Monday, June 14, 2010

[vallalargroups:3147] needs feedback

I'm sending thiruvarutpa songs and explanations daily.
I'm waiting for all yours feedback and responses.




திருவருட்பா
மூலமும் உரையும்

முதல் திருமுறை
தெய்வ மணி மாலை
1.

திருவோங்கு புண்ணியச் செயலோங்கி யன்பருள்
திறலோங்கு செல்வ மோங்கச்
செறிவோங்க வறிவோங்கி நிறைவான வின்பந்
திகழ்ந் தோங்க அருள் கொடுத்து

மருவோங்கு செங்கமல மலரோங்கு வணமோங்க
வளர்கருணை மயமோங்கி யோர்
வரமோங்கு தெள்ளமுத வயமோங்கி யானந்த
வடிவாகி யோங்கி ஞான

உருவோங்கு முணர்வினிறை யோளியோங்கி யோங்குமையில்
ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும்
உறவோங்கு நின்பதமேன் னுளமோங்கி வளமோங்க
உய்கின்ற நாளேந்த நாள்

தருவோங்கு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

உரை:
மரங்கள் நிறைந்த சென்னையிலுள்ள கந்தகோட்டத்துள் கோயில்  கொண்டு  உயர்கின்ற கந்த வேளே, குளிர்ந்த தோற்றத்தை உடைய தூய மாணிக்க மணிகளுள் அருள் நிறைந்த சைவ மணியாய்த் திகழும் ஆறு முகங்களையுடைய தெயய்வமாகிய மணியே , யாவரும் விரும்புதலையுடைய நல்வினைகளைச் செய்தளையுடைராதலால் அன்பும் அருளும் திறலும் மிக்க செல்வம் சிறக்கவும் அடக்கம் அமையவும் அறிவு மேன்மையுற நிறைந்த இன்பம் மிக்கு விளங்கவும் திருவருளை வழங்கி , மணமுடைய செந்தாமரை மலரின் நிறமுற்று மிகுகின்ற கருணையுருவாய் ஒப்புற உயர்ந்த தெள்ளிய அமுதப் பெருக்காய் ஆனந்த வடிவுற்றுச் சிறந்து ஞானப் பொருள் கொண்ட உணர்வின்கண் நிறை ஒளி மிக்குத் திகழும் மயில்மேல் இவர்ந்துயிர்ந்து எவ்வுயிர்க் கண்ணும் போருந்தும் நின்னுடைய திருவடி என் உள்ளத்தில் தங்குதலால் பெறலாகும் அருட்செல்வம் பெற்று உய்தி பெருங்காலம் எப்போது?




தெய்வ மணி மாலை - 2

பரமேது வினைசெயும் பயனேது பதியேது
பசுவேது பாச மேது
பத்தியேது அடைகின்ற முத்தியேது அருளேது
பாவ புண்ணியங்க ளேது

வரமேது தவமேது விரதமேது ஒன்றுமிலை
மனம்விரும் புணவுண்டு நல்
வதிர மணிந்துமட மாதர்தமை நாடிநறு
மலர் சூடி விளையாடி மேற்

கரமேவ விட்டுமுலை தொட்டு வாழ்ந்தவரோடு
கலந்து மகிழ்கின்ற சுகமே
கண்கண்ட சுகமிதே கைகண்ட பலனேனுங்
கயவரைக் கூட தருள்

தரமேவு சென்னையிற்கந்த கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

உரை:
மேன்மை பொருந்திய சென்னைக் கந்த கோட்டத்தில் எழுந்தருளும் கந்த வேளே , தூய மணிகளுட் சைவ மணியாம் சண்முகத் தெய்வமணியே, பரம் என்பது யாது ? வினையாவது யாது? வினியின் பயன் என்பது யாது ? பத்தி, பசு, பாசம் என்பன யாவை? பத்தியாவது யாது? அதனால் அடைகின்ற முத்தி என்பது யாது ? அருள் என்பது யாது ? பாவ புண்ணியங்கள் யாவை? வரம் என்றும் தவம் என்றும் விரதம் என்றும் கூறுவன ஒன்றும் இல்லை. மனம் ஆசைபடுகின்ற உணவையுண்டு, நல்ல ஆடையுடுத்து இலமகளிரை நாடி யடைந்து மணம் வீசும் பூக்களைச் சூடிப் பலவகையாக விளையாடி . கைகளை அம்மகளிர் மேற்செலுத்தி அவர்களுடைய முலையைப் பற்றி மெய்யோடு மெய்கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம்; இதுவே, வாழ்வின் கைகண்ட பயன் என்று கருதி மொழிகின்ற கீழ் மக்களோடு கூடாதாவாறுஅருள் புரிவாயாக




தெய்வ மணி மாலை - 3

துடியென்னும் இடையனம் பிடியென்னும் நடைமுகில்
துணையென்னும் பிணைய லளகஞ்
சூதென்னு முலைசெழுந் தாதென்று மலைபுனற்
சுழியென்ன மொழிசெ யுந்தி

வடியென்னும் விழிநிறையு மதியென்னும் வதனமென
மன்கையர்தமை அங்க முற்றே
மனமென்னும் ஒருபாவி மயிலென்னும் அதுமேவி
மாழ்கநான் வாழ்க விந்தப்

படியென்னு மாசையைக் கடியென்ன வென்சொலிப்
படியென்ன வரியாது நின்
படியென்ன வென்மொழிப் படியின்ன வித்தைநீ
படியென்னு மென் செய்குவேன்

துடிதுன்னு மதில் சென்னை கந்த கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்ய மணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே


உரை :
மேகம் படியும் மதில் பொருந்திய சென்னைக் கந்த கோட்டத்தில் எழுந்தருளும் கந்த வேளே, தூய மணிகளுட் சைவமணியாம்,ஷண்முகத தெய்வ மணியே, இடை துதியை நிகர்க்கும் எனவும், செழித்த தாது எனப்படும் அலையையுடைய நீரின்கண் தோன்றும் சுழியை போல்வது உந்தி எனவும், மாவடு நிகர்க்கும் கண் எனவும், முழு திங்கள் போலும் முகம் எனவும், புகழப்படும் மகளிரின் மேனியைப் பற்றி மனமாகிய ஒருபாவி , காம மயில் என்னும் அதனை எய்தி மயங்குதலால், நான் வாழுவு பெற இவ்வுலகியல் ஆசையை நீக்க என்று சொல்லும் என்னுடைய சொல் இத்தகையது என்று சொல்லவும், அதனை அறிந்து கொள்ளாமல் நின் சொற்படி என்ன? யன் சொல்லும் மொழின்படி இவ்வித்தையை நீ படித்து நடப்பாயாக என்று சொல்லுவதால் இதற்கு என்ன செய்வேன் ?



--
முருகராஜ்

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)