Monday, March 25, 2013

[vallalargroups:4819] Fwd: இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு !



---------- Forwarded message ----------
From: ELAVARASAN ANNAMALAI <elavarasansumathi@gmail.com>
Date: 2013/3/18
Subject: இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு !
To: vallalargroups@googlegroups.com, contactus@vallalarspace.com
Cc: Kathir Velu <aanmaneyan.kathirvelu@gmail.com>, aarul_jothi <aarul_jothi@yahoo.co.in>, P Sujatha Rajashree <aruljothisujatha@gmail.com>, Munusamy Balakrishnan <trust.deepam@yahoo.co.in>, Vallalar Groups <vallalargroups@gmail.com>, வேலுமகேஷ் மகேஷ் <velmahesh@gmail.com>, Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>


 
 
 
 
                               
 
                  பசித்திரு !           தனித்திரு !             விழித்திரு !
 
 
                               அருட்பெருஞ்சோதி !  அருட்பெருஞ்சோதி !
                               தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்சோதி !
 
      கொல்லாவிரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
      ஜீவகாருண்யமே மோட்சவீட்டீன் திறவுகோல் !
 
     எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
 
    இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு !                பகுதி -3-
 
    அன்புஉள்ளம் கொண்ட ஆன்மநேய அன்பர்களுக்கு வந்தனம் நாம் நம் வாழ்க்கையில்
   உணர்ந்துகொள்ளவேண்டிய தத்துவபாடல் சிலவற்றை கொடுத்துள்ளோம் எனவே அன்பர்களே
 நாமும்   ஜீவகாருண்ய தயவோடு வாழ்ந்து பெறவேண்டியதை   விரைவில் பெற்று கொள்வோம் 
 
   21,   என்றென்றும் துன்பம் யாருக்கும் செய்யாதே !
           மண்மேலே நல்லோரை சொல்லினால் வையாதே !
           கண்ணாலே துன்ப காமத்தில் துய்யாதே !
           உண்மைக்கு செய்நன்றி சொல்லியே மொழியாதே !
 
 22,    எத்தனை மதங்கள் இருந்திட்ட போதும் !
          அத்தனை மதங்களும் ஒருநிலை ஓதும் !
          வித்தனாய் நின்றிட்ட விமலன் எப்போதும் !
          அத்தனை உலகிற்க்கும் அன்பே அருள் வேதம் !
 
 23,    உண்மையில் ஆண்டவன் உன்னிலும் உண்டு !
         நன்மைகள் பெருகிட நலமுடன் தொண்டு !
         கண் இமை வாழ்க்கையில் கருணை கொண்டு !
         உண்மையாய் தருமம்செய் உனக்கருள் உண்டு !
 
 24,   மண்மீது மாறிவரும் மானிட தேகம் !
        தண்ணீர் குமிழிபோல் அழிந்துமே போகும் !
        உன்னில் அமிர்தம் உண்டால் இப்போதும் !
        எண்ணி கலங்கியே எமனோடுவான் எப்போதும் !
 
  25,  ஆடித்தான் அடங்கிடும் வாழ்க்கையால் நாம்கெட்டோம்!
        நாடிதான் பொருள் தேடிநம்முடலில் உயிர்விட்டோம் !
        கூடிய உறவாலுடலை சுடுகாடு போகவிட்டோம் !
        தேடிடும் ஞானத்தை நாடாமல் அழிந்திட்டோம் !
 
  26,  கூட்டினில் உயிர்போனால் காலில்லா கட்டில் !
        நீட்டி படுத்துக்கொண்டு நீபோவாய் பாடையில் !
        நாட்டினில் மேளம்கொட்டி பாட்டுபாடி உறவுகள் !
        ஆட்டமாடி எடுத்துசென்று உடலைவிட்டார் சுடுகாட்டில் !
 
  27, சுடுகாடு போனவன் வருவான் என்றேண்ணியே !
        நடுகாட்டான் இடத்தினில் படையை திருப்பியே !
       கூடும் உறவுகள் அனைவரும் மாயையே !
       நாடும் மூப்பினால் நமக்கழியா வாழ்க்கையே !
 
  28,  வருவதும் போவதும் மூச்சுக்கு கலைவேதம் !
        பிறப்பதும் இறப்பதும் பிரவிக்கி நிலைஒதும் !
        துறப்பதும் இரப்பதும் துறவியின் செயலாகும் !
        வெறுப்பதும் விருப்பதும் அற்றவர் ஞானியாகும் !
 
 29,  மானிட பிறவியே பிறப்பது கஷ்டம் !
       ஞானியிடம் ஞானக்கல்வி பயில்வதே அதிர்ஷ்டம்!
       நானிலத்தில் தானமும் தவம் செய்வதும் நம்மிஷ்டம்!
       ஆனிப்பொன் அம்பலவாணன் அருளே பேரதிர்ஷ்டம் !
 
 30,  மண் வாழ்வே நிலைஎன்று மாளிகைகட்டி !
       பொன் பொருள்பூமியை நமக்காக ஈட்டி !
       என்றென்றும் எமன்வந்து உயிர்பிடிக்க விரட்டி !
       உன்னைவிடான் என்றுநீ உணர்ந்தாலே கெட்டி !
 
                                                                         (தொடரும் )
 
                                                                  இப்பாடல்களை எழுதியவர் 
                                                                  ( அன்பர் பொ.அன்பழக சாமி,
                                                                    பேய் கோபுற வீதி, 
                                                                    திருவண்ணாமலை ) 
 
   அன்பர்களே மேலே கொடுக்கப்பட்டுள்ள பாடல்கள் அனைத்தும் நம்வாழ்க்கையின் நடைமுறையில்
இருக்கின்ற இருந்துகொண்டிருக்கின்ற  நடக்கபோகின்ற நிகழ்வுகளை உணர்த்துவதாக அமைந்துள்ளது 
ஆகையால் நாம் வாழுகின்ற சிலகாலங்களில் பிறருக்கு உபகாரமாக பயன்படுகிற விதத்தில் வாழ்ந்து 
இப்பிறவி பெற்றதின் பயனை அடைவோம் அது எவ்வாறெனில் நம்மிலும் நலிந்த பிற உயிரினங்களை  
எல்லாம் தம்முயிர்போல் பாவித்து ஜீவகாருண்ய சிந்தனையோடு பசி என்று வருபவர்கள் யாராக இருந்தாலும் 
எந்த உயிர்னினங்கலானலும் அவற்றுக்கெல்லாம் உணவு என்னும் மருந்தை கொண்டு பசிப்பிணி போக்கி  
வந்தால் எல்லாம் வல்ல இறைவன் பரம்பொருள் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் நம்மை சீரும் சிறப்புடனும் 
வாழசெய்வார் என்பதில் சிறிதும் ஐயமில்லை  .  
 
 
 
 
பசி என்று வருபவருக்கு  உணவுகொடு அதுவே ஜீவகாருண்யம் !
ஜீவகாருண்யமே மொட்சவீட்டீன் திறவுகோல் !
 
கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
 
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன் !
 
ஆன்மநேய.அ .இளவரசன்
வள்ளலார் உயிர்வதை தடுப்பு இயக்கம் 
நெ.34,அண்ணா தெரு ,
திருவள்ளுவர் நகர் ,
ஜமின் பல்லாவரம் சென்னை -6000 043
கைபேசி:9940656549,9791076515 
           



--



Anbudan,
Vallalar Groups 
To Receive Vallalar Messages - Click 
Subscribe

E-Mail : vallalargroups@gmail.com 
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
 
 

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)