Tuesday, November 20, 2018

[vallalargroups:6046] நல்வழி.6.பேராசை கூடாது

  6.  உள்ள தொழிய ஒருவர்க் கொருவர்சுகங்
       கொள்ளக் கிடையா குவலயத்தில்-வெள்ளக்
       கடலோடி மீண்டு கரையேறி னாலென்
       உடலோடு வாழும் உயிர்க்கு

(ஒருவர்க்கு - ஒருவருக்கு,
 உள்ளது ஒழிய-(ஊழினால்) உள்ள அளவல்லாமல், 
ஒருவர் சுகம் - மற்றொருவருடைய சுகங்களை,
 கொள்ள,-அநுபவிக்க விரும்பினால், கிடையா - அவை கூடாவாம்;
 (ஆதலால்) குவலயத்தில்-பூமியில், உடலோடு வாழும் உயிர்க்கு - மக்களுடம்போடு கூடிவாழும் உயிர்களுக்கு, 
வெள்ளக் கடல் ஓடி-வெள்ள நீரையுடைய கடல்கடந்து சென்று (பொருள் தேடி), மீண்டு கரையேறினால் - திரும்பிவந்து கரையேறினாலும், 
என் - அதனாற் பயன் என்ன?

கப்பலேறிச் சென்று பெரும்பொருள் ஈட்டினாலும் ஊழினளவன்றி அனுபவிக்க முடியாது.

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)