Wednesday, August 18, 2010

[vallalargroups:3360] Re: ஞானத் தெளிவு பகுதி 1

உருவ வழிபாடு அனைத்தும் கடவுளை மனித தரத்தில் சித்தரிக்கப்பட்டவை மட்டுமே.

கடவுள் என்பவர் ஆசா பாசங்களை கடந்தவர் என்னும்போது
அவரை வணங்கினால் மட்டுமே அவர் காப்பாற்றுவார் என்பதும்,
அவரது அடிமையாக அனைவரும் இருக்க வேண்டும் என்பது போல 
நம்மை பழக்கப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

கடவுள் என்று கூறிககொள்ளும் ஒருவர் அவரை யார் விரும்புகிறார்கள் 
என்று கேட்பது கடவுள் நிலையாக தெரிகிறதா ?

சிவனுக்கு பார்வதி என்று மனைவி ?
விஷ்னுவுக்கு மகாலட்சுமி என்று மனைவி ?
பிரம்மாவிற்கு சரஸ்வதி என்று மனைவி ?

உண்மை பரம்பொருள் ஆண் என்றும் பெண் என்றும் 
பேதம் கொண்டு இருப்பார்களா ?

நமக்குதான் ஆண் பெண் பேதம் எல்லாம்
இறைவனுக்குமா ?

இறைவன் இப்படி இருப்பார் அப்படி இருப்பார் என்று
நமது முதாதையர் செய்து வைத்த முளைச் சலவை என்று புரியவில்லையா ?

ராமாயணத்தின் உண்மை பொருள் என்ன என்று புரியாமல்
மகாபாரதத்தின் உண்மை பொருள் என்ன என்று புரியாமல்
தசாவதாரம் என்ன என்று புரியாமல்

இறைவனையும் சிறுபிள்ளை விளையாட்டாக நாம் நினைத்து
வழிபாடு செய்வது புரியவில்லையா ?

சிவனுக்கு முக்கண் என்பது என்ன என்று புரியாமல்
சிவனின் உடலில் பாதி பார்வதி என்பது என்ன என்று புரியாமல்
விநாயகர் என்று ஒரு கடவுள் யார் என்று புரியாமல்
முருகன் என்று ஒரு கடவுள் யார் என்று புரியாமல்

இவர்கள் பெயரில் உருவங்களை வைத்து 
அந்த உருவங்களை வழிபாடு செய்தால் நன்மை பெறலாம்
என்று ஒரு கற்பனையை ஏற்படுத்தி

இறைவன் என்பவனும் புகழுக்கு மயங்குபவன் என்றும்
அவனை
அவரே வாழ்க, இவரே வாழ்க என்று புகழ்ந்தால் அவர்
நமக்கு பல நன்மைகள் செய்வார் என்பது 
அவரும் மனிதரை போன்றவர்தான்
என்பது போலதானே உள்ளது ?

இறைவன் என்பவன் இதை அனைத்தையும் கடந்தவன்
என்பது உங்களுக்கு விளங்கவில்லையா ?

நாம் கொண்டுள்ள நம்பிக்கை என்பது நமது முன்னோர்களால்
அளிக்கப்பட்ட்து. அதில் உள்ள உட்பொருளை புரிந்து கொள்ளாமல்
கதையை கதையாகவே நாம் பார்த்து பழகி விட்டோம்.

ஆகவேதான் அதிலிருந்து விடுபடுவதற்கு தயங்குகின்றோம்.

சிந்தனை மேலும் தொடரும்.
சிவம்

-- 
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com



--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)