Monday, January 2, 2012

Re: [vallalargroups:4424] Re: எட்டும் இரண்டும் என்பதற்கு விளக்கத்தை

எட்டு என்பது அட்டாங்கயோகம் இரண்டு என்பது சீவனும் சிவனும்! சித்தாந்தம் வேதாந்தம்
என்பவை சமயங்கள். திருமூலர் சமரசசன்மார்க்கம் பற்றி கூறியுள்ளார்.சன்மார்க்கம் என்பது
வள்ளலார் அவர்களின் அருளால் முழுமையாக நமக்கு தெரிகிறது. இந்த வழி தனித்தன்மை
வாய்ந்தது. சமயங்கள் கடந்து ஜோதிநிலை அறிந்து முக்திக்கு நம்மை இட்டுச்செல்கிறது.     சிவவாக்கியரும் ஜோதி நிலை கூறுகிறார். அது அவருடைய வழி.சமயங்களை (அ)வள்ளலார்
(அ)சிவவாக்கியர் வழி முறைகளை பின்பற்றுவது அவரவர் விருப்பம்.பாதை பலவாக இருந்தாலும் சேரும் இடம் ஒன்றே.இறைவன் ஒருவனே!அவனே அந்த பரம்பொருள் .



























.

























 
 














2011/12/28 Yogeshwar V <yogeshwar3@gmail.com>

அன்பு முத்துக்குமரன் அவர்களே,

நீங்கள் குறிப்பிட்டுள்ள திருமந்திரத்துளி எந்த தந்திரத்தில் எந்த பாடலில் கொடுக்கப் பட்டிருக்கிறது?

நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளப் பட்டாலும், மகாலட்சுமி மருதப்பிள்ளை அவர்கள் சொல்வதை மறுப்பதற்கில்லை. ஏனெனில், அடிப்படையாக, உடலில் உள்ள தலை பாகமும் பஞ்ச பூதங்களின் கூட்டுதான். ஆகையால், தலையில் காற்று ஏறும் என்பதுதான் சரியான கருத்து என்று எண்ணுகிறேன்.

"காற்றைத் தலைக்கு ஏற்ற முடியும் என்பதை விஞ்ஞானம் ஏற்கவில்லை. மூக்கு வழியாக இழுக்கப்படும் காற்று மார்பிலுள்ள நுரை ஈரலுக்குத்தான் செல்லும்" - என்று சொல்லி இருக்கிறீர்கள்.

ஆனால், விஞ்ஞானத்திருக்கு இன்னும் பல விஷயங்கள் தெரியாமலேயே இருக்கிறது. (உ.தா. விஞ்ஞானத்திருக்கு உடலில் உயிர் எங்கே இருக்கிறது என்று இன்னும் தெரியாது, உங்களுக்கு?)

ஆகையால், திருமந்திரத்துளிகளும் சரிதான், காற்றை தலைக்கு ஏற்றமுடியும் என்பதும் சரிதான்.

வாழ்க வளமுடன்!!!
யோகேஷ்வர்.வ

2011/12/27 Muthukumaraswamy Balasubramanian <mupa1937@gmail.com>
குறிப்பு  எனது பதிலில் இரண்டு என்பதை பரம் என்று கூறியது தவறாக பாரம் என்று உள்ளது. அதை பரம்,என்று படித்துக்கொள்ளவும் நன்றி 

