Saturday, November 14, 2009

[vallalargroups:2395] Re: ஆன்மிக சிந்தனைகள் » வள்ளலார்

thakes for your massage for the vallalar karuthukal
 
once more thk,
regds,
p.siva krishnan

 
On 11/9/09, Mohan Suresh <psureshdreams@gmail.com> wrote:
பயம் கூடவே கூடாது
ஆகஸ்ட் 26,2009,08:58  IST


* சூரியோதயத்திற்கு முன் தூக்கத்திலிருந்து விழித்தெழுங்கள். அதிகாலைப் பொழுது கடவுளைத் தியானம் செய்ய ஏற்றவேளை. இவ்வேளையில் விபூதி தரித்துக் கொண்டு கடவுளை சிந்திப்பது மிகவும் நல்லது.

* எந்த விதத்திலும் உணவில் புலால் சேர்க்கக்கூடாது. எவ்வளவு சுவையுள்ளதாக இருந்தாலும் அளவோடு உண்பது சிறப்பு. பகலில் சிறிது நேர ஓய்வும் கூட உடலுக்கு மிகவும் பயனுடையதாகும்.

* மாலை வேளையில் கொஞ்ச தூரம் வியர்க்கும்படியாக நடை பயில வேண்டும். இரவு உணவு பகல் உணவைக் காட்டிலும் குறைவாக இருக்க வேண்டும். எப்போதும் பயப்படுதல் கூடாது.

* கொலை, கோபம், சோம்பல், உரத்துப் பேசுதல், பொய், பொறாமை, கடுஞ்சொல் இவையெல்லாம் அறவே தவிர்க்க வேண்டியவை. உற்சாகத்தை எப்போதும் இருக்கும்படியான நல்ல மனநிலை வேண்டும்.

* உடலுக்கு உயிர் ஒன்றே. அதுபோல, இவ்வுலகம் முழுமைக்கும் கடவுள் ஒருவரே. தெய்வங்கள் பல என்று சிந்திப்பது திருவருளைப் பெறாதவர்கள் சொல்வதாகும்.


கருணை நிறைந்தவராய் இருங்கள். உங்கள்மனதில் இரக்கம் ஊற்றுப் போல பொங்கி வழியட்டும். அடுத்தவர் துன்பங்களைப் போக்க உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
வயிற்றுப் பசிக்காக மற்ற உயிர்களைக் கொன்று உண்பது கூடாது. உயிர்க்கொலை புரிவோர் எமக்கு எந்நாளும் உறவாக மாட்டார்கள். இறைவன் உங்கள் கண்ணுக்கு எட்டுவதில்லை. ஆனால், கருத்துக்கு எட்டுவான். அன்போடு அவனை பற்றிப் பிடியுங்கள். நம்மை விட்டு விலகவே மாட்டான். அன்பு எங்கிருக்கிறதோ அங்கே இறைவன் இருக்கிறான். பலகாலம் இறைவனை வழிபாடு செய்வதால் உண்டாகும் நன்மைகளை எல்லாம் தர்மம் செய்து ஒரேநாளில் பெற முடியும். தர்மத்தின் பயனை உணர்ந்து கொண்டவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தர்மம் செய்வார்கள். எத்தனை படிகள் என்று மலைத்து நிற்காதீர்கள். எல்லாப் படிகளையும் படிப்படியாக கடந்து விடலாம். உச்சிக் கமலத்தில் ஊற்றெடுக்கும் அமுதத்தைப் போல ஆண்டவன் இருக்கிறான். மனந்தளராமல் கடவுளைக் காணும் முயற்சியை மேற்கொள்ளுங்கள். புலால் உண்ணும் மனிதர்களைக் கண்டால் என் மனம் நடுங்குகிறது. அருட்பெருஞ்சோதியை உள்ளும் புறமும் காண்பவர்கள் மன்னுயிரைத் தன் உயிர்போல் மதித்து நடப்பார்கள்.


