Friday, December 3, 2010

Re: [vallalargroups:3744] Banglore Today Dinakaran News Paper- Page No :16 - Meditation @ Jothi Ramalinga Swamigal Sangam on SUNDAY

ஆன்ம நேய அன்புடையீர் வணக்கம்.வள்ளலார் வழியை பின்பற்றும் அன்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஒரு வழியை பின்  பற்றுகிறார்கள்,உண்மையான வழி என்ன என்பதை இது வரையில் யாரும் தெரிந்து கொள்வாரில்லை.என்று வள்ளலாரே வேதனைப்படுகிறார்.அன்றும் தெரிந்து கொள்வாரில்லை,இன்றும் தெரிந்து கொள்வாரில்லை.
     இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண் காலம் கழித்துக் கொண்டு இராதீர்கள் என்று தெளிவாக திரு அருட்பாவில் பதிவு செய்துள்ளார் வள்ளலார் .
     இதற்கு மேற்பட நாம் நாமும், பார்த்தும்,கேட்டும்,லஷ்சயம் வைத்துக் கொண்டு இருந்தவேதம் ,ஆகமம்,
புராணம்,இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் லஷ்சயம் வைக்க வேண்டாம் என்று சொல்லுகிறார்.
    நாம் சாதி,சமயம்,மதம்,போன்ற பற்றுகளில் இருந்து கொண்டு சுத்த சன்மார்க்கத்தை பற்றி பேசினால் சுத்த சன்மார்க்கம் விளங்குமா ? சாதாரண் சமய சின்னங்க்களையே விட முடியவில்லை,சமயப் ப்ற்று கலையே விட முடியவில்லை எப்படி சுத்த சன்மார்க்கம் விளங்கும்.போதிக்கறவர்களும் பற்று உள்ளவர்களாக இருக்கிறார்கள்,கேட்பவர்களும் பற்றுள்ளவர்களாக இருக்கிறார்கள்,குருடனும் குருடனும் குருட்டாட்டம் ஆடிய கதையாக அல்லவா இருக்கும்.
     முதலில் ஒரு தெய்வ வழிபாடு இருக்கிறதா?அதுவும் அருட்பெரும்ஜோதியைத் தவிர வேறு கடவுள் எல்லாம் பொய் என்பதை உணர வேண்டும்.வள்ளலாரையே  வழிபடக்  கூடாது,வள்ளலாரே என்னை வழிபடாதீர்கள்,என்கிறார்அவர் சொல்லியதை நாம கேட்கிறோமா? வள்ளலாரை வழிபடுவது மட்டுமல்ல,அவர் படத்துக்கே  சமய சின்னங்களை அணிந்து,சமயவாதியாக்கி விட்டீர்கள்,எப்படி உங்களை சன்மார்க்கி என்று ஏற்றுக் கொள்வார் வள்ளலார்,சாதராண செயல்களையே விட முடியாமல்,நீங்கள் மரணம் இல்லாத பெருவாழ்வைப் பற்றி பேசுகிறீர்கள்,எப்படி சாத்தியமாகும் .எப்படி அருட்பெரும்ஜோதி அருள் விளங்கும்,முதலில் தங்களை திருத்திக் கொள்ளுங்கள்.அப்புறம் சன்மார்க்க உண்மை விளங்கும்.
அடுத்து மற்றவர்களுக்கு போதனை செய்யுங்கள்.அனைத்து பற்றுகளையும் வைத்து கொண்டு அருளைத் 
தேடினால் அருள் கிடைக்காது,அருள கிடைக்காத போது அருளைப் பற்றி பேசமுடியாது,
      ஆதலால் சன்மார்க்க அன்பர்கள் வள்ளலார் எழுதியுள்ள திரு அருட்ப்பாவை நன்கு படியுங்கள்.அவர் என்ன சொல்லியுள்ளார் என்பதை அறிவு மூலமாக தெரிந்து கொள்ளுங்கள்,அப்புறம் சுத்த சன்மார்க்கத்தைப் 
பற்றி மற்றவர்களுடன் சத் விசாரம் செய்யுங்கள்.சமயத்தை மதத்தை பிடித்துக் கொண்டு சன்மார்க்கத்தை 
தேடாதீர்கள்ஒன்றும் கிடைக்காது,வீணே காலம் நேரம் விரையமாகும்.
     வள்ளலார் தெளிவாக பதிவு செய்துள்ள பாடல் ;-
கண்டதெல்லாம் அநித்தியமே கேட்டதெல்லாம் பழுதே 
கற்ற தெலாம் பொய்யே நீர் களித்ததெலாம் வீணே 
உண்டதெலாம் மலமே யுட் கொண்டதெலாம் குறையே 
உலகியலீர் இது வரையில் உண்மை அறிந்திலிரே
விண்டதனால் லென இனி நீர் சமரச சன்மார்க்க 
மெய்ந்நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே 
எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின் 
இறவாத வரம் பெறலாம் இன்பமும் பெறலாமே 
     என் உயிர் சகோதரர்களே உண்மை உணர்ந்து வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொளகைகளை,
பின்பற்றி அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் அருள் பெற்று நலமுடன் வாழ்வதற்கு முயற்ச்சி செய்யுங்கள்.
உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு
உயிர் ஒருமைப்பாடு என்ன என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.அவற்றை தெரிந்து கொண்டால்,கடவுளுக்கும் நமக்கும் உள்ள சொந்தம் தொடர்பு யாவும் தெளிவாகும் .
உங்கள் அனைவரையும் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் தெளிவுப்படுத்தி ஏற்றுக் கொள்வார் ,
முயற்ச்சி செய்யுங்கள் முன்னேற்றம் அடைவீர்கள்
அன்புடன் ;-கதிர்வேலு 
செல் ;--9865939896
போன;--0424-2401402,  
 .  .     

3 டிசம்பர், 2010 8:36 am அன்று, Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com> எழுதியது:
Banglore Today Dinakaran News Paper- Page No :16 - Meditation @ Jothi Ramalinga Swamigal Sangam on SUNDAY

தியான பயிற்சி முகாம் : பெங்களூர், டிச.3:
பெங்களூர் லட்சுமிநாராயணபுரம் 5வது கிராசிலுள்ள சமரச சன்மார்க்க சங்கத்தில் தியானப்பயிற்சி டிச.5ம் தேதி நடைபெறுகிறது.
லட்சுமிநாராயணபுரம் சமரச சன்மார்க்க சங்கத்தில் ஆங்கில மாதம் முதல் ஞாயிற்று கிழமைதோறும் ஆன்மிக சொற்பொழிவு, தியானப்பயிற்சி நடை பெறுகிறது.
டிச.5ம் தேதி காலை 9.30 மணிக்கு சேலம் குப்பு சாமியின் நெஞ்சறிவுறுத்தல் சொற்பொழிவு, தியானப் பயிற்சி, கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அனுமதி இலவசம்.

Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)