2011/12/27 Muthukumaraswamy Balasubramanian <mupa1937@gmail.com>
அன்புள்ள சகோதரி அவர்கட்கு வந்தனம்.தங்கள் கட்டுரை வள்ளலார் க்ரூப்பில் வந்தவுடன் ஏன் கருத்தையும் எழுதினேன் உங்கள் கட்டுரை மீண்டும் வள்ளலார் ஸ்பேசில் வந்துள்ளது. எனது கருத்து வரவில்லையே ஏன். இருந்தாலும் மீண்டும் எழுதுகிறேன்.எனது கருத்தும் மக்களுக்குத் தெரியலாம் அல்லவா. சன்மார்க்க ரகசியம் விளங்கவேண்டுமானால் திருமந்திரத்தைக் கவனியுங்கள் என்று வள்ளலார் கூறியுள்ளார். திருமந்திரத்தில் ஆகாரம் உயிரே உகாரம் பரமே என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி எட்டு என்பது உயிர் என்றும் இரண்டு என்பது பாரம் என்றும் உணரப்படுகிறது.  மேலும் அருள்விளக்க மாலை 27 வது பாடலில் மூச்சு பயிற்சியை வள்ளலார் ஏற்றதாகத் தெரியவில்லை.காற்றைத் தலைக்கு ஏற்ற முடியும் என்பதை விஞ்ஞானம் ஏற்கவில்லை. மூக்கு வழியாக இழுக்கப்படும் காற்று மார்பிலுள்ள நுரை ஈரலுக்குத்தான் செல்லும் .தாங்கள் என்மீது கோபித்து பதில் எதுவும் எழுதவேண்டாம். இரண்டுபேருடைய கருத்தையும் மக்கள் பார்த்து எதை ஏற்கிறார்களோ அசை ஏற்றுக்கொள்ளட்டும் நன்றி வந்தனம்/


2011/12/16 mupa <mupa1937@gmail.com>


On Dec 1, 9:25 pm, mahalakshmi maruthapillai <mahalakshm...@gmail.com>
wrote:
> Very nice explanation.
> Valgha Valamudan,
> Maruthapillai
>
> ---------- Forwarded message ----------
> From: arumugha arasu.v.t <arumughaar...@gmail.com>
> Date: 2009/9/25
> Subject: Re: மூலாதாரம் எது என்பதன் ஆதாரம் - சித்தர் சுப்பிரமணியர் ஞானம்
> To: Dhanapal Thirumalaisamy <dhanapal.thirumalais...@gmail.com>
>
> அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,
> எட்டும் இரண்டும் என்பதற்கு விளக்கத்தை சித்தர்கள் மறைத்து வைத்தார்கள்.
> காரணம் எட்டும் இரண்டும் என்பது சன்மார்க்கதிற்கான பயிற்சி. இப்பயிற்சி குரு
> மூலமாய் மேற்கொள்ள வேண்டிய பயிற்சி. தவறாக பயிசி செய்தால் உடல் உபாதைகள்
> ஏற்பட்டு உடல் நலக் குறைவு ஏற்படுவதுடன் மன நல குறைவும் ஏற்ப்படும்.
> நமது வள்ளல் பெருமானும்
> எட்டு இரண்டு என்பது இயலு முற்படிஎன
> அட்ட நின்று ஓங்கிய அருட்பெரும்ஜோதி
> என்று கூறி உள்ளார்கள்.
> ஆக எட்டு என்பதற்கு தமிழில் அ என்ற எழுத்து எண்ணாக பயன்படுத்த படுகிறது.
> இரண்டு என்பதற்கு உ என்ற எழுத்து எண்ணாக பயன்படுத்த படுகிறது. அ என்பது அடி
> என்ற பதத்திலும் உ என்பது உச்சி என்ற பதத்திலும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆக
> அடி முடி என்பதைத்தான் எட்டும் இரண்டும் என்று பயன்படுத்தினார்கள். அடி
> என்றால் கால் கால் என்றால் காற்று உச்சி என்றால் தலை தலை என்றால் அண்டம் ஆக
> காற்றை அண்டத்திற்கு ஏற்றும் பயிற்சியே எட்டும் இரண்டும் என்று சித்தர்கள்
> மறைத்து வைத்தார்கள். நமது சன்மார்க்க அன்பர்கள் பயன்பெறும் பொருட்டு இந்த
> ரகசியயத்தை வெளியிட்டு உள்ளேன்.
> மேலும் விளக்கம் அடுத்த மடலில்.
> அன்புடன்
> விழித்திரு ஆறுமுக அரசு
>
> 2009/9/24 Dhanapal Thirumalaisamy <dhanapal.thirumalais...@gmail.com>
>
> <<<எட்டு இரண்டும் அறியாத மூடர் தானே>>>
>
> > இந்த எட்டும் ரெண்டும் எது என நண்பர் ஒரு மேற்பதிவை இட வேண்டுகிறேன்.
>
> > நன்றி.
>
> > 2009/9/24 arumugha arasu.v.t <arumughaar...@gmail.com>
>
> >> -----

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க


--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)