Tuesday, September 7, 2010

Re: [vallalargroups:3432] Coimbatore Sanmarkka Discussion With Vallalar Space Admin.Senthil Maruthaiappan

DEAR SIR,
       AFTER VALLALAR, SWAMY SARAVANAANANDA HAS LIVED LIKE HIM.
DAYAVUDAN
SAYEEGANESH.
9894765247.

2010/9/6 Kathir Velu <aanmaneyan.kathirvelu@gmail.com>

ஆன்ம நேய அன்புடையீர் அனைவருக்கும் வணக்கம் .

     உங்கள் செய்தியை பார்த்தேன் படித்தேன். மிக்க மகிழ்ச்சி .
வள்ளலார் எழுதிய திரு அருடபா கருத்துக்களை மக்கள் 
மத்தியில் பரப்புவதற்கு முன் நாம் வள்ளலார் காட்டிய வழியில் 
வாழ்ந்து காட்ட வேண்டும் .நாம் வாழ்ந்து காட்டினால்தான் ,
மற்றவர்களுக்கு வழிகாட்ட முடியும் .

     வள்ளலாருக்கு பின் யாராவது வாழ்ந்து காட்டி இருக்கிறார்களா 
என்றால் இல்லை என்ற பதில்தான் வருகிறது.ஏன் என்ற கேள்வியை 
நம்மைநாமே கேட்டு தெளிவடைய வேண்டும் ஏதோ தவறு செய்துகொண்டு 
வள்ளலார் கருத்துக்களை பின் பற்றி வருகிறோம் .வள்ளலார் கருத்துக்கள் 
உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்ற ஆசையும் ஆதங்கமும் 
எல்லாருடைய மனதிலும் இருக்கிறது .அதைநினைக்கும் போது அனைவருக்கும் 
மகிழ்ச்சிதான் .

     ஆனால்  எப்படி பரப்பமுடியும் ,உண்மை உணராமல் ,உண்மையுடன் 
வாழாமல் எப்படி உண்மையை மற்றவர்களுக்கு பரப்ப முடியும் .
உலகினில் உயிர்களுக்கு குறும் மிடை யூ றெல்லாம்
விலக நீ யடைந்து விளக்குக மகிழ்க !
என்கிறார் வள்ளலார் அவர்கள், .நாம் அடையாமல் ,மற்றவர்களுக்கு 
எப்படி அறியாமையை விளக்கமுடியும் .
நம்மிடம் பொருள் இல்லாமல் அடுத்தவர்களுக்கு எப்படிபொருள்  தரமுடியும்.
நம்மிடம் அருள் இல்லாமல் அடுத்தவர்களுக்கு எப்படி அருளை வழங்க முடியும் .
நாம் வள்ளலார் சொல்லியபடி நடவாமல் மற்றவர்களை எப்படி மாற்ற முடியும் .
நாம் சாதி ,சமயம் ,மதம் என்ற சாக்கடையில் வாழ்ந்து கொண்டு .அடுத்தவர்களை 
எப்படி விட சொல்லமுடியும் .
நாம் பற்றுகளை அறுக்காமல் மற்றவர்களை எப்படி பற்றை விட சொல்லமுடியும் .
நாம மனைவி மக்களோடு வாழ்ந்து கொண்டு ,பணம் சம்பாதித்து கொண்டு 
உலகியலை விட்டு விலகாமல் வாழ்ந்து கொண்டு ,வள்ளலாரைப் பற்றி பேசினால் 
மக்களிடம் எப்படி போய சேரும் .

கண்டதெல்லாம் அநித்தியமே கேட்டதெல்லாம் பழுதே 
கற்றதெல்லாம் பொய்யே நீர் களித்தேல்லாம் வீணே 
உண்டதெலாம் மலமே யுட் கொண்டதெலாங் குறையே 
உலககிலீர் இதுவரையும் உண்மை அறிந்திளிரே 
விண்டதனால் என் இனி நீர் சமரச சன்மார்க்க 
மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே 
எண்டகு சிற்றம்பலத்தே எந்தை யருள் அடைமின் 
இறவாத் வரம் பெறலாம் இன்பம் முறலாமே.

