Friday, March 8, 2013

[vallalargroups:4796] ஆன்மாவின் ஆற்றல்





மனிதன் கருவாகி உருவாகி இந்த உலகத்தில் பிறந்து பல சாதனைகளை படைக்கிறான் .இந்த உலகத்தில் உள்ள அணுக்கள் என்னும் கருவிகளைக் கொண்டு சாதனைப் படிக்கிறான் .

ஆனால் அவனிடம் உள்ள ஆன்மாவின் ஆற்றலை தெரிந்து கொள்வதில்லை பிறந்த குழந்தை தவர்ந்து ,நடந்து வெளி உலகத்திற்கு வருகிறது .நடந்து பழகிய குழந்தை வாலிபனாக ஒரு குறிப்பிட்ட தூரம் நடக்கிறது .அதற்குப்பின் அதிக தூரம் என்றால் ,மாட்டு வண்டியில் ,குதிரை ,ஒட்டகம் ,போன்றவற்றில் சென்றான் .பின் சைக்கிள் ,பைக்,கார் ,பஸ்,ரயில் ,வான் ஊர்தி ,ராக்கிட்,போன்ற கருவிகளால் உலகத்தை சுற்றி வந்து கொண்டு உள்ளார்கள் .

இவைகள் யாவும் தன்னுடைய ஆன்மாவின் ஆற்றலால் ,அருள் என்னும் கருவியைக் கொண்டு இருந்த இடத்தில் இருந்தே அனைத்தையும் பார்க்கலாம் .வரவழைக்கலாம் ,உரையாடலாம் .நினைத்தை சாதிக்கலாம் பஞ்ச பூதங்களான,மண்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் முதலிய எதனாலும் அவர்கள் உடம்பை அழிக்க முடியாது அவர்கள் எந்த கருவிகளின் துணை இல்லாமல் அனைத்து இடங்களுக்கும் சென்று வரலாம் .இருந்த இடத்தில் இருந்தே அனைத்தையும் அவர்கள் நினைத்த மாத்திரத்தில் அனுபவிக்கலாம் எல்லா அன்டங்களுக்கும் சென்று வரலாம் எவ்விதப் பட்ட தடைகளும் அவர்களுக்கு கிடையாது .இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் .

இவ்வளவு ஆற்றலும் மனிதனாக பிறந்த அனைவர் இடத்திலும் உண்டு .இதை அறிந்து கொள்ளாமல் மனிதன் அற்ப ஆசைகளுக்கு தள்ளப்பட்டு அழிந்து கொண்டே உள்ளான் அழியும் வாழ்க்கை சிற்றின்ப வாழ்வு என்பதாகும்

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் பேரின்ப வாழ்வு வாழும் தகுதிப் பெற்றவர்கள் என்கிறார் வள்ளலார்,;- பேரின்ப பெருவாழ்வு என்பது எக்காலத்திலும் அழியாமல் வாழ்வது ,அதற்கு .பேரின்ப லாபம் என்கிறார் .இதுதான் கடவுள் நிலை என்கிறார் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும் மனிதனும் கடவுள் ஆகலாம் என்பதாகும் .

நம்மிடம் உள்ள அருள் என்னும் ஆற்றலைப் பெற்றுக் கொள்ளாமல் மனிதன் அழிந்து கொண்டு உள்ளான் முயற்ச்சி செய்யுங்கள் முடிவு உங்களிடம் .

உங்கள் அன்புள்ள ஆன்மநேயன் ;--கதிர்வேலு


Anbudan,
Vallalar Groups 
To Receive Vallalar Messages - Click 
Subscribe

E-Mail : vallalargroups@gmail.com 
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
 
 

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)