Tuesday, November 1, 2011

Re: [vallalargroups:4376] இது ஒரு சன ்மார்க்க சிந்தனைக்கு !

Excellant write up in typical Vallalar"s speciality of Tamil orientation.
Very Nice and good to read, thanks. Chitrambalam, Nigeria
Sent from my BlackBerry® wireless handheld from Glo Mobile.

From: "A.ELAVARASAN ELAVARASAN" <aarul_jothi@yahoo.co.in>
Sender: vallalargroups@googlegroups.com
Date: Sat, 29 Oct 2011 17:55:52 +0530 (IST)
To: vallalargroups@googlegroups.com<vallalargroups@googlegroups.com>
ReplyTo: vallalargroups@googlegroups.com
Cc: contactus@vallalarspace.com<contactus@vallalarspace.com>; vallalargroups@googlegroups.com<vallalargroups@googlegroups.com>; ELAVARASAN ANNAMALAI<elavarasansumathi@gmail.com>; SUJATHA ARUL<aruljothisujatha@gmail.com>; KARTHIKEYAN JAYAPAL<karthikeyan.jayapal@googlemail.com>; mahesh@emdsys.com<mahesh@emdsys.com>
Subject: Re: [vallalargroups:4364] இது ஒரு சன ்மார்க்க சிந்தனைக்கு !

 
 
 
   
     
                           
 பசித்திரு           தனித்திரு                விழித்திரு  
 
                                      
    அருட்பெருஞ்ஜோதி      அருட்பெருஞ்ஜோதி  
   தனிப்பெருங்கருணை   அருட்பெருஞ்ஜோதி  
 
கொல்லா நெறியே  குவலயமெல்லாம்  ஓங்குக!
ஜீவகாருண்யமே   மோட்சவிட்டின்   திறவுகோல்!
 
எல்லா  உயிர்களும்  இன்புற்று   வாழ்க!
 
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!.
 
இன்புறு சித்திகள் எல்லாம் புரிகவென்று
அன்புடன் எனக்கு அருள் அருட்பெருஞ்சோதி (அகவல் )
 
அன்பு உள்ளம் கொண்ட ஆன்ம நேயமுள்ள அன்பர்களுக்கு வந்தனம் தவறு செய்வது மனிதனின் இயல்பு மனிதன் செய்கின்ற தவறை சுட்டிகாட்டி அவனை நல்ல மார்கத்திற்கு அழைத்து  செல்வது
கடவுளின் கருணை இப்படிப்பட்ட கருணை வழியை உணர்த்த வந்தவர் தான் நமது வடலூர் வள்ளல் பெருமான் சிதம்பரம் ராமலிங்கம் என பலராலும் போற்றப்படும் மகான் அவர் நமக்களித்த திருவருட்பா  அகவல் அருளை தருபவை ஆகையால் அந்த அருள் தடாகத்தில் இருந்து சிறிதளவு பருகுவோம் வாருங்கள்
ன்ம நேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்க, இவ்வுலகமெல்லாம் உண்மை நெறி பெற்றிட, எவருக்கும் ஆண்டவர் ஒருவரே, எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே, அவரே அருட்பெருஞ்ஜோதி என்று கூறி மற்றும்,அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்திடை செலுத்த இவ்வுலகில் இறைவனால் வருவுவிக்க வுற்ற அருளாளர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள். அவர்கள் 1823 ஆம் ஆண்டு October மாதம் 5 ஆம் நாள் மாலை 5:30 மணி அளவில் இராமையா பிள்ளை சின்னம்மையார் என்ற தம்பதியாருக்கு ஐந்தாவது மகவாக இறைவனால் வருவிக்க உற்றார்.சிறுவயதில் இருந்தே இறைவனால் ஆட்கொள்ளப்பெற்று பல நூற்றுக் கணக்கான அருட்பாடல்களை அருளினார்கள். அவ்வாறு நமக்காக அருளிய பாடல்களே திருவருட்பா என்று போற்றப் படுகிறது.
 

