Tuesday, March 31, 2009

[vallalargroups:1345] Re: வாழ்வில் துனபம் நீங்கி இன்பமாக வாழ வேண்டுமா?

Dear Mr.balu,
very nice, ARUMAIYANA THOKUPPU,Thank you for your consolidation.
please continue......................................................................
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க


On 3/31/09, balamurugan d <to.dbala@gmail.com> wrote:
> வாழ்வில் துனபம் நீங்கி இன்பமாக வாழ வேண்டுமா?
> உலகம் தோன்றியது முதல் அதில் மனித உயிர்கள் உருவான பின்தான் இறைவன் பற்றிய
> சிந்தனை வந்தது. துவக்கக் காலத்தில் வாழ்ந்த மனித இனம் இடி, மின்னல் போன்றவையே
> கடவுள் என நினைத்து வணங்கினர். பின் படிப்படியாக ஞான நிலையை உணர்ந்த
> சான்றோர்களும், ஞானிகளும் தான் பெற்ற சொற்ப அனுபவத்தை மக்களிடம் கூறி அதுவே
> பூரண இறை கொள்கையாக கூறிச் சென்றனர்.
>  
> இவ்வுலகில் பல சாதி, சமய நிலைகளில் எண்ணற்ற உருவங்களை உருவாக்கி மக்கள் உருவ
> வழிபாட்டில் அதிகம் கவனம் செலுத்த வழி வகுத்து விட்டனர் ஞானிகள். அதனால்
> அவ்வழியே சரியென நினைத்து மக்களும் புறவழிபாடாகிய அபிசேகம், பூஜை முறைகள்,
> ஆராதனைகளுடன் இருந்து விட்டனர்.
>  
> இந்த வழிபாடு காலப்போக்கில் மிகவும் மாறுதுல் அடைந்து, சாதி, மத, சமய வழக்கமாகி
> மக்களை மேலும் அறியாமை நிலைக்கே தள்ளிவிட்டது. இந்நிலையிலிருந்து மனித குலத்தை
> மீட்க திருமூலர், திருவள்ளுவர் போன்ற சுத்த ஞானிகள் பெருவாராக முயற்சித்தனர்.
> அவர்கள் எழுதிய பாடல்களைப் பார்த்தாலே இது நன்கு விளங்கும். மனித சமுதாயம்
> ஜாதி, மத பேதங்களால் பிரிவு பட்டே இருப்பதை எண்ணி 1823 ஆம் ஆண்டு இவ்வுலகிற்கு
> இறைவனால் வருவிக்கவுற்ற அருள் சித்தர் என்று போற்றப்படும் திருவருட்பிரகாச
> வள்ளலார் உலகிற்கே ஒரு பொதுநெறியை வகுத்தார். அதுதான் சமரச சுத்த
> சன்மார்க்கமெனும் உயர்நெறி. இந்த நெறிக்கு சாதி, சமய, உருவ வழிபாடுகள்
> தேவையில்லை. உயிர் இரக்கமும், ஒழுக்கமுமே இறைவனை உணர்ந்து அருள்பெற சிறந்த
> வழியென உரைக்கும் ஒரு உயர்மார்க்கத்தை இவ்வுலகிற்கு கொடுத்தார்.
>  
> இறைவன் அருள் நிறைந்த ஜோதி வடிவானவன். உலகில் தோன்றிய மதங்கள் அனைத்தும்
> போற்றக் கூடிய தெய்வம். உலக உயிர்களின் துன்பத்தை நீக்கி நலம் கொடுக்கும்
> தெய்வம். ஒவ்வொரு மனிதனையும் ஆணவம், கன்மம் (முற்பிறவியால் ஏற்பட்ட
> வினைப்பயன்கள்) மாயை (அறியாமை) நீங்க சிவம் என்ற மாசற்ற குற்றமற்ற ஒளி நிலைக்கு
> உயர்த்தக்கூடிய தெய்வம்.
>  
> சரி அந்த தெய்வத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?
>  
> பொத்திய மலப்பிணிப் புழுக்குரம்பைதான்
> சித்தியல் சுதத சன்மார்க்கச் சேர்ப்பினால்
> நித்திய மாகியே நிகழும் என்பது
> சத்தியம் சத்தியம் சகத்துளீர்களே.
>  
> என வள்ளற்பெருமான் உறுதியாகக் கூறுகிறார். உண்மையான சன்மார்க்க நெறியில்
> வாழவேண்டும் எப்படி?
