Thursday, November 26, 2009

[vallalargroups:2437] Re: Clarify my doubt

அன்புள்ள ஆறுமுக அரசு அவர்களுக்கு
அன்பர் சதீஷ் கூறியது போல், வள்ளல் பெருமான் அவர்களுடைய புற கண்களை
அகம் நோக்கி திருப்பி  கண்ட காட்சிகள் தாம் அவை. அது கனவு நிலையும் நினைவு  நிலையும் கடந்த  ஒரு விழிப்பு நிலை ஆகும். இது பற்றி அறிய திருகண்டேஸ்வரம் சாது சிவராமன் அவர்களிடம் இன்னும் விரிவாக நீங்கள் அறிந்து கொள்ளலாம்.அவரைப்பற்றி அறிந்திரிப்பிர்கள் என எண்ணுகிறேன் எனினும் அவருடைய முகவரி
 
His Holiness Sadhu.SivaRamanar,
Thirukandeswaram,
Cuddalore dist.
கடலூர்    டு பண்ருட்டி மார்க்கம் நெல்லிகுப்பம் அடுத்த நிறுத்தம் திருகண்டேஸ்வறம்(வாழைப்பட்டு ) 

--
Regards
N.Rajarajan

Mobile: 9791038178
 
25 நவம்பர், 2009 5:25 pm அன்று, arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com> எழுதியது:
அன்புள்ள சன்மார்க்க அன்பர் சதீஷ் அவர்களுக்கு,

மிக்க மகிழ்ச்சி. தாங்கள் சிறப்பாக ஆராய்ச்சி செய்துள்ளீர்கள்.
நமது வள்ளல் பெருமான் கண்ட காட்சிகள் எல்லாம் 
மனம் கடந்த காட்சி ஆகும்.
ஏனென்றால் மனம் இயங்கும் நிலையில் 
உலக விஷயங்களில் மனம் செல்ல ஆரம்பித்து விடும்.
அதுமட்டுமல்லாமல் 
நான் என்கின்ற உணர்வு கடந்த  நிலையில் மட்டுமே 
ஆன்மா காட்சி கிடைக்கும்.
அது ஆன்மா அடையும் அருட் காட்சி.
அது உடலில் உள்ள தூலமான கண்களினால் 
கண்ட காட்சி அல்ல.
தூலமான கண்களையும், மனதையும் கடந்த காட்சியினை 
நமது வள்ளல் பெருமான் தன்னுடைய 
ஆன்மா அனுபவத்தை வார்த்தைகளால் எழுதி உள்ளார்கள்.
 
இதை ஞானத்தில் தற்போதம் அற்ற நிலையில்
ஆன்மா அருள் நிலையினை அடைந்து
அருட் காட்சிகளை கண்டு பின் அதை விட்டு விலகி
நிற்கும். அப்போது சிவம் ஆன்மாவை விழுங்கி விடும்.
அதாவது சிவத்தில் ஆன்மா கலந்து விடும்.
அதன் பிறகு ஆன்மா என்கின்ற உணர்வு அற்ற நிலை 
ஏற்படுவதனால் இந்த அனுபவத்தை 
அறிய ஆன்மா இல்லாமல் சிவம் மட்டுமே இருக்கும்.

மேலும் இவை அனுபவத்தில் விளங்கும்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு


2009/11/21 sathish / 8015957067 <mdsat5@gmail.com>

dear arumugha arasu

in the below line you said like that god has not visible one .


ஆக அதன் அனுபவம் நமது மனத்தால் அறிய முடியாதது.
நாம் தூங்கி எழுந்த பின்னர் நாம் கண்ட கனவை ஞாபகப் படுத்தி
கனவில் கண்டவைகளை கூறுவது போல்
இந்த அனுபவத்தை கனவில் கண்டதை போல் ஞாபகப் படுத்தி
பார்த்தால்தான் நாம் பெற்ற அன்பவம் விளங்கும்  
அருட் காட்சி என்றாலே ஸ்தூல காட்சி அல்ல  
என்பது நமக்கு தெரியும்.
 

but vallalar song in 6th thirumari some topics has vallalar said i seen the god.