எனறு தெளிவாக வள்ளலார் திரு அருட்பாவில் பதிவு செய்துள்ளார் .
இதுவரையில் நாம் கண்டது ,கேட்டது,கற்றது ,களித்தது ,உண்டது .
கொண்டது ,அனைத்தும்  உண்மையல்ல என்கிறார். .இருந்தாலும் 
பரவாயில்லை இனிமேலாவது அவைகளை எல்லாம் விட்டு ,விட்டு 
சன்மார்கத்தில் சேர்ந்து உண்மையை தெரிந்து கொண்டு ,உண்மையாக 
வாழ்ந்தால் அருட் பெரும்ஜோதியை அடையலாம் என்கிறார் .

நாம் அப்படி அனைத்தையும் விட்டு விட்டோமா ?அல்லது உண்மையையாவது 
தெரிந்து கொண்டோமா ?சிந்தித்துப் பார்க்க வேண்டும் .
சாதரணமாக அனைத்து பொய்யான உருவங்களான சிலைகளை வணங்காமல் 
இருக்கிறோமா ?சமய சின்னங்களை அணியாமல் ,இருக்கிறோமா ?சமயக் 
கோவில் களுக்கு செல்லாமல் இருக்கிறோமா ?சாமியார்களை வணங்காமல் 
இருக்கிறோமா ?அனைவருடய விட்டிலும் அருட்பெரும்ஜோதி தவிர ,வேறு 
தெய்வங்களை வைக்காமலும் ,வழிபடாமலும் இருக்கிறோமா ?அனைத்து 
உயிர்களும் ஒன்று எனறு நினைக்கிரோமா ? வள்ளலாருக்கே சமய சின்னங்களை 
வைத்து வழிபடுகிறோம் ,அவை எவ்வளவு அறியாமையாகும் ,சாதாரண 
விபரத்தை கூட புரிந்து கொள்ளாமல் ,சன்மார்க்க கொள்கைகளை எப்படி 
மக்கள் மத்தியில் பரப்ப போகிறீர்கள் என்பதை ,நினைக்கும் போது 
வேதனையாக இருக்கிறது .

அருட்பெருஞ் ஜோதி என்னும் மகா மந்திரம் எல்லாவகையிலும் 
உயர்ந்தது எனறு காட்டியும் .ஓம் என்ற மந்திரத்தை விட முடியாமல் 
இருககிறோம் ,நீங்கள் எப்படி சுத்த சன்மார்க்க கொள்கைகளை பரப்ப 
முடியும் சிந்தித்து பார்க்க வேண்டும் .

சாதி சமயச  சழக்கை விட்டேன் அருட் 
ஜோதியைக் கண்டேன் ,
பொய்யை யொழித்துப் புறப்பட்டேன் மன்றாடும் 
ஐயரைக் கண்டேன் 

என்கிறார் வள்ளலார் ,எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் 
என்னை ஆண்டவர் ஏறா நிலை மிசை ஏற்றி வைத்துள்ளார் .
நீங்களும் விட்டு விட்டீர்கள் என்றால்,  என்னைப் போல் பெரிய 
லாபத்தை அடையலாம் என்பதை தெளிவாக தெரியப் படுத்தியுள்ளார் .
அப்படி விடாதவர்கள் என்ன? லாபத்தை அடைந்து இருக்கிறார்கள் என்றால் ,
எந்தலாபத்தையும் அடையவில்லை.நீங்களும் அப்படி இருந்தால் எந்த 
லாபத்தையும் அடையமுடியாது .ஆதலால் இத்தருணமே அனைத்தையும் 
விட்டு விடுங்கள் என்கிறார் வள்ளலார் .

வள்ளலார் அவர்கள் இவ்வளவு அழுத்தமாக சொல்லியும் ,வாழ்ந்தும் 
காட்டியும் உள்ளார்கள் .அப்படி இருந்தும் ,அவர் சொல்லுக்கு கட்டுப்படாமல் 
நம் விருப்பம் போல் வாழ்ந்து கொண்டு இருககிறோம் .நம்மால் எப்படி 
சுத்த சன்மார்க்க  கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்ப முடியும் .

