Wednesday, December 8, 2010

[vallalargroups:3746] TRUTH OF THE TRUTH

அன்பு உயிரே,
 
                         நாம் வாழும் பூமியில் எத்தனை உலகங்கள் உள்ளன என்று பார்போம். உதாரணத்துக்கு   ராமு என்பவர் 60 வயது கொண்டவர். வேலு என்பவர் 45 வயது. இருவரும் பக்கத்துக்கு பக்கத்துக்கு வீடு. இருவருக்கும் உள்ள தொடர்பு பக்கதுவீடுகாரர் என்றமட்டும். ஆனால் இருவருக்கும் தன்னை பொறுத்தவரை வெவ்வேறு உலகம். ராமு ஆசிரியராக பணிபுரிந்தவர் அவர் உலகம் வேறு அவர் பழகும் உலகத்தவர் வேறு. வேலு வியாபாரி  அவர் உலகம் வேறு அவர் பழகும் உலகத்தவர் வேறு.  அதுபோல் ஹாரி பாட்டர் அவர் உலகம் வேறு அவர் பழகும் உலகத்தவர் வேறு. தாயின் உலகம் வேறு தந்தையின் உலகம் வேறு தன் குழந்தையின் உலகம் வேறு. ஒருவர் மறையும் போது அவருடன் அவர் வாழ்ந்த உலகமும் மறையும். ஒருவர் தன் வாழ்நாளில் வெவ்வேறு உலகத்தவரோடு  தாய் தந்தை மகன் மகள் நண்பர் பகைவர் முதலாளி தொழிலாளி என்று ஒவ்வொரு உலகதரோடு  உறவு கொள்கிறாரே தவிர அவர் உலகம் தனி அது அவர் மறையும் போது மறையும். உலக அண்டத்தில் மட்டும் எத்தனை கோடி உலகங்கள் உள்ளது பாருங்கள். மனிதன் சம்பந்தம் இவ்வளவு உலகம் என்றால் பல உயிர்களின் உலகம் எத்தனை கோடி. அண்டத்தில் இவ்வளவு உலகம் என்றால் பிண்டத்தில் பல கோடி செல்களின் உலகம் எத்தனை கோடி. ஒரு ஆன்மா ஒரு பிறவியில் எத்தனை உலகத்தை சந்திக்கிறது பாருங்கள்.
 
             ஒவ்வொரு கணமும் ஒரு உலகம் அழிந்துகொண்டே இருக்கிறது. புதிய உலகம் தோன்றிக்கொண்டே இருக்கிறது. இதில் உலகம் அழியுமா இல்லையா என்ற கேள்வி தேவையா. உயிர்கள் வாழும் உலகங்கள் எத்தனை கோடி உள்ளது என்று பாருங்கள்.
 
          நன்றாக ஆழமாக் சிந்தியுங்கள் நாம் நம் உலகத்தை பார்க்கமுடியாது பல உலகத்தவரை மட்டுமே எப்போதும் பார்துகொண்டேருப்போம். எப்போதுமே  தன்னுடைய உலகம் அரூபமாக உள்ளது  தான் தன் உலகத்தை ஒரு ஆன்மா தேடிகொண்டே செல்லும்போது அப்படி உலகம்  என்று ஒன்று இல்லை என்பதை உணர்துகொள்ளும்  உலகம் மாயை என்பதை உணரமுடியும் தன்னுடைய உலகமே இல்லை என்றால் அதேபோல் மற்றவர்களுக்கும் அவரவர் உலகம் மாயை என்பதை உணர்ந்துகொள்ளும். தான் ஒரு ஆன்மா மாயை உலகால் சூழ்ந்து இருப்பதை உணர்துகொண்டவன் பல  ஆன்மாக்களும் மாயா உலகால் சூழ்ந்து இருப்பதை அறிந்துகொள்ளமுடியும்.
 
          தன் மாயா உலகம் மட்டுமே அழிந்து பிறந்து கொண்டுள்ளது.  தான் அழிவதில்லை என்பதை புரிந்துகொள்கிறது. தான் நிரந்தரம் மாயா உலகம் மாறிக்கொண்டே இருக்கும் என்பதை புரிந்துகொள்கிறது. தனக்கு மட்டும் தான் இப்படியா மற்ற ஆன்மாக்களுக்கும்  அதே நிலைதான் என்பதை புரிந்துகொள்கிறது.  இப்போது தன் மாயா உலகம் இல்லை என்றால் பிற ஆன்மாக்களுக்கும் மாயா உலகம் இல்லை என்பதை புரிந்துகொள்கிறது. தனக்கும் பிற அன்மாகளுக்கும் இடைவெளி இல்லை என்பதை உணர்ந்துகொள்கிறது. இடைவெளி மாயை என்பதை புரிந்துகொள்கிறது.
ஆன்மாக்கள் ஒன்றாக இருப்பதை உணர்ந்துகொள்கிறது ஆன்மா பல அல்ல ஒன்று தான் என்பதை புரிந்துகொள்கிறது.
 
          ஆன்மா என்ற தான் ஒன்றுதான் மட்டுமே உள்ளது என்பதை புரிந்துகொள்கிறது. பலவாக தெரிவதும் மாயை என்பதை புரிந்துகொள்கிறது தானே பலவாக இருப்பதை புரிந்துகொள்கிறது. எல்லாம்  தானே  தானாய் ஆகி இருப்பதை புரிந்து கொள்கிறது. அதை புரிந்து பயம், கோவம், பொறாமை, வஞ்சகம் முதலிய பத்து குணங்கள் நீங்கி நீண்ட ஆனந்த அமைதியில் மூழ்கி சித்தி அடைகிறது.   
 
         இப்போது சொல்லுங்கள் நாம் போகும் பாதை சரியா. இப்போது நாம் ஏன் உயிர்களை நேசிக்கவேண்டும் என்று புரிந்து கொள்வோம்.  அறியாமை நீங்கும் வரை அன்பு செய்து அறியாமை நீங்கி அமைதி பெறுவோம். 
 
பேதம் பார்க்காதே
பாவித்து பார்க்காதே .........
இதுவே  சாதி சமயம் இல்லை என்பது ....
காக்கை குருவிகள் எங்கள் ஜாதி ......
அன்பாய் இருப்போம் ஆனந்தமாக இருப்போம் அமைதியாய் இருப்போம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ........  
 
என்றும் அன்புடன்,
உயிர். 

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)