கருணை நிறைந்தவராயிருங்கள்
டிசம்பர் 11,2007,21:37  IST

இங்கே இறைவன் ஒருவன்தான். இறவாமை கல்விக்குத்தான். மனிதன் இனங்கள் பல கண்டாலும் இறப்பில் எல்லோரும் ஒன்றே.

இவர்கள் நிறத்தில் வெளுத்திருந்தாலும் மனத்தே கருத்தவர்கள். வெளியே வெளிச்சம், உள்ளே இருட்டு. இத்தகு மனிதர்கள் வாழும் இந்த உலகத்தைத் திருத்தி இவர்களுக்கு மண்ணிலே விண்ணைக்காட்ட மகேசன் என்னைப் படைத்தான்.

தன்னை எத்தனை நிந்தித்துப் பேசியபோதும் இறைவன் இவர்களிடம் தயவாகவே உள்ளான். நான் சூது பேசவில்லை. இவர்களை எனது சுற்றத்தாராகவே எண்ணுகிறேன். இவர்கள் தங்கள் வெற்றான விவாதங்களை விட்டு அந்த மேம்பட்டவனின் அருளைப் போற்றுதல் வேண்டும். காலத்தை வீணில் கழித்திடல் ஆகாது.

தாழ்ந்த குலம், உயர்ந்த குலம் என்று தரம் பிரித்து பார்க்கின்றோம். நரை, மரணம், மூப்பு அறியாத நல்லுடம்பைப் பெற்றவரல்லவா நற்குலத்தவர் ஆவார்.

கருணை நிறைந்தவராயிருங்கள். அது உங்கள் உள்ளத்தில் ஊற்றாய் பொங்கட்டும்; உடம்பெங்கும் வழிந்தோடட்டும். அடுத்தவர் துன்பத்தைக் காணச் சகியாதவரே கருணைமிக்கவர். அடுத்தவர் படும் இன்னலைத் துடைத்தெறிவதே கருணை உள்ளம்.

நான் இறவாத உடம்பு கேட்டேன். இறைவன் எனக்கு உவப்புடன் அளித்தான்.

தன்னைப் போலவே பிறரையும் பாவிக்கின்ற மனம் இவர்களிடம் இல்லை. இவர்கள் சக மனிதர்களின் மனதைத் தின்கிறார்கள். சாத்விகமான விலங்குகளின் உடம்பைத் தின்கிறார்கள். இந்தப் புலால் நெறி கண்டல்லவோ என் உள்ளம் வெதும்புகிறது. இவர்களது கொலைவெறி கண்டல்லவோ நான் அஞ்சுகின்றேன்.

இடையூறின்றி எதையும் செய்யுங்கள்
டிசம்பர் 21,2007,22:24  IST

அன்பு வெள்ளமாகும். அது ஒருநாள் நம்மை முற்றும் விழுங்கிக் கரை கடந்து போகும்.

மறப்பது மனிதரியல்பு, மறக்காதிருப்பது மகத்தான இயல்பு. இங்கே பெற்ற தாயை மகன் மறக்கலாம். பிள்ளையைத் தாய் மறக்கலாம், தாங்கி நிற்கும் உடலை உயிர் மறக்கலாம், தனது ஆதாரமான ஆவியை உடல் மறக்கலாம், நெஞ்சம் கற்றதை மறக்கலாம், ஆனால், தவத்தில் மிக்கார் மனத்தில் உறையும் தலைவனை நாம் மறக்கலாமா?

எல்லைகளைக் கட்டியாள எண்ணமில்லை. எதிலெதிலோ பற்று வைத்து மாளவும் விரும்பவில்லை. அந்த சொர்க்கமே கிடைப்பதாயினும் அதை தூக்கி எறிந்துவிட்டு என் மேலோனின் கருணை ஒன்றையே வேண்டி நிற்பேன்.

