Monday, November 9, 2009

[vallalargroups:2367] Re: Fwd: [vallalargroups:2362] அருட்பெருஞ் ஜோதி அகவல்

Just now I called my dad to find out what it is? Yes my dad Mr.Arivalagan told the same. Before I could post Mr.Arumuga Arasu has posted the same information.
 
Thank you.

2009/11/9 arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

இருங்கடல் என்றால்
நல்வினை - தீவினை 
நாம் செய்கின்ற நல்ல செயல்கள் யாவும் நல் வினையாகவும் 
நாம் செய்கின்ற தீய செயல்கள் யாவும் தீவினையாகவும்
நமது ஜீவனில் பதிவாகின்றன
அந்த பதிவுகளே பிறப்பிற்கு வித்தாக அமைகிறது.
ஆக இரு வினைகளை நீக்கினால் மட்டுமே 
மீண்டும் பிறப்பதில் இருந்து விடுபடலாம்.


2009/11/9 Mahesh kumar <velmahesh@gmail.com>

Hi,
 
எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்திஎன்
அல்லலை நீக்கிய அருட்பெருஞ் ஜோதி
 
 
இங்கு "இருங்கடல்"  என்றால் என்ன?
 


---------- Forwarded message ----------
From: kuzhali <kuzhali.arivalagan@gmail.com>
Date: Nov 8, 2009 6:09 PM
Subject: [vallalargroups:2362] அருட்பெருஞ் ஜோதி அகவல்
To: vallalargroups@googlegroups.com
Cc: kuzhali <kuzhali.arivalagan@gmail.com>

அருட்பெருஞ்  ஜோதி  அருட்பெருஞ்  ஜோதி
அருட்பெருஞ்  ஜோதி  அருட்பெருஞ்  ஜோதி

அருட்சிவ நெறிசார்  அருட்பெரு நிலைவாழ்
அருட்சிவ பதியாம்  அருட்பெருஞ் ஜோதி

ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
ஆகநின்று  ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி

இகநிலைப் பொருளாய் பரநிலைப் பொருளாய்
அகமறப்  பொருந்திய அருட்பெருஞ் ஜோதி

ஈனமின்றி   இகபரத்து இரண்டின்மேற் பொருளாய்
ஆனலின்று ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி

உரைமனங் கடந்த ஒருபெரு  வெளிமேல்
அரைசு  செய்து ஓங்கும் அருட்பெருஞ் ஜோதி

ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் யாக்கையும் 
ஆக்கமும் அருளிய அருட்பெருஞ் ஜோதி

எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்திஎன்
அல்லலை நீக்கிய அருட்பெருஞ் ஜோதி

ஏறா நிலமிசை ஏற்றியென் றனக்கே
ஆறாறு காட்டிய   அருட்பெருஞ் ஜோதி

ஐயமும் திரிபும் அறுத்தெனது உடம்பினுள்
ஐயமும் நீக்கிய அருட்பெருஞ் ஜோதி

ஒன்றென இரண்டு என  ஒன்று இரண்டு என இவை 
அன்றென விளங்கிய அருட்பெருஞ் ஜோதி

ஓதாது உணர்ந்திட  ஒளியளித்து எனக்கே
ஆதாரம் ஆகிய அருட்பெருஞ் ஜோதி

ஔவியம் ஆதியோர் ஆறுந் தவிர்த்தபேர்
அவ்வியல் வழுத்தும்  அருட்பெருஞ் ஜோதி

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி

அருட்பெருஞ் ஜோதி  அருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி  அருட்பெருஞ் ஜோதி

நன்றி
க.அ. குழலி







--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு



--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)