Tuesday, June 26, 2018

[vallalargroups:5972] உடைந்த சமயக்குழி நின்று எழுந்து உணர்மின்...வடலூர் இரமேஷ்

அருட்பெருஞ்ஜோதி🌺
அருட்பெருஞ்ஜோதி🌺
தனிப்பெருங்கருணை🌺
அருட்பெருஞ்ஜோதி🌺
   🌷🍀உடைந்த சமயக்குழி நின்று எழுந்து உணர்மின்🍀🌷
🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵
     ஆன்மநேய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன்🙏
    
        இவ்வுலகில் அன்றுதொட்டு இன்றுவரை நடந்துகொண்டிருக்கின்ற ஆன்மீக அருள் செயல்கள் எல்லாமும் அருட்பெருஞ்ஜோதி என்ற ஒரே கடவுளால்தான் நடத்தப்பட்டு கொண்டிருக்கின்றது என்பதை சத்தியமாக அறிவோம்🌹

      அன்று வந்த அருளாளர் கூட்டங்கள் முதல் இன்று வருவிக்கப்பட்ட நமது அருட்பெருந்தந்தை அருட்பிரகாச வள்ளல் பெருமான் வரை அனைவரையும் வருவித்தருளியது அருட்பெருஞ்ஜோதி என்ற ஒரேக் கடவுளே ஆகும்🌹
     
       இவையனைத்தும் ஏன் மாறுபட்டு கொண்டே இருந்தன என்றால் அனைத்தும் ஆறறிவு ஜீவர்களாகிய நமது அறிவின் பக்குவத்தை மேம்படுத்தும் பொருட்டே மாறுபட்டது என்பதை சத்தியமாக உணர்தல் வேண்டும்🌹
     
         ஆம் இவ்வுலகில் நடக்கின்ற ஒவ்வொரு அருள்செயல்களும் நமக்காகவே திருவருளால் நடத்தப்படுகின்றன.
      அன்று சமணம் புத்தம் முதலிய சமயங்களை தோற்றுவிக்க அதற்குரிய அருளாளர்களை வருவித்து அப்போதைக்கு இருந்த நமது அறிவின் தரத்திற்கு தக்கவாறு அவர்களால் பல நன்னெறிகளை கூறி அதற்குரிய நெறிமுறைகளை வகுத்ததும்,

        பிறகு சிறிது காலம் கடந்து  நமது அறிவின் தரம் சற்று மாறுபட்டு உயர்ந்த பிறகு அந்த சமணத்தையும் புத்தத்தையும் கரையேற்ற சைவம் வைணவம் முதலி சமயங்களை தோற்றுவிக்க அதற்குரிய அருளாளர்களை வருவித்து அவர்கள்மூலம் அவற்றிற்குரிய நெறிமுறைகளை வகுத்து பலகாலம் நமது அறிவின் தரத்தையும் பக்தியின் தரத்தையும் உயர்த்தியருளியதும் ,
   
       இன்று அதே சமயத்தையும் மதத்தையும் மறுக்கச்செய்து உண்மைக் கடவுள் என்பவர் சாதி மதம் சமயம் என்ற ஆச்சார சங்கற்ப விகற்பங்களைக் கடந்து சுத்தசமரசமாய் அனைத்து உயிர்களுக்கும் பொதுவாய் நின்று அருட்பெருஞ்ஜோதி மயமாய் விளங்குகின்றார் என்ற பேருண்மையை உணர்த்தி சாதியையும் சமயத்தையும் மதத்தையும் கரையேற்றி சமரச சுத்தசன்மார்க்கம் என்ற புலைகொலை தவிர்த்த ஒரு புணித நெறியை இவ்வுலகில் நிலைபெறச்செய்து அந்த புணிதநெறியில் இவ்வுலகவர்களை எல்லாம் ஒருமிக்கச்செய்து அவரவர்களின் வாழ்வையும் நிலைபெறச்செய்து அழியாப் பெருவாழ்வாகிய மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்வித்திட வேண்டும் என்ற பெருங்கருணையில் ,
நமது திருவருட்பிரகாச வள்ளல் பெருமானை இவ்வுலகிற்கு வருவிக்கச் செய்து ,
அவர்களுக்கு தனது பூரண அருள்அனுபவத்தைக் கொடுத்தருள்பாளித்து, 
இவ்வுலகில் தேகாதி முதல் எல்லாம் செய்யவல்ல ஞானசித்தியையும் அளித்து ,
அருட்பெருஞ்ஜோதி இயற்கை தேகமாகிய முத்தேக சித்தி அனுபவத்தையும் கொடுத்து ,
தன்மயமாக்கிக்கொண்டு , இவ்வுலகை அருளாள் ஆட்சிசெய்யும் ஓர் அருட்செங்கோலையும் கையில்கொடுத்து அதற்கு சாட்சியாக கங்கணத்தையும் கையில் கட்டி ,அண்டபகிரண்டம் முழுவதும் அருளால் உனது விருப்பப்படி சுத்தசன்மார்க்க நல்லாட்சி செய்து அருள்வாய் மகனே என்று ,
தனது அடிமுடியை(அந்தம் ஆதி) அறிந்துகொண்ட முதல் ஆன்மா என்பதால் பிள்ளைப் பட்டத்தையும் நமது வள்ளல் பெருமானுக்கு கொடுத்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன்னைத்தானே நமது வள்ளல் பெருமான் மூலம் வெளிப்படுத்தி அருள்பாளித்தருளினார்கள்🌺🌷🌹.

