Tuesday, June 26, 2018

[vallalargroups:5971] தத்துவ விளக்கமே நடராஜர் சொரூபமாகும் - வடலூர் இரமேஷ்

அருட்பெருஞ்ஜோதி🌻
அருட்பெருஞ்ஜோதி🌻
தனிப்பெருங்கருணை🌻
அருட்பெருஞ்ஜோதி🌻

    🏵அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்  மெய்த்தொழிலாகிய பஞ்சகிருத்திய தத்துவ விளக்கமே நடராஜர் சொரூபமாகும்🏵
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
🍀🍀
     ஆன்மநேய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன்🙏
       
     தில்லைச் சிதம்பர நடராஜர் உருவம்தான் அண்டபிண்டத்தை ஆக்கி ,காத்து, அழித்து, மறைத்து, அருள்பாளிக்கின்ற இயற்கை உண்மைக் கடவுளின் உண்மையான தோற்றமா? அல்லது அந்த தோற்றத்திற்கு காரணமான கடவுள் வேறு யார் ?என்று விசாரம் செய்வோம்  🌺
     
    உண்மைக் கடவுள் ஒருவரே என்பதும், அவர் ஒருவரே இப்பிரபஞ்சத்தில் எல்லாவுமாய் இருக்கின்றார் என்பதும் ,
அவரது இயற்கை உண்மை விளக்கத்தை ,இவ்வுலகவர்களுக்கு தத்துவமாக விளக்கி காட்டுவதற்காக மானுட வடிவில் காட்டப்பட்ட தத்துவ உருவம்தான் நடராஜர் உருவம் என்பதும் நாம் அனைவரும் அறிவோம் 🌺

இயற்கையில் எங்கும் நிறைந்தவராய் ,
இயற்கையில் எல்லாவுமாய் விளங்குபவராய்,
 இயற்கையில் கலந்து நிறைந்திருக்கும் இயற்கை உண்மைக் கடவுளின் தன்மையை,
தத்துவ விளக்கமாக காட்டப்பட்ட  
தத்துவ உருவத்தையே 
உண்மைக் கடவுளாக மனதில் பதியவைத்து வழிபடுவதைக் காட்டிலும்,
அந்த தத்துவ விளக்கத்திற்கு காரணமான இயற்கை உண்மைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், 
தத்துவங்கள் எல்லாம் கடந்த நிலையில் தத்துவாதீதராக இருக்க ,
அவரது உண்மை சொரூபமாகிய அருட்பெருஞ்ஜோதி  நிலையில் வழிபடுவதே ,
உண்மை வழிபாடாகும் 🌺

 🔥மெய்த்தொழில்🔥
          இயற்கை உண்மைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் , தமது "மெய்த் தொழிலாகிய " பஞ்ச கிருத்தியம்" என்னும் ஐந்து பெருங்கருணைத் தொழில்களாகிய சிருட்டித்தல்,
காத்தல்,
அழித்தல்,
மறைத்தல்,
அருளல் என்ற ஐந்து பெருங்கருணைத் தொழில்களை இவ்வண்ட பகிரண்டம் முழுவதும்  நடத்திக்கொண்டு இவ்வுலக உயிர்கள் அனைத்தும் இயற்கை விளக்கம் பெற்று இயற்கை இன்பத்தை அடையும் பொருட்டு  இடையறாது தடையறாது தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருப்பதையே அருட்பெருஞ்ஜோதியின் அசைவு என்றும்,
அந்த அசைவை வெளிப்படுத்தும் உருவத் தோற்றமே நடராஜர் என்றும்,
அந்த அசைவையே "நடம்" என்றும்,
"நடனம்" என்றும்,
 "திருநடம்" என்றும்  இவ்வுலக உயிர்கள் அனைத்தும் இன்பம் அடையும் பொருட்டு நடம் புரிவதால் "ஆனந்த திருநடனம்" என்றும் அருளாளர்களால் பல்வேறாக பெயர்வைத்து வழங்கப்பட்டது 🌺

    இதுபோன்ற பெயரையும் உருவத்தையும்  வைத்தே பல்வேறு சமயங்களும் மதங்களும் தமக்கு ஏற்றாற்போன்று ஒன்றாய் இருக்கும் இறைவனை பல்வேறு தோற்றத்தில் வடிவமைத்துக்கொண்டு ,அதற்கென்று பல்வேறு நெறிமுறைகளையும் வகுத்து வழிபட்டு வந்தன . 
 எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் ஆன்மாக்களின் அறியாமைக்கு தக்கவாறு,
அறிவார் அறியும் வண்ணமாகவும்,
கருதுவார் கருதும் வண்ணமாகவும்,
துதிப்பார் துதிக்கும் வண்ணமாகவும் 
ஆகிய எல்லா வண்ணமுமாக இருந்து நமக்கு வேண்டியதை அருள்பாளித்தார்கள்🌺
       
