Wednesday, December 23, 2009

[vallalargroups:2510] பட்டினத்தாருக்கு பேய் கரும்பு இனித்தது ஏன் ?

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

சித்தர்களில் மிகவும் வசதியான நிலையினில் இருந்து 
ஞான நிலையினை அடைந்தவர்கள் பத்திர கிரியாரும்
பட்டினத்தாரும் மட்டுமே.
பத்திரகிரியார் நாட்டின் மன்னனாக இருந்து பட்டினதாரால் 
ஞானத்தை அடைந்தார்.
பட்டினத்தார் மிக பெரிய வியாபாரியாக இருந்து 
இறைவனின் கருணையினால் ஞானியாக மாறினார்.
பட்டினத்தாரின் சீடனாக இருந்தும் பத்திரகிரியார்
முக்தியினை பட்டினத்தாருக்கு முன்பே அடைந்து விட்டார்.
காரணம் அவர் நிராசை என்னும் நிலையினை குரு சொன்ன உடன்
அக்கணமே நிராசை நிலையினை அடைந்தார்.
ஆகவே அவருக்கு முக்தி மிக சீக்கிரமே வாய்த்தது.
பட்டினத்தாருக்கு இறைவன் அசரீரியாக 
பேய் கரும்பு எங்கு இனிக்கின்றதோ அங்கோ உனக்கு முக்தி கிடைக்கும்
என்று என்று கூறினார்.
பேய் கரும்பு என்பது உவர்ப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டது.
பேய் கரும்பு என்பது பார்ப்பதற்கு சாதாரண வெள்ளை கரும்பை போல்தான் 
இருக்கும். இருப்பினும் இனிப்பு சுவை இல்லாதது.
பட்டினத்தார் நடை பயணமாக பல இடங்களுக்கும் சென்று
பின்னர் திருவொற்றியூர் வந்து சேர்ந்தார் 
அங்கு நிறைய பேய் கரும்பு விளைந்து இருந்தது.
அவர் அதில் ஒன்றை எடுத்து சுவைத்து பார்த்தார் 
பேய் கரும்பு இனித்தது.
இந்த இடம் தான் முக்தி அடைவதற்கான இடம் என்பதனை உணர்ந்து
அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்களிடம்
என்னை குழி தோண்டி புதைத்து விடுங்கள் நான் அதிலிருந்து
வெளியில் வந்து உங்களுக்கு இனிப்புகள் தருகிறேன் 
என்று கூறினார். அதே போல் சிறுவர்களும் அவரை குழியில் 
புதைத்தார்கள். அவரும் சித்தின் மூலம் வெளியில் வந்து 
சிறுவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
அதே போல் மறுமுறையும் செய்தார்.
மூன்றாவது முறையாக உள்ளே சென்றவர் திரும்ப வரவில்லை.
சிவத்தோடு கலந்து விட்டார்.
இதில் இறைவன் பேய் கரும்பு இனிப்பு சுவை ஏற்ப்படும் இடத்தில் 
முக்தி அடைவாய் என்று கூறியதற்கு காரணம்
முக்தி அடைவதற்கு முன்பு நமது அண்டத்திலிருந்து 
வருகின்ற அமுதம் தேனை போல சுவை கொண்டதாக இருக்கும்.
தேனோடு எந்த பொருளை சேர்த்தாலும் அந்த பொருளின் சுவை போய்
தேனின் சுவையாக மாறி விடும்.
அதே போல்தான் மேலிருந்து வரும் ஐந்தாவது அமுதம் 
தேனின் சுவையோடு இருக்கும்.
அந்த சுவையோடு பேய் கரும்பை சுவைத்தால் 
உவர்ப்பு சுவை போய் இனிப்பு சுவை மட்டுமே தெரியும்.
இது இறைவனால் பட்டினத்தார்க்கு கொடுக்கப் பட்ட
முக்திக்கான அடையாளம்.
நமது வள்ளல் பெருமானும் அமுதத்தை பற்றி 
குறிப்பிடும் போது அமுதம் ஐந்து நிலை உடையது என்று கூறி இருக்கிறார்கள்.
ஐந்தாவது வரும் அமுதமானது வரும்போது 
இறைவனோடு ஐக்கியம் ஆகும் தகுதியை நாம் பெற்றிருப்போம்.

அனைத்து அமுத நிலையினை அடைய வேண்டும் என்றால்
ஒருமை மற்றும் ஜீவகாருண்ய மயமானால்
நாமும் இறை  நிலையினை அடையலாம்.

 அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு 

--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)