Wednesday, August 4, 2010

Re: [vallalargroups:3320] "உண்மை அன்பு" என்பது என்ன ? ( What is TRUE LOVE?)

ஆன்ம நேய அன்புடைய அன்பர்களுக்கு வணக்கம் .

வள்ளலார் கூறியுள்ள உண்மை அன்பு .உண்மை இரக்கம்.என்பதின் 
கருத்தை பலபேர் பலவித மாக தெரியப்படுத்தியுள்ளார்கள் 

நாம் இப்பொழுது உண்மை அன்போடு இருக்கிறோமா ,என்பதை 
முதலில் தெரிந்து கொள்ளவேண்டும் .உண்மை அன்பு இல்லாததால் தான் 
உண்மை அன்பு,வேண்டும் என்கிறார் வள்ளலார்.

இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் செயற்கை ,''இயற்கை என்பது உண்மை'' .
தோற்றம் மாற்றம் இல்லாதது .அதுதான் ''அருட்பெரும் ஜோதி ''என்னும் ஒளியாகும் .
அந்த உண்மையை அனுபவத்தால் உணர்ந்து அறிந்து அன்பு செலுத்துவதே ,
உண்மை அன்பாகும் ,

ஜீவகாருண்யம் என்பது உண்மை அன்பு என்பதில்லை ,அதற்கு உயிர் இரக்கம்
என்பதாகும் .ஆன்மாவை அதாவது உயிரின் துன்பத்தை போக்குவதாகும் .
சுத்த சன்மார்க்கத்தின் முதல் படியாகும் ,அதனால்தான் ஜீவகாருண்யமே 
மோஷச  வீட்டின் திறவுகோல் என்றார் வள்ளலார் ,.அருட்பெரும்ஜோதி 
ஆண்டவரின் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள [அதாவது ]அவரை தெரியாமல் 
மூடிmarவைத்து இருக்கும் கதவை ,திறந்து உள்ளே போகும் திறவு கோளாகும் .

வாழ்நாள் முழுவதும் உணவு போட்டுக்கொண்டே இருப்பது என்பதில்லை ,
உண்மையான உயிர் இரக்கத்துடன் ஜீவகாருண்யம் செய்தால் ,அடுத்து 
கட்டத்திற்கு அருட்பெரும்ஜோதியால  அழைத்துக் கொள்ளும். ''.உண்மையான அன்பு '
என்ன என்பதை தெரியப்படுத்திவிடும் ,அதற்கு பின் சந்தேகமும் வராது ,
கேள்வி கேட்கும் எண்ணமும் வராது ,உண்மை அன்பு என்பது ,இந்த பொய்யான
உலகத்தின் மீது உள்ள பற்றுகள் அனைத்தையும் பற்றற விட்டு அருள் அம்பலத்தில் 
உள்ள அருட்பெரும்ஜோதியின் பற்றை பற்றுவதுதான் ,உண்மை அன்பாகும் .

வள்ளலார் பதிவு செயதுள்ளபாடல் .;--

ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை 
நாடாதீர் பொய்யுலகை நம்பாதீர் ---வாடாதீர் 
சன்மார்க்க்ச சங்கத்தைச சார்வீர் விரைந்தினி இங்கு
கேன்மார்க்கஞ் சேர்வீர் இந்நாள் .

என்பதை புரிந்து கொன்டால் தெளிவாக விளக்கமடையலாம் .
ஒன்றை பிடித்துக் கொண்டு ஒன்றை தேடினால் கிடைக்காது .
நமக்கு தாயாகவும் தந்தையாகவும் தாங்குகின்ற தெய்வம் 
அருட்பெரும்ஜோதி என்பதை கனவில் கூடமறக்கக் கூடாது .
அதுதான் உண்மையான அன்பாகும் .

