Monday, June 16, 2014

[vallalargroups:5475] மூளை - தலைமைச் செயலகம்


மூளை - தலைமைச் செயலகம்

நாம் எல்லோரும் பள்ளியில் மூளை பற்றி அறிவியல் பாடத்தில் படித்திருப்போம்

அது - பெரு மூளை - cerebrum
சிறு மூளை - cerebellum
முகுளம் -  medulla oblongata  - என்று மூன்று பாகங்களாக இருக்கின்றது என்று அறிவோம்

மேலும் நாம் அறிந்த ஒன்று இந்த சிரசிலுள்ள பாகம் தான் தலைமைச் செயலகமாக செயல்பட்டு , உடலிலுள்ள எல்லா பாகங்களை திறம்பட செயல்பட ஆணைகளை பிறப்பித்துக் கொண்டே இருக்கின்றது

மூளை - grey matter என்றும் , மூன்றாயிரம் கோடி செல்களாலானது என்றும் கண்டறியப்பட்டுள்ளது

மூளை தான் உடலைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றது
உடலில் தோன்றும் எல்லா உணர்ச்சிகளுக்கும் இது தான் பிறப்பிடம் - பசி - தாகம் - தூக்கம் - பாலுணர்வு எல்லாவற்றைவையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றது

மூளையானது நாம் தூங்கும் நேரம் தவிர , மற்ற நேரங்களில் சதா இயங்கி , கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டே இருக்கின்றது
அதன் கட்டளைகளுக்கேற்ப உடலும் சதா அசைந்தும் இயங்கிக்கொண்டே இருக்கின்றது

மூளை - மனதின் பருப்பொருள் - brain is the physical of the mind

மனதை அடக்குவது என்பது உண்மையாக என்னவெனில் - மூளையிலுள்ள
மூன்றாயிரம் கோடி செல்களும் அமைதியடைந்து , வேலை செய்யாமல் இருப்பதுவாகும்

இந்த செயலை நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது உலகின் மிகப் பெரிய - செயற்கரிய - மகத்தான செயலாகும்

இந்த நிலையில் எந்த எண்ணங்களும் எழாமலும், எல்லா உருவங்களும் கரைந்து போய், அருவ நிலைக்கு மாறிவிடும்.
அந்நிலையில் , மனதினால் எதனையும் பற்ற முடியாது

திருவடிகளைக் கொண்டு மட்டுமே இந்த மாபெரும் சாதனையை செய்ய முடியுமேயல்லாது வேறொன்றினாலும் முடியாது என்பது திண்ணம்

திருவடிகளைக் கொண்டு சாதனை செய்யுங்கால், இந்த மூளை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் அடைந்து , அதன் இயக்கம் மடை மாறி, பசி, தாகம், காமம் , நித்திரை ஆகியவைகள் படிப்படியாக குறைந்து வரும்

இந்த மூளையை இடமாகக் கொண்டு தான் மாயை - கன்மம் ஆகிய மூன்று மலங்கள் தத்தம் வேலை செய்து , ஜீவர்களை உலக விஷயத்தில் ஆழ்த்தி, அறிவை மயக்கி, அறிவை உதயமாகாதவாறு பார்த்துக் கொள்கின்றது

மூளையின் செல்களில் இருள் பதிந்திருப்பதால், தூக்கம், சோர்வு, பாலுணர்வு , மறதி யாவும் நமக்கு உண்டாகின்றது - இதனை ஒளிமயமாக்கிவிட்டால், இவைகள் யாவும் ஒழிந்துவிடும்

இதனைத் தான் 1008 இதழ்க் கமலம் மேல் நோக்கி அலர்தல் என்று குறிப்பாக உணர்த்தியிருக்கின்றனர் ஞானியர்

இது நடந்துவிட்டால் , மனமானது உலக வாழ்வு நோக்கி ஓடாமல் , அறிவை - ஆன்மாவை நோக்கி திரும்பும்

இதற்கு திருவடி ஒன்றே துணை

இந்த மூளையை அமைதிப்படுத்திவிட்டால் , உடலின் இயக்கம் நம் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்

இந்த மூளையின் உட்புறத்தில் , நவக்கிரகங்கள் சூக்குமமாய் சுற்றி நின்று ( நாம் பிறக்கும் சமயம் , இருந்த நிலையில் ) , நம் வினைகளுக்கேற்ப , மூளையை செயல்பட வைத்து , நம் வினைகளை நாம் அனுபவிக்க வைக்கின்றது

மூளையில் " கால இயந்திரம் - TIME machine " வைக்கப்பட்டிருக்கின்றது.
அது செயல் பட, செயல் பட , நமக்கு ( உடலுக்கு ) வயதாகிக்கொண்டே போகின்றது - ஆயுள் குறைந்துகொண்டே போகின்றது

மரணத்தை வெல்வது என்பது - இந்த காலச் சக்கரத்தை ஓடாமல் நிறுத்தச் செய்வது ஆகும்


வெங்கடேஷ்





















bg venkatesh

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)