Wednesday, September 23, 2009

[vallalargroups:2174] Re: புருவ மத்தி

ARUTPERUNJOTHI THANIPPERUINGKARUNAI'
 
Dear Vallalar Group members,
 
Any members know the remedy or medicine for Venpadai / Leucoderma / vitiligo.
 
Kindly inform me please.
 thank you.
 
ramakrishnan,
9841982203.


r.ramakrishnan

--- On Tue, 22/9/09, arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com> wrote:

From: arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
Subject: [vallalargroups:2170] Re: புருவ மத்தி
To: vallalargroups@googlegroups.com
Date: Tuesday, 22 September, 2009, 6:21 PM

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு 
புருவ மத்தி என்பது பற்றி சித்தர்கள் மறைத்தார்கள் என்று சொல்லிவிட்டு நீங்கள் அதைவிட அதிகமாக மறைக்கிறீர்கள். முதலில் நீங்கள் குழப்பத்திலிருந்து விடுபடுமாறு வேண்டுகிறேன். சித்தர்கள் மயிர்ப்பலம் மற்றும் நெருப்பு ஆறு தாண்டினால் ஞான நிலையினை அடைய முடியும் என்று கூறுகிறார்கள். இங்கே மயிர் பாலம் என்பது பற்றி திருவள்ளுவர் தனது ஞானவெட்டியான் நூலில் வெளிப்படையாக புருவம்தான் என கூறுகிறார். மேலும் நெருப்பு ஆறு என்பது மேல் ஆதாரம் ஆறு நிலைகளை கூறுகிறார். நீங்கள் கூறுவது போலே புருவம் ஒவ்வொன்றுக்கும் மதியத்தை தனியாக தேர்ந்தெடுத்து அதன் நடுவை எங்கே தேடுவது. மேலும் காற்றை கொண்டே மேல் ஆதாரம் ஆறையும் கடக்க வேண்டும் என்று சித்தர்கள் வூது வூது என்று கூறுகிறார்கள். ஆக புருவ மத்தியம் என்பதும் மூக்கு நுனி என்பதும் நமது நெற்றி நடுவே அல்லாது வேறு இல்லை. இதைத்தான் சுழுமுணை முப்பாழ் லலாட ஸ்தானம் என வெவ்வேறு பெயர்களால் சித்தர்கள் கூறினார்கள்.
மேலும் தாங்கள் கூறுவதற்கு எதாகிலும் ஆதாரம் இருந்தால் நீங்கள் கூறுமாறு வேண்டுகிறேன். 
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு 

2009/9/20 Jagannathan Narayanasamy <janakum1@yahoo.co.in>
NetRiyil PuruvangkaLukku idayil kaaNka

--- On Sun, 20/9/09, balamurugan d <to.dbala@gmail.com> wrote:

From: balamurugan d <to.dbala@gmail.com>
Subject: [vallalargroups:2161] Re: புருவ மத்தி
To: vallalargroups@googlegroups.com
Date: Sunday, 20 September, 2009, 9:26 AM


மிக்கநன்றி .   அருள்கூந்து நெற்றிக் கண் இருக்கும் இடத்தையும் விளக்கயும்.

Awaiting for your reply .

with warm regards,
Balamurugan.




2009/9/18 Dhanapal Thirumalaisamy <dhanapal.thirumalaisamy@gmail.com>
 
One of the article I wrote for our company email distribution group "Vallal Yaar". Hope friends will find it interesting.
 
Regards,
Dhanapal
 
உண்மையான ஆன்மீக நெறி எப்போதோ மக்களிடம் இருந்து மறைக்கப் பட்டு விட்டது. உண்மையைச் சொல்ல வந்த வேதங்களும் உபநிடதங்களும் சுற்றி சுற்றி வளைத்ததில் திரித்ததில் அதன் கருப்பொருள் காணாமல் போய் விட்டது. அவரவர் அவரற்கு தெரிந்த வரையில் எடுத்துக்கொண்டதில் உண்மை திரிந்து விட்டது. வேதங்களும் உபநிடதங்களும் உண்மையை விட்டு எப்போதோ மாறி சென்று விட்டன. உண்மையை தெரிந்து வைத்திருந்த சித்தர்களோ பரிபாசையில் பேசியே பாடியே மறைத்து விட்டார்கள். அவர்கள் கூறிய ஒரு பரிபாசை சொல் "புருவ மத்தி". இதனை மக்கள் தற்போது எவ்வாறு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்?
 
சிகப்பு புள்ளி உள்ளது அல்லவா? அது தானே புருவ மத்தி.
 
இவ்வாறு மறைத்து மறைத்து பேசப்பட்ட காலத்தில் வள்ளலார் அவதரித்தார். எல்லா உண்மைகளையும் போட்டு உடைத்தார். அய்யகோ என்ன செய்வது? கடை விரித்தார் கொள்வாரில்லையே அப்போது?
 
சரி புருவம் எது? வில் போன்று உள்ள இரண்டு வளைவுகள் அல்லவா?
 
சரி புருவ மத்தி எதுவாக இருக்கும்? புருவத்தின் மத்தி தானே புருவ மத்தியாக இருக்க முடியும்? சிகப்பு பொட்டுவிற்கும் புருவத்திற்கும் என்ன சம்பந்தம் இங்கே?
என்னடா இது குழப்புகிறானே? சிகப்பு பொட்டு இருந்த இடத்தை அல்லவா புருவ மத்தி என இது வரை நினைத்து இருந்தோம். இவன் வேறு எதையோ ஒன்றை சொல்கிறானே.
 
ஆஹா இது என்ன? இரண்டு புருவ மத்தியா? ஐயா குழப்பாதீர்கள். உங்கள் குரல் எனக்கு கேட்கிறது! "புருவ மத்தி" என்பது வேறு "நெற்றி மத்தி" என்பது வேறு.
 
Welcome to Vallal Yaar! Unraveling the mysteries left by our TAMIL siddhas in the RIGHT way. The Vallalar way!
 
To be continued…






--
Regards,
Balamurugan.D



Try the new Yahoo! India Homepage. Click here.



--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---



Try the new Yahoo! India Homepage. Click here.

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)