அருட் பெருஞ்ஜோதி என்பது அகத்தேயும், வெளியேயும் வெளிச்சத்தைத் தருகிறது.

நீங்கள் எதைச் செய்தாலும், அது அடுத்தவருக்கு எந்தக் காலத்திலும் இடையூறு செய்வதாய் இருக்கக்கூடாது. அதுவே பொது நோக்கு. உங்கள் எண்ணமும் செயலும் நல்லதாய் இருக்க வேண்டும்.

நமது புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணி பிரகாசம் பொருந்தி இருக்கிறது. இந்த ஜோதி மணியைத்தான் நாம் 'சண்முகம்' என்று அழைக்கிறோம்.

பானையில் சோறு வெந்துவிட்டதா என்று பார்க்க ஒவ்வொரு சோற்றையுமா பதம் பார்க்கிறார்கள். ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு போதும் பதம் பார்க்க. அதுபோல எல்லாச் சமய மதத் தெய்வங்களையும் ஆய்வு செய்யாமல் நம் நாட்டிலே பெரும்பாலாகப் பரவியுள்ள சைவ, வைஷ்ணவ சமயத் தெய்வங்களை ஆய்வு செய்து உண்மையைப் புரியவைத்தால் அந்த ஆய்வு மற்ற சமய மதங்களுக்கும் பொருந்தும்.

சாப்பிட மட்டும் தான் விருப்பமா?
ஜனவரி 07,2008,14:27  IST

* தெய்வ வழிபாடு மிக மிக அவசியம் என்று உணர்தல் வேண்டும். இல்லாவிட்டால் சமரசம், சன்மார்க்கம், எல்லா உயிர்களும் ஒன்று என்று பேசும் உரையாடல் யாவும் வெறும் பேச்சாக அன்றி, ஒரு செல்லாக் காசுக்கும் உதவாது.

* பிறருடைய பசியை அகற்றுவதோடு மட்டும் ஒருவனுடைய ஒழுக்கமும் கடமையும் முடிவது கூடாது. பிறருக்கு ஏற்படும் ஏனைய துன்பங்களைக் களையவும் ஒவ்வொருவரும் உவந்து முன்வர வேண்டும்.

* சோறு சாப்பிடுவதிலே மட்டும் மிகுந்த விருப்பமுள்ள ஒருவன் செய்யும் தவம் சுருங்கிப்போகும். ஆற்றிலே கரைத்த புளிபோல அது பயன் தராது.

ஒவ்வோர் உயிரும், தன் அறிவின் பயனாக அன்பைக் காட்டி, அந்த அன்பின் பயனாக அருளிரக்கம் கொண்டு, ஏனைய உயிர்களின் நன்மைக்காக உள்ளம் கசிந்து, உயிர்களின் துன்பத்தைக் கண்டபோது உள்ளம் குழையும் இயல்பே அருள் இயல்பு ஆகும்.

* வஞ்சகத்தோடு கூடிய துன்ப வாழ்க்கையை ஒழித்து, அருள் நெறியில் ஒன்றாக இன்பமாக வாழ்வதை விரும்பி, உலகம் முழுவதும் ஒன்றாகிக் களிப்படைந்து வாழும் நிலை என்றுதான் வருமோ?

* நாள்தோறும் ஆண்டவனை வணங்கி வாழ்தல் வேண்டும். இல்லையேல், உலகத்தில், உயிர்களிடத்தில், அன்பும், அருளிரக்கமும் ஒரு சிறிதேனும் ஏற்படாது.

* அன்பையும், இரக்கத்தையும், அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையை நடத்துபவனுக்கு எல்லாம்வல்ல பரம்பொருள் அருள்ஜோதி ஆண்டவர் தமது இன்னருளை வழங்குவார்.

