Sunday, January 7, 2018

[vallalargroups:5858] விஷ்ணு அகத் தத்துவம்.

அருட்பெருஞ்ஜோதி !
                     அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
                      அருட்பெருஞ்ஜோதி !
              விஷ்ணு அகத் தத்துவம்.
                *********************
      ஆன்மநேய உறவுடைய அருமை சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனம் ;
      இதற்கு முன்பதிவுகளில் முருகன், சூரசம்மாரம்,நாராயணன் என்ற தத்துவ விளக்கத்தை வள்ளல் பெருமான் தெரிவித்தண்ணம் ஒருவாறு அறிந்துகொண்டோம்,

         தற்போது விஷ்ணு தத்துவத்தையும்,
பெருமான் தெரிவித்துள்ள வண்ணம் பார்ப்போம்;

      பரபிரபஞ்சமாகிய அண்டத்தில் எத்தனை தத்துவங்கள் சொல்லப்பட்டுள்ளதோ அவையனைத்தும், சிற்பிரபஞ்சமாகிய நமது பிண்டத்திலும் தத்துவங்களாக உள்ளன என்பதை முதலில் தெரிந்து தெளிதல் வேண்டும்;

     அந்தவகையில் நமது உடம்பில் ஜலதத்துவமாகிய (அப்புதத்துவம்) விஷ்ணு நமது உடம்பில் எந்த இடத்தில் எப்படி சொல்லப்பட்டுள்ளது என்பதையும் அறிவோம்.

     விஷ்ணு தொப்புளிலிருந்து பிரம்மா உண்டாவது எப்படி ?

         மனிததேகத்திலே கோசத்திற்கும் (கருப்பை,பிறப்புறுப்பு)  இரண்டு அங்குலத்திற்கு மேல்  நாற்சதுரமாக ஒரு பை இருக்கின்றது.
     நாம் உண்ணுகின்ற உணவில் இருந்து பிரிக்கப்படுகின்ற இந்திரியமானது நமது 16 வயது வரையில் ஜலம்போன்ற தண்மையுடன் இறுக்கமற்று மேற்கூறிய நாற்சதுர பையினுள் ஜலமாக சென்று சேருகின்றது .இதைத்தான் 
"மானச தடாகம் " என்று சொல்லப்படுவதாகும்.

        16வயதிற்கு மேல் உண்டாகும் இந்திரியம் , ஏற்கனவே உறைந்து சேர்ந்துள்ள அந்த ஜலத்தின் மத்தியிலே சென்று தங்குகின்றது ,அப்படி மத்தியில் சேர்ந்துவரும் இந்திரியம் பொன்வர்ணமாக இருக்கும்.
இதைத்தான் "தாமரைப் பூ " என்று சொல்லப்படுவதாகும்.

     அந்த தாமரைப் பூ என்று சொல்லப்படும் பொன்வர்ணமான இந்திரியத்தின் மத்தியிலே ,
சாதாரண காற்றுக்கு நூற்றில் ஒரு பங்காக மிகவும் நேர்மையாக ஒரு ஆவி இருக்கின்றது அதன் வண்ணமும் பொன்மையாக உள்ளது. அந்த ஆவிக்கு அதிஷ்டான தெய்வம் "பிரமன் " என்று சொல்லப்படுவதாகும்.
    அந்த ஆவி உண்டாகக்கூடிய காலத்திற்கு "சகல காலம் " என்றும்,
ஆவி உண்டாகி அடங்குகின்ற காலத்திற்கு "கேவல காலம் " என்றும் சொல்லப்படும்.

      அந்த ஆவி உண்டாகக்கூடிய காலத்திலே செயற்கையானால் (உறவு கொள்ளுதல்) கருத்தரிக்கும்.
இதற்கு பெயர் "சிருட்டி" என்று சொல்லப்படும்.

       இந்த ஆவி உண்டாகுவதற்கு காரணம் , தொப்புளில் இருந்து ஒரு நாடி தோன்றி  மேற்கூறிய தாமரைப்பூவின் மத்தியில் முகந்து கொண்டிருக்கும்,
அதன்மூலமாய் அக்கினி இருக்கின்றது ,
இதைத்தான் "மூலாக்கினி " என்று சொல்லப்படுவதாகும்.

       அதன்மேல் இரண்டரை அங்குலத்தில் உந்திக்கு (தொப்புள்)நேராக உட்பாகத்தில் சதுரமாய் ஒரு பை இருக்கின்றது.

     நாம் உண்ணுகின்ற உணவு ஐந்து நாழிகையிலே ( 2 மணி நேரம்)  பால் போன்ற ஜலமாக நமது உடம்பின் "ருத்திரபாகம் "என்று சொல்லக்கூடிய இடத்தில் இருக்கின்ற மேற்கூறிய சதுரமான பையிலே சென்று சேர்கின்றது. இதைத்தான் "சஷீராப்தி"
என்று சொல்லப்படுவதாகும்.

