Friday, September 10, 2010

Re: [vallalargroups:3467] வள்ளலார் எழுச்சிப் பேரணி அழைப்பிதழ்



8 செப்டெம்ப்ர், 2010 4:39 pm அன்று, ELAVARASAN ANNAMALAI <elavarasansumathi@gmail.com> எழுதியது:
 

       
 ஆன்ம நேய அன்புடைய உடன் பிறப்புகள் அனைவருக்கும் வணக்கத்துடன் 
வரையும் விண்ணப்பம் .

      மனித தேகத்தை பெற்ற நாம் அனைவரும் இறைவனுடைய ,குழந்தைகள்
என்பது உண்மையுடன் தெரிந்தவர்களாக இருந்தால் ,வள்ளலார் வழியில் 
உண்மையான தெளிவு பெற்றவைகளாக இருந்தால் ,நாம் செய்யும் முதல் 
பணி எதுவாக இருக்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள 
வேண்டும் .

     இறைவன் படைத்த உயிர்கள் அதாவது நம்முடைய உடன்பிறப்புகள் 
தாவரங்கள் முதல் மனித தேகம் படைத்த அனைத்து உயிர்களும் 
நம்முடைய உடன் பிறப்புகள் என்பதை அறிவு பூர்வமாக உணரவேண்டும் 
அப்படி உணர்ந்தால் ,பிற உயிர்கள் படும் துன்பத்தை தாங்கிக் கொள்ள
மாட்டோம் .அதை தடுப்பதற்கு உண்டான முயற்ச்சியை மேற்கொள்வோம் .
அதுதான் ஜீவகாருண்யம் ,பசித்த உயிர்களுக்கு உணவு, அதுவும் மனிதர்களுக்கு 
மட்டும் உணவு அளிப்பது ஜீவகருண்யம் அல்ல .   

    உலகிலுள்ள உயிர்கள் அனைத்திலும் இறைவன் இருக்கிறார் ,என்பதை 
உணர்ந்து ,உயிர்கள் படும் துன்பத்தை போக்கும் முயற்ச்சியில் நம்மால் 
முடிந்த அளவிற்க்கு துன்பத்தை போக்க வேண்டியது ,நமது தலையாய 
கடமையாக செயல்பட வேண்டும் அதுவே ஜீவகாருன்யமாகும் ..

    நாம் இப்பொழுது அவசரமாக அவசியமாக செய்ய வேண்டுவது ,
உயிர்க்கொலை செய்வதையும் ,புலால் உண்பதையும் தவிர்க்க 
செய்வதுதான் ,முக்கிய கடமையாக செயல்பட வேண்டும் .அதுவே 
முக்கியமான ஜீவகாருன்யமாகும் .அதுவே சன்மார்க்கமாகும் .

    இன்று மனிதர்களின் முக்கிய உணவாக ,ஆடு ,மாடு ,கோழி ,பன்றி ,
மீன் ,பறவைகள் ,போன்ற வாய் இல்லாத உயிர்களை கொன்று உணவாக 
உட்கொள்வது வாடிக்கையாகி விட்டது ,இதை தடுப்பதற்கு இந்த உலகில் 
சன்மார்க்கிகள் தவிர வேறு யாரும் முனவரமாட்டார்கள் ,அப்படியே 
பல சில இயக்கங்கள் இருந்தாலும் ,அவர்களுக்கு ,உயிரின் தன்மை ,
உயிரின் முக்கியம் ,உயிரின் துன்பம் என்ன என்பது தெரியாது .

    நமது அருட்தந்தை அருட்பிரகாச வள்ளலார் அவர்கள் ,உயிரினங்களைப் 
பற்றி தெளிவாக ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் எழுதிவைத்துள்ளார்கள் .
இவ்வுலகில் தோன்றிய எந்த அருலாளர்களும் ,வள்ளலார் சொல்லிய 
அளவிற்க்கு சொல்லவில்லை .என்பது சன்மார்க்கிகளாகிய நமக்கு 
நன்கு தெரியும் .வள்ளலார் அவர்கள் இப்பொழுது இந்த உலகத்தை 
ஆண்டுகொண்டு ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார் ,என்பதை 
ஒவ்வொரு சன்மார்க்கியும் உணரவேண்டும் .அப்படி உணர்ந்தால் 
அவர் ஆட்சியில், அவர் உருவாக்கிய சன்மார்க்க சங்கத்தில் நாம் 
அனைவரும் உறுப்பினர்கள் ,அவர் கட்டளைபடி நாம் செயல்பட வேண்டும் .

     ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றார் ! ஜீவகாருண்யமே மோட்ச 
வீட்டின் திறவுகோல் என்றார் ! ஜீவகாருண்யமே ஒழுக்கம் என்றார் !
ஜீவகாருண்யமே நாம் அடையும் பேரின்பம் என்றார் ! ஜீவ காருண்யத்தால்தான் 
அனைத்தையும் பெறமுடியும் என்றார் ! வேறு எந்த வகையாலும் வழியாலும் ,
அருட் பெரும்ஜோதியின் அருளைப் பெறமுடியாது என்பதை,தெளிவாக 
தெரியப்படுத்தியுள்ளார் .

     ஆதலால் சன்மார்க்கிகளாகிய நாம் ,வாய் இல்லாத நம் உடன் பிறப்புகளாகிய 
உயிர் உள்ள ஜீவ ராசிகளை காப்பாற்ற வேண்டியது .நமது கடமையாகும் 
என்பதை உணர்ந்து ,ஒவ்வொரு சன்மார்க்கியும் உயிர்களைக் காப்பாற்ற 
வேண்டும் என்பதை பணிவோடு கேட்டுக் கொள்கிறேன் .

     எல்லா ஊர் களிலும் சன்மார்க்க சங்கங்கள் இயங்கிக் கொண்டு 
இருக்கின்றன ,ஏழைகளுக்கு பசியை போக்கிக் கொண்டு இடுக்கின்றன ,
அத்துடன் அந்த அந்த ஊர்களிலுள்ள சன்மார்க்க் அன்பர்கள் ,உயிர்க்கொலையைத் 
தடுப்பதர்க்குண்டான காரியங்களை செய்யவேண்டும் .உயிர்க் கொலையினால் 
ஏற்ப்படும் தீமைகளை ,மக்கள் மத்தியில் எடுத்து உரைக்க வேண்டும் .
ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று பணிவுடன் அவர்களை அணுகி தாய்ப்போல் 
உரைக்கவேண்டும் ,அவர்கள் அறியாமையைப் போக்கவேண்டும் ,வள்ளலார் 
கருத்துக்களை நாம் புரிந்து கொள்ளவில்லையா ! அதுபோல் மக்கள்
புரிந்து கொள்வார்கள்.

     ஒவ்வொரு வீட்டிலும் ஜீவகாருண்ய புத்தகம் கொடுத்துப் படிக்க 
வைக்க வேண்டும் .எப்படியாவது அவர்களை நம்மவர் களாக்கி விட வேண்டும் .

ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஜீவ காருணிய மாநாடுகள் நடத்தி 
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும் .மாவட்ட ஆட்சியர் ,
மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ,முக்கிய பிரமுகர்களை 
அழைத்து ,அவர்கள் தலைமையில் ஜீவ காருண்யக் கொள்கைகளைப்
பரப்ப வேண்டும் ,

    வள்ளலாரின் ஜீவ காருண்யக் கொளகைகளை ,அரசுக்கு அடிக்கடி 
தெரியப்படுத்திகொண்டே இருக்கவேண்டும் ,சட்டப்படி உயிர்க் கொலை 
செய்வதை தடை செய்யவேண்டும் .அதற்குண்டான முயற்ச்சிகளை நாம் 
அனைவரும் ஒன்று சேர்ந்து முயற்ச்சிக்க வேண்டும் .கருத்து வேறுபாடு 
இல்லாமல் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும். 

    மக்கள் அதிகம் உள்ள இடங்களில் ஜீவ காருண்யக் கருத்துக்கள் அடங்கிய 
செய்திகளை எழுதி ,நிரந்தரமாக போர்டுகள் வைக்கவேண்டும் ,ஊர் ஊராகச 
சென்று ஜீவ காருண்யத்தைப் பரப்ப வேண்டும். எந்த வகையிலாவது மக்கள்  
உயிர்க் கொலை செய்வதை தடுக்க வேண்டும் ,நாம் முயற்ச்சி எடுத்தால் 
வள்ளலார் அவர்கள் நம்முடன் துணையாக இருந்து ,நம்மை செயல்பட வைப்பார்கள் .
நிச்சயம் வெற்றிபெறலாம் .  