      தற்போது நமது திருவருட்பிரகாச வள்ளல் பெருமானின் வருகைக்குப் பிறகு , 
   பெருமான் முன்னின்று நடத்தும் சுத்தசன்மார்க்கத்தின் வாயிலாக
 இவ்வுலகம் உண்மைக் கடவுளை அவரின் உண்மை வடிவமான அருட்பெருஞ்ஜோதி வடிவிலேயே, உண்மை வழிபாடு செய்து, இயற்கை உண்மை லாபத்தை அடையும் பொருட்டு ,அருட்பெருஞ்ஜோதி  வழிபாட்டிற்கு என்று ஓர் ஆன்ம ஆலயமாக சத்தியஞானசபையை  வடலூர் பெருவெளியில் அமைத்து இவ்வுலகத்தின் முதல் ஆன்மத் திருக்கோயிலாக வடலூர் சத்தியஞானசபையை இவ்வுலகத்திற்கு பெருமான் திருவருள் ஆணையால் கட்டாக்கொடுத்து அருளியுள்ளார்கள்🏵

     இவ்வுலகமும் பெருமான் கண்ட சுத்தசன்மார்க்கத்தை சார்ந்து மரணத்தை தவிர்த்து வாழக்கூடிய சாகாக்கல்வியை பயிற்றுவிக்கும் சுத்தசன்மார்க்க நெறியில் பயணித்துக்கொண்டிருக்கின்றது 🌺 

   இனி இவ்வணடம் முழுவதும் சுத்தசன்மார்க்கம் ஒன்றே தழைத்து ஓங்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் திருவுளம் கொண்டுள்ளதாலும் , 
இதுவரை இருந்த சமயம் மதம் போன்ற மார்க்கங்கள் எல்லாம் சுத்தசன்மார்க்கம் என்ற ஓர் அருட்குடையின்கீழ் ஒன்றுசேர்ந்து பயணிக்கும் என்பதுதான் கடவுள் ஆணை என்பதும் திருவருட்பாவின் வாயிலாக நமது வள்ளல் பெருமான் சத்தியம் செய்து சொல்கின்றார்கள்.
அதற்கு ஏற்றார் போல் வடலூர் பெருவெளியில் தோற்றுவிக்கப்பட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமும் இன்று இவ்வுலகம் முழுவதும் பரந்து விரிந்து பல்வேறு கிளைகளாக சுத்தசன்மார்க்க அன்பர்களைக்கொண்டு திருவருளால் நடத்தப்பட்டு வருவதையும் நாம் கவணிக்கின்றோம்🌺

ஆதியில் ஏகராக இருந்த கடவுளே பின்பு ஜீவர்களின் அறிவின் பக்கவம் பொருட்டு அனேகராக வடிவம்கொண்டு அருள்பாளித்தும் ,
தற்போது புலைகொலை தவிர்த்த சுத்தசன்மார்க்கம் தழைத்து ஓங்கும்  சுத்தசன்மார்க்க காலத்தில் மீண்டும் தமது உண்மையை இவ்வுலகம் அறிந்து  வழிபட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ற ஒருவரே உண்மைக் கடவுள் என்று மீண்டும் ஏகராகவே தற்போது இவ்வுலகமெல்லாம் ஆண்டவர் அருட்பெருஞ்ஜோதி வடிவில் சத்திய ஞான சபைகளின் வாயிலாக விளங்குகின்றார்கள் .
அப்படி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அறிந்து துதித்து வழிபடுபவர்கள் சுத்தசன்மார்க்க சங்கத்தார்களாக இவ்வுலகம் கண்டுகொண்டுள்ளது 🌺 

     ஆகலில் எனதருமை ஆன்மநேய உயிர் உறவுகளே ஆதியில் ஏகராகவும் பிறகு திருவருளால் வருவிக்கப்பட்ட அருளாளர்களின் பக்குவத்திற்கு தக்கவாறு அனேகராகவும் இருந்த  "அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் " என்ற இயற்கை உண்மைக் கடவுளே மீண்டும் ஏகராக சுத்தசன்மார்க்கத்தில் இருந்து அருள்பாளிக்கின்றார்கள் என்பதை உணர்ந்து ,கடவுள் ஒருவரே என்பதும் அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதையும் உணர்ந்து சுத்தசன்மார்க்கம் சார்வோம் 🌺
சுகம் பெறுவோம்🌺
....நன்றி🙏
...வள்ளல் மலரடிப் போற்றி போற்றி 🙏
....பெருமான் துணையில் 🙏
...வள்ளல் அடிமை🙏
....தயவுடன் வடலூர் இரமேஷ்.

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)