>  
> கொலை, புலை தவிர்த்து, சாதி, சமய, ஆசாரங்களில் அதிக நாட்டம் இல்லாது
> ஜீவகாருண்யமாகிய ஏழை எளியவர்க்கு அவரவர் தரத்திற்கு ஏற்றாற்போல் பசி தவிர்த்தல்
> செய்து, இந்திரிய கரண ஒழுக்கங்களை முறையாக கடைப்பிடித்து வாழ வேண்டும்.
>  
> இந்திரிய, கரண ஒழுக்கங்களை எப்படி கடைப்பிடிப்பது?
>  
> கொடிய சொல் செவி புகாவண்ணம், இறைவனைப் பற்றி (அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்
> புகழ்பாடுதல், கேட்டல், அசுத்த பரிசமில்லாது தயாவண்ணமாய் பார்த்தல் - அதாவது
> உலகியலில் பழகும் பொழுது ஆண் மீது பெண்ணும், பெண் மீது ஆணும் இச்சை கொள்வது
> இயற்கை. இருப்பினும் இது போன்ற உணர்வுகளை தவிர்த்து பார்வையை செலத்துதல். இன்
> சொல்லாடல் - எப்பொழுதும் அன்புடன் நற்சிந்தனை உடைய சொற்களையே சொல்லுதல் -
> உரத்துப் பேசுதல், சண்டையிடுதல், சந்தேகம் கொண்டு கடுஞ்சொற்களை கூறுதல் போன்ற
> தேவையற்ற சொற்களை கூறாது வாழ்தல். சுகந்தம் விரும்பாதிருத்தல் – வாசனை
> திரவியங்களை உபயோகிக்கக் கூடாது. அவற்றின் நறுமணத்தை ஊன்றி நுகருதல்கூடாது.
> (ஆடம்பரமான வாழ்வியல் கூடாது.) ஜீவ உபகார நிமித்தமாய் சாதுக்கள்
> வாச்ஸ்தலங்களில் சஞ்சரித்தல் – உலகியலில் மனச் சோர்வு ஏற்படும் போது,
> அன்புள்ளம் கொண்ட சாதுக்கள் வாழும் இடம் சென்று வருதல், இயலாதபட்சத்தில்
> ஆதரவற்ற ஏழை எளியவர் வாழும் இடம் சென்று தொண்டு செய்தல் (உணவளித்தல்) உலகியல்
> செயல்களில் ஈடுபடும் போது, அச்செயலால் நமக்கும் பிறருக்கும் நன்மை பயக்கும்படி
> நடந்துக் கொள்ளுதல்.
>  
> மனிதன் துன்பப்பட இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அறியாமை. மற்றொன்று ஆசை,
> பேராசை. இதில் அறியாமையை நீக்க கல்வி மற்றும் நல்ல கருத்துக்களை கற்றும்,
> படித்தும், கேட்டும் தெளியலாம். ஆசை இது மனித வாழ்வியலுக்கு ஓரளவு தேவை. ஆனால்
> பேராசை இது மனித வாழ்வியலுக்கு தேவையற்றது. மனிதனை துன்பக்கடலில் ஆட்படுத்தும்.
> இந்த ஆசை, பேராசை, அறியாமையுடன் - சாதி, சமய, பற்றுகள் சேர்ந்ததனால் மக்கள்
> படும் இன்னல்களுக்கு அளவே இல்லை.
>  
> எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே
> எல்லாம் வல்லான் தனையே ஏத்து.
>  
> என வள்ளற்பெருமான் கூறுகிறார். அதாவது, துன்பங்களிலிருந்து மனிதன் விடுபட
> இறைவனின் பாதங்களில் பணிய வேண்டும்.
>  
> அதற்கு என்ன செய்ய வேண்டும்?
>  
> அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்.
>  
> ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செயல்வேண்டும்.
> எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
> எந்தை நினதருட்புகழை இயம்பி யிடல் வேண்டும்.
> செப்பாதமேனிலைமேல் சுத்த சிவமார்க்கம்
> திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
> தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
> தலைவ நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே!
>  
> என பாடல் மூலம் தெளிவுபட கூறுகிறார். மனிதன் தான் வாழ பிற உயிர்களைக் கொன்று
> அவற்றின் புலால் உண்பதால், ஆன்மநேய சகோதரத்துவத்திற்கு விரோதமாக நடந்து
> கொள்கிறான்.
>  
> அதாவது, உலகில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் நமது சகோதரர்கள் என்ற எண்ணம்
> மேலோங்க வேண்டும். அதற்கு நாம் பிற உயிர்களைக் கொன்று அவற்றின் புலால் உண்ணக்
> கூடாது. தெய்வ வழிபாடு எனக் கூறி உயிர்களை பலியிடக் கூடாது.
>  
> தன்னூன் பெருக்கற்குத் தான் பிறிது ஊணுன்பான்
> எங்ஙனம் ஆளும் அருள்.
