Thursday, June 19, 2014

[vallalargroups:5478] குண்டலினி யோகம்

குண்டலினி யோகம்

இந்த யோகம், நம் ஆன்மீக சமுதாயத்திலே மிகுந்த எதிர்பார்ப்பையும் ஆரவாரத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது எனலாம்

அனேக மக்கள் , குண்டலினி யோகம் பயில்வதாக நாம் கேட்டிருப்போம்

பட்டப் படிப்பில் , எப்படி specialisation உள்ளதோ, அவ்வாறு, யோகத்தில் , specialisation , குண்டலினி யோகம் என்று கூட சொல்லலாம்.

தற்கால நம்பிக்கைகள் :

அனேக குருமார்கள் , நம் சம காலத்திலும் கூட, குண்டலியின் இருப்பிடம் முதுகுத் தண்டின் கீழ் உள்ள மூலாதாரம் என்றே உலகிற்கு அறிவித்துள்ளனர்

அதனை விழிக்க வைக்கும் முறையானது யாதெனில் : மூச்சுப் பயிற்சியும் ஆசனங்களும் என்றே கூறிச் சென்றுள்ளனர்

மேலும் , அதனை ஒவ்வொரு சக்கரமாக மேலேற்றி, கடைசியில், ஆக்ஞா சக்கரத்திற்கு வந்து நிறுத்துதல் என்பர்


மேலும் , சில குருமார்கள், இந்த யோகம் ஏதோ கடினமான கணக்கு ( நிறைய படிகள் ) போன்று பாவித்து, அதனை எளிமைப் படுத்துதல் போன்று, இதனை SKY - Simplified Kundalini Yoga  என்று கற்றுகொடுத்தனர்

ஒவ்வொரு ஆதாரமாக குண்டலினியை மேலேற்ற வேண்டும் - பயிற்சி முடிந்த பின் - அதை கீழிறக்கி கொண்டு வந்து மூலாதாரத்தில் சேர்த்து விட வேண்டும் என்று கற்றுக் கொடுத்தனர்

ஒவ்வொரு ஆதாரமாக குண்டலினியை மேலேற்றுவது கடினமாக இருக்கின்றது ( நிறைய படிகள் ) என்பதால் , இதனை நேராக ஆக்ஞா சக்கரத்திற்கு வந்து நிறுத்துதல் தான் SKY என்று கற்றுத் தந்தனர்


உண்மை : இருப்பிடம் மற்றும் விழிப்பிக்கும் முறை

பாரதத்தில் , கண்ணன், யமுனை நதியின் அடியிலிருந்து ஒரு மிகப் பெரிய நாகத்தை , எழுப்பிக் கொண்டு வந்து , அதன் மீது நடனம் ஆடுவான் - " காளிங்க மர்த்தனம் - நடனம் " என்று உலகமே ஒவியங்களாக வரைந்து அதை தலையில் வைத்துப் போற்றுகின்றது

அந்த நாகம் தான் - குண்டலினி

தமிழ் வார்த்தை யமுனை பிரித்தால் = " ய + முனை " என்று வரும் - இது சுழிமுனையைக் குறிக்கும் - " ய" என்பது 10 ஆகிய ஆன்மாவைக் குறிக்கும்

எனவே , குண்டலினி இருப்பிடம் யகாரமாகிய ஆன்மாவிடத்தில் என்று உறுதியாகின்றது - முதுகுத் தண்டின் அடியில் உள்ள மூலாதாரத்தில் அல்ல

வள்ளலார் : " எனது குளத்தினும் நிரம்பிய குருசிவபதியே " என்று அகவலில் பாடுகின்றார் - இங்கு குளம் என்பது நெற்றி ஆகும்

குளம் என்பது நீர் நிறைந்தது - யமுனை நதியும் நீர் நிறைந்தது

ஆகவே , குண்டலினி , ஆன்மா இருக்கின்ற நெற்றியில் இருக்கின்றதே அல்லாது மூலாதாரத்தில் அல்ல

குண்டலினி மீது கண்ணன் ஆடும் அழகினைத் தான் - " நாகஜோதி - நாகமணி - நாகரத்தினம் " என்ற பெயர்களில்லெல்லாம் வழங்குகின்றோம்


அசைப்பிக்கும் முறை : " சாலனம் " என்னும் தந்திரத்தாலல்லாது வேறெதனாலும் குண்டலினியை அசைக்கவோ விழிப்பிக்கவோ முடியாது - இந்த தந்திரத்தை தக்க குரு மூலம் தெரிந்து பயில வேண்டும்

மேலும் திருவடி உதவி இல்லாமல் இதனை செய்ய முடியாது என்பதுவும் உறுதி

குண்டலினியை மேலேற்றுவதும் இல்லை கீழிறக்குவதும் இல்லை - அது ஒரே இடத்தில் , தன் விஷ முகத்தால் , பிரம்மத்துவாரத்தை மறைத்துக் கொண்டிருக்கின்றது

சிதாகாயப் பெருவெளிக்கு போகின்ற நம் பாதையை மறைத்துக் கொண்டிருக்கின்றது

குண்டலியின் இருப்பிடமாக இந்த உலகினில் அடையாளமாக காட்டப்பட்டிருக்கும் ஊர்:

1. மதுரை - துவாதசாந்தம்

மதுரையில் நடந்த 64 திருவிளையாடல்களில் ஒன்று - ஒரு பெரிய நாகம் இந்த ஊரின் எல்லையை சுற்றி இருப்பதாக காட்டியிருக்கின்றார்கள் - அந்த நாகம் - குண்டலினி

2. ஆலப்புழா - கேரளா :

ஆலம் = விஷம்
புழா - சிறிய துவாரம் - பிரம்மத்துவாரம்

சாதகன், சாதனைகள் மூலம் துவாதசாந்த நிலை அடைந்து , குண்டலினியை அப்புறப்படுத்தி விட்டு, மேல் நிலைகளுக்கு செல்ல வேண்டும் - தகுதி உடைய சாதகர்களுக்கு குண்டலினியும் வழி விட்டு நிற்கும்


வெங்கடேஷ்



No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)