Tuesday, May 27, 2014

[vallalargroups:5455] அருட்பெருஞ்சோதி - விளக்கம்

அருட்பெருஞ்சோதி - விளக்கம்

1 ஜோதி

2. பெருஞ்சோதி

3. அருட்பெருஞ்சோதி


1. ஜோதி என்பது ஜீவ ஒளி


2. சாதனைகளால் - சோம சூரியாக்கினிகளின் கலப்பினாலும் , அபானனைக் கொண்டு ஊதுவதினாலும், இந்த ஜோதி - பெருஞ்சோதியாக ஓங்கி வளரும்

இது எப்படி என்றால் - கொல்லன் உலையை ஊதுவது போன்றது - ஊதுவதினால் அந்த நெருப்பு - கொழுந்து விட்டு எரிவது போன்று இந்த ஒளியும் பெருஞ்சோதியாக ஒளிவிடும்

கொல்லன் உலையை ஊதுவது : இதனைத் தான் வள்ளலார் " மேடையிலே வீசிகின்ற மெல்லிய பூங்காற்றே " என்று தன் அனுபவத்தைப் பாடுகின்றார்

இதனைத் தான் - " உந்தீபற - உந்தீபற " என்று சமய நூல்களும் , வள்ளலாரும் கூறுகின்றனர்


3. இந்த பெருஞ்சோதி , சாதனைகளின் வளர்ச்சியினால் , ஒரு கட்டத்தில், அருளைக் கொடுக்கும்பொழுது , அது அருட்பெருஞ்சோதி ஆகின்றது

அதாவது - முப்புரத்தை எரித்தப் பின்னும், திரைகள் எல்லாம் தீக்கிரையான பின்னும், அது அருளை வீசும்போது,  அது அருட்பெருஞ்சோதி ஆகின்றது

இது ஒவ்வொரு ஜீவனின் பரிணாம வளர்ச்சிப் படிகள் ஆகும் - ஜீவன் சிவனாக ஓங்கும் வழியும் ஆகும்

 
 
 
வெங்கடேஷ்

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)