Wednesday, September 23, 2009

[vallalargroups:2179] Re: புருவ மத்தி

அன்புள்ள சன்மார்க்க அன்பர்களே,

This email just  explains the புருவ மத்தி, which is the place where the eyebrows and the top of the nose meets.

I am saying the same aspect that the fire starts from the bottom of the spine and rise to the point which is the center of the eyebrows and top of the nose.  This is the vital point and this புருவ மத்தி.   The idakali and pingkali are nadis which ends at the top of the nose.  The picture I got is just to explain the vaies points to make people understand the புருவ மத்தி. 

 

The book expalins only about Vallar's  sanmarkam, it is written in Tamil.  Please all of you read that book. 

 

----- Original Message -----
From: "Arumugha Arasu.V.T" <arvindhoffset@gmail.com>
To: vallalargroups@googlegroups.com
Sent: Wednesday, September 23, 2009 2:42:42 AM GMT -05:00 US/Canada Eastern
Subject: [vallalargroups:2175] Re: புருவ மத்தி

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு, 

தங்கள் கூறியுள்ள முறை பதஞ்சலி யோக சூத்திர முறையாகும். பதஞ்சலி யோக சூத்திர முறையில் யாரும் ஞான நிலையினை அடைந்ததாக தெரியவில்லை. காரணம் பதஞ்சலி யோக சூத்திரத்திற்கு சரியான விளக்கம் யாராலும் எழுதப்படாததுதான். ஆனால் நமது சன்மார்க்கத்தில் ஞான நிலையினை அடைவதற்கு கீழ் ஆதாரம் ஆறு வுள்ளதைப்போலே மேல் ஆதாரம் ஆறு நிலைகளை கடக்க வேண்டும். மேல் ஆதாரம் ஆறும் புருவ மத்தி தொடங்கி அண்டம் வரை நீளும் . இங்கு புருவ மத்தியம் மூலாதாரமாக வுள்ளது. இந்த புருவமத்தி மூலதரத்தை காற்றின் துணை கொண்டு மேல் ஏற்றுவதன் மூலம் உயர் ஞான நிலையான் நாத விந்து நிலையினை அடைய முடியும். நமது வள்ளல் பெருமானும் இதைத்தான் கூறி இருக்கிறார்கள். அவ்வையாரின் அகவலில் மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பி என கூறுகிறார்கள். நீங்கள் கூறுவது போலே மூலாதாரம் குதம் எனப்படும் மலக்குடலுக்கு அருகில் இருக்கும் என்றால் அந்த இடத்தில் மூண்டு எழுகின்ற கனல் எங்கு உள்ளது. மூண்டு ஏழு கனல் புருவ மத்தியத்தில் மட்டுமே உள்ளது. அதனை காலால் எழுப்பி என்றால் கால் என்றால் காற்று ஆக காற்றின் மூலமாய் தூண்டி மேல் ஆதாரம் ஆறையும் கடக்க வேண்டும். அங்குதான் 1008 இதழ் கொண்ட தாமரை மீது நாதம் விந்து நிலைகள் உள்ளன என்று சித்தர்களும் கூறி உள்ளனர். அந்த நிலையினை அடைவதக்கு துரியம் கடந்து துரியாதீதம் நிலையினை அடைய வேண்டும். இங்கு துரியம் மற்றும் துரியாதீதம் என்பது ஒரு சிலர் நான் துரியாதீதம் கடந்து வெட்டவெளி கடந்து விட்டேன் என்பது போலே சுலபமானது இல்லை. உறும் உணர் உணர்வும் உணர்வெலாம் கடந்த அனுபவாதீதமாம் அருட்பெரும்ஜோதி - தனு கரனாதிகள் தாம் கடந்து அறியும் ஓர் அனுபவமாகிய அருட்பெரும்ஜோதி - துரியமும் கடந்த சுகம் பூரணம் தரும் போன்ற வள்ளல் பெருமானின் வரிகளால் உணர வேண்டும்.
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு  

2009/9/22 <valli.thirumeni@comcast.net>

அன்புள்ள சன்மார்க்க அன்பர்களே,

Pingalai is the Positive energy and Idakali is the negative energy.  These are called the main "nadis" and they end in your nose.  If you could consentarte your breathing  { thro' your left ( Idakali) and Pingkali ( right ) } and could left the energy that is kidden in the bottom of the spine to bring it up all the way to the center of your eyebrows you attain salvation.  This is what Ayya avarkal said as simple and easy way to attain salvation.

Sorry I was not able to type in Tamil.

 

Please read the book by   Dr. Srinivasan " சுத்தசன்மார்க்க விளக்கம்".  Must be in the libraries. He has explained and showed how our skull has place in between the eyebrows for this energy reside.

I have attched a picture that may explain this flow of energy.

 


----- Original Message -----
From: "arumugha arasu.v.t" <arumughaarasu@gmail.com>
To: vallalargroups@googlegroups.com
Sent: Tuesday, September 22, 2009 8:51:11 AM GMT -05:00 US/Canada Eastern
Subject: [vallalargroups:2170] Re: புருவ மத்தி

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு 

புருவ மத்தி என்பது பற்றி சித்தர்கள் மறைத்தார்கள் என்று சொல்லிவிட்டு நீங்கள் அதைவிட அதிகமாக மறைக்கிறீர்கள். முதலில் நீங்கள் குழப்பத்திலிருந்து விடுபடுமாறு வேண்டுகிறேன். சித்தர்கள் மயிர்ப்பலம் மற்றும் நெருப்பு ஆறு தாண்டினால் ஞான நிலையினை அடைய முடியும் என்று கூறுகிறார்கள். இங்கே மயிர் பாலம் என்பது பற்றி திருவள்ளுவர் தனது ஞானவெட்டியான் நூலில் வெளிப்படையாக புருவம்தான் என கூறுகிறார். மேலும் நெருப்பு ஆறு என்பது மேல் ஆதாரம் ஆறு நிலைகளை கூறுகிறார். நீங்கள் கூறுவது போலே புருவம் ஒவ்வொன்றுக்கும் மதியத்தை தனியாக தேர்ந்தெடுத்து அதன் நடுவை எங்கே தேடுவது. மேலும் காற்றை கொண்டே மேல் ஆதாரம் ஆறையும் கடக்க வேண்டும் என்று சித்தர்கள் வூது வூது என்று கூறுகிறார்கள். ஆக புருவ மத்தியம் என்பதும் மூக்கு நுனி என்பதும் நமது நெற்றி நடுவே அல்லாது வேறு இல்லை. இதைத்தான் சுழுமுணை முப்பாழ் லலாட ஸ்தானம் என வெவ்வேறு பெயர்களால் சித்தர்கள் கூறினார்கள்.
மேலும் தாங்கள் கூறுவதற்கு எதாகிலும் ஆதாரம் இருந்தால் நீங்கள் கூறுமாறு வேண்டுகிறேன். 
அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு 

2009/9/20 Jagannathan Narayanasamy <janakum1@yahoo.co.in>
NetRiyil PuruvangkaLukku idayil kaaNka

--- On Sun, 20/9/09, balamurugan d <to.dbala@gmail.com> wrote:

From: balamurugan d <to.dbala@gmail.com>
Subject: [vallalargroups:2161] Re: புருவ மத்தி
To: vallalargroups@googlegroups.com
Date: Sunday, 20 September, 2009, 9:26 AM


மிக்கநன்றி .   அருள்கூந்து நெற்றிக் கண் இருக்கும் இடத்தையும் விளக்கயும்.

Awaiting for your reply .

with warm regards,
Balamurugan.




2009/9/18 Dhanapal Thirumalaisamy <dhanapal.thirumalaisamy@gmail.com>
 
One of the article I wrote for our company email distribution group "Vallal Yaar". Hope friends will find it interesting.
 
Regards,
Dhanapal
 
உண்மையான ஆன்மீக நெறி எப்போதோ மக்களிடம் இருந்து மறைக்கப் பட்டு விட்டது. உண்மையைச் சொல்ல வந்த வேதங்களும் உபநிடதங்களும் சுற்றி சுற்றி வளைத்ததில் திரித்ததில் அதன் கருப்பொருள் காணாமல் போய் விட்டது. அவரவர் அவரற்கு தெரிந்த வரையில் எடுத்துக்கொண்டதில் உண்மை திரிந்து விட்டது. வேதங்களும் உபநிடதங்களும் உண்மையை விட்டு எப்போதோ மாறி சென்று விட்டன. உண்மையை தெரிந்து வைத்திருந்த சித்தர்களோ பரிபாசையில் பேசியே பாடியே மறைத்து விட்டார்கள். அவர்கள் கூறிய ஒரு பரிபாசை சொல் "புருவ மத்தி". இதனை மக்கள் தற்போது எவ்வாறு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்?
 
சிகப்பு புள்ளி உள்ளது அல்லவா? அது தானே புருவ மத்தி.
 
இவ்வாறு மறைத்து மறைத்து பேசப்பட்ட காலத்தில் வள்ளலார் அவதரித்தார். எல்லா உண்மைகளையும் போட்டு உடைத்தார். அய்யகோ என்ன செய்வது? கடை விரித்தார் கொள்வாரில்லையே அப்போது?
 
சரி புருவம் எது? வில் போன்று உள்ள இரண்டு வளைவுகள் அல்லவா?
 
சரி புருவ மத்தி எதுவாக இருக்கும்? புருவத்தின் மத்தி தானே புருவ மத்தியாக இருக்க முடியும்? சிகப்பு பொட்டுவிற்கும் புருவத்திற்கும் என்ன சம்பந்தம் இங்கே?
என்னடா இது குழப்புகிறானே? சிகப்பு பொட்டு இருந்த இடத்தை அல்லவா புருவ மத்தி என இது வரை நினைத்து இருந்தோம். இவன் வேறு எதையோ ஒன்றை சொல்கிறானே.
 
ஆஹா இது என்ன? இரண்டு புருவ மத்தியா? ஐயா குழப்பாதீர்கள். உங்கள் குரல் எனக்கு கேட்கிறது! "புருவ மத்தி" என்பது வேறு "நெற்றி மத்தி" என்பது வேறு.
 
Welcome to Vallal Yaar! Unraveling the mysteries left by our TAMIL siddhas in the RIGHT way. The Vallalar way!
 
To be continued…






--
Regards,
Balamurugan.D



Try the new Yahoo! India Homepage. Click here.



--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு



--
Arutperum Jothi ! Arutperum Jothi !
Thaniperum Karunai ! Arutperum Jothi !

Ella Vuyirgalum Inbutru Vazhga !

Yours
V.T. Arumugha Arasu


--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)