Wednesday, November 11, 2009

[vallalargroups:2379] Re: குருவிடம் உபதேசம்

அன்புள்ள சன்மார்க்க அன்பர் ஜெகநாதன் நாராயண சாமீ அவர்களுக்கு,
நமது வள்ளல் பெருமான் எந்த இடத்திலும்
ஆழ் மனத்திற்கு உள்ளொளி உள்ளது என்று சொன்னது இல்லை.
உள்ளொளி என்பது உரை மனம் கடந்த ஒரு பெரு வெளி மேல் 
உணர்வு கடந்த நிலையில் காண்பது.
மனதிற்கு எந்த ஒளியும் ஒலியும் கிடையாது.
மனம் எப்போது அறிவில் ஒடுங்குகிறதோ 
அப்போதுதான் சுடர் தெரியும்.
அந்த சுடரும் ஆன்மாவின் ஒளி தானே தவிர
மனதிற்கு ஒளி என்பது கிடையாது.
ஆக ஆழ் மனதிற்கும் வெளி மனதிற்கும்
ஒளியோ அருளோ கிடையாது.
நம்மை தவறான பாதைக்கு செலுத்த வல்ல மனம்
ஆழ் மனமாக இருந்தால் என்ன வெளி மனமாக இருந்தால் என்ன
மனம் எப்போதும் மனம்தான்.
அதன் இயற்கை குணம் எப்போதும் மாறாது.
மனம் வென்ற வல்லபதாலேயே 
இறை நிலையை உணரவாவது முடியும்.
ஆகவே ஆழ் மனத்திற்கு உள்ளொளி உண்டு என்று
தவறான கருத்தை புகுத்த வேண்டாம்.
அன்புடன்,
விழித்திரு ஆறுமுக அரசு
.

 

2009/11/11 Jagannathan Narayanasamy <janakum1@yahoo.co.in>

அருட்பெரும்சோதி அருட்பெரும்சோதி
தனிப்பெரும்கருணை அருட்பெரும்சோதி
 எலோரும் இன்புற்று வாழ்க வளமுடன்.     
 
வள்ளலார் கோட்ட அன்பர்களுக்கு வணக்கம்.
புனையுருவிலுள்ள குருக்களை நம்பி வழிதவறிக் கெடுவதைவிட, வள்ளலார் சுட்டும் வழியில் நம் ஆழ்மனத்தின் உள்ளொளி கொண்டு அறிவு காட்டும் பாதையில் சென்று ஞானம் பெறுவது சிறக்கும்.
 
அன்புடன் செ.நாராயணசாமி.  
--- On Tue, 10/11/09, Mohan Suresh <psureshdreams@gmail.com> wrote:

From: Mohan Suresh <psureshdreams@gmail.com>
Subject: [vallalargroups:2375] குருவிடம் உபதேசம்
To: "vallalar groups" <vallalargroups@gmail.com>, br0411@sib.co.in, vallalargroups@googlegroups.com, vallalartrust@gmail.com, "Ramanujam A" <getramanujam@gmail.com>
Date: Tuesday, 10 November, 2009, 10:52 PM

நெருப்பிலிட்ட தங்கம் அழுக்கு நீங்கி பிரகாசிப்பது போல், ஒரு குருவிடம் உபதேசம், கேள்வி முதலியவற்றைக் கற்றால், மனமும் அழுக்குகள் நீங்கப்பெற்று ஒளியுடன் பிரகாசிக்கும்.
 
ஒளியின் உதவியில்லாமல் எதையும் பார்க்க முடியாது. அதுபோல உள்மனதில் தன்னைப் பற்றிய ஆராய்ச்சியின்றி ஞானத்தை அடைய முடியாது. கண்ணாடி போன்ற தூய்மையான மனதில் ஞானம்
தானாகவே விளங்கித் தோன்றும். ஆகையால், நாம் ஒவ்வொருவரும் மனதை பரிசுத்தமாக்குவதில் அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
 
எதிரி, நண்பன், மகன், உறவினன் என்று பிரித்துப் பார்க்காமல், யாரிடத்தும் நட்பும் பகையும் கொள்ளாமல் எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும்.
 
பகலும், இரவும், மாலையும், காலையும் பருவகாலங்கள் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு காலம் விளையாடுகிறது. வயது கழிகிறது. ஆனால், ஆசை மட்டும் மனிதனை விடுவதில்லை.
 
நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே. உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். மனதுடன் நடத்தும் போராட்டம் என்றும் ஓய்வதில்லை. விழிப்பு நிலையில் மட்டுமல்ல, உறக்க நிலையிலும் கூட மனதின் போராட்டம் நம்மை விட்டு ஒருபோதும் நீங்குவதில்லை
 
உடலுக்கு கிடைக்கும் இன்பத்தை எவ்வளவு தான் அனுபவித்தாலும் ஒருவனுக்கு நிரந்தரமான திருப்தி கிடைக்கப் போவதில்லை. இருந்தாலும், மனம் அந்தஆசையை விட்டு விட இடம் தருவதில்லை.
 
பாலைவனத்தில் தூரத்தில் தெரியும் கானல்நீர் அருகில் சென்றதும் மறைவது போல, மனதில் வாழ்வில் உண்டாகும் இன்பங்களும் நம்மை ஏமாற்றக்கூடியவையே. அவை நிரந்தரமானதல்ல


 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க


The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage





--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)