Monday, June 16, 2014

[vallalargroups:5476] திருப்பாற்கடல் கடைதல் - சன்மார்க்க விளக்கம்

திருப்பாற்கடல் கடைதல் - சன்மார்க்க விளக்கம்


இதிகாசம் - புராணக்கதை : ஆதி காலத்தில், திருப்பாற்கடல் என்றவொரு கடலை , தேவர்கள் ஒரு பக்கமும் , அசுரர்கள் ஒரு பக்கமும் நின்று கடைந்தார்கள் என்றும்,

முதலில் விஷம் வந்ததாகவும் , பின் லக்ஷ்மி, அமுத கலசம், போன்ற அற்புத பொருட்கள் வந்ததாகவும் கூறப்படுவதுண்டு


உண்மை விளக்கம் :

உலகினில் பாற்கடல் என்றவொரு கடலே இல்லை எனலாம் - சிதாகாசப் பெருவெளியையே பாற்கடலாக உருவகிக்கப்பட்டிருக்கின்றது. அறிவியல் இதனை - பால்வெளி என்று அழைக்கின்றது - என்னவொரு ஒற்றுமை ???

சாதனைகள் மூலம் , திருவடி கொண்டு சிதாகாசப் பெருவெளியை அடைந்து , அதனை , குரு சொல்லிகொடுத்த " திருவடி " வித்தை மூலம் கடைதலை செய்தால் , அதிலிருந்து எல்லா பரசெல்வங்களும் வெளிப்படும் - திருவடி கொண்டு செய்யப்படும் இந்த தந்திரத்திற்கு " சாலனம் " என்று பெயர்.

சிதாகாசப் பெருவெளியிலிருப்து வெளிப்படும் திவ்விய பொருட்கள் :

1. லட்சுமி
2. காமதேனு - பசு
3. அமுதக் கலசம்
4. நினைத்ததைக் கொடுக்கும் கல்ப விருக்ஷம்

மேற்கூறியவைகள் யாவும் ஆன்மா மற்றும் திருவடியின் வெவ்வேறு அம்சங்களும், பிரதிபலிப்புகளாகும்


இவைகள் யாவும் இறைவனால் , தகுதி உடைய சாதகருக்கு வழங்கப்படும் பர உதவிகளாகும் - இவைகள் கொண்டு அவன் வாழ்வை பசி, காசு, பணம், போன்றவற்றிற்கு செலவிடாமல் , சாதனையிலேயே முழுவதுமாக இறங்கி , பசி, தாகம், நித்திரை, நோய், வினைகள் , மலங்கள் எல்லாவற்றையுமே வென்று , மரணமில்லாப் பெருவாழ்வு பெற கொடுக்கப் படும் பர உதவிகளாகும்


ஒரு சாதகன் திருவடி கொண்டு , ஆன்ம நிலை அடைந்து விட்டாலே , அவன் மரணத்தை வென்றுவிட்டதாக கருதலாம் - அவன் பொன்னம்பலம் - சிற்றம்பல வெளிகளுக்குள் நுழையும் தகுதி பெற்றுவிட்டதாகவும், முத்தேகச் சித்தி பெறத் தகுதி பெற்றுவிட்டதாகவும் கருதலாம்.


வெங்கடேஷ்

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)