திருவருட்பா அனைத்தும் அடங்கிய ஒர் அருள் ஞானக்களஞ்சியம். திருவருட்பா என்பது உண்மை உரைக்க வந்த இறை நூலாகும். இதில் பற்பல சாதன ரகசியங்களும், சிவ ரகசியங்களையும், சித்துகளையும் உள்ளடக்கி பாடப்பெற்றுள்ளது. எந்த ஒரு சித்த புருஷரும் வெளிப்டையாக பகிரங்கமாக எடுத்துரைக்காத விசயங்களை எல்லாம் தெள்ளம் தெளிவாக எடுத்துரைக்கப் பெற்ற ஒரே ஒரு நூல் என்று சொன்னால் அதுவே திருவருட்பாவாகும்.
நாம் யார்? நம் நிலை எப்படிப் பட்டது? கடவுள் நிலை என்ன? நாம் கடவுளை விரைந்து எவ்வாறு அடைவது? எங்கனம் அழியாத தேகத்தை பெற்று நித்திய வாழ்வு பெறலாம் என்று ஆராய்ந்து அதனை அடையும் வழியினை கண்டறிந்தார்கள் வள்ளலார். தான் கண்டு அடைந்த அந்த வழியை நாம் எல்லாரும் பெறவே வள்ளல் பெருமானால் எற்ப்படுதப்ட்டதே சுமரச சுத்த சன்மார்க்கமாகும். பல கோடி யுகங்கள் கழிந்தாலும், வேதங்கள் பல கற்றலும் மற்றும் எவ்வகையாலும் கண்டுகொள்ள முடியாத ண்டவரை மிகவும் சுலபமாக அனைவரும் அடைதற்பொருட்டு வள்ளல் பெருமானால் எற்ப்படுதப்பட்டதே சுமரச சுத்த சன்மார்க்கமாகும். இவ்வாறு சன்மார்க்க வழி புகுந்தால் நாம் பெறவேண்டிய அனைத்து ஆன்ம லாபமும் பெறலாம், அது மட்டுமல்ல ஏன் இந்த ஊன் உடம்பும் ஒளி உடம்பாகி ஒளிரும் என்கின்றார் ஒரு பாடலில்,

பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான் சித்தியல் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினால்
நித்திய மாகியே நிகழும் என்பது சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே

என்று மலப்பிணியால் பொத்திய இந்த உடம்பை என்றும் உள்ளவாறு அழியாத உடம்பைப் பெற்று நித்தயமாகலாம் என்று வள்ளலார் கூறுகிறார். அன்று தொட்டு இன்று வரை மனிதன் பல வழிகளிலே தெய்வங்களை தேடினான். பல தெய்வங்களை வணங்கிணான், வணங்கிக் கொண்டும்முள்ளான். இப்படி மனிதன் பல பல தெய்வங்களை கூறியும் சேர்கதி பல வற்றில் புகுந்தும் முடிவில் தெய்வத்தின் நிலையறியாது மாண்டுபோனன். இப்படி இருட்டுலகில் மடிந்து கொண்டுருக்கும் மனிதனை ஒளி நெறி பெற்றிட வள்ளல் பெருமானால் எற்படுத்தியதே சுத்த சன்மார்க்கம் ஆகும். அவர் ஒரு பாடலில் பாடுகிறார்,

தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும் சேர்கதி பலபல செப்புகின் றாரும்
பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும் பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார் மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்
எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்

ஆக மனிதனை துன்பத்தில் இருந்து மீட்டு ஜீவகாருண்ய வழி நடத்தி மனிதனுக்கு தெய்வநிலையை அடையச் செய்விப்பதே சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய நோக்குமாகும். சாதியிலே மதங்களிலே பேதமுற்று அலைந்து வீணே அழியும் இந்த உலகத்தவர்களுக்கு ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை என்னும் சாதனத்தை கொண்டு வந்தார்கள், ஒரு படலில் பாடுகிறார்கள்,