* ஆண்டவன் எல்லா உயிர்களையும் ஒரே நோக்கமாக சம பாவனையாகப் பார்க்கும் இயல்புடையவர். ஆதலால் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் அருள்பெற வேண்டுமானால் அவர்களுக்குச் சமத்துவ சிந்தை பரந்த நோக்கம் இன்றியமையாதவை.

வாழ்க்கை ஒரு மாயப்பேழை
ஜனவரி 18,2008,22:52  IST

* உலகம் பொன்னுக்கும், பொருளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாய் இருக்கிறது. யாரையேனும் நாடிச் சென்றால் இந்த ஆள் நம்மிடம் ஏதேனும் பற்றிச் செல்லத்தான் பலகாலும் வந்து கொண்டிருக்கிறானோ என்று கருதிக் கொள்வார்கள். அதன் காரணமாக அலட்சியமாய் நடந்து கொள்ள முற்படுவார்கள்.

* அடுத்தவர் அணியும் ஆடை அணிகலன்களையும், அவர்தம் நடையின் பாங்கையும் நான் கருத்தூன்றிப் பார்ப்பதில்லை. எனக்குக் கைநீட்டி நடக்கவே மனம் கூசுகிறது. அதில் கர்வம் இருப்பதாய் படவும் கைகளைக் கட்டிக்கொண்டுதான் நடக்கிறேன். உயர்ந்த ஆசனத்தில் உட்காரப் பிடிக்காது. நான் கால்மேல் கால் போட்டு அமரவும் கூசுவேன். சயனிப்பதற்கு சவுகரியமான படுக்கையைத் தேடமாட்டேன். வாய்விட்டுப் பாடமாட்டேன். நீட்டி முழக்கிப் பேசிட அஞ்சுவேன்.


* எல்லாம் தெரிந்தவர் போல் பிறர்க்கு உரைப்பது மனித இயல்பு. குறைவற்ற அறிவு நாம் பெற்றிருக்கிறோமா, குறைவற்ற மனத்தை நாம் கொண்டிருக்கிறோமோ என்றவர்கள் சுயமதிப்பீடு செய்து கொள்வதில்லை.


* நான் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில்லை.


* ஏழு திரைகளுக்கு அப்பால் இருக்கிறது பேருண்மை. அவன் அத்தனை திரைகளையும் அகற்றி எனக்கு மெய்ப்பொருள் வெளிப்படச் செய்தான். நம்மில் ஒரு மாயை பேழையைத் தந்தான். அரிய பொருள் ஒன்று அதிலிருப்பதாகச் சொன்னான். திறந்து பாரென ஒரு திறவுகோலையும் கொடுத்தான். வாழ்க்கை முழுவதும் அதைத் திறந்து பார்க்கிற முயற்சியில் நான் இருக்கிறேன்.


* பொய்யை மெய்யாக்கி போற்றத் தெரிந்தவர்கள் வணங்கி நிற்பது ஒரு தெய்வமே அல்ல, வழியாய்க் கொண்டதும் ஒரு வழி அல்ல.

