Thursday, March 12, 2009

[vallalargroups:1263] Re: புளியாரை கீரை

Vallalar Thiruadi Pootri,

Can you please give the contact address of
Anbar.Thiruvotriyur.Vadachalam ayya.. Thanks. Siva

On Wed, 11 Mar 2009 19:40:03 +0530
Vallalar Groups <vallalargroups@gmail.com> wrote:
> Inbutru Vazga,
>
> Dear Dayavu.Balamurugan,
>
> Really Very Excellent Information..
>
> Please give daily one mooligai , purpose and how can we
>use it in daily
> life?
>
> This will be useful to all of us.
>
> All Mooligai available in Chennai @ Vallalar
>Anbar.Thiruvotriyur.Vadachalam
> ayya..
>
> I will get the confirmation from him..
>
> He is preparing all mooligai and distributing to only
>sanmarga anbars.
>
> (In Bangalore Sanmarga sangam buying "Gnaana marunthu"
>from Vadachalam ayya
> in regular basis).
>
> Bangalore Anbars can buy the Gnaana marunthu" or
>Karisalai Kuttu Sooram from
> sangam.
>
> Interested persons can utilize the mooligai from him.
>
> Th.Balamurugan Ayya, your information is more
>valuable...
>
> Please continue your service..
>
> Anbudan,
> Vallalar Groups
> Subscribe
> <http://vallalargroups.googlegroups.com/web/Subscribe%20to%20vallalargroups1.html?gda=u4_sGlIAAACXcfzI31CFzrrPoN8vHZuxbjhx2BlTjbnxbV_eq_oNtGG1qiJ7UbTIup-M2XPURDQ9KL0RhWASqX9ZH1caiHEy3aHAeHOaJ3VAhORxL-kFsQeA8sn1qKH9KdW5HnkzttM>Here.
>
>
>
>
>
> 2009/3/11 balamurugan d <to.dbala@gmail.com>
>
>>
>>
>> *புளியாரை கீரை *
>>
>>
>>
>> மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு கீரைகளின் பங்கு
>>அளப்பரியது.
>> கீரைகளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் மனித உடலின்
>>வளர்ச்சிக்கு அவசியத்
>> தேவையானவை. தினமும் உணவில் கீரையை சேர்த்துக் கொள்பவர்கள்
>>மருத்துவரை அணுக
>> வேண்டியதில்லை. முதுமையிலும் இளமைத் துடிப்புடன்
>>இருப்பார்கள். நீண்ட
>> ஆயுளோடும் சுறுசுறுப்போடும் வாழ்வார்கள்.
>>
>> நாம் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு கீரையின் மருத்துவக்
>>குணங்களைப் பற்றி
>> அறிந்துவருகிறோம். இம்மாத இதழில் தமிழகம் முழுவதும்
>>பரந்து காணப்படும்
>> புளியாரைக் கீரையின் மருத்துவப் பயன்களைப் பற்றி
>>அறிந்துகொள்வோம்.
>>
>> புளியாரைக் கீரை வயல் வரப்புகளிலும், நீரோடை
>>வாய்க்கால்களிலும், ஈரப்பதம்
>> நிறைந்த பகுதிகளிலும் நிலத்திலும் படர்ந்து காணப்படும்.
>>இதன் இலைகளும், மெல்லிய
>> தண்டுப் பகுதியும் உணவில் சேர்க்கப்படுகிறது.
>>
>> இதனை புளியாக்கீரை, புளிக்கீரை என்ற பெயர்களில்
>>அழைக்கின்றனர்.
>>
>> Tamil - Puliyarai
>>
>> English - Indian sorrel
>>
>> Telugu - Pulichinta
>>
>> Malayalam - Paliyarel
>>
>> Sanskrit - Changeri
>>
>> Hindi - Tinpatiya
>>
>> Bot. Name - Oxalis corniculata
>>
>> புளியாரைக் கீரை இந்தியாவின் வெப்பப் பகுதிகளில் ஏராளமாக
>>பரந்து காணப்படும்.
>>
>> புளியாரையின் மருத்துவக் குணங்களைப் பற்றி பல நூல்களில்
>>சித்தர்கள்
>> குறிப்பிட்டுள்ளனர்.
>>
>> பித்த மயக்கமறும் பேருலகின் மானிடர்க்கு
>>
>> நித்தமருள் வாதகபம் நேருமோ - மெத்தனவே
>>
>> மூலக் கிராணியறும் மூல வுதிரமறுங்
>>
>> கோலப் புளியாரைக்கு
>>
>> - அகத்தியர் குணபாடம்
>>
>> பித்த மயக்கத்தைப் போக்கும்
>>
>> சிலருக்கு உடலில் பித்த நீர் அதிகமாகி இரத்தத்தில் கலந்து
>>தலைவலி, மயக்கத்தை
>> உருவாக்கும். இவ்வாறு மயக்கம் ஏற்படுபவர்கள் வாரம் இருமுறை
>>புளியாரைக் கீரையை
>> துவையலாகவோ, மசியலாகவோ உணவில் சேர்த்து சாப்பிட்டு
>>வந்தால் பித்தத்தால்
>> எற்படும் பாதிப்புகள் குறையும்.
>>
>> மூல நோயைக் குணப்படுத்த
>>
>> அசீரணக் கோளாறாலும், வாயுக்களின் சீற்றத்தாலும்
>>மலச்சிக்கலாலும் மூல நோய்
>> உருவாகிறது. மூலத்தில் புண் ஏற்பட்டு பல பாதிப்புகளை
>>உருவாக்குகிறது. இதனால்
>> பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இவ்வாறு மூல நோயால்
>> பாதிக்கப்பட்டவர்களுக்கு புளியாரைக் கீரை அருமருந்தாகும்.
>>
>> புளியாரைக் கீரையை சிறிதாக நறுக்கி நீர்விட்டு அலசி
>>அதனுடன் பூண்டு,
>> வெங்காயம், தேங்காய், மிளகாய், மிளகு சேர்த்து நெய்விட்டு
>>வதக்கி துவையலாக
>> அரைத்து சாப்பிட்டு வந்தால் மூலநோய், மூல வாயு, உள்மூலம்,
>>மூலக்கடுப்பு, இரத்த
>> மூலம் போன்ற நோய்களின் தாக்குதலிலிருந்து விடுபடலாம்.
>>
>> பசியைத் தூண்ட
>>
>> மன உளைச்சலாலும் மனச்சிக்கலாலும் சிலர் பசியின்றி
>>தவிப்பார்கள். இவர்களுக்கு
>> சிறிது சாப்பிட்டாலும் கூட வயிறு நிறைந்தது போல்
>>இருக்கும். இவர்கள்
>> புளியாரைக் கீரையை பருப்பு கலந்து நெய் சேர்த்து கூட்டு
>>செய்து சாப்பிட்டு
>> வந்தால் மலச்சிக்கல் நீங்குவதோடு நன்கு பசியும்
>>உண்டாகும்.
>>
>> நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
>>
>> இன்றைய இரசாயன உணவுகளால் உடலுக்குத் தேவையான சத்துக்கள்
>>கிடைக்காமல்
>> இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து உடல்
>>நோய் எதிர்ப்பு
>> சக்தியை இழக்கிறது. இதனால் அடிக்கடி ஜலதோஷம், இருமல்,
>>காய்ச்சல் என பல
>> நோய்கள் உடலை எளிதில் தாக்குகின்றன.
>>
>> இவர்கள் புளியாரைக் கீரையை துவையல் செய்து வாரம் இருமுறை
>>சாப்பிட்டு வந்தால்
>> உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலுக்கு
>>பலத்தையும் கொடுக்கும்.
>>
>> தலைவலி நீங்க
>>
>> தலைவலியால் அவதியுறுபவர்கள் புளியாரைக் கீரையுடன் வெள்ளைப்
>>பூண்டு சேர்த்து
>> அரைத்து நெற்றியின் மீது பற்று போட்டால் தலைவலி நீங்கும்.
>>இதனுடன் சிறிது
>> பெருங்காயமும் சேர்ப்பது நல்லது.
>>
>> கட்டிகள் குணமாக
>>
>> பொதுவாக உடல் சூட்டினால் ஏற்படும் வெப்பக் கட்டிகள் மீது
>>புளியாரைக்
>> கீரையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து தடவினால் கட்டிகள்
>>பழுத்து எளிதில் உடைந்து
>> புண்கள் குணமாகும்.
>>
>> முகப்பரு நீங்க
>>
>> புளியாரைக் கீரையோடு சிறிது பன்னீர் விட்டு அரைத்து
>>முகத்தில தடவி 15
>> நிமிடங்கள் காயவைத்து பின் இளம் சூடான நீரில் முகம்
>>கழுவினால் முகப்பரு நீங்கி
>> முகம் பளபளக்கும்.
>>
>> பாலுண்ணி, மரு நீங்க
>>
>> புளியாரைக் கீரையை சாறெடுத்து அதனுடன் சிறிது மிளகு பொடி,
>>வெண்ணெய் கலந்து
>> பாலுண்ணி, மரு மீது தடவி வந்தால் வெகு விரைவில் இவை
>>காய்ந்து உதிர்ந்துவிடும்.
>>
>> குன்ம நோய்களுக்கு
>>
>> புளியாரைக் கீரையை நன்கு அரைத்து அதனுடன் தேவையான அளவு
>>பசுவின் மோர் சேர்த்து
>> தினமும் காலை வேளையில் அருந்திவந்தால் வயிற்றுப்புண்,
>>வாய்ப்புண்,
>> வாயுக்கோளாறு, குன்ம நோய்கள், மூல நோய்கள் குண-மா-கும்.
>>ஒரு மண்டலம் (48
>> நாட்கள்) தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பூரண பலனை
>>அடையலாம்.
>>
>> இந்த மருந்து சாப்பிடும் காலங்களில் புளி, காரத்தைக்
>>குறைத்துக்கொள்ள
>> வேண்டும்.
>>
>> கண்கள் குளிர்ச்சியடைய
>>
>> கணினியில் அதிக நேரம் வேலைசெய்பவர்களின் கண்கள் அதிக
>>சூடாகி வறட்சியடையும்.
>> இதனால் கண் நரம்புகள் பாதிப்படைய ஆரம்பிக்கும். இவர்கள்
>>புளியாரைக் கீரையை
>> நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு அந்த
>>நீரில் கண்களை அடிக்கடி
>> கழுவி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதுடன்
>>கண் பார்வை நரம்புகள்
>> பலப்படும்.
>>
>> புளியாரைக் கீரையோடு உப்பு, மிளகு, சீரகம், பூண்டு, சின்ன
>>வெங்காயம்,
>> இவற்றைத் தகுந்த அளவு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு
>>வந்தால் பாலியல்
>> சம்பந்தப்பட் நோய்கள் குணமாகும்.
>>
>> நல்ல சுவையுடன், மருத்துவப் பயன் கொண்ட புளியாரைக் கீரையை
>>கிடைக்கும்
>> காலங்களில் உணவில் சேர்த்து பயனடையுங்கள்.
>>
>>
>> with regards
>> Balamurugan
>>
>> >
>>
>
>
> --
> Anbudan,
> Vallalar Groups
>
> அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
>
> >

--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)