அடுத்தபாடலில் அன்பைப் பற்றி பதிவு செய்துள்ளார் ;---

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே 
அன்பெனுங் குடில்புகும் அரசே 
அன்பெனும் வலைக்குட் படும் பரம்பொருளே 
அன்பெனும் கரத்தமர் அமுதே 
அன்பெனுங் கட்டத்துள் அடங்கிடும் கடலே 
அன்பெனும் உயிர் ஒளி அறிவே 
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே 
அன்புருவாம் பரசிவமே .

உண்மை அன்பு என்பதற்கு இந்த பாடல் ஒன்றேபோதும் 
உண்மை அன்பு, உண்மை அறிவு என்னஎன்பதை தெள்ளத் தெளிவாக 
தெரியப்படுத்தியுள்ளார் ,ஆதலால் உண்மை அன்பு என்பது ,
அருட்பெரும்ஜோதி ஆண்டவர் மீது வைக்கும் அன்புதான் 
உண்மையான அன்பாகும் .

அன்பையும் விளைவித்து அருட்பேரொளியால்
இன்பையு நிறைவித் தென்னையும் நின்னையும் 
ஓர் உருவாக்கியா நுண்ணிய படியெலாஞ்
சீருறச செய்வித்து திறம் பெற அழியா 
அருள் அமுது அளித்தனை யருணிலை யேற்றினை
அருள் அறிவு அளித்தனை அருட்பெரும்ஜோதி .

எனறு அருட்பா அகவலில்;-- அருட்பெரும்ஜோதியிடம் 
உண்மை அன்பு வைத்து அருளைப் பெற்றதை பற்றி 
விளக்க மாக விளக்கியுள்ளார் வள்ளலார் அவர்கள் .

அருட்பாவை முழுமையாக படித்து ,படித்தபின் அதன்படி நம் 
வாழ்க்கையை அமைத்துக் கொன்டால் ,அருட்பெரும்ஜோதி 
ஆண்டவர் தெரிவிக்க வேண்டியதை தெரிவிப்பார் .

அன்புடன் ;--ஆன்மநேயன் கதிர்வேலு.   
              
 


2 ஆகஸ்ட், 2010 7:46 pm அன்று, Balu Guruswamy <balovesfamily@gmail.com> எழுதியது:
அன்பால் இட்ட பணி, அரசன் இட்ட ஆணை.
இதோ! இக்கணமே, அவ்வணம் செய்வேன்.
 உண்மையே என்றும் நிரந்தரமான ஒன்று.
உண்மையின் தன்மைகளே அன்பென்றும்..,
அறிவென்றும்.., இரக்கம் என்றும் ...
அவனியில் மகிமை காட்ட வந்தன.
உண்மை என்னவென்றால் உண்மைதான் எல்லாமே.
உண்மையால் வழங்கப்பட்ட வரங்களாகவே
அன்பும், அறிவும்,இரக்கமும் உலகை உய்விக்க
உத்தேசமும் உத்வேகமும் கொண்டன.
ஒரு மரத்து மலர்களாய் கனிகளாய்
ஒன்றைப்போல் மற்றொன்றாய் மலர்ந்தன/கனிந்தன.
எல்லோர் உள்ளும் அருட்பெரும் ஜோதி உறைவதால்
எல்லோரிலும் நம்மைக் கண்டு எல்லோருக்கும்
நன்மையே நினைவதும் நன்மையே செய்வதும் அன்பு.
உண்மையாம் அருட்பெரும் ஜோதியை அறியும் அறிவே
உண்மை அறிவு.  உண்மையின் கருணை பாவமே இரக்கம்
உண்மையே அன்பாயும் அறிவாயும் இருந்து
இரக்கம் காட்டுகிறது அல்லது அருளைப் பொழிகிறது.

அருட் பெரும் ஜோதி!              அருட் பெரும் ஜோதி!
தனிப்  பெரும் கருணை!          அருட் பெரும் ஜோதி!


