறகு தூய்மை பெற்றது. நமது வள்ளல் பெருமானுக்கு முன்னர் சித்தர்களால் மறைபொருளாகவே சன்மார்க்க சாதனம் பயன்படுத்தப் பட்டு வந்தது. 
நமது சன்மார்க்கத்திற்கு சாதனமாக நமது பேருமானரால் சொல்லப்பட்டது 
அ. ஏமசித்தி
ஆ. சாகா கல்வி 
இ. தத்துவ நிக்கிரகம் 
ஈ. கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்
முதலில் ஏமசித்தி என்றால் சித்தர்கள் ஏமம் என்பதற்கு தங்கம் என்று பொருள் கூறி இருக்கிறார்கள். அதாவது சாதாரண உலோகத்தை மாற்று உயர்ந்த தங்கமாக மாற்றுவதை ஏம சித்தி என்று பயன்படுத்தினார்கள். சரி சாகா கல்விக்கும் தங்கம் செய்யும் கலைக்கும் என்ன சம்பந்தம்.
இதற்க்கு ஒரு விதி இருக்கின்றது. 
எந்த ஒரு பொருள் தாழ்ந்த உலோகத்தை மாற்று உயந்த பொன்னாக மாற்றுகிறதோ அந்த பொருள் நமது தேகத்தில் உள்ள அசுத்தத்தை நீக்கி சுத்த தேகமாக மாற்றும். அதக்குதான் வாத வித்தை என்று பெயரிட்டு மறைமுகமாக உண்மையில் ஞானத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மட்டும் போதித்து வந்தார்கள்.
அடுத்து ஏமம் என்றால் சூரியனை குறிக்கும். 
நமது மூச்சுக்கும் நமது ஆயுளுக்கும் தொடர்பு உள்ளதை அறிந்து. அந்த மூச்சின் மூலமாய் மரணமில்லா நிலையினை அடைவதற்கு வழி கண்டுபிடித்தார்கள்.
நாம் உள்ளிழுத்து வெளி விடும் காற்று மூக்கு துவாரங்கள் இரண்டின் வழியாக மாறி மாறி வந்து போகின்றன. இதில் வலது நாசியில் வரும் காற்றை சூரிய கலை என்றும் இடது நாசியில் வரும் காற்றை சந்திர கலை என்றும் கூறி இருக்கிறார்கள்.
சூரிய கலை ஆயுளை விருத்தி செய்யும் என்றும் சந்திர கலை ஆயுளை நஷ்டப்படுத்தும் என்றும் அதனால் நாம் எப்போதும் சூரிய காலையிலேயே சுவாசம் செய்ய வேண்டும் என்றும் சித்தர்கள் வகுத்து வைத்தரர்கள். 
ஆக ஏம சித்தி என்பது தங்கம் செய்யும் கலையில் வல்லவனாவதுடன் எப்போதும் சூரிய கலையில் சுவாசம் நடைபெற  பயிற்சி  பெற்று சூரிய கலை அனுபவத்தை பெறுவதாகும்.
மேலும் அடுத்த கடிதத்தில்
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு 

2009/10/7 karthik keyan <karthikeyan1883@gmail.com>

Dear Anna,
 
               I need a clarification, which can change my life through a path where i can myself
get the answer. I was little bit confused in the above mail, actually am practicing yoga, my true searching was enlightment. In the above mail it shows, it will not happen through yoga.
Can i know , wat is the real practice that in sanmargam teaches to attain the enlightment level. Dont mistake, if i asked any thing wrong.

---------- Forwarded message ----------
From: Balu Guruswamy <balovesfamily@gmail.com>
Date: 2009/10/5
Subject: [vallalargroups:2233] Re: Fwd: மூலாதாரம் எது என்பதன் ஆதாரம் - சித்தர் சுப்பிரமணியர் ஞானம்
To: vallalargroups@googlegroups.com


Nal Valthukkal Arumugha Arasu!

"Ettum irandum" villakkam Inithana!

Arut Prakasar nmmai ellam Marana mila Peru Valvil uyvikka thiru ulam kondar!

Avar karunai thaniperun Karunai!  ulagai Valvikka vantha Arut Perun Jothi!

Thangal idhu ponra karuthukalai nanraga eluthugireergal.

Elorum Inbutru Valga!

Arut Perunjothi!  Arut Perunjothi!
Thani Perun Karunai!  Arut Perunjothi!