     சன்மார்க்கிகள் உணவு அளிப்பதை விட உயிர்க் கொலையை தடுப்பது 
முக்கிய செயலாகக் கருதிக்கொண்டு செயல்பட்டு உயிர்க் கொலையை 
தடுக்கவும், புலால் உண்ணாமையும் நிறுத்தவேண்டும், இன்று அனைவருக்கும் 
வள்ளலார் அருளால் உணவு தங்கு தடையின்றி கிடைக்கிறது .ஆதலால் 
அதை செய்ய வேண்டாம் எனறு சொல்லவில்லை .பசியுடன் இருப்பவர்க்கு
உணவு அளித்தால் போதும் ,அதுவே ஒரு சடங்காக செய்யவேண்டாம் .உணவு 
தேவைபடுவோர்க்கு வழங்கினால் போதும் .இதை சன்மார்க்கிகள் உணரவேண்டும் .

    வடலூரில் வள்ளலார் ஏற்றிவைத்த நெருப்பு அணையாமல் எரிந்துக்கொண்டு 
இருக்கிறது ,உலகம் முழுவதும் பசி என்னும் அரக்கனைக் கொன்று கொண்டு 
இருக்கிறது .உலகெலாம் போற்ற ஒளிவடிவனாகி இலக அருள் செய்தான் இசைந்து 
எனறு உரைத்தது ,உண்மையாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது .ஆதலால் 
நாம் செய்ய வேண்டியப் பணிகள் நிறைய இருக்கிறது .

     உலக உயிக்ளைக் காப்பாற்றினால் நமது உயிரை அருட்பெரும்ஜோதியர் 
காப்பாற்றுவார் இது சத்தியம் .
கொல்லா நெறியே குருவருள் நெறிஎனப்
பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச்சிவமே .

உயிரெலாம் பொதுவில் உளம்பட நோக்குக 
செயிரெலாம் விடுக்கெனப் செப்பிய சிவமே .

பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல 
உயிர்த்திரள் ஒன்றென உரைத்த மெய்ச சிவமே .

உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே 
உயிர் நலம் பரவுக எனறு உரைத்த மெய்ச சிவமே .

இயல் அருள் ஒளி ஓர் ஏகத் தேசத்தினாம்
உயிர் ஒளி காண்க என்று உரைத்த மெய்ச சிவமே .

உலகு உயிர்த் திரளெலாம் மொளிநெறி பெற்றிட 
இலகு ஐந்தொழிலையும் யான செய்த தந்தனை .

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையுறு எல்லாம் 
விலக நீ யடைந்து விளக்குக மகிழ்க .

சுத்த சன்மார்க்க சுக நிலை பெறுக 
உத்தமனாகுக யோங்க்குக வென்றனை .

போற்றி நின் பேரருள் போற்றி நின பெருஞ் சீர் 
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞஜோதி .

   என்று வள்ளலார் தெளிவுப் படுத்தியுள்ளார்கள் .ஆதலால் 
சன்மார்க்கிகளாகிய நாம் .வள்ளலார் உரைத்தபடி,உயிர்களுக்கு 
உண்மை அன்பு ,உண்மை இரக்கங் கொண்டு ,உயிர்களைக் காப்பாற்ற 
வேண்டியது கடமையாக கட்டாயமாக கடைபிடிக்கவேண்டும் .

   ஜீவ காருணிய  வள்ளலார் எழுச்சி பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் .
அதே போல் எங்கு நடந்தாலும் அனைவரும் கலந்து கொண்டு விழாவை 
சிறப்பிக்க வேண்டும் .மக்களுக்கு சன்மார்க்கிகளின் ஒற்றுமையை 
நிலை நாட்ட வேண்டும் .மக்களை நல்வழிப் படுத்த பாடுபட வேண்டும் .
கொல்லா நெறியை உலகம் முழுவதும் பரப்பவேண்டும் .எல்லா உயிர்களும் 
இன்பமுடன் வாழ்வதற்கு உற்ற துணையாக இருக்க வேண்டும் .

    இதை வள்ளலார் நமக்கு அளித்த வேண்டுகோளாக உணர்ந்து 
அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன் .

ஒவ்வொரு சன்மார்க்க சங்ககளும் அனைத்து சன்மார்க்க சங்களிலும் 
தொடர்பு கொள்ளவேண்டும் .சிதறிக் கிடக்கும் சன்மார்க்க சங்கங்கள்,
ஒற்றுமையுடன் செயல் பட வேண்டும் .ஒற்றுமையைக் கடைபிடிக்க வேண்டும் .
உலகம் எங்கும் வள்ளலார் கொள்கைகள் பரவ பாடுபட வேண்டும்.

