Friday, July 2, 2010

Re: [vallalargroups:3230] சத்விசாரம் - நமது குற்றத்தை விசாரித்தல் - 6

ஆன்ம நேய அன்புடைய வாள்ளார் குருப்பு அன்பர்கள் 

அனைவர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கத்தை

தெரிவித்துக்கொள்கிறேன் .

வள்ளலார் மீது அளவு கடந்த அன்பு வைத்து இருககீர்கள்,

அதைக்கண்டு பெருமைப்படுகிறேன் ,

வள்ளலார் எழுதிய திருஅருட்பாவில் எல்லா உண்மைகளும்

நிறைந்தது, குவிந்து இருக்கிறது .

அருட்பாவை உண்மை அன்பால் நேசித்தால் தெரிவிக்க வேண்டியதை 

எல்லாம் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் தெரிவிப்பார் .

உங்கள் அனைவருக்கும் கருத்து வேறுபாடு நிறைய இருக்கிறது 

அதை நீக்கிக் கோள்ள வேண்டுமானால் ,கருத்து பரிமாற்றம் 

செய்து கொள்ளுங்கள் .

அதைத்தான் வள்ளலார் சத்விசாரம் செய்து விளக்கம் பெற்றுக் 

கொள்ளுங்கள் என்கிறார் .

அதைவிடுத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை 

சொல்லும் போது மக்கள் குழப்பம் அடைவார்கள் .

கருத்துக்கள் வேறுபடும் போது,வள்ளலார் வகுத்து தந்த 

சுத்த சன்மார்க்கக் கொள்கைகள், மக்கள் மத்தியில் ,

சென்று அடைவது காலதாமதமாகும் .

காலதாமதமானாலும் வள்ளலார் கொள்கைகள் உலகம் 

முழுவதும் சென்று அடையும் ,அதில் எந்த சந்தேகமும் இல்லை .

ஆதலால் சன்மார்க்க அன்பர்கள் உண்மையை முழுதும் அறிந்து 

தெரிந்து கொண்டு மக்கள் மத்தியில் தெரியப்படுத்துங்கள் .

இவை என் அன்பு விண்ணப்பமாக எடுத்துக் கொள்ளுங்கள் .

ஏதாவது சந்தேகம் இருப்பின் தெடர்பு கொள்ளுங்கள் .

மேலும் எங்களுடைய ;--சுத்த சன்மார்க்கம் பிளாக்ஸ் பாட .காம் ,

என்ற வலைப்பூவை தொடர்ந்து பாருங்கள் ,உங்களுடைய  கருத்துக்களை,

தெரியப்படுத்துங்கள் .

நன்றி .

எல்லா உயிகளும் இன்புற்று வாழ்க 
அருட்பெரும் ஜோதி உண்மையை உணர்க . 

30 ஜூன், 2010 4:15 pm அன்று, Vallalar Groups <vallalargroups@gmail.com> எழுதியது:
சத்விசாரம் - நமது குற்றத்தையும் , இறைவனின் பெருமையினையும் விசாரித்தல் ...

நமது குற்றத்தை விசாரிக்க வள்ளலார் நமக்கு கொடுக்கும் குறிப்புகள்.....

கலைத்தொழில் அறியேன்! கள் உணுங்கொடியேன்!! கறிக்குழல் நாயினும் கடையேன்!!!
விலைத்தொழில் உடையேன்! மெய்எலாம் வாயாய் விளம்புறும் வீணனேன்!! அசுத்தப்
புலைத்தொழில் புரிவேன்! பொய்யனேன்!! சீற்றம் பொங்கிய மனத்தினேன்!!! பொல்லாக்
கொலைத்தொழில் புரிவேன் !! அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே


                                                                            (ஆற்றாமை) திருஅருட்பா-3290
 
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)