Sunday, March 7, 2010

[vallalargroups:2720] சிதம்பர ரகசியம்

சிதம்பர ரகசியம்

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

சிதம்பர ரகசியம் என்பது நடராஜரின் உருவத்திலேயே உள்ளது.
நாம் நடராஜரின் சிலையை உற்று நோக்கினால்
நடராஜரை சுற்றி ஜோதி வடிவம் உள்ளது.
நடராஜர் வலது காலை தூக்கி ஆடுகிறார்.
நடராஜரை சுற்றி உள்ள அக்னிதான் நமது ஆன்மா
அந்த ஆன்மா சிற்சபையில் உள்ளது.
சிற்சபை என்பது நமது புருவ மத்தியம்
அந்த ஆன்மா என்னும் அக்கினியின் உள்ளே
சிவமான இறைவன் நடம் இட்டுக் கொண்டிருக்கிறார்.
அந்த நடத்தை தற்போதம் அற்று அதாவது 
நான் என்கின்ற உணர்வு கடந்து
தரிசனம் காண்பதே ஜோதி தரிசனம் ஆகும்.
அதைதான் நமது வள்ளல் பெருமான் 
ஜோதி உள் ஜோதி என்று கூறி இருக்கிறார்கள்.

ஜோதி தரிசனத்தின் போது நான் என்கின்ற உணர்வு போய் விடுவதனால் 
அங்கே ஆணவம் கன்மம் மாயை மூன்று விலகி இருக்கும்.
துரியமும் கடந்த சுகம்  பூரணம் என்னும் நிலையினை
சுகாதீதம் என்னும் நிலையினை அடைந்து இருப்போம்.
இதைதான் கடவுள் நிலை அறிந்து அம்மையம் ஆதல்
என்று சித்தர் பெருமக்களும், நமது வள்ளல் பெருமானாரும் 
மறை பொருளாக பாடல்களாக பாடி உள்ளார்கள்.
இங்கே இறை தரிசனம் என்பது
நமது ஆன்மாவின் உள்ளே குடி கொண்டுள்ள 
சிவமான ஜோதி தரிசனம் பெறுவதுதான்.
தூலமான பொருளை  காண தூலமான கண்கள் பயன்படும்
சூக்குமமாய் உள்ள சிவத்தை நாம் ஆன்மாவினால் காண்பதனால் தான்
இது  ஆன்ம தரிசனம் என்றும் பெயர் பெறுகிறது.

வீட்டில் ஞான தீபம் வைத்தால் உடல் தூய்மையாக இருக்க வேண்டியது
முக்கியம்தான் எனினும் அதனுடன் மன தூய்மை மிகவும் முக்கியம்.
கரண ஒழுக்கம், இந்திரிய ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் கடைபிடிக்க வேண்டியது ஒவ்வொரு சன்மார்க்க அன்பரின் கடமையாகும்.
அதாவது மன தூய்மை, உயிர் இரக்கம், அனைத்து உயிர்களிடமும் அன்பு செய்வது, எல்லா உயிர்களையும் தானாக காண்பது போன்றவற்றின் மூலம் நாம் ஒருமை நிலையினை அடைய முடியும்.
ஒருமை நிலை அடைந்தால் மட்டுமே நாம் ஜோதி தரிசனம் பெற முடியும். மற்ற படி வேறு எந்த சடங்குகளும் நமது சன்மார்க்க்கதிர்க்கு தேவை இல்லை. நமது தாய், சகோதரி, மனைவி, மகள் மற்றும் அனைத்து பெண்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும்.
மேலும் நம் வீட்டில் உள்ள பெண்களுக்கு முதலில் சன்மார்க்கத்தை 
போதிப்பதன் மூலம் நாம் சன்மார்க்கத்தில் முன்னேறுவதற்கு 
அவர்களின் உதவி சுலபமாக கிடைக்கும்.

ஆகவே அன்பு சன்மார்க்க அன்பருக்கு,
நமது வள்ளல் பெருமான் கூறி உள்ளதை நம் வாழ்வில் கடை பிடித்து 
நாமும் இறை நிலையினை அடைவோம் என்று அன்புடன் வேண்டுகிறேன்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக  அரசு



please visit and join the Group
http://groups.google.com/group/sanmarkkam-groups

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)