ஒன்றுபடுவோம் உயர்வோம் !
வளர்க சுத்த சன்மார்க்கம் .
வாழ்க வள்ளலார் புகழ் !
வாழ்த்துவார் அருட்பெருஜோதி ஆண்டவர் !

கொல்லா நெறியே குவலயம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

ஆன்ம நேயன் 
அன்புடன் ;--கதிர்வேலு. 

எங்களுடைய வலைப்பூவை பாருங்கள் .
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் .
வலை முகவரி ;--suddhasanmargham.blogspot.com 
gmail mukavari ;-----aanmaneyan.kathirvelu@gmail.com  .                 
 .
 மீண்டும் பூக்கும் .         
       
 
      
 
 பசித்திரு             தனித்திரு            விழித்திரு
  
    அருட்பெருஞ்சோதி     அருட்பெருஞ்சோதி
    அருட்பெருஞ்சோதி     தனிப்பெருங்கருணை
 
கொல்லா விரதம் குவலயம்மெல்லாம் ஓங்குக!
ஜீவகாருண்யமே  மோட்சவீட்டீன் திறவுகோல் !
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
 
அன்பு உள்ளம் கொண்ட ஆன்மீக அன்பர்களுக்கு வந்தனம் எல்லாம் வல்ல ஜீவகாருண்ய  சீலர் நமது வடலூர் ஐயா திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் இந்த நிலவுலகில் அருட்பெரும்ஜோதியின் கருணையினால்  அவதரித்து இதுகாறும் 187 வருஷங்கள் கடந்து  ஐயா அவர்களின் 188 வது அவதார தினமான அக்டோபர் ஐந்தாம்நாளை முன்னிட்டு   வருகின்ற 26.09.2010 ஞாயிற்று கிழமை அன்று சென்னை பல்லாவரம் நகரில் இருந்து கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரத்தில் நமது சாது  இராதாகிருஷ்ணன் அவர்களின் நன்முயர்ச்சியால்   அமையபெற்றுள்ள ஞானசபை வரை  நமது  வள்ளல் பெருமான் கண்ட ஜீவகாருண்யத்தை வலியுறித்தியும் ,நாம் வாழ்வதற்கு வாய்பேச உயிரங்களை கொடுரமானமுரையிலே கொன்று அவைகளின் குழந்தைகளி ஆனாதைகலாக்குவது எந்தவிதத்தில் நியாயம் என்பதை  வலியுறித்தியும்
மற்றும் நமக்கு கிடைப்பதற்க்கு அறிய இந்தமானிட தேகத்தை (அதாவது இறைவன் வாழும் ஆலயத்தை ) மது மாமிசம் போன்றவற்றால் மாசுபடுவதை தவிர்க்க கோரியும் ,எழுச்சிப்  பேருரையாளர் தயவுமிகு ஆண்மநேயன் ஜெய .அண்ணாமலை பரதேசி. விக்கிரவாண்டி, விழுப்புரம் பேருரையோடு  மாபெரும்  எழுச்சிப் பேரணி நடைபெற உள்ளதால்  இந்த நிலவுலகில் உள்ள ஆன்றோர்களும் சான்றோர்களும் தவறாமல் கலந்துகொண்டு இறைவன் அருட்பெரும்ஜோதியின் அருளை பெற்று  வாழ்வதர்க்கு, வாருங்கள் வாருங்கள் என்று  நமது சிதம்பரம் ராமலிங்க திருவருட்பிரகாச வள்ளலார் அழைக்கின்றார்
 
வாரீர்!   வள்ளலார் அழைக்கின்றார் 
 
வாரீர்!              வாரீர்!               வாரீர்!
என அகமகிழ்ந்து அழைக்கும் ஜமின் பல்லவபுர வள்ளலார் உயிர்கொலை தடுப்பு  இயக்க அன்பர்கள்! தயவாளர் .மு.அண்ணாமலை ,தயவாளர்.அ.இளவரசன்.தே.முருகன்.
 அ. தனிகவேல் ,அ.சிவராமன் ,அ.மகாதேவன்  
 
பசி என்று வருபவர்களுக்கு உணவுகோடு அதுவே ஜீவகாருண்யம்!
 
ஜீவகாருண்யமே  மோட்சவீட்டீன் திறவுகோல் !
 
கொல்லா விரதம் குவலயம்மெல்லாம் ஓங்குக!
 
 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
 என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
 
அ. இளவரசன்
வள்ளலார் உயிர்கொலை தடுப்பு இயக்கம்
நெ. 34, அண்ணா தெரு
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை-600 043
கைபேசி. 9940656549,9677160065
 


 
 

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)