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே

ஆக பேதமற்று, கலவரங்கள் இல்லாத அமைதியான இயற்கை ஒட்டிய வாழ்வு பெறவும், என்றென்றும் தடைபடாது அழியாத மெய்வாழ்வு பெறவும் நமக்கு வள்ளல் பெருமான் வழிவகுத்துக் கொடுத்துள்ளார்கள். ஆதாவது, நமது ஆன்மாவின் கண் பல திரைகளால் முடப்பட்டுருப்பதாகவும் அவற்றை நீக்கி கொண்டு, ஏமசித்தி, சாகக்கல்வி, தத்துவநிக்கிரஹம் செய்தல்,கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் ஆகிய நான்கு புருஷார்த்தங்களை நாம் பெறுமாறு நமக்கு எடுத்து அருளியுள்ளார்கள்.இவ்வாறு முடிந்த முடவாகிய சிவானந்த அனுபவமே தவிர மற்றுவேரில்லை என்றும் அவ்வனுபத்தை எல்லோரும் தன்னைப் போல் பெற ஒரு மார்க்கத்தை கண்டார்கள், அது தான் சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் ஓளி நெறி மார்க்கமாகும்.

ஆக,சுத்த சன்மார்கத்தின் முக்கிய சாதனம் என்னவென்றால்: எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்பும் முக்கியமானவை. ஆதலால் காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போல் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகிறவன்: அவனே ஆணடவனு மாவான்.

வாடிய பயிரைக் கண்ட போதல்லாம் வாடினேன் என்ற வள்ளல் பெருமான், நாம் உண்மையையும் புனிதமும் பெறும் பொருட்டு அருளியதே திருவருட்பாவாகும். திருவருட்பா பாடல்கள் முழுவதும் உள்ளத்தை உருக்குவன. ஆழ்ந்த கருத்துகளை கொண்டன. ஊன் உருக்கி உள்ளெளி பெருக்கும். இத்திருவருட்பாவில் அமைந்துள்ள 6000 மேற்பட்ட பாடல்களை
உண்டுமகிழ்வோம்
 
எங்கெங்ந்திருந்து உயிர் எதெது வேண்டினும் அங்கங்கந்திருந்து அருள் அருட்பெரும்ஜோதி
 
எனவே அன்பர்களே நாமும் பசி என்று வருபவர்களுக்கு உணவு என்னும் மருந்தை கொண்டு அவர்தம் பசி பிணி போக்கி வந்தால் எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவர்  நம்முள்ளே காரியபடுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு உலகத்தில் மனிதப்பிறப்பைப் பெற்றுக்கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபத்தைக் காலமுள்ள போதே அறிந்து அடையவேண்டும்.

பிற உயிரனங்கள் படும் வேதனை வெளிபாடு இதோ
உங்கள் உணவிற்காக, எங்களை கொள்ளும் போது எங்கள்   குழந்தைகள் ஆதரவு இல்லாத அநாதை பிள்ளைகளாகி விடுகின்றனர் ....
எங்கள் குழந்தைகளை கொன்று, உங்கள் குழந்தைகளை வளர்கின்றீர்களா?
எங்களை சாப்பிடுவதால், உங்கள் குழந்தைகளிடம் , எங்களுடைய சாபம் தங்கிவிடுமே ...
இதனை சிந்தித்து பாருங்கள் ....  நன்மை பல பெறுவீர்கள்..
பசி என்று வந்தவருக்கு உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம்!
 
ஜீவகாருண்யமே  மோட்சவீட்டீன் திறவுகோல் !
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
 என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
 
அ. இளவரசன்
வள்ளலார் உயிர்கொலை தடுப்பு இயக்கம்
நெ. 34, அண்ணா தெரு
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை-600 043
கைபேசி. 9940656549,

From: ELAVARASAN ANNAMALAI <elavarasansumathi@gmail.com>
To: karthikayan.jayapal@gmail.com; contactus@vallalarspace.com; vallalargroups@googlegroups.com; velmahesh@gmail.com; P Sujatha Rajashree <aruljothisujatha@gmail.com>; aanmaneyan.kathirvelu@gmail.com
Sent: Wednesday, 5 October 2011 4:46 PM
Subject: [vallalargroups:4349] இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு !

