Tuesday, January 16, 2018

[vallalargroups:5868] Suddha Sanmargam Vs Religion - Tamil article - Part 2

Suddha Sanmargam Vs Religion - Tamil article - Part 2

சுத்த சன்மார்க்கம் : சமய மதங்களும் ஓர்ஆய்வு - பாகம் 2

இந்த கட்டுரையில் எங்கெல்லாம் மேற்கூறிய சமய மதங்கள் சுத்த சன்மார்க்கத்துடன்
ஒத்துப் போகின்றன என்று பார்க்கலாம்.

1. ஜோதி தரிசனம் :
சுத்த சன்மார்க்கம் : சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்கின்ற நேரத்தில் ஜோதி தாரிசனம்
காண்பிக்கப் படுகின்றது
சமய மதங்கள் : சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்கின்ற நேரத்தை வந்தனம் செய்து
( வாழ்த்தி ) வணங்குகின்றார் பிராமணர்கள் - இதனை "சந்தியா வந்தனம் " என்று
குறிப்பிடுகின்றார்கள்
உட்பொருள் : சூ¡ரியனும் சந்திரனும் ஒன்று சேர்கின்ற இடத்தில் தெய்வம் இருக்கின்றது
என்று பொருள்

2. ஆன்ம   தரிசனம்
சுத்த சன்மார்க்கம் : ஏழு திரை நீக்கினால் ஆன்ம ஒளியின் தாரிசனம் கிட்டும்
என்கின்றது 
சமய மதங்கள் : சைவம் : தி¡ரிபுர தகனமாக - மாயை , கன்மம் மற்றும் ஆணவ மலங்களின் அழிவாக சித்தாரிக்கிறது
கௌரவர்களின் அழிவாக சித்தாரிக்கிறது
கௌமாரம் - சூரசம்ஹாரமாக - பத்மாசுரனை வதம் செய்ததாக சித்தாரிக்கிறது
உட்பொருள் : மலங்கள் தான் திரைகளாகவும் , தி¡ரிபுரமாகவும் , சூரனாகவும்
சித்தாரிக்கப்பட்டிருகிறது

3. மும்மலக் கழிவு :
சுத்த சன்மார்க்கம் : சுத்த உஷ்ணத்தினால் அல்லாது, வேறு எதனாலும் திரைகளை
நீக்க முடியாது என்கின்றது
சமய மதங்கள் :
சைவம் : சிவன் கண்ணுதல் ( நெற்றிக்கண்) திறந்து மும்மலத்தை அழித்ததாக
சித்தாரிக்கிறது
கௌமாரம் : முருகன் வேல் கொண்டு சூரனை சூரசம்ஹாரம் செய்ததாகச்
சித்தாரிக்கிறது
உட்பொருள் : சுத்த உஷ்ணம், நெற்றிக்கண், வேல் - ஒன்றைக் குறிக்கின்ற பொருள் -
அது ஆன்மா ஆகும்

4. திருவடி :
சுத்த சன்மார்க்கம் : திருவடியை தன் சிரசில் சூடினேன் என்று வள்ளலார் கூறுகின்றார்
சைவம் : தாள்தலை என்று கூறுகின்றது - பொருள் - தாளை தலையில் சூட வேண்டும்
என்று பொருள் பட கூறுகின்றது
வைணவம் : திருவடி சிரசில் இருக்கின்றது என்பதை அடையாளமாக காட்ட "
சடா¡ரியின் மேல் இரு தாள்கள் " வைத்துக் காட்டி இருக்கின்றார்கள்

5. ஆகாய கங்கை :
சுத்த சன்மார்க்கம் : வள்ளலார் இதனை அருளமுதம் , ஞானமுதம்,
மேலைப்பாற்சிவகங்கை என்றும் கூறுகின்றார்
வைணவம் : மூன்று உளுந்து பிராமணமுள்ள சுத்த கங்கையை புசிக்க வேண்டும்
என்பதை அடையாளமாகக் காட்ட பெருமாள் கோவில்களில் மூன்று முறை தீர்த்தம்
கொடுக்கின்றார்கள்.
உட்பொருள் : தீர்த்தம் என்பது அமுதம்

6. ஆன்ம நிலை :
சுத்த சன்மார்க்கம் : இரண்டும் ஒன்று என்கின்ற பொரிய நிலை என்றும், ஒருமை
என்றும், ஆன்ம நேய ஒருமைப்பாட்டு¡ரிமை என்றெல்லாம் வள்ளலார் கூறுகின்றார்
சமய மதங்கள் :
நடுவு நிலைமை , இடை நிலை என்றும் , தராசு என்றும் கூறுகின்றார்கள்

வேதம் : ஸ்திதப் பிரக்ஞன் என்று கூறுகின்றது
வள்ளுவர் : ஒத்த விடம் என்று கூறுகின்றார்

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)