பாலு குருசுவாமி







2010/8/2 DAMODARAN S <damodaran.bangalore@gmail.com>

VAZHGA VALAMUDAN

Thank you sir,

But i would have love to read the same in Tamil. I am writing in English because i am use to. But love to read in Tamil. Any way thank you very much for the reply. I am

Regards,
DAMODARAN

2010/8/2 Balu Guruswamy <balovesfamily@gmail.com>

Dear Mr.Damodaran,
                                
                                The truth is the one which is permanent and
 
the love[anbu], the konwledge[arivu] and the compassion[irakkam or karunai] are its aspects or forms.
 
It is Truth wich spread as love[anbu], knowledge[arivu] and compassion[irakkam].
 
The truth is that truth is all which takes all the benevolent forms which can serve the mass in various circumstances.  Anbu, arivu and irakkam i.e love, knowledge and compassion are the flowers of Truth.
Each has it's resemblence on others. 
 
The love i.e anbu is that benevolent thought towards others and devoid of hate.
 
The knowledge i.e arivu is that which can visuvalize the Truth and
 
The compassion i.e irakkam is the natural deed for the benevolence in distress.
 
                             so the truth is all i.e love, konowledge and compassion.
 
Unmaiye anbayum arivayum irunthu irakam kaatukirathu allathu arulai pozhikrathu 

Balu Gurswamy.

 



 
On 8/2/10, DAMODARAN S <damodaran.bangalore@gmail.com> wrote:
Dear Mr. Balu,

Pls let me know the direct meaning of UNMAI ANBU, UNMAI ARIVU, AND UNMAI ERAKKAM.

Regards,
DAMODARAN



2010/7/30 Balu Guruswamy <balovesfamily@gmail.com>

நமது வள்ளலார் "எல்லாம் வல்ல இறைவனை உண்மை அன்பு , உண்மை அறிவு , உண்மை இரக்கம்" முதலியவற்றை    கொண்டு தான் உணரவோ, அறியவோ, கருதவோ முடியும் " என்று சொன்னார்கள்.
இதில் ஒப்பற்ற உண்மை என்னவென்றால்  அவர் நம் யாவர் மீதும்
கொண்டிருந்ததே உண்மை அன்பு.  நாம் யாவரும் கடைத்தேறி
மரணமிலாப் பெரு வாழ்வில் இன்புற்றிக்க வேண்டும் என்று  உண்மையான இரக்கத்தால்  நம் யாவருக்கும் சன்மார்க்கம் என்ற
உண்மை அறிவைப் போதித்து பொன்மேனி காட்டி புகழுலகம்
சென்றதுவே உண்மை அன்பு என்று சொல்லவும் வேண்டுமோ?.
அவர் தாமுரைத்த யாவற்றையும் வாழ்ந்து காட்டி அல்லவா போதித்தார்கள்.  அவர் உண்மையே வடிவாகி, உன்மத்த நிலையாகி,
அறிவுச் சுடராகி, ஆற்றல் வடிவாகி, "இன்பமே எய்துக யாவரும்"
என்ற இரக்க்கத்தில் தயவாகி, அருட் பெரும் ஜோதியாய் தனிப் பெரும்
கருனாசாகரத்தில் கரைந்தாரே!  அதுவன்றோ உண்மை அன்பு!
உண்மை இரக்கம்! உண்மை அறிவு.

குருவே சரணம்!    குருவே சரணம்!

பாலு குருசுவாமி.

2010/7/30 DAMODARAN S <damodaran.bangalore@gmail.com>

VADIYA PAYIRAI KANDAPOTHELLAM VADINEN - Thayumanavar, if you feel this that is ANBU, ARIVU, ERAKKAM.



2010/7/30 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
 

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...
 
நமது வள்ளலார் "எல்லாம் வல்ல இறைவனை உண்மை அன்பு , உண்மை அறிவு , உண்மை இரக்கம்" முதலியவற்றை    கொண்டு தான் உணரவோ, அறியவோ, கருதவோ முடியும் என்கிறார்கள்..இதனில், "உண்மை அன்பு" என்பது என்ன ?

Please see the attachment... for answer....



Anbudan,

Karthikeyan J| Cell: 099022-68108

Rounded Rectangle: JOIN VALLALAR GROUPS 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)