refer below topics in 6th thirumari

1.ஆணிப்பொன்னம்பலக் காட்சி

2.
அருட்காட்சி 

(
துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும்
 வள்ளலைக் கண்டேன டி - அக்கச்சி
வள்ளலைக் கண்டேன டி)

3.கண்புருவப் பூட்டு

(
ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்
ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்
தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்
தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம் )

4.திரு உந்தியார்

எந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன்
சிந்தை மகிழ்ந்தேன்என்று உந்தீபற
சித்திகள் பெற்றேன்என்று உந்தீபற

( 4903 )
தந்தையைக் கண்டேன்நான் சாகா வரம்பெற்றேன்
சிந்தை களித்தேன்என்று உந்தீபற
சித்தெலாம் வல்லேன்என்று உந்தீபற

5.கண்கொளாக் காட்சி

அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங்
காண்டானைச் சிறுநெறிகள் அடையா தென்னைத்
தடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானைத்
தன்னருளும் தன்பொருளும் தானே என்பால்
கொடுத்தானைக் குற்றமெலாம் குணமாக் கொள்ளும்
குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை
எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே
ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே (all songs)

6.காட்சிக் களிப்பு

அறிந்தானை அறிவறிவுக் கறிவா னானை
அருட்பெருஞ்சோ தியினானை அடியேன் அன்பில்
செறிந்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தாய்ச்
சிறந்தானைச் சிறுநெறியில் சென்றார் தம்மைப்
பிறிந்தானை என்னுளத்தில் கலந்து கொண்ட
பிரியமுள பெருமானைப் பிறவி தன்னை
எறிந்தானை எனைஎறியா தெடுத்தாண் டானை
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே (all songs)


*************எட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப்
பட்டிமண் டபத்திற் பதித்தமெய்த் தந்தையே
**************


by sathish



2009/11/18 arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>

அன்புள்ள சன்மார்க்க அன்பர் சதீஷ் அவர்களுக்கு,

ஒன்றான மெய்பொருள் சிவம் 
அதுவே அருட்பெரும் ஜோதி
அது நம்முள் ஆன்மாவாக  விளங்குகிறது.
ஒன்றான சிவ்த்திலிருந்து சிவம் என்ற நிலையில் 
இருந்து ஆன்மா என்ற நிலை அடைந்தது.
அது நமது புருவ மத்தியம் என்று சொல்லப்படுகின்ற
புருவ மதியத்திற்கு உட் புறமாக நடு உச்சி மண்டைக்கு கீழாக
ஒளி வடிவத்தில் வெற்றிடத்தில் உள்ளது.
அதை நாம் தரிசனம் செய்ய வேண்டும் என்றால் நம் உணர்வு கடந்த நிலையில் தான் காண முடியும்.
ஆக அதன் அனுபவம் நமது மனத்தால் அறிய முடியாதது.
நாம் தூங்கி எழுந்த பின்னர் நாம் கண்ட கனவை ஞாபகப் படுத்தி
கனவில் கண்டவைகளை கூறுவது போல்
இந்த அனுபவத்தை கனவில் கண்டதை போல் ஞாபகப் படுத்தி
பார்த்தால்தான் நாம் பெற்ற அன்பவம் விளங்கும்.
மேலும் சிவத்தோடு ஜீவன் கலக்கின்ற நிலை
நான் என்கின்ற உணர்வு அற்றால்தான் கை கூடும்.
உணர்வு சிறிது தலை தூக்கினாலும்
அருள் தரிசனம் கை கூடாது.
ஆகவே ஜோதி தரிசனம் காண வேண்டும் என்கின்ற
உணர்வோடு தவம் செய்தால் நிச்சயமாக தரிசனம் கிடைக்காது.
அதற்காக தான் நமது வள்ளல் பெருமான்
இது நான் அனைத்தையும் விட்டதனால் வந்தது 
என்று கூறினார்கள்.
உறும் உணர் உணவும் உணர்வெலாம் கடந்த
அனுபவமாகிய அருட்பெரும் ஜோதி.
அதுவே ஆன்மாவின் அனுபவம்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு



2009/11/18 satheesh M <vallalar82@gmail.com>
Dear sir,

what is mean by meiporul?

Where it is in us?

Please clarify this .

Soul,
satheesh.M

--
visit the great wisdom site.

www.vallalyaar.com



--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு








--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு







--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)