>  
> உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
> அற்றே தவத்திற் உரு.
>  
> என வள்ளுவப் பெருந்தகையும் கூறுகிறார். முதற் குறளில் பிற விலங்கின் புலால்
> உண்பவர்களை அருள்நாடி வராது என்பார். இன்றைய காலத்தில், எங்கு பார்த்தாலும் இதய
> நோய், சிறுநீரகச் செயலிழப்பு, புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு என உலகெங்கும்
> நோய் பரவியதற்கு இந்த புலால் உணவே முழு முதற் காரணமாகும். எனவே மனிதன் கொடிய
> நோய்களில் சிக்கி துன்புற்று இறக்கிறான். புலால் உண்ணற்க, மது, கஞ்சா, புகைப்
> பிடித்தல் போன்ற தீய பழக்கங்களில் சிக்காமல் வாழ்வதே – தவத்திற்கு ஒப்பான
> வாழ்வாகும்.
>  
> மனிதன் நல்ல கல்வி அறிவில் சிறந்தவராய் இருந்தும் சாதி, சமய வழக்கில் சிக்கி –
> உயர்வு, தாழ்வு என்ற மனோபாவம் மேலோங்கி அகங்காரத்தால் அழிவதும் அதிகமாகி
> உள்ளது. இதை வள்ளற்பெருமான்,
>  
> சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
>       சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
> ஆதியிலே அபிமானித்த அலைகின்ற உலகீர்
>       அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே
> நீதியிலே சன்மார்க்க நிலை தனிலே ஞான
>       நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர் அவர் தாமே
> வீதியிலே அருட்ஜோதி விளையாடல் புரிய
>       மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே.
>  
> என ஜாதிச் சண்டையிட்டு துன்புற்று மடிவோரைப் பற்றி எண்ணி எண்ணிப் பாடுகிறார்.
> எனவே சாதி, மத உணர்வுகளில் சிக்காமல் வாழ்வது அவசியம். மனித குலம் அமைதியாக வாழ
> இதுவே ஒரு சிறந்த வழி.
>  
> எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
>       தம் உயிர்போல் எண்ணி உள்ளே
> ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
>       யாவர் அவர் உளந்தான் சுத்த
> சித்துருவாய் எம் பெருமான் நடம்புரியும்
>       இடம் என நான் தெரிந்தேன் அந்த
> வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என்
>       சிந்தை மிக விழைந்ததாலே.
>  
> உலகுயிர் அனைத்தையும் தம் உயிர் போல் பாவித்து உயிர் இரக்கத்தால் வாழ்பவரின்
> உள்ளம்தான் இறைவனின் இருப்பிடம் என்பதை தெளிவுப்படுத்துகிறார்.
>  
> அந்த தெய்வம் எப்படிப்பட்டது?
>  
> அருள்ஜோதி தெய்வம் என்னை ஆண்டு கொண்ட தெய்வம்
>       அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
> பொருட்சாரும் மறைகள் எலாம் போற்றுகின்ற தெய்வம்
>       போதாந்தத் தெய்வம் உயர்நாதாந்தத் தெய்வம்
> இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம்
>       எண்ணிய நான் எண்ணிவாறெனக்கருளும் தெய்வம்
> தெருப்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
>       சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
>  
> மிக ஆகாரஞ்செய்தல் - எவ்வித விருப்பமான உணவாயினும் முழு வயிறு நிரம்பும்படி
> உண்ணக்கூடாது.
>  
> மித போகஞ்செய்தல் - ஆண், பெண் தாம்பத்தியம் அளவுடன் கொள்ளுதல் (மாதம் இருமுறை)
>  
> மலஜல உபாதை வரும் போது - அதை அடக்காமல் உடன் நீக்குதல்.
>  
> உடல் நோய் வாய்ப்பின் நல்ல மூலிகை மருந்துகள் அல்லது யோகாசனம், மற்ற
> தந்திரங்களால் நோய் நீக்கிக் கொள்ளுதல்.
>  
> உலகியலார் சுக்கிலத்தை தேவையில்லாது செலவழித்தல் கூடாது. (இது பற்றிய முழு
> விபரங்களை அனுபவ சான்றோர்களிடம் கேட்டறியலாம்.)
>  
> தீவிரதரர் - எவ்விதத்தும் சுக்கிலம் வெளிப்படாது காத்தல்.
>  
> உச்சி - மார்பு - கோசம் - அங்கங்களை சூரிய ஒளி டாது வெள்ளை ஆடையில் மறைத்தல்.
