Tuesday, March 31, 2009

[vallalargroups:1344] Re: அகத்திக்கீரை

dear
thank you,
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

























On 3/31/09, balamurugan d <to.dbala@gmail.com> wrote:
> அகத்திக்கீரை
>
> -வைத்தியர் வேதாச்சலம்
>
> அகத்திக்கீரையை காம்பு பழுப்பு புழுக்கள் தூசி கழுவி நீரில்லாமல் வடித்தெடுத்த
> கீரையை வழக்கப்படி செய்கின்ற தனிச் சாம்பாரில் இட்டு உண்பது அல்லது மேற்படி
> கீரையை முன்போல் சுத்தப்படுத்தி துவட்டலாகச் செய்து அன்னத்துடன் உபயோகிப்பதும்
> உண்டு.
>
> இப்படி வாரத்திற்கு ஒருமுறை உண்டுவரதேகத்தில் உள்ள உசம்ணம் தனியும்.கண்கள்
> குளிர்ச்சிப் பெறும். மலம் இளகாகப் போகும். சிறுநீர் தாராளமாகப்போகும். மகோதர
> வீக்கம்,நீடைப்பு,பித்த மயக்கம் முதலியவை நீங்கும், இன்னும் இந்த இலையை
> அடிபட்டு இரத்தம் சொரியும் காயங்களுக்கு வைத்துக்கட்ட சீழ்பிடிக்கமால் விரைவில்
> ஆறும். அகத்திக்கீரை எல்லா மருந்துகளின் வீரியத்தை கெடுத்து விடுமாதலால் இது
> பத்திய பதார்த்தங்களில் இருந்து தள்ளப்பட்டுள்ளது.
>
> அகத்திக்கீரை தைலம்: சுத்தப்படுத்திய அகத்திக்கீரையை இடித்துப் பிழிந்து
> வடிகட்டிய சாறு படி ½ நல்லெண்ணெய் ½ படி, இவை இரண்டையும் பழகின
> மண்பாண்டத்திலிட்டு அடுப்பிலேற்றி சிறுக எரித்து சாறு சுண்டி மெழுகு பதம்
> வரும்போது கஸ்தூரி மஞ்சள், பளிங்கு சாம்பிராணி, பச்சை கிச்சிலிக் கிழங்கு,
> விளாமிட்சவோம் வகைக்கு ½ டலம் வீதம் இடித்து தூள் செய்து போட்டு தைலத்தை
> கீழிறக்கி வடித்து ஆறியபின் சீசாவில் பத்திரப்படுத்துக.
>
> இதை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து நீராடிவர – பித்தம் தணியும் கண்கள்
> குளிர்ச்சி பெறும். பித்தத் தலைவலி போகும்.
>
> பத்தியம்: அன்று (ஸ்நானம் செய்த தினத்தில் பகல் நித்திரை, அலைச்சல்,
> திரிச்சல்கூடாது.
>
> அடிக்கடி அகத்திக்கீரை புசிக்கக்கூடாது. இரத்தத்தை கேட்டையச் செய்யும், சொறி,
> சிரங்குககளை உண்டாக்கும், இரத்தம் குறைந்து உடல் வெளுத்தல், உடல் வீங்கல்,
> வயிற்றுக் கடுப்பு, கழிச்சல், இவைகளை உண்டாக்கும், ஆனால் வயிற்று புழு ஒழியும்,
> வாயுவையும், கடுவனையும் உண்டாக்கும்.
>
> இவ் இலைச் சாற்றைப் பிழிந்து மூக்கில் இரண்டொரு துளிவிட, நான்காம் நாள் சுரம்
> போம். மற்றைய சுரங்களில் உடம்பின் மேல் பூசிவர, வெப்பந்தணியும், சாறு ஒரு
> பங்கும் தேன் ஐந்து பங்கும் கூட்டி நன்றாக உறவுபடக் கலந்து உச்சியில் விரலால்
> தடவ, குழந்தைகட்குக் காணும் நீர்ம்க்கோவை போம். இதையே மூக்கில்விட நீர்ம்க்கோவை
> தலைவலி இவைகள் தீரும்.
>
> அகத்திப்பூ: அகத்திப் பூச் சாற்றை கண்களில் பிழிய கண் நோய்போகும். இலையைப்போல்
> பூவையும் சமைத்து உண்ண வெயிலாதீக்கத்தாலும் புகையிலை சுருட்டு முதுலியவைகளாலும்
> பிறந்த பித்தக்குற்றம் உடலிற்தோன்றும், வெப்பம் தணியும்.
>
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
>
>    சுத்த சன்மார்க்க அன்பன்
>       பாலமுருகன்
>   காஞ்சிபுரம்
>
>
>
>
> >
>

--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)