Thursday, May 8, 2014

[vallalargroups:5427] jeevanum pasuvum - ஜீவனும் பசுவும்



ஜீவனும் பசுவும்

" பசுவிற்கு நிகரான பிராணி இல்லை "
" கோமாத பூஜைக்கு மேல் பூஜை இல்லை "
" பசுவதைக்கு இணையான பாவம் இல்லை "

என்று பசுவிற்கு ஏற்றம் கொடுக்கின்றோம்

ஏன் என்று கேட்டால்

வேதங்கள் கூறுகின்றன என்கின்றார்

சூக்குமமாக சொன்னப் பொருளை
உண்மை அறியாமல் ஏதேதோ செய்கின்றோம்


சான்றோர் உரைத்த பசு
" உலகில் நடமாடும் கால்நடை அல்ல "
தேகத்தில் உலாவிடும்
ஜீவன் "

" ஜீவனுக்கு மும்மல பந்தம் உண்டு"

இதை காட்டவே
புறத்திலே நடமாடும் பசுவிற்கு
மூக்கணாங்கயிறு கட்டிக் காட்டினர்

ஜீவன் வாழும் குடிலாம் தேகத்தில்
" எல்லா தெய்வங்களும் உள "
" எல்லா பர செல்வங்களும் உள "
என்று சூக்குமப் பொருளைக் கூறினால்

கால்நடைப் படத்தை வரைந்து
அதில் சகல தெய்வங்களை பொருத்தி வணங்குகின்றோம்

நம்மை வழிபடத் தெரியாமல்
நம் தேகத்தைப் போற்றாமலே
ஊன் உடம்பில் இறைவன் இருப்பதை அறியாமலே

" எல்லோரும் சமம் "
இறை முன்பு என்றிருக்க
ஒரு கால்நடை உயிருக்கு மட்டும்
இவ்வளவு ஏற்றம் கொடுப்பாரோ ஐயன் ???




BG Venkatesh

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)