> உலகியலில் சஞ்சரிக்கும் காலத்தில் காலில் கவசம் தரித்தல் (செருப்பு அணிதல்)
> அழுக்காடை உடுத்தாதிருத்தல்.
>  
> கரண ஒழுக்கம்:
>  
> மனதை நமது புருவ மத்தியின் கண் செலுத்தி அதன்பின் உள்முகமாக (அதாவது நமது
> எண்ணங்களை நமது புருவ மத்தியில் செலுத்துதல்) சிற்சபை என்னுமிடத்தில்
> செலுத்திப் பழகுதல். துர்விசயத்தை பற்றாதிருத்தல்.
>  
> ஜீவதோசம் விசாரியாதிருத்தல் - பிறர் பற்றிய குற்றம் கேட்டறியாது இருத்தல்,
> தன்னை மதியாதிருத்தல் - நான் படித்தவன், செல்வந்தன், பலமுள்ளவன் என்ற
> தன்முனைப்பு இல்லாமல் வாழப் பழகுதல்.
>  
> இவ்வாறாக இந்திரிய கரண ஒழுக்கங்களுடன், அனுதினமும் ஞான மூலிகையான வல்லாரை,
> கரிசாலை, முசுமுசுக்கை, தூதுவளை போன்ற மூலிகைகளை அடிக்கடி உண்ணுதல். அனுதினமும்
> காலையில் மஞ்சள் அல்லது வெள்ளை கரிசாலை கொண்டு சிறிது சாறு உள்ளே உண்டு, பின்பு
> ஆள்காட்டி விரலால் உள்நாக்கின் மேல் பாகத்தில் மெல்லென தேய்த்து கபம் நீக்கம்
> செய்ய வேண்டும். கபம் நீங்க, நீங்க மரணமும் தள்ளிப்போகும். மேலும், உரத்துப்
> பேசுதல், கடுநடை, ஓட்டம், அதிகமாக தூங்குதல் கூடாது. பகல் உணவு உண்ட பின்
> சிறிது நேரம் சற்றே படுத்து உறங்காது, ஓய்வெடுக்கலாம். இப்படி வாழ்ந்தால்
> நோயற்ற நல்ல ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.
>  
> அருள்நிலை அனுபவம் பெற என்ன செய்ய வேண்டும்?
>  
> கற்றேன் சிற்றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணை நெறி
> உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்
> பெற்றேன் உயர்நிலை பெற்றேன். உலகில் பிறநிலையைப்
> பற்றேன் சிவானந்தப் பற்றே என் பற்றெனப் பற்றினனே.
>  
> சிற்றம்பலக் கல்வியான இந்த சிற்சபை அனுபவமே பூரணநிலை அனுபவத்தைக் கொடுத்து
> முடிவாக இந்த மனித தேகம் மரணமில்லாப் பெருவாழ்வில் வாழும்படியான உயர்நிலையைத்
> தரும்.
>  
> இருப்பினும் உலகியலில் வாழ்பவர் உலகியல் துன்பங்களிலிருந்து விடுபட - கொலை,
> புலை தவிர்த்து -  ஏழை எளியவர்க்கு உணவு அளிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு
> (விரதமாகக் கொண்டு) வாழ்வது அவசியம். அப்படி வாழ்வதால் ஊழ்வினையால் ஏற்படும்
> துன்பமும், இவ்வுலக வாழ்வியலில் நமது அஜாக்கிரதையினால் ஏற்படும்
> இடர்பாடுகளிலிருந்தும் காப்பாற்றப்படுவார்கள்.
>  
> மேலும், நல்ல தொழில் வளம், நல்ல குழந்தைகளுடன் நலமுடனும், வளமுடனும் வாழலாம்.
>  
> காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே
>       களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறுங்கனியே
> மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
>       மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம் தருமச்
> சாலையிலே ஒரு பகலில் தந்த தனிப்பதியே
>       சமரச சன்மார்க்க சங்கத் தலை அமர்ந்த நிதியே
> மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்தாடும்
>       மாநடத் தென் அரசே என்மாலையும் ஏற்றருளே
>  
> என வள்ளற் பெருமாள் ஜீவகாருண்யத்தின் மேன்மையை கூறுகிறார்.
>  
> வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்
> குறியெதிர்ப்பை நீரது உடைத்து.
>  
> என திருவள்ளுவரும் கூறுகிறார்.
>  
> ஜீவகாருண்யம் போற்றி வாழ்ந்து வாழ்வில் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று
> வாழ, சன்மார்க்கம் சார்வீர் ஜகத்தீரே!
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
>
>    சுத்த சன்மார்க்க அன்பன்
>       பாலமுருகன்
>   காஞ்சிபுரம்
>
>
>
>
> >
>

--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)