Friday, January 17, 2014

[vallalargroups:5295] சத்திய “ஞான” விண்ணப்பத்தில் உள்ள பெருவாசங்கள்:


    
1.     இயற்கை இன்பம் என்கின்ற சத்தியத் திருநடஞ் செய்து அருள்கின்ற இயற்கைத்       
        தனிப்பெரும்பதியாய தனித்தலைமைக் கடவுளே!
    2.     மலத்தில் புழுத்த புழுவினும் சிறியேன் பொய் அறிவால் புனைந்து உரைத்த    
         பொய்யுரைகளையும், மெய்யுரைகளாகக் கருணையினால் கடைக்கணித்து அருளிய      
         அருட்பெருஞ்சோதி ஆண்டவரே!
    3.      நாயிற் கடையேன் செய்த குற்றங்களை எல்லாம் குணங்களாகக் கொண்டு, 
         என்னுள்ளகத்தே அமர்ந்து உயிரில் கலந்த  பெருங்கருணைப் பெருமானே!
    4.     அண்ட,பிண்டம் முதலிய எல்லாவற்றிக்கும் அகத்தும், புறத்தும்   
         நிறைந்து விளங்குகின்ற அருட்பெருஞ்சோதித் தனிப்பெரும்பதியாய பூரணரே!
    5.    அருட்பெருஞ்சோதித் தனிப்பெரும்கடவுளே!
    6.     இயற்கை உண்மைத் தனிப்பெரும்பொருளாயும்,
               இயற்கை விளக்கத் தனிப்பெரும்பதமாயும்,
         இயற்கை இன்பத் தனிப்பெரும்சுகமாயும் பிரிவின்றி நிறைந்த      
            பெருந்தன்மையராய அருட்பெருஞ்சோதி ஆண்டவரே!
          7.    அதுவதுவாகி நிறைந்தும், அதுவதுவாகி விளங்கியும் , அதுவதுவாகி இனித்தும் ,    
              ஆங்காங்கு அதீதாதீதமாகித் தனித்தும் வயங்குகின்ற  பெருங்கருணைப்      
           பெரும்பதியாய கடவுளே!




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)