ஆதியும் நடுவும் அந்தமும் இல்லாத ஜோதி தன்னையே நினைமின்கள் 
சுகம் பெற விழைவீர் என்றார் வள்ளலார் அவர்கள் ,ஜோதியை தவிர 
வேறு தெய்வங்களை வணங்காமல் ,வழிபடாமல் இருக்க முதலில் 
தெரிந்து கொள்ள வேண்டும் .எதிலும் பற்றுதல் இல்லாமல் வாழ 
வேண்டும் .அனைத்திலும் பற்றுதல் வைத்துக் கொண்டு ,
வள்ளலார் கொளகைகளை மக்கள் மத்தியில் பரப்பினால் எப்படி 
உண்மை விளங்கும் .உண்மை எப்படி தெரியும். .உண்மையாக 
வாழாமல் உண்மை விளங்காது .

வள்ளலாரின்  சுத்த சன்மார்க்க கொள்கைகளை மக்கள் 
மத்தியில் பலவிதமான்,  தப்பான கருத்துக்களை பரப்பிவருகிறார்கள் 
தானும் குழம்பி மற்றவர்களையும் ,குழப்பி வருகிறார்கள் .
அதைவிடுத்து ,எதிலும்  பற்றுதல் இல்லாமல் வாழ்கின்ற 
சுத்த சன்மார்க்கர்களை  உருவாக்க வேண்டும் .அவர்களைக் கொண்டு 
சுத்த சன்மார்க்க கொள்கைகளை ,பரப்ப வேண்டும் .அவர்களால்தான் 
சன்மார்க்கம் வளர்ச்சி அடையும் .அவர்களுக்கு உதவி புரிய,  இல்லறத்தில் 
இருப்பவர்கள் துணையாக இருக்க வேண்டும் .அவர்களும் சமயம் சார்ந்தவர்களாக
மதம் சார்ந்தவர்களாக இருக்க கூடாது.

வள்ளலார் சுத்த சன்மார்க்கம் என்பது சாதாரண மானதல்ல ,
பொருளை விட்டு அருளை பெறுவதாகும் ,அருள் பெரும் 
மார்க்கம் தான் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கமாகும் ..
அருள் என்பது கிடைத்தால் தான் ,அருட்பெரும்ஜோதியை 
அடையமுடியும் .

அருள் உடையார் எல்லாருஞ் சமரச சன்மார்க்கம் அடைந்தவரே 
என்பார் வள்ளலார் ஆதலால் அருளைப் பெறுவதற்கு முயற்ச்சி 
செய்வதுதான் சுத்த சன்மார்க்கம் என்பதாகும். 

அருளாலே யருளிறை அருள்கின்ற பொழுதங் 
அனுபவ மாகின்றது என்னடி தாயே 
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும் 
திரு நட இன்பம் மென்று அறியாயோ மகளே 

அறிவாலே யறிவினை அறிகின்ற பொழுதங் 
அனுபவ மாகின்ற தென்னடி தாயே 
செறிவாலே பிரிவாலே தெரியாது தெரியும் 
திருவருள் உருவம் எனறு அறியாயோ மகளே .

அறிவாலே அருளைப் பெறவேண்டும் அருளாலே அனுபவம் பெற 
வேண்டும் .அருள் அனுபத்தாலே! அனைத்தும் வெட்ட வெளிச்சமாக தெரியும் ,
அபொழுது உலக உண்மைகளும் ,பொய்எது ,மெய்எது என்பது 
தெளிவாக தெரியும் .அதன் பிறகுதான் வள்ளலார் தந்த சுத்த சன்மார்க்கம் 
விளங்கும் .அடுத்து அருட்பெரும் ஜோதியின் உண்மைத் தெரியும் .
அருட்பெரும்ஜோதியின் அருளைப் பெற்றபின்தான் .சுத்தப் பிரணவ ஞானதேகம் 
பெறமுடியும் .ஞான தேகம் பெற்றபின் ,அருட்பெரும்ஜோதி விரும்பி 
அழைக்க வேண்டும் .அழைத்த பின் தான் அருட்பெரும் ஜோதியுடன் கலக்க 
முடியும் .

அருட்பெரும்ஜோதிக்கு ,நல்ல பிள்ளையாக ,செல்ல பிள்ளையாக ,
தலைப்பிள்ளையாக,இருந்தால்தான் ,அருட்பெரும்ஜோதி விரும்பி 
அழைத்துக்கொள்ளும் ,அனைத்துகொள்ளும் ,.என்பதை வள்ளலார் 
தெளிவு படுத்தியுள்ளார் ,வாழ்ந்து வழிக்காட்டியுள்ளார் .

