On 29/10/2010, kumaresan krishnamurthy <kumaresh.bcet@gmail.com> wrote:
> இன்றைக்கு தேவை வள்ளலார் மெய்ந்நெறி
>
> காலை முதல் இரவு வரை இயந்திரமயமான வாழ்க்கை மனிதனுக்கு கற்று தந்த
> ராஜதந்திரம் பிறரை துன்புறுத்தி இன்பம் காணும் சூழ்நிலை. வஞ்சகம், களவு,
> மற்றும் பொய்மையான வாழ்வு ராஜதந்திரத்தின் உச்ச நிலை. மனிதனை மனித
> நிலையில் இருந்து மிருக வாழ்வுக்கு மாற்றி பணம், புகழ், ஆடம்பரம்
> மற்றும் உல்லாச வாழ்க்கையை அனுபவிக்கச் செய்வது ஆளுமை. (லீடர்ஷிப்
> குவாலிட்டி)
>
> ஏன் இந்த மோகம்? எதற்காக இந்த போராட்டம்? மனித வாழ்வின் நோக்கம் தான்
> என்ன? என்பதை அறியாமல் ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கைப் பயணம்.
>
>
> இதுவரை அடைந்த சந்தோஷங்கள் அனைத்தும் பிற உயிர்களை துன்புறுத்தியே
> ஏற்படுகின்றன என்பதை அறியாத கல்வி அறிவு.
>
> உண்ணும் உணவிற்காக எத்தனை எத்தனை படுகொலைகள் நாள்தோறும்! பூச்சி, புழு
> முதல் சிறு குருவிகள் வரை.
>
> வியாபார லாபத்திற்குத் தான் எத்தனை எத்தனை கலப்படம்.
>
> கற்பிக்கப்படும் நூல்களும், கல்வியும் வியாபார தந்திரம் என்ற போர்வையில்
> ஏமாற்றி பிழைப்பு நடத்துவதையே போதிக்கின்றன.
>
> உண்ணும் உணவு விஷமாகி, உட்கொண்டதெலாம் குறையாகி மருந்து பொருட்களும்
> போலியாகி மனித சமுதாயம் தன்னைத் தானே கொஞ்சம் கொஞ்சமாக
> அழித்துக்கொண்டிருக்கிறது.
>
>
> ஆகையால் இன்றைய மக்களுக்கு வள்ளல் பெருமானாரின் மெய்ந்நெறி தேவை. வள்ளல்
> பெருமானாரின் மெய்ந்நெறியை மறந்து எங்கு சென்றாலும் அதனால் மனித சமுதாயம்
> எதிர்க்கொள்ள இருப்பது பேரழிவு.
>
> பேரழிவு மூலம் யுக மாற்றமா? அல்லது சீர்திருத்தம் மூலம் பிரபஞ்ச யுக
> மாற்றமா என்பதை வள்ளல் பெருமானாரிடம் ஒப்படைத்து விட்டார் அருட்ஜோதி
> ஆண்டவர்.
>
> எனவே மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
> எண்டகுசிற்றம்பலத்தே எந்தைஅருள் அடைமின் என்பதே வள்ளல் பெருமானாரின்
> நேரடியான அருள் வாக்கு.
>
>
> ஆகவே மெய்ப்பொருளை உணர இன்றைய சமுதாயத்திற்கு வள்ளல் பெருமானாரின் அருள் நெறி
> தேவை.
>
> கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
> கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
> உண்டதெலாம் மலமே உட் கொண்டதெலாம் குறையே
> உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே
> விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
> மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
> எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
> இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.
>
> அன்புடன்
> குமரேசன்
>
> --
> To register to this vallalargroups, and Old Discussions
> http://vallalargroupsmessages.blogspot.com/
>
> To change the way you get mail from this group, visit:
> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts
Friday, November 26, 2010
Re: [vallalargroups:3726] இன்றைக்கு தேவை வள்ளலார் மெய்ந்நெறி
Very Good Information Ayya
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
" அருட்பெருன்ஜோதி அருட்பெருன்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருன்ஜோதி " Dear aathma, I appreciate your interest and you are in...
-
http://www.4shared.com/dir/7141181/e1c6d6a4/sharing.html 2008-07-14 VALLALAR SONG LYRICS AND FONTS 5 file(s) File Fol...
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
"அருளே நம் இனம்; அருளே நம் குலம் என்ற சிவமே" - vallalar வாத்து தன்னுடைய ஆறு குட்டிகளுடன் ஒரு பகுதியை கடக்கிறது ....
-
Yogis and traditional households in India have for thousands of years (and are till today) been utilizing a simple, practical and effective...
-
1. அருள் என்பது என்ன? 2. ஜீவகாருண்யம் என்பது என்ன? 3. ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பது என்ன? 4. யார் கடவுளை கண்டு அம்ம...
-
Mail from Our Vallalar groups Member Prof.Vedapuri Ayya... Anbudan.. ---------- Forwarded message ---------- From: veda puri < veda...
-
Dear Sanmarkees, Tomorrow, is a THARUMASALAI FUNCTION Day. so, Around Tambaram,VELACHERY, CHROMPET, PALLAVARAM people come at East Tamb...
-
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோ தி Vallalar advices the following ...
-
Dear All, Generally, alkaline forming foods include: most fruits, green vegetables, peas, beans, lentils, spices, herbs and seas...
Contact Form
Translitrator(English to Tamil)
Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)
No comments:
+Grab this
Post a Comment