 
 
 
vallar logo.JPG 
 
 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா  நெறியே குவலயமெல்லாம் !
ஜீவகாருண்யமே மொட்சவீட்டின் திறவுகோல்!
 
ஆண்மீக அன்பர்களுக்கு வந்தனம்! 
 
 அன்பர்களே இந்த மாய உலகில் நிலையற்ற இந்த உடலை நிலையானவை என நினைத்து பொய் பலசொல்லி   பொன்போன்ற காலத்தை வீனடிக்கின்ர்றிர் மாபதகசெயலாம் கொலைகள் பலபுரிந்து உங்கள் வயிற்றை பிணங்கள் புதைக்க கூடிய சுடுகாடாக்கி விடுகின்றீர்கள்  சிறு வெளிச்சம் தரக்கூடிய 
விட்டில் பூச்சி போல்  தண்ணீரே சிறிதும் இல்லாத   பாழடைந்த கிணற்றில் வீழ்ந்து அற்பசுகத்தை நினைத்து சந்தோஷபடும் மனிதர்களே சற்றே சிந்தித்து பாருங்கள் இவற்றால் நாம் கண்ட பலன் என்ன கடைசியில் ஒன்றும்மில்லை என்ற பதில் தான் கிடைக்கும்  எனவே  ஆறறிவு படைத்த நமக்கு 
கிடைத்த மாபெரும் பொக்கிஷம் நமது வடலூர் வள்ளல் பெருமான் 
காட்டிய பேரருள் பெருங்கருணை கொண்ட அருட்பெரும்ஜோதி அருளிய அணையா
ஜோதி பிரகாசத்தை பார்த்தால் நம்முடைய உள்ளம் தெளிவடையும் 
இவற்றை எல்லாம் உண்மை அன்பால் சொல்வதற்கு நமது தந்தை அருட்பரும்ஜோதி வருகின்ற தருணம் இது எனவே அன்பர்களே 
காலம் குறைவாக உள்ளது  விரைந்து விரைந்து அருட்பெரும்ஜோதியின்
ஆண்டவனின் பாதத்தை பற்றி கொள்ளுங்கள் நாம் இந்த மாணிடபிறவி அடைந்ததின் பலன் நமக்கு கிட்டும்
 புலை கொலை தவிர்ப்போம் புனிதர்களாக வாழ்வோம் !
 
பொய்விளக்கப் புகுகின்றீர் போதுகழிக் கின்றீர்
புலைகொலைகள் புரிகின்றீர் கலகலஎன் கின்றீர்
கைவிளக்குப் பிடித்தொருபாழ்ங் கிணற்றில்விழு கின்ற
களியர்எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்
ஐவிளக்கு மூப்புமர ணாதிகளை நினைத்தால்
அடிவயிற்றை முறுக்காதோ கொடியமுயற் றுலகீர்
மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்
மேவியதீண் டடைவீரேல் ஆவிபெறு வீ
 
எனவே அன்பர்களே எல்லா உயிர்களையும் தம்முயிர்போல் நினைத்து
ஜீவகாருண்ய சிந்தைனையோடு பசிஎன்று வருபவர்களுக்கு உணவு என்னும் மருந்தை கொண்டு அவர்தம் பிணியை போக்கினால்  எல்லாம் வல்ல அருட்பெரும் ஜோதி ஆண்டவர் நம்முள்ளே காரியப்படுவார் என்பதி சிறிதும் ஐயமில்லை
 
 
பசிஎன்று வருபவருக்கு உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம்
ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோள் !
 
 
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
 
ஆன்மநேய:அ.இளவரசன்
சன்மார்க்க சங்கம்
34, அண்ணா தெரு
திருவள்ளுவர் நகர்,
ஜமீன் பல்லாவரம்,சென்னை- 43
cell no.9940656549
 

 
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க


No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)