எத்தனை படிகள் இருந்தாலென்ன?
ஆகஸ்ட் 09,2008,09:58  IST


இறைவன் உங்கள் கண்ணுக்கு எட்டுவதில்லை. கருத்துக்கு எட்டுவான். உங்கள் கைக்கு எட்டுவதில்லை. வாய்க்கு எட்டுவான். அவனை அன்போடு பற்றுங்கள். விலகமாட்டான். எங்கே அன்பிருக்கிறதோ அங்கே இறைவன் இருக்கிறான். பலகாலம் ஆண்டவனை வணங்கிப் பெறும் புண்ணிய பலன்களை எல்லாம் ஒரே நாளில் பெற முடியும். எப்படி என்றால் பசியால் வாடும் அன்பர் முகம் மலர உணவினைத் தருமம் செய்யுங்கள். நிச்சயம் புண்ணியம் கிடைக்கும். எத்தனை படிகள் என்று மலைத்து நிற்காதீர்கள். எல்லாப் படிகளும் கடந்து விடலாம். உச்சிக் கமலத்தில் ஊற்றெடுக்கும் அமுதத்தை உண்டு களிக்கலாம். மனதில் இறைவனை அடைய வேண்டும் என்ற வைராக்கியத்தை மட்டும் பற்றிக் கொள்ளுங்கள். கதிரவன் ஓடிக்கொண்டே இருக்கிறான். அவன் பின்னால் காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொருநாளாய் இரவும்பகலும் கழிகிறது. காலத்தை விரயம் செய்யாமல் நிலையான தருமங்களைச் செய்யுங்கள்.மறப்பது மனிதர் இயல்பு. பெற்ற தாயை மகன் மறக்கலாம். பிள்ளையைத் தாய் மறக்கலாம். உடலை உயிர் மறக்கலாம். உயிரை உடல் மறக்கலாம். நெஞ்சம் தான் கற்ற கல்வியை மறக்கலாம். ஆனால், தவத்தில் சிறந்தவர்களின் மனத்தில் உறையும் இறைவனை மறக்கக் கூடாது.

படிகளைக்கண்டு மலைக்காதீர்கள்
செப்டம்பர் 18,2008,09:11  IST


கருணை நிறைந்தவராய் இருங்கள். உங்கள்மனதில் இரக்கம் ஊற்றுப் போல பொங்கி வழியட்டும். அடுத்தவர் துன்பங்களைப் போக்க உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
வயிற்றுப் பசிக்காக மற்ற உயிர்களைக் கொன்று உண்பது கூடாது. உயிர்க்கொலை புரிவோர் எமக்கு எந்நாளும் உறவாக மாட்டார்கள். இறைவன் உங்கள் கண்ணுக்கு எட்டுவதில்லை. ஆனால், கருத்துக்கு எட்டுவான். அன்போடு அவனை பற்றிப் பிடியுங்கள். நம்மை விட்டு விலகவே மாட்டான். அன்பு எங்கிருக்கிறதோ அங்கே இறைவன் இருக்கிறான். பலகாலம் இறைவனை வழிபாடு செய்வதால் உண்டாகும் நன்மைகளை எல்லாம் தர்மம் செய்து ஒரேநாளில் பெற முடியும். தர்மத்தின் பயனை உணர்ந்து கொண்டவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தர்மம் செய்வார்கள். எத்தனை படிகள் என்று மலைத்து நிற்காதீர்கள். எல்லாப் படிகளையும் படிப்படியாக கடந்து விடலாம். உச்சிக் கமலத்தில் ஊற்றெடுக்கும் அமுதத்தைப் போல ஆண்டவன் இருக்கிறான். மனந்தளராமல் கடவுளைக் காணும் முயற்சியை மேற்கொள்ளுங்கள். புலால் உண்ணும் மனிதர்களைக் கண்டால் என் மனம் நடுங்குகிறது. அருட்பெருஞ்சோதியை உள்ளும் புறமும் காண்பவர்கள் மன்னுயிரைத் தன் உயிர்போல் மதித்து நடப்பார்கள்.


