Friday, June 20, 2014

[vallalargroups:5480] வைகுண்ட ஏகாதசி - சன்மார்க்க விளக்கம்

வைகுண்ட ஏகாதசி - சன்மார்க்க விளக்கம்
 
இந்தப் பண்டிகை வைணவர்களால் வெகு விமரிசையாகக் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் கொண்டாடப்படுகின்றது

இந்த நாளில், நாம் அனைவரும் இரவில் தூங்காமல் "விழித்திருந்து ,  பரமபத ஆட்டம் " ( ஏணியும் பாம்பும் உள்ள ) ஆட வேண்டும் என்றும், அதிகாலையில் கோவிலுக்கு சென்று, பெருமாளை வழிபட வேண்டும் என்றும் கூறுவர்

எதற்காக இந்த விளையாட்டு - ஏனிந்த சம்பிரதாயம் ??

இதில் பெரிய அர்த்தம் பொதிந்திருக்கின்றது

ஏகாதசி என்றால் - அமாவாசையிலிருந்து 11 வது நாள் என்று பொருள்
ஏகம் - ஒன்று
தசி - பத்து
ஏகாதசி - பத்து + ஒன்று = பதினொன்று 11

துவாதசி - பனிரெண்டாவது -12 வது - துவாதசாந்த நிலை - ஆன்மாவின் இருப்பு நிலை

ஏகாதச நிலையில் , தங்கத்தாலான கதவு ஒன்று நம் கீழ் உலகத்தையும் - மேல் உலகத்தையும் பிரிக்கின்றது
கீழ் உலகம் = பணம் - பதவி - அதிகாரம் - செல்வம் - ஆசை - காமம் - குரோதம் என்று இதர வகையறாக்கள்

மேல் உலகம் = அமைதி - சாந்தம் - அறிவு - ஒழுக்கம் என்று இதர வகையறாக்கள்

நாம் , நம் சாதனைகள் மூலம். , ஏகாதச நிலை அடைந்து , திருவடியின் சகாயத்தினால், கதவை திறந்து , உள்புகுந்து துவாதசாந்தத்திலுள்ள ஆன்மாவை ( பெருமாள் ) தரிசனம் வேண்டும் என்பதே இந்தப் பண்டிகை - கொண்டாட்டத்தின் நோக்கம் , இலட்சியமும் கூட.


சாதனையில் " விழிப்பு" நிலையில் இருக்க வேண்டும் என்பது தான் - நாம் இரவில் விழித்து இருக்க வேண்டும் என்பதாக நம் முன்னோர் வைத்துள்ளனர்

தாயம் வைத்து பரமபத விளையாட்டு என்பது = இந்த உலக வாழ்வே ஒரு மாய விளையாட்டு என்பதாகவும்
ஏணி மீது ஏறுதல் - நல் வினைகள் என்பதாகவும்
பாம்பு கடித்தல் - தீய வினைகள் என்பதாகவும் பொருள் கொள்ள வேண்டும்


அந்த கட்டங்களைத் தாண்டிச் சென்று பரமபதம் அடைதல் என்பது - இந்த மாய உலக வாழ்வில் இருந்து விடுபட்டு , ஆன்ம நிலை அடைதல் என்பதாகும் - இதுவே அதன் உண்மைப் பொருளாகும்

அகத்திலே ஆற்ற வேண்டிய இந்த மாபெரும் செயலை - நினைவுபடுத்தவே இந்த பண்டிகை கொண்டாடப்படுகின்றது

நாம் தும்மும் போது ' ஹரே ராம - ஹரே கிருஷ்ணா " என்று பகவான் நாமத்தை சொல்கின்றோம் - ஏன் தெரியுமா ??

தும்மும் போது அந்த தங்கக் கதவு சிறிது நேரம் திறக்கிறது - அதனால் உள்ளிருக்கும் ஆன்மாவின் பெயரை உச்சரிக்கச் சொல்லியிருக்கின்றனர்.

கிறிஸ்தவர்களின் புனித நூலான " பைபிளில் - தும்மும் போது கடவுள் பெயரை உச்சரி " என்று கட்டளை இடுகின்றது

உலக சமயங்களிடையே எவ்வளவு ஒற்றுமை ???

நாம் தான் வேற்றுமை பாராட்டி , உடலையும் மனத்தையும் பாழாக்கிகொள்கின்றோம்

ஜீவனானது மாயை கன்மம் கூடிய உலக வாழ்விலிருந்து மீண்டு - ஆன்ம நிலை ( பரம பதம் ) அடைவது தான் வாழ்க்கை என்பதை உணர்த்தும் பண்டிகை தான் வைகுண்ட ஏகாதசி


வெங்கடேஷ்





No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)