Thursday, May 22, 2014

[vallalargroups:5450] ஜீவனும் ஆன்மாவும்


ஜீவனும் ஆன்மாவும்

1.ஜீவன் : மாயை வசப்பட்டுள்ளதால் , எப்பொழுதும் பயத்துடனே இருக்கும் - ஐம்புலன்களுடன் சம்பந்தப்பட்டு , சதா அசைந்து கொண்டே இருக்கும்

ஆன்மா : மாயை இலையாகையால், பயம் என்பதே கிடையாது - ஐம்புலன்களுடன் சம்பந்தப்படாது , தனியாக இருப்பதால் ( தனிக்குமரி ) அசைவற்று நிற்கும்

2. ஜீவன் : தத்துவங்கள் நடுவே இருக்கும்

ஆன்மா : 36 தத்துவங்களைக் கடந்து , தனியாக நிற்கும் - சாமானியர் யாரும் ஏறா நிலை அது - மிகவும் கஷ்டப்பட்டு ஏறக்கூடிய நிலை அது


3. ஜீவன் : பசி, தாகம், நித்திரை, காமம், நோய் , வினை ஆகியவற்றுக்கு உட்பட்டு , முடிவில் இறந்துவிடும்

ஆன்மா : பசி, தாகம், நித்திரை, காமம், நோய், வினை போன்றவை மாயை சம்பந்தப்பட்டது ஆகையால், இவைகளெல்லாம் , ஆன்மாவிற்கு கிடையவே கிடையாது

4. ஜீவன் : மண்ணாசை- பொன்னாசை - பெண்ணாசை உண்டு

ஆன்மா : இயற்கையிலேயே எந்த ஆசையும் இல்லாமலே இருக்கும் - அதன் இயற்கை குணம் தயை -
அதனால் " தயவு "  என்பது ஆன்மாவைக் குறிக்க வந்த சொல்லாகும்

5. ஜீவன் : எப்பொழுதும் இருமையில் இருக்கும் -

இரவு - பகல்
இன்பம் - துன்பம்
வெப்பம் - குளிர்
நன்மை - தீமை
வேண்டும் - வேண்டாம்
பாவம் - புண்ணியம்
அதனால் எப்பொழுதும் துன்பத்திலேயே உழன்று கொண்டிருக்கும்

ஆன்மா : இரண்டும் " சமம் " என்ற பாவனையில் எப்பொழுதும் " ஒருமையில் " இருக்கும்
இதனைத்தான் - வடமொழியில் - " ஸ்திதப்ரக்ஞன் - சம நோக்கு கொண்டவன்" என்று பொருள் பட கூறுகின்றனர்

6. ஜீவன் : மாயை - கன்மம் ஆகிய இரு மலம் உண்டு

ஆன்மா : ஆணவம் என்கின்ற ஒரு மலம் மட்டும் உண்டு
 
வெங்கடேஷ்


No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)