எனது அருமை ஆன்மநேய சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் ,
வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை பின் பற்றி 
வழி தவறாமல் வாழ்ந்து ,அனைவருக்கும் வழி காட்ட வேணுமாய் 
பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் ..          
 
திரு அருட்பா ஆறாம் திருமுறையை நன்கு தெளிவுபட படித்தீர்கள் 
என்றால் அனைத்தும் தெளிவடையும் .,முடிந்த முடிவாக தெரியப் 
படுத்தியுள்ளது ஆறாம் திரு முறையாகும் .ஆதலால் படித்து தெரிந்து
கொள்வது ஒவ்வொரு சன்மார்க்கிகள் கடமையாகும் .

அதேபோல் சன்மார்க்கிகள் அருட்பெருஞ்ஜோதி என்னும்
மகா மந்திரத்தைத் தவிர வேறு மந்திரங்களை ,சொல்லவோ !
நினைக்கவோ !வழிபடவோ கூடாது.மற்ற மந்திரங்கள் எல்லாம் 
அருட்பெரும்ஜோதியுள் அடங்கியுள்ளது .ஆண்டவர் எல்லாவற்றையும் 
நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு,
அவரே வெளிப் படுத்தியுள்ளது ,அருட்பெருஞ்ஜோதியாகும்.
என்பதை வள்ளலார் தெரியப் படுத்தியுள்ளார் .

ஆதியந்தமும் இல்லா ஜோதிதன்னையே நினைமின்கள் 
சகம் பெற விழைவீர் ,

கொல்லா நெறியே குவலயம் ஓங்குக 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க .

அன்புடன் ;--ஆன்மநேயன் ,கதிர்வேலு.     


2010/9/6 Vallalar Groups <vallalargroups@gmail.com>

Inbutru Vazga

Dear All,

Coimbatore Sanmarkka Organizations collectively organized Sanmarkka Discussion with US Vallalar Devotee.Senthil Maruthaippan.

Discussion Topics:
  • Vallalar Space Activities
  • Effective way to propagate Sanmarkka Concepts to all countries.
  • ThiruArutpa Translation
  • Sanmarkka Syllabus Formation
etc..,

Function Attendees:   
  1. US Vallalar Devotee.Senthil Maruthaiappan
  2. Coimbatore Organizer.Prof.S.Vedapuri
  3. Coimbatore Dayaoli Founder. dayavu.Ramadass
  4. Coimbatore Unisoul Universe.Siva Jeyakumar
  5. Coimbatore English Translator.Jaganathan Naryanasamy
  6. Coimbatore Dr.Selvaraj
  7. Coimbatore Sanmarkka Devotee.Rama Irusupillai
  8. Coimbatore Vallalar Kottam. Rajagopalan 
  9. Coimbatore Sivakumar  etc.., ( more than 20 members attended the meeting)

    Please see the below albums for more information



You are invited to view Vallalar Groups's photo album: Coimbatore Sanmarkka Discussion
Coimbatore Sanmarkka Discussion
coimbatore -
Aug 31, 2010
by Vallalar Groups
Message from Vallalar Groups:
Sanmarkka Discussion With US Vallalarspace Devotee. Senthil Maruthaippan

  1. US Vallalar Devotee.Senthil Maruthaippan
  2. Coimbatore Organizer.Prof.S.Vedapuri
  3. Coimbatore Dayaoli Founder. Dayavu.Ramadass
  4. Coimbatore Unisouol Universe.Siva Jeyakumar
  5. Coimbatore English Translator.Jaganathan Naryanasamy
  6. Coimbatore Dr.Selvaraj
  7. Coimbatore Sanmarkka Devotee.Rama Irusupillai
  8. Coimbatore Vallalar Kottam . Rajagopalan 
  9. Coimbatore Sivakumar  etc.., ( more than 20 members attended the meeting)

    Discussion Topics:

    • Vallalar Space Activities
    • Effective way to propagate Sanmarkka Concepts to all countries.
    • ThiruArutpa Translation
    • Sanmarkka Syllabus Formation
If you are having problems viewing this email, copy and paste the following into your browser:
http://picasaweb.google.co.in/lh/sredir?uname=vallalargroups&target=ALBUM&id=5513090958761753121&authkey=Gv1sRgCJ_ak4TDlZimmgE&feat=email
To share your photos or receive notification when your friends share photos, get your own free Picasa Web Albums account.



--
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)