Anban

Balu Gurusamy

2009/9/25 arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>


---------- Forwarded message ----------
From: arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
Date: 2009/9/25
Subject: Re: மூலாதாரம் எது என்பதன் ஆதாரம் - சித்தர் சுப்பிரமணியர் ஞானம்
To: Dhanapal Thirumalaisamy <dhanapal.thirumalaisamy@gmail.com>


அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு, 
எட்டும் இரண்டும் என்பதற்கு விளக்கத்தை சித்தர்கள் மறைத்து வைத்தார்கள். காரணம் எட்டும் இரண்டும் என்பது சன்மார்க்கதிற்கான பயிற்சி. இப்பயிற்சி குரு மூலமாய் மேற்கொள்ள வேண்டிய பயிற்சி. தவறாக பயிசி செய்தால் உடல் உபாதைகள் ஏற்பட்டு உடல் நலக் குறைவு ஏற்படுவதுடன் மன நல குறைவும் ஏற்ப்படும். 
நமது வள்ளல் பெருமானும் 
எட்டு இரண்டு என்பது இயலு முற்படிஎன 
அட்ட நின்று ஓங்கிய அருட்பெரும்ஜோதி 
என்று கூறி உள்ளார்கள்.
ஆக எட்டு என்பதற்கு தமிழில் அ என்ற எழுத்து எண்ணாக பயன்படுத்த படுகிறது. இரண்டு என்பதற்கு உ என்ற எழுத்து எண்ணாக பயன்படுத்த படுகிறது. அ என்பது அடி என்ற பதத்திலும் உ என்பது உச்சி என்ற பதத்திலும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆக அடி முடி என்பதைத்தான் எட்டும் இரண்டும் என்று பயன்படுத்தினார்கள். அடி என்றால் கால் கால் என்றால் காற்று உச்சி என்றால் தலை தலை என்றால் அண்டம் ஆக காற்றை அண்டத்திற்கு ஏற்றும் பயிற்சியே எட்டும் இரண்டும் என்று சித்தர்கள் மறைத்து வைத்தார்கள். நமது சன்மார்க்க அன்பர்கள் பயன்பெறும் பொருட்டு இந்த ரகசியயத்தை வெளியிட்டு உள்ளேன்.
மேலும் விளக்கம் அடுத்த மடலில்.
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு 

2009/9/24 Dhanapal Thirumalaisamy <dhanapal.thirumalaisamy@gmail.com>

<<<எட்டு இரண்டும் அறியாத மூடர் தானே>>>
 
இந்த எட்டும் ரெண்டும் எது என நண்பர் ஒரு மேற்பதிவை இட வேண்டுகிறேன்.
 
நன்றி.


 
2009/9/24 arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>



---------- Forwarded message ----------
From: arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
Date: 2009/9/24
Subject: மூலாதாரம் எது என்பதன் ஆதாரம் - சித்தர் சுப்பிரமணியர் ஞானம்
To: vallalargroups@googlegroups.com


மூலாதாரம் எது என்பதன் ஆதாரம் - சித்தர் சுப்பிரமணியர் ஞானம் 
பேநியதோர் அடி வயிற்றைப் பார்வை செய்வார் 
பிலமுள்ள மேல் வயிற்றைத் தியானம் செய்வார் 
பாநியதோர் நெஞ்சதனை நியாயம் செய்வார் 
பகருகின்ற கண்டத்தை நிசமே செய்வார் 
கானியதோர் கபால நிலா அறமே என்பார் 
கருத்துள்ள நெற்றிக்கண் கானச்சொல்லார்
ஆணியதோர் மூக்கு முனை யதீதமென்று 
அழகுள்ள இரு கண்ணும் பார்வையாமே.

பார்வைஎன்ற இந்த முறை யதீதமேன்பார் 
பண்பில்லா மூடரப்பா நியாயஞ் செய்வார் 
சேர்வை என்ற குரு சீஷர் இருவர் கெட்டார்
செகந்தனிலே நோய் பிறந்தே உழன்று போவார் 
கொர்வைஎன்ற ஐம்பூத கவனமாகி 
கொடிதான துயரத்தால் மாண்டு போவார் 
ஏர்வை என்ற ஞானம் வந்து என்ன செய்யும் 
எட்டு இரண்டும் அறியாத மூடர் தானே. 

மேற்கண்ட சுப்ரமணியரின் சுத்த ஞானம் பதஞ்சலி யோக சூத்திர முறையில் கூறப்பட்ட சக்கரங்கள் மேலேற்றும் பாவனையால் ஞான நிலையினை அடைய முடியாது என்று தெளிவாக கூறுகிறார். ஆகவே சுத்த சன்மார்க்க நிலையினை அடைவதற்கு சக்கரங்களை தேடி போக வேண்டாம் என்று நமது வள்ளல் பெருமானும் மற்றும்  சித்தர்கள் கூறுகிறார்கள். இது யாருடைய மனதையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதப்படவில்லை. நமது சன்மார்க்க அன்பர்கள் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்றே எழுதப்பட்டது.

மேலும் விளக்கம் தேவை எனில் அடுத்த மடலில் 
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு 

--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு



--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு




--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு



--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு








--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு



--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)