எண்ணங்களை கடவுளிடம் சொல்லுங்க!
அக்டோபர் 05,2008,09:37  IST


சிலருக்கு தூங்குவதில் சுகம். உணவை ருசித்து உண்டு மகிழ்வது சிலருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இன்னும் சிலர் பொழுதை விளையாடிக் கழிக்கிறார்கள். நாடகம், கூத்து இவற்றில் இன்பம் காண்பவர்களும் உண்டு. ஆனால், என்றும் அழியாத இன்பம் ஆண்டவனே என்பதை மக்கள் உணர மறுக்கிறார்கள். அழுத பிள்ளைக்கு பால் கிடைக்கும். எதையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்தால் அதற்கு பசிக்கிறது என்பதை தாய் அறியமாட்டாள். அதனால் உங்கள் எண்ணங்களை இறைவனிடம் சொல்லுங்கள். அவன் பரிசீலனை செய்து விரைவில் பலன் கொடுப்பான்.
புலால் உண்பவன் வயிற்றில் இறந்து போன உயிர்களின் உடல்கள் புதைக்கப்படுகின்றன. அசைவ உணவு உண்பவன் வாழ்வில் ஆன்மிக வளர்ச்சி துளியளவும் ஏற்படாது. பசியுடன் இருக்கும் ஜீவனுக்கு ஆன்மிகம் புரியாது. அந்த மனிதனுக்கு உணவு அளித்து பசித்தீயை போக்குங்கள். அந்த ஜீவகாருண்ய உணர்வே மிக உயர்வானது.
தன்னுயிர் போல மன்னுயிரை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவ்வுயிர்களுக்கு துன்பம் இழைக்காதீர்கள். பிறருக்கு உண்டாகும் ஆபத்துக்களை அகற்றி, அச்சம் போக்க வேண்டியது அருள்வாழ்வின் அடிப்படை

எண்ணங்களை கடவுளிடம் சொல்லுங்க!
அக்டோபர் 09,2008,09:47  IST


சிலருக்கு தூங்குவதில் சுகம். உணவை ருசித்து உண்டு மகிழ்வது சிலருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இன்னும் சிலர் பொழுதை விளையாடிக் கழிக்கிறார்கள். நாடகம், கூத்து இவற்றில் இன்பம் காண்பவர்களும் உண்டு. ஆனால், என்றும் அழியாத இன்பம் ஆண்டவனே என்பதை மக்கள் உணர மறுக்கிறார்கள். அழுத பிள்ளைக்கு பால் கிடைக்கும். எதையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்தால் அதற்கு பசிக்கிறது என்பதை தாய் அறியமாட்டாள். அதனால் உங்கள் எண்ணங்களை இறைவனிடம் சொல்லுங்கள். அவன் பரிசீலனை செய்து விரைவில் பலன் கொடுப்பான்.
புலால் உண்பவன் வயிற்றில் இறந்து போன உயிர்களின் உடல்கள் புதைக்கப்படுகின்றன. அசைவ உணவு உண்பவன் வாழ்வில் ஆன்மிக வளர்ச்சி துளியளவும் ஏற்படாது. பசியுடன் இருக்கும் ஜீவனுக்கு ஆன்மிகம் புரியாது. அந்த மனிதனுக்கு உணவு அளித்து பசித்தீயை போக்குங்கள். அந்த ஜீவகாருண்ய உணர்வே மிக உயர்வானது.

தன்னுயிர் போல மன்னுயிரை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவ்வுயிர்களுக்கு துன்பம் இழைக்காதீர்கள். பிறருக்கு உண்டாகும் ஆபத்துக்களை அகற்றி, அச்சம் போக்க வேண்டியது அருள்வாழ்வின் அடிப்படை.


தானம் கொடுப்போரை தடுப்பது பாவம்
அக்டோபர் 12,2008,17:51  IST


ஏழைகள் வயிறு எரியச் செய்வது பாவம். பசித்தோர் முகத்தை பாராதிருப்பது பாவம். கோள் சொல்லி குடும்பம் கலைப்பது பாவம். குருவை வணங்க கூசி நிற்பது பாவம்.


மாமிசம் உண்டு உடலை வளர்ப்பது பாவம். கல்லும் நெல்லும் கலந்து விற்பது பாவம். தவம் செய்வோரை தாழ்த்தி பேசுவது பாவம். தாய் தந்தை மொழியை தட்டி நடப்பது பாவம்.


நல்லோர் மனதை நடுங்க செய்வது பாவம். தானம் கொடுப்போரை தடுப்பது பாவம்

More :

http://www.dinamalar.com/aanmeegam_detail.asp?news_id=324&ncat=VALLALAR

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க






 



--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)