     அந்த பால் போன்ற ஜலத்தின் மேல்பகுதியில் நமது உடம்பில் இருக்கும் ஆலம் இலைபோன்ற வடிவத்தை உடைய நமது வயிற்றுன் உட்பகுதியில் படிவதனால், அதே வண்ணத்துடன் அந்த ஜலத்தின்மேல் "ஆலிலை "வடிவத்தில் ஓர் ஆடை கட்டியிருக்கும். அதைத்தான் 
"ஆலிலை " என்று சொல்லப்படுவதாகும்.

     இந்த ஆடையின் மேல் ஒரு  நரம்பு வட்டமாய் தலையை தூக்கிக்கொண்டு இருக்கின்றது இந்த நரம்பைத்தான்
 " ஆதி சேஷன்" என்று சொல்லப்படுவதாகும். 

     இந்த குண்டலிவட்ட ஆதி சேஷனென்னும் நாடி மத்தியில் செம்பில் இருக்கு களிம்பு போன்று "பச்சை நிறத்துடன் ஒரு சத்தி" இருக்கின்றது,
இந்த சக்தியைத்தான் "விஷ்ணு" என்று சொல்லப்படுவதாகும்.

 இந்தப் பகுதி தொப்புளில் இருப்பதால் ,
விஷ்ணு தொப்புளில் இருப்பதாகவும்,
  இந்த தொப்புளில் இருந்து மேற்கூறிய நாடியில் உண்டாகும் "மூலாக்கினி" மூலம் ஒரு ஆவி உண்டாவதும் அதற்கு அதிட்டான தெய்வம் பிரம்மா என்றும் சொல்லப்பட்டதால்,

   விஷ்ணு என்று சொல்லப்படும் பச்சை நிறத்துடன் இருக்கும் சக்திப் பகுதியான தொப்புளில் இருந்து ஒரு நாடி சென்றதால் விஷ்ணு தொப்புளில் இருந்து பிரம்மா தாமரை இலையில் தோன்றுவது போன்று படத்தில் காட்டப்பட்டுள்ளது என்பதாகும்;

       மேற்கூறிய பச்சை நிறத்தில் சக்தியான விஷ்ணுவின் முன் பின் நடுவாக அதனுடைய காரணச் சத்து மூன்று வண்ணமாய்,
1: பொன்வண்ணம்,
2:ருத்திரா வண்ணம்,
3:குங்கும வண்ணம் என்ற மூன்று வண்ணத்துடன் இருக்கும்.
இதைத்தான்
சீதேவி,
பூதேவி,
நீளாதேவி என்ற பெயரில் சொல்லப்படுவதாகும்;
 விஷ்ணுவின் மத்தியில் சத்தியிருப்பதால் ,
"விஷ்ணு தன்மார்பில் லஷ்மியை" வைத்தார் என்று சொல்லப்பட்டது;

     இந்த குண்டலி வட்டமான நாடியின்(ஆதிசேஷன்) மத்தியிலுள்ள பச்சை வண்ணமான சத்தியிலிருந்து (விஷ்ணு)  ஒரு நாடி உண்டாகி இரண்டு தலையுடன் விரிந்து ஒரு தலை மேலும்,
ஒரு தலை கீழும் செல்லுகின்றது,
இந்த நாடிகளின் வழியாக சத்து மேலே செல்லும்போது ஜீவர்களுக்கு ஜீவிப்பும்,
     அதன் சாரம் கெட்டு கீழே செல்வதினால் ஜீவர்களுக்கு ஜீவிப்பின்மையும் உண்டாகின்றது,
மேலே செல்லும்போது ஜீவிப்பு உண்டாவதால், அது "விஷ்ணு காத்தல் " தொழில் செய்வதாக சொல்லப்பட்டது.

    மேலும் மேலும் செல்லும்போது விஷ்ணு "வைகுந்தம்" போகின்றார் என்றும், கீழே செல்லும்போது  "சஷீராப்தியில்" இருக்கின்றார் என்றும் சொல்லப்பட்டது;

   இதுவே விஷ்ணு தத்துவமாக நமது அகத்திலே காட்டப்பட்டு சொல்லப்பட்ட விளக்கங்களாகும்;

  மேலும்  தத்துவ அகவிளக்கங்களை அடுத்தடுத்த பதிவில் திருவருள் துணைகொண்டு காண்போம்.

..நன்றி .
...பெருமான் துணையில்,
....வள்ளல் அடிமை ,
.....வடலூர் இரமேஷ்;
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க;
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க;

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)