   அவ்வாறு ,நமது பெருமானாற் 
தான் பூரண அருள் அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு இறைஅனுபவத்தின் உச்சியில் நின்று ஆண்டவர் தம்மை அணைய வருகின்ற தருணத்தை ,
ஆண்டவரே இவ்வுலகிற்கு அறிவிக்குமாறு உணர்த்திடவும்,
நமது பெருமானும் அந்த புணித தருணத்தை இவ்வுலகவருக்கு அறிவித்து ,நம்மை ஆளும் பரம்பொருள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பொருட்டு இவ்வுலகிற்கு வரஇருக்கின்றார்கள், அவ்வாறு ஆண்டவர் வரும் தருணத்தில் நீங்கள் எல்லாம் தக்க பக்குவத்தில் இருந்தால் அவரது வருகையினால் அந்த அற்புத பேரொளியின் பேராற்றலால் பெறவேண்டியதை எல்லாம் பெற்று அழியா வாழ்வு பெற்றிடலாம் இவ்வுலகில் என்றும் இளமையோடு நரைதிரை மூப்பற்று  அருள் வாழ்வில் நிலைபெற்று வாழலாம் என்று கூறி,
      அதற்குரிய பக்குவத்தைப் பெறுவதற்கும் நமக்கு தெரியாது என்பதையும் அறிந்த நமது பெருமான்,அப் பக்குவத்தை வருவிப்பதற்கான வழிபாட்டு நெறியையும் "ஞானசரியை" என்ற தலைப்பில் பெருமான் பாசுரங்களாக வகுத்துக்கொடுத்து அப்பாசுரங்களில் கண்டபடி ஆண்டவரை அழுது தொழுது வழிபட்டுவருவீர்களானால் ,என்னைப் போன்று தாங்களும் பெருவாழ்வடைவீர்கள் என்று கூறி ஞானசரியை பாசுரங்களை நமக்கு பெருந்தயவுடன் அளித்துள்ளார்கள்.
  அவற்றில் 11 வது பாடல்தான் கீழ்கண்ட பாடல் இப்பாடலின் பொருளை அடுத்த இரண்டாவது பகுதியில் காண முற்படுவோம்.
  
          ஏனெனில், மலம் ஐந்தையும் காட்டிலும் மிகவும் கொடியது தூக்கமும் சோம்பலும் ,
இவ்வளவு நீண்ட பதிவாய் இருந்தால் அருளை நாடுபவர்களைத் தவிர மற்றவர்கள் சோம்பலால் படிப்பதை தவிர்த்துவிடுவார்கள் என்ற காரணத்தினால் இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தொடர்வதற்கு எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் அருட்பிரகாச வள்ளல் பெருமானையும் பிரார்த்தித்துக்கொண்டு இத்துடன் இப்பதிவை நிறைவுசெய்கின்றேன் 🌹
.....நன்றி🙏
....வள்ளல் மலரடிப் போற்றி! போற்றி!🙏
....பெருமான் துணையில்🙏
....வள்ளல் அடிமை🙏
....வடலூர் இரமேஷ்;

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)