Friday, March 19, 2010

[vallalargroups:2768] கருணை காட்டுங்கள் அன்பர்களே

அனபான சன்மார்க்க நேயர்களே!
 
                                         தயவின் பெருமை தரணி எங்கும் நிறையட்டும்!
 
                                         அருட் பெரும் ஜோதி ஆண்டவர் நம்மை எல்லாம்
 
                                         நல்வழியில் நடத்தட்டும்.
 
கருணை உலகில் காருண்யம் பெருகட்டும்.   இதற்க்கான ஏற்பாடுகள் யாவும்
 
உங்கள் மூலமாக நடத்திட அருட் ஜோதி ஆண்டவர் விழைகிறார்.  எனவே
 
சன்மார்க்க நெறிகள் யாவற்றையும் முழுமையாகக் கடைப் பிடித்தல் அவசியம்.
 
முழு நம்பிக்கை கொண்டு முயலுங்கள்.  முடியாதது ஒன்றுமில்லை.
 
அருட் ஜோதி ஆண்டவரே நம் ஆன்மப் பகுதியில் இருந்து கொண்டு
 
எல்லா ஆற்றல்களையும் அருளுகின்றார்.  அவர் அருளாலேயே நம்
 
பார்க்கின்றோம், கேட்கின்றோம், உணர்கின்றோம் மேலும் உயிரோடு
 
இருக்கின்றோம்.  எல்லா சத்துக்களுக்கும்  அவரே ஆதாரம்.  எனவே
 
சன்மார்க்கம் புகுந்தபின் கொள்ளத் தக்க கவலை ஒன்றும் இல்லை.
 
உள்ளத்தில் ஒளியைக் கூட்டுங்கள்.  உவப்பிலா ஆனந்தம் உங்களது
 
என்று அறியுங்கள்.  கருணை காட்டுங்கள்!  ஆத்மாவை மீட்டுங்கள்!
 
கருணை பெருகும் இடத்தில அருட் பெரும் ஜோதி ஆண்டவர்
 
நிறைகிறார்!  கருணை இல்லா இடத்தில அவர் மறைகிறார்.
 
எனவே  கருணை காட்டுங்கள் அன்பர்களே!
 
பாலு குருசுவாமி
 
 
 
 
 

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
To unsubscribe from this group, send email to vallalargroups+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)