Monday, November 1, 2010

[vallalargroups:3647] குத்தமுள்ள நெஞ்சே குறுகுறுக்கும்

அன்புடையீர் ,
 
                              ஒரு மனிதர் கடந்த 15 ஆண்டுகளாக சாக்கடை அருகில் அமர்ந்து கொண்டு அந்த சாக்கடை தண்ணீரிலேயே முகம் கழுவி, அதே சாக்கடை தண்ணீரை குடிக்கிறார்.  அவருக்குக்கு எதுவுமே ஆகவில்லை.  சாக்கடை தண்ணீர் நம் குடிநீரில் கலந்துவிட்டால்  வாந்தி பேதி காலரா வந்துவிடுவதாக சொல்கிறார்கள்.  ஆனால் இவருக்கு எதுவும் ஆகவில்லை ஏன் எதுவும் ஆகவில்லை.  அவரின் பார்வையில் எல்லாம் இறைமயம் எதிலும்  குறையில்லை.  எதிலும் குற்றமில்லை.  மனமே குற்றம் கண்டுபிடிக்கும் மனமே மாயையை  காட்டி கொண்டிருக்கிறது.  மனம் தெளியும் போது மனம் நிர்மலம் ஆனால் இந்த குற்றம் பார்ப்பது நீங்கிவிடும்.தெளிந்த மனம் இறைநிலையை காட்டும். எங்கும் இறைநிலை காட்சியளிக்கும். தான் வேறு இறைநிலை வேறல்ல என்ற தெளிவு விளங்கும் தானும் இறைநிலையும் ஒன்றாக இருப்பதை அறிந்து தெளிந்து மோனநிலை ஏற்படும்.  நம்முள்ளே நம்மை ஒரு குற்றவாளியாக பார்ப்பது தான்  நம்மில் இருக்கும் அறியாமை.  நாம் இந்த இறைநிலை விட்டு பிரிந்து அது தனியாகவும் நாம் தனியாகவும் இருப்பதாக நினைப்பது தான் அறியாமை வளருவதற்கு காரணமாக அமைகிறது. 
 
                            இந்த இயற்கையும் நாமும் எப்போதும்  இணைந்தே இருக்கிறோம் என்பதை புரிந்துகொண்டால் நம்மில் எந்த குற்றத்தையும் பார்க்கமுடியாது. இறைநிலை ஒன்று மட்டுமே இங்கே உள்ளது.  இங்கே எந்த நிகழ்சிகளும் நடக்கவில்லை.  நாம் என்ற ஒன்று தனியாக ஒன்றும் இல்லை.  நான் ,தான் என்ற ஆணவம்,  என்னுடையது,என்னாலே ,எனக்காக என்னும் ஆசை என்ற மாயையே உலகை உருவாக்கியுள்ளது.  இந்த உலகம் மாயையே ஆகையால் ஆசையை கூட நீக்க வேண்டும் என்று ஆசைபடாமல் இருப்போம்.  வேண்டும் என்ற ஆசை வேண்டாம் என்ற ஆசையும் இல்லாமல் இருப்போம் இந்த இரண்டும் இல்லாத நடுநிலையில் இருப்பது தான் இறைநிலையாகும். முதலில் எனக்கு வேண்டும் வேண்டும் என்ற உலகில் இருந்து தெளிந்து எனக்கு வேண்டாம் வேண்டாம் என்று ஆசைப்பட்டு எல்லா தத்துவுவ குற்றங்களை நீக்கிகொண்டு வந்தால் கடைசியில் வேண்டாம் என்பதற்கு எதுவும் இல்லாமல்  போகும் பின்னர் வேண்டாம் என்ற ஆசையும் இல்லாமல் போகும்.  இதுவே தத்துவங்களை ஒழிக்க வழியாகும்.  முதலில் இறக்காமல் இருக்க முயன்றால் பின்னர் பிறக்காமல் இருக்க முடியும்.இறவாநிலை  பெற முடியும்.   பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை என்பதுதான் உண்மை. இந்த அறியாமையாகிய மாயஉலகில் இருந்து அறிவில்  தெளிந்து அறிவுநிலையாக மாறுவதே சுத்த சிவநிலையாகும். தெளிவோம் அறிவுமயமாக அருள்மயமாக ஆனந்தமயமாக சுத்த சிவநிலை ஆவோம். இந்த தெளிவு வராமல் வேண்டாம் என்ற ஆசை வராது.
 
 
                             இப்போது நான் நன்றாக சம்பாதிகிறேன். நல்ல வசதி உடல்நலம் வீடு வாசல் மனைவி மக்கள் சுற்றம் நண்பர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.  இதை போல் எனக்கு அடுத்த பிறவி வேண்டும் என்று ஆசை பட்டுகொண்டிருக்கும் நான் ஏன் வேண்டாமைக்கு ஆசைப்படவேண்டும்.  நான் மிகவும் கஷ்டபடுகிறேன் வீடு வாசல் மனைவி மக்கள் சுற்றம் நண்பர்கள் யாரும் இல்லை நான் எப்போது இதையெல்லாம் அனுபவிப்பது.  நான் மறுபடி பிறந்து இதையெல்லாம் அனுபவிக்கவேண்டும் என்று ஆசை பட்டுகொண்டிருக்கும் நான் ஏன் வேண்டாமைக்கு ஆசை படவேண்டும்.  இப்படி தான் உலகம் உண்மை என்ன வென்று தெரியாமல் சுழன்றுகொண்டுள்ளது.  உண்மை அறிவோம் சுத்த  சிவநிலை அடைய முயற்சிப்போம்.
 

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)