Monday, April 21, 2014

[vallalargroups:5397] Perubathesam - some explanations - Tamil

பேருபதேசம் - சில விளக்கங்கள்

பேருபதேசம் முழுமையுமே வள்ளலார் ஆன்ம நிலையைப் பற்றியும் , அந்நிலைக்கு வாருங்கள் என்று எல்லோரையும் அழைப்பதுத் தான்

1. சாலைக்கு செல்ல கொஞ்ச நாட்களாகிய 10 தினம் இருக்கிறது என்கின்றார் வள்ளலார் .
இதில் 10 தினம் என்பது நாட்களைக் குறிக்கவில்லை

எட்டிரண்டு கூட்டினால் வரும் 10 பத்தைக் குறிக்கின்றார்.

2. திரை விளக்கங்கள் யாவும் ஆன்ம தரிசனம் குறித்துத் தான்.

3. என்னை ஏறாநிலை மிசை யாதெனில் - தயவு - அந்த தயவுக்கு ஒருமை வர வேண்டும்

இங்கு ஏறாநிலை என்பது - 36 தத்துவங்களைக் கடந்த நிலை - அது ஆன்ம நிலையே - ஏன் எனில் ஆன்மா தான் 36 தத்துவங்களைக் கடந்து தனித்து நிற்கிறது

மேலும் , இங்கு தயவு, ஒருமை என்பதெல்லாம் ஆன்மாவைக் குறிக்க வந்ததாகும்.

4. சமயம் , மதம் சடங்குகளையெல்லாம் கடந்தது ஆன்மா என்பதால் , அவைகளில் சிறிதும் லட்சியம் வைக்க வேண்டாம் என்று வலியுறுத்துகின்றார்.

5. எல்லோர்க்கும் தாய் , தந்தை முதலான ஆப்தர்களால் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ , அதற்கு கோடிக் கோடிப் பங்கு அதிகமான உதவி கொடுக்கும்படியான இடம் இது என்று சித்தி வளாகத்தைக் குறிப்பிடுகின்றார்.

இதில் " சித்தி வளாகம்" என்பது ஆன்ம நிலையையும் - ஆன்ம அனுபவத்தையும் குறிப்பதாகும்

6. "கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"  என்று கூறுவதில் ,
கருணை - ஆன்மா என்பதாகும்

7. ஞானத்தில் யோகமாகிய " நிராசை " என்னும் 15 ஆம் படி வரும் என்று கூறுவதும் ஆன்ம நிலையைத் தான். ஏன் எனில் ஆன்ம நிலையை அடைந்தால் நிராசை தானாகவே வந்துவிடும்.



8. முதலில் ஆண்டவர் தெரிவிக்க வேண்டியதை கண்டமாகத் தெரிவிப்பார் - உரிமை வந்தப் பின் அகண்டமாகத் தெரிவிப்பார் - இதில் " உரிமை " என்பது ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையைத் தான் - அதாவது ஆன்ம நிலையைத் தான்

கண்டம் என்பது - துண்டு துண்டாக - சிறிது சிறிதாக
அகண்டம் என்பது - முழுமையாக

ஜீவ நிலையில் சிறிது சிறிதாகத் தெரிவிப்பார்
ஆன்ம நிலையில் முழுமையாகத் தெரிவிப்பார்

ஜீவ நிலையில் நம் அறிவு அற்ப அறிவானதாக விளங்கும்
ஆன்ம நிலையில் அறிவு முழுமையாகையால் , அண்டங்களைக் கடந்து விளங்கும்

இதைத் தான் முதலில் எனக்கு அற்ப அறிவு இருந்தது - இப்பொழுது என்னறிவு அண்டங்களைக் கடந்து விளங்குகின்றது என்று கூறுகின்றார்.


மேற்கூறியவைகளைப் பார்க்கும் போது, பேருபதேசம் முழுமையுமே வள்ளலார் ஆன்ம நிலையைப் பற்றியும் , ஆன்ம அனுபவங்களைப் பற்றியுமே எடுத்துக் கூறி, அந்நிலைக்கு நம்மை அழைக்கின்றார்.

வள்ளலாரின் ஆறு திருமுறைகளையும் சுருங்கக் கூற வேண்டும் என்றால்

1. ஜீவ நிலையிலிருந்து ஆன்ம நிலைக்கு ஏறு

2. ஆன்ம நிலையிலிருந்து சிவ நிலைக்கு ஏறு - சிவமாகவே மாறு - அவ்வளவே